கந்தர்வன் நினைவு சிறுகதைப் போட்டி - 2026 அறிவிப்பு

எழுத்தாளர்களுக்கு ஓர் இனிய செய்தி

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் 

புதுக்கோட்டை மாவட்டக்குழு சார்பில் 

மறைந்த எழுத்தாளர் கந்தர்வனின் நினைவாக 

சிறுகதைப் போட்டி-2026 அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக 

கந்தர்வன் நினைவு - கலை-இரவு நிகழ்வின் 

வரவேற்புக் குழுத் தலைவரும்

புதுக்கோட்டை தமிழ்ச்சங்கத்தின் தலைவருமான

கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்கள்

வெளியிட்டுள்ள பத்திரிகைச் செய்தி:

  தமிழ் இலக்கியத்தில் எளிய மனிதர்களின் வாழ்வை 

முற்போக்குக் கருத்தியலோடும் 

மார்க்சிய அழகியலோடும் எழுதியவர் கவிஞர் கந்தர்வன். 

தமுஎகச-வின் முன்னோடித் தலைவர்களில் ஒருவரான 

அவரது படைப்புகளை 

தமிழ்நாடு அரசு நாட்டுடைமையாக்கிப் 

பெருமை சேர்த்துள்ளது.

       அவரது நினைவாக சிறுகதைப் போட்டிகளை 

தமுஎகச நடத்திவருகிறது. 

அதன் தொடர்ச்சியாக தற்போது 6-ஆவது 

கந்தர்வன் நினைவுச் சிறுகதைப் போட்டி 

அறிவிக்கப்படுகிறது.

போட்டிக்கான விதிமுறைகள்: 

கதைகள் எப்பொருளிலேனும் 

ஏ4 தாளின் 6பக்க அளவில் அமைய வேண்டும். 

ஒருவரே எத்தனை கதைகள் வேண்டுமானாலும் அனுப்பலாம். 

கையெழுத்திலோ, கணினி அச்சிலோ இருக்கலாம்.

-------------------------------------------------------------
கதைகளின் பக்கங்களில் ஆசிரியர் குறித்த 

எவ்வித விவரங்களும் இருத்தல் கூடாது. 

-----------------------------------------------------------

ஆசிரியர் பெயர் ,முகவரி, மின் அஞ்சல் ,

அலைபேசி எண் ஆகியன 

தனித்தாளில் மட்டுமே எழுதப்பட்டு 

தனியே  இணைக்கப் படவேண்டும். 

------------------------------------------------------

கதைகள் மொழிபெயர்ப்பாகவோ  

தழுவலாகவோ இருத்தல் கூடாது.

கதைகள் எவ்வித ஊடகத்திலும் இதுவரை 

வெளிவராதவையாக இருக்கவேண்டும். 

தேர்வுபெறும் படைப்புகளுக்குக் கீழ்கண்டவாறு 

பரிசுத்தொகை, விருதுக்கேடயம் 

மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.

முதற்பரிசு ரூ.10000, 

இரண்டாம் பரிசு ரூ.7500, 

மூன்றாம் பரிசு ரூ.5000, 

ஆறுதல் பரிசுகள் ரூ.2000 வீதம் 

5 கதைகளுக்கு வழங்கப்படும். 

பரிசளிப்பு நிகழ்வு 

புதுக்கோட்டையில் 07.02.2026 அன்று 

நடைபெறும் கந்தர்வன் கலை இரவில் 

மாநிலத் தலைவர்கள், சிறப்பு விருந்தினர்களால்

பாராட்டி வழங்கப்படும்.

----------------------------------------------------

தேர்வு பெறும் கதைகள் பற்றிய தகவல்

செய்தித் தாள்களிலும், தேர்வுபெற்ற  எழுத்தாளர்களுக்கும்
விழாவுக்கு முன்னதாகத் தெரிவிக்கப்படும் 
-------------------------------------------------------------------- 

தேர்வு பெறும் கதைகள் செம்மலர் இதழில் பிரசுரிக்க

ஆசிரியர் குழுவிற்குப் பரிந்துரைக்கப்படும்

மின்னஞ்சல் வழியோ, அஞ்சல் வழியோ

கதைகள் வந்து சேரக் கடைசி நாள் 25.01.2026. 

கதைகளை அனுப்ப வேண்டிய : அஞ்சல்முகவரி: 

கவிஞர் நா. முத்துநிலவன், 

மாநிலத் துணைத்தலைவர் - தமுஎகச, 

2711, சீனிவாசநகர் மூன்றாம் வீதி, 

மச்சுவாடி அஞ்சல்

புதுக்கோட்டை - 622 004. 

செல்பேசி - 94431 93293. 

மின்னஞ்சல்:

muthunilavanpdk@gmail.com

--------------------------------------------------------

கதைகள் வந்து சேர்ந்ததும் தகவல் தெரிவிக்கப்படும்.

முடிவு அறிவிக்கும் வரை தொடர்புகொள்வதைத் தவிர்க்கவும்

-------------------------------------------

செய்தி வெளியீட்டுக்கு நன்றி 

"இந்து தமிழ் திசை" நாளிதழ் 
புதுக்கோட்டை செய்தியாளர் திரு சுரேஷ்


 "தினமணி" நாளிதழ் 
செய்தியாளர் திரு ஜெயப்பிரகாஷ்



"தீக்கதிர்" நாளிதழ் 
 செய்தியாளர் திரு சு.மதியழகன்

"தினகரன்" நாளிதழ் 
 செய்தியாளர் திரு சிவக்குமார்
------------------------------------------------------------------

- இவண் - 

கவிஞர் ராசி பன்னீர் செல்வன் – தலைவர்,

கவிஞர் ஆலங்குடி வெள்ளைச்சாமி – செயலர்

கவிஞர் மு.கீதா – பொருளர்

தமுஎகச மாவட்டக்குழு புதுக்கோட்டை

-------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக