என் மகன் எழுதிய சிறுகதை படிக்க வருக!


என் மகன் நிறைய நூல்களை – என்னை விடவும் ‘சீரியஸாக’- 
படிக்கிற பழக்கம் உடையவர்!

இதில் எனக்கு மிகவும் பெருமைதான்!


இப்போது அமீரகத்தில்  பணியிலிருந்துகொண்டு, 
வலைப்பக்கம் தொடங்கி 
முதலில் நூல்விமர்சனம் எழுதிக்கொண்டிருந்தவர், 
இப்போது 
சிறுகதை எழுதியிருக்கிறார்!
            இதில் எனக்கு ரொம்பவும் மகிழ்ச்சி!

வாருங்கள் நண்பர்களே!
அவரது வலைப்பக்கம் சென்று, 
கதையைப் படித்துக் கருத்திடுவதோடு,

அந்த வலைப்பக்கத்தை கலை-இலக்கியத்தோடு தமிழ்ச் சமூகத்திற்காக வளர்த்தெடுக்க நல்ல ஆலோசனைகளையும் நீங்கள் வழங்கவேண்டும் என்று அன்புடன் அழைக்கிறேன்.



இதோ அவரது வலைப்பக்கம் -

ஆங்..! அப்புறம்...  
அவரது வலைப்பக்கத்தில் தொடர்வோர் (Follower) ஆகவும் சேர மறந்துவிடாதீர்கள்! என்ன…? விடாதீர்கள்!


“தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க்கு எல்லாம் இனிது” - குறள்
 


தோழமையுடனும், உரிமையுடனும்,
உங்கள் அன்புள்ள,
நா.முத்துநிலவன்.

ஸ்டெர்லைட் வந்த கதையும்.. மக்கள் வீதிக்கு வந்த கதையும்!


இந்தியாவில் வேதாந்தா- ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலை தொடங்க திட்டமிட்ட அனில் அகர்வால், அதற்கான இடத்தை குஜராத்தில் தேடினார். ஆனால், அந்த மாநில அரசு அனுமதி தர மறுத்து விட்டது.  அடுத்து அவரது பார்வை கோவா மாநிலத்தின் பக்கம் திரும்பியது. ஆனால் அங்கும் அவரது முயற்சி பலிக்கவில்லை.

பெரியார் சிலை உடைப்பு எதிர்ப்பு - படை நடைப் பாட்டு


எச்சிலையே!  
எச் சிலையை   
நீ உடைத்தாய் தெரியுமா?
     ----நா.முத்துநிலவன்----
தலையை எடுத்த தறுதலையே!
      தாழ்ந்து கிடந்த தலைமுறை
தலையெ டுக்கச் செய்தவரின்  
      தலையை எடுப்ப தாரடா?!
சிலையைஉடைத்து போட்டுவிட்டால்
      சிந்தை உடைந்து போகுமோ?!
அலையை உடைக்கப் பார்க்கிறாய்
      அறிவில் லாத மூடனே!
    

“வீதி-50” விழாவை நோக்கி…


“புத்தக மாலை”யுடன் நினைவுப் பரிசைப் பெற்றுக்கொண்ட ஃபிரான்சு இதழாசிரியர், கவிஞர் தமிழ்நெஞ்சம் அமின். அருகில் வீதி முன்னோடி பாவலர் பொன்.க., தங்கம் மூர்த்தி, பீர்முகமதுவுடன் வீதி நண்பர்கள்

சங்க காலம் முதல் தமிழ் இலக்கியத்துடன் இரண்டறக் கலந்து பயணம் செய்யும் மண் புதுக்கோட்டை மண்!
ஏராளமான இலக்கியப் படைப்பாளிகளை தொடர்ந்து தந்து கொண்டே யிருக்கும் பூமி. அதன் நீட்சியாக வீதி எனும் இலக்கிய கலைஇலக்கிய அமைப்பு கடந்த 4 ஆண்டுகளாக தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது.

நமக்குச் சோறுபோடும் விவசாயிகள் இப்போது பாடமும் நடத்துகிறார்கள்


மும்பை மக்களுக்கு எல்லா மொழிகளிலும் பிடிக்காத வார்த்தை, ‘போராட்டம்’. இந்தியாவின் பிஸியான பிசினஸ் தலைநகரம் எந்தத் தொந்தரவையும் விரும்புவதில்லை. 
அதிலும், திங்கள்கிழமை காலை என்பது டென்ஷன் நேரம். குறிப்பாக, மார்ச் 12 அன்று பள்ளி மாணவர்களுக்குப் பொதுத்தேர்வு வேறு. மும்பையின் புறநகர் மைதானம் ஒன்றில் முகாமிட்டுத் தங்கியிருந்த போராட்டக்காரர்கள் 50 ஆயிரம் பேர், அந்தத் திங்கள்கிழமையில்தான் ஆர்ப்பரித்து நகருக்குள் நுழைந்து சட்டமன்றத்தை முற்றுகையிடப் போவதாக அறிவித்திருந்தனர். 

தமுஎகச 2017-கலை-இலக்கிய விருதுகள் ரூ.50,000 பெறவருக!



2017 ஆம் ஆண்டுக்கான தமுஎகச கலை இலக்கிய விருதுகளுக்கான நூல்கள் /குறுந்தகடுகள் வரவேற்கபடுகின்றன

2017
ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட நூல்கள்/தகடுகள் மட்டுமே அனுப்பப்படவேண்டும்.

ஒவ்வொன்றிலும் இரண்டு பிரதிகள் 2018 ஏப்ரல் 30 ஆம் தேதிக்குள் கீழ்க்கண்ட முகவரிக்கு தபால்/கூரியர் மூலம் அனுப்ப வேண்டும்: 
அனுப்ப வேண்டிய முகவரி -