காதலர் தின முன்னோட்டக் கவிதை

கன்னப் பழத்தட்டு
தன்னில் இதழ்பட்டுக்
     கன்னி தனைச்சேருமுன் – அவள்
கண்ணில் பளிச்சிட்ட
     மின்னல் வெளிச்சத்தில்
          எண்ணம் இருட்டானதே! – ஒளி
எண்ணம் இருட்டான
     பின்னும் குருட்டுள்ளம்
          இன்னும் எதைத்தேடுதோ?! – களி
மண்ணில் கடைப்பட்ட
     மந்தச் சிறுநெஞ்சும்
          சந்தக் கவிபாடுதோ!?
---------------------------------------
20வயதில் நான் எழுதி,(அப்போது ஏப்.14 தெரியாதுங்கோ!)
அப்போது புதுதில்லியிலிருந்து வெளிவந்த
சாலை இளந்திரையன் அவர்களின் “அறிவியக்கம்“ 
மாதஇதழில் ஓராண்டுத் தொடராக வந்த,
“ஒரு காதல் கடிதம்“ படிக்கச் சொடுக்குக -(4X25=100)

5 கருத்துகள்: