ஒற்றுமை பாடுக தமிழினமே! - நா.முத்துநிலவன்



என்சாமி பெரியசாமி உன்சாமி சின்னச்சாமி” என்று சாமியின் பெயராலும் சாதியின் பெயராலும் மக்களைப் பிரித்து வரும் சுயநல வாதிகளுக்குச் சொல்லுங்கள் -                                                   
மக்கள் என்றும் ஒற்றுமை விரும்பிகள்தான் என்பதை! 

அதிலும் குறிப்பாகத் தமிழர்கள் நீண்ட நெடிய வரலாற்றுப் பாரம்பரியத்தின் அடிநாதமாக சாதி மதம் பாராத மக்கள் ஒற்றுமை விரும்பிகள்தான்!

அஞ்சு விரல்ல ஏத்த இறக்கம் இருந்தாலும் உள்ளங்கையி எல்லாருக்கும் ஒண்ணுதானே’ என்னும் உணர்வோடுதான் மக்கள் என்றும் இருக்கிறார்கள் என்பதுதமிழ் இலக்கியக் கண்ணாடியில் கொஞ்சம் கால ஏடுகளைப் புரட்டிப் பார்த்தாலே தெரியும். பார்ப்போம் வாருங்களேன்...?!?!

நமது கவிதையைக் காணொலியாக்கிய நண்பர்கள் வாழ்க!



நமது வலைப்பக்கத்தில் வந்த எனது கவிதையை, பெயரறிய முடியாத நண்பர் பலரும் (காண்செவி – Whatsaap) புலனங்களில் 
என்பெயருடன் பகிர, அது எனக்கே வந்தது! 
அறிமுகமான நண்பர் பலர் இது உன்னுதுதானே? வாட்சாப்ல பிரபலமாயிட்டு வருது!என்று மகிழ்ச்சி தெரிவித்தார்கள்!

பிறகு --
பத்திரிகைஇணைய இதழிலிருந்து, “இந்த உங்கள் கவிதையை எமது இதழில் வெளியிடலாமா?” என்று அனுமதி கேட்டார் திரு தனசேகர பாண்டியன் அவர்கள். மகிழ்ச்சியுடன் அனுப்பி வைத்தேன், அவர்களும் அன்புடன் வெளியிட்டார்கள் – 
இதோ அந்த பத்திரிகைஇணைய இதழ் இணைப்பு -
  
பிறகு --
திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் தளபதி ஸ்டாலின் அவர்கள் 14-04-2019 அன்று, பல்லாயிரக் கணக்கானோர் கலந்துகொண்டிருந்த திருச்சி தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் இந்தக் கவிதையை எடுத்துச் சொல்லி, என் பெயரையும் ஆரம்பத்திலேயே குறிப்பிட்டதால், அந்தக் கூட்டத்தில் அமர்ந்து கேட்டவர்களும், தொலைக்காட்சி நேரலை நிகழ்ச்சியில் பார்த்தவர்களும், இணையத்தில் பார்த்தவருமாகப் பல லட்சம் பேரிடம் கவிதை போய்ச்சேர்ந்ததில் நண்பர்களின் உற்சாக வாழ்த்து மழையில் 14-04-2019 முழுவதும் நனைந்து மகிழ்ந்தேன்!
திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களின் 
இணையப் பக்க இணைப்பு -
(சரியாக 31ஆவது நிமிடத்திலிருந்து நம் கவிதை!)

பிறகு --
இதோ , இப்போது, நமது கவிதையை நம்மிடம் ஏதும் சொல்லாமலே- உரிமையோடு, காணொலியாக்கி அந்த விவரத்தை நமக்கு அனுப்பிய நண்பர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியும் வணக்கமும்.
அந்த நமது கவிதை-காணொலி இணைப்பு இதோ-

நம்மால் இயன்றதை
விதைத்துக் கொண்டே இருக்கிறோம்!
பற்பல இடங்களில் அது
முளைத்துக் கொண்டுதான் இருக்கிறது
என்பதற்கு,
இந்த நமது கவிதையே சான்றாக இருக்கிறது!

நன்றி நன்றி நண்பர்களே! 
வேறென்ன சொல்ல? 

அற்புதக் குறும்படம் பார்க்க அழைக்கிறேன், வருக!



ஒரு சின்னஞ்சிறு படத்திற்குள்
இவ்வளவு நல்ல செய்தியைத் தரமுடியுமா?

வசனம் இல்லை!
படத்திற்குத் தலைப்பும் இல்லை!
எடுத்தவர், நடித்தவர் யாரென்றும் தெரியவில்லை

ஆனால்,
பார்ப்போர் அனைவரும்
அவர்களை வாழ்த்துவது உறுதி!

பார்க்கும் யாரையும் பாதிக்கும் வலிமை
இப்படத்திற்கு உண்டு!

இரண்டரை நிமிடம்தான்!
பார்க்க வாருங்கள்!
பார்த்தபின் பகிருங்கள்!
அதுவே
இப்படக் குழுவினர்க்கு
நாம் செய்யும் மரியாதையாக இருக்கும்!

படம் பற்றிய மேல்விவரம் தெரிந்தால்
எனக்கும் சொல்லுங்கள்,
அதையும் பகிர்வோம்!
அவர்கள் பணி தொடர வாழ்த்துவோம்!
-------------------------------------------------------------------------------------------------

மோடி சொன்னதும், (வச்சி) செஞ்சதும்! -ஆதாரங்களுடன் ஆனந்த விகடன்!




நான் பொய்யான வாக்குறுதிகளைக் கொடுப்பதற்காக இங்கே வரவில்லை'' என சொன்ன மோடி எத்தனை பொய்களை சொல்லியிருக்கிறார் தெரியுமா?

மோடி-பாடி கூட்டணிய ஓடஓட விரட்டுவோம் (இசைப்பாடல்)

மோடி-பாடி கூட்டணிய ஓடஓட விரட்டுவோம்
(தேர்தல்-இசைப்பாடல்)
--நா.முத்துநிலவன்--
மோடி-பாடி கூட்டணிய ஓடஓட விரட்டுவோம்                                    முக்கியமா சிலகேள்வி அவுங்க கிட்ட கேட்போம்!-நம்ம                            நாடு மக்க நல்லாருக்க, நல்லவரப் பார்த்து - நாம                              
ஓட்டுப் போட்டு ஜனநாயக நாட்ட இப்ப மீட்போம்!

(1)  அரசாங்க ஊழியருன்னா ஆண்டுல இத்தனநாள்
வரணுமுன்னு நம்மநாட்டு சட்டம்உண்டு தானே?!- -மோடி
அஞ்சு வருசமா பார்லிமெண்டுக்கு வந்தது
பதினெட்டு நாள்தான் இதுக்கு தண்டனைதான் என்னா?
உலகம் பூராச் சுத்திவர! தப்புஇல்ல! – சபையில
உட்கார்ந்து பதில் சொல்ல துப்புஇல்ல! ஏன்?        (மோடி-பாடி கூட்டணி

தளபதி ஸ்டாலின் அவர்கள் எடுத்துச் சொன்ன என் கவிதை



நன்றி! நன்றி!! நன்றி!!! 
இன்று (13-04-2019) காலையில் திருச்சியில் நடந்த தேர்தல் பரப்புரைப் பெருங்கூட்டத்தில், எனது கவிதையை அழகாக எடுத்துச் சொல்லி, என் பெயரையும் குறிப்பிட்டுப் பாராட்டிய தி.மு.க.தலைவர் தளபதி ஸ்டாலின் அவர்களுக்கு எனது நெகிழ்வான மகிழ்வான நன்றி!  


தளபதி ஸ்டாலின் அவர்களின் முழுப்பேச்சு இணைப்பு இதோ -
(இதில் சரியாக 30ஆவது நிமிடம்,40ஆவது நொடியிலிருந்து...) --


காட்டாட்சியை விரட்டும் போரில் கைகொடுக்க வாரீர்!



 இந்தத் தேர்தலின் முக்கியத்துவத்தைச் சொல்ல வேண்டுமானால், இது எப்போதும் போல வரும் இந்தியப் பொதுத்தேர்தல் அல்ல!


இந்தியாவில், இனி ஒரு தேர்தல் வரவேண்டும் என்றால், இந்தத் தேர்தலில் பாஜக தோற்கவேண்டும். இல்லையேல், தேர்தலில் வென்றபின் இட்லர் அறிவித்தது போல இதுவே இறுதித்தேர்தல் என்று மோடி அறிவிக்கக்கூடிய ஆபத்து வந்தே தீரும். கவனம்! கவனம்!!
இது நிற்க.

பெரியார் சிலை உடைப்பு - கண்டனக் கவிதை

             (அறந்தாங்கி -07-4-2019 பெரியார் சிலை உடைக்கப்பட்டதை எதிர்த்து                              நடந்த கண்டனக் கூட்டத்தில் தலைவர்கள)

எச்சிலையே!  எச் சிலையை   
நீ உடைத்தாய் தெரியுமா?

 ----நா.முத்துநிலவன்----

தலையை எடுத்த தறுதலையே!
          தாழ்ந்து கிடந்த தலைமுறை
தலையெ டுக்கச் செய்தவரின்  
          தலையை எடுப்ப தாரடா?!
சிலையைஉடைத்து போட்டுவிட்டால்
          சிந்தை உடைந்து போகுமோ?!
அலையை உடைக்கப் பார்க்கிறாய்
          அறிவில் லாத மூடனே!

இந்தியா இப்போது முன்னேறிவிட்டது! (கவிதை)


இந்தியா இப்போது முன்னேறிவிட்டது!
நா.முத்து நிலவன்
( இந்த எனது கவிதையைத் தனது திருச்சி தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் தனது குரலில் எடுத்துச் சொல்லி, எனது பெயரையும் குறிப்பிட்டுப் பாராட்டிய திமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எனது நெஞ்சு நிறை  நன்றியும் வணக்கமும். 
இதோ அந்த இணைப்பு -
(இணைப்பில், சரியாக 31ஆவது நிமிடம் நமது கவிதை!)

சரி இப்போது அந்தக் கவிதையை 
முழுவதுமாகப் படிக்கலாம் வாங்க!) 

கூகுள்-தமிழ்- முக்கியமான குறிப்புகள்


கூகுள்-தமிழ் வலைப்பதிவில்
விளம்பரம் தொடர்பான
அவசரமான மற்றும்

முக்கியமான குறிப்புகள்