நூறாண்டு கண்ட ஐக்கூ கவிதைச் சிந்தனைகள் ((நன்றி- கணையாழி-டிச.2020))

கவிஞர் மு.முருகேஷ் எழுதிய 

மலர்க ஐக்கூ 

மும்மொழி நூலை முன்வைத்து,

--நா.முத்துநிலவன்--

      தொன்மையவாம் எனும்எவையும் நன்றாகா, இன்று தோன்றியநூல் எனும்எவையும் தீதாகாஎன்று உமாபதி சிவனார் இலக்கியம் படைத்த தமிழில், “பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல என்று நன்னூலார் தனது இலக்கணத்தை முடித்த தமிழில், இன்றும்,ஐக்கூவா? இதுகவிதையா? என்ன வகை?” என்று கேட்கும் பண்டிதர் உண்டு!