நூறாவது வாரம் “விதை-கலாம் நிகழ்வு! வருக!

குருவி வளர்த்தேன், பறந்துவிட்டது,
அணில் வளர்த்தேன் ஓடிவிட்டது,
மரம் வளர்த்தேன் இரண்டும் திரும்பி வந்து விட்டது!
-என்று சொல்லிச் சென்ற மாமனிதர் அப்துல்கலாம் உசுப்பிவிட்டுச் சென்ற புதுக்கோட்டை இளைஞர்களின் பணி 
இப்போது 100வாரத்தைத் தொட்டுத் தொடர்ந்து செல்கிறது! 
உண்மையிலேயே பாராட்டவேண்டும்!

உங்க BIGG-BOSS உம் ஜல்லிக்கட்டும் ஒன்னாலே?

சிநேகன்  சக்தி, கணேசிடம் சொல்கிறார் 
"நா அவள்(ஜூலி)கிட்ட இப்ப வரைக்கும் 
ஜல்லிக்கட்டப் பத்திப் பேசல, ஏன் தெரியுமா
பேசுனா, அவ இங்கயே தூக்குப் போட்டு செத்துடுவா!?!?"

சன் டிவி சம்பாதிக்க சமூகம் சீரழிய வேண்டுமா?

மனிதர் எதைக்கண்டு அஞ்சினரோ, அதையே வணங்கத் தொடங்கினர் என்பது வரலாறு. 
மரம், மழை, மலை, இருள், நெருப்பு என இந்தப்பட்டியல் நீளும்! அவ்வக்காலத்தில் தம்கையில் இருந்த கொலைக் கருவிகளை இவற்றின் கையில் தந்து, மேலும் பயமுறுத்துவதும் பயப்படுவதும், இப்போது வரை மாற வில்லை என்பதொரு சுவையான செய்தி! அதனால்தான் ஏகே-47 காலத்திலும் முருகன் இன்னும் வேலோடும், இராமன் இன்னும் வில்-அம்போடும், ஆங்காங்கே பாவப்பட்டு இறந்த பெண்களான அம்மன் சாமிகள் கொடும்ஆயுதங்களோடு, தொங்கிய நாக்கோடும் இன்றும் கோவில் கொண்டிருக்கிறார்கள் என்பது சொல்லாமலே புரியும்.

“கபாலி” பா.இரஞ்சித்தின் மேடை நாடகம் “மஞ்சள்”


“மஞ்சள்”

“மஞ்சள் உங்களுக்கு புனிதம், 
எங்களுக்கு அவமானம்!!!!!”

பொதுவாக, 
மானம்-அவமானமெல்லாம் நாம் வைத்துக்கொண்டது தானே?
வயல்சேறு சிலருக்கு நாறும்! அதுவே உழவருக்கு வாசமாகும்!

மஞ்சள் பொதுவாக புனிதத்தின் அடையாளம் என்கிறோமல்லவா, அதை உடைத்து, “மஞ்சள் எங்களுக்கு அவமானம்” என்கிற, முகத்தில் அறையும் வசனங்களுடனும் எழுச்சிமிகு பாடல்களுடனும் வந்திருக்கும் ஒரு புதிய நாடகம்தான் “மஞ்சள்”

பார்க்க வேண்டிய படம் இதுதான்!

புறநகர் ரயில் பயணங்கள் சுவாரஸ்ய மானவை. பலவிதமான குழுக்களை பார்க் கலாம். கஞ்சிரா இசைத்துப் பாடுவார்கள். கானா குழுக்களும் உண்டு. புரட்சிக் குழுக்களும் அனலைக் கக்கும். ரயிலே தடம் புரண்டாலும் கவலைப்படாமல் மும்முரமாக ரம்மி ஆடுவார்கள். விதவிதமான விற்பனையாளர்கள் வருவார்கள்; ராகம் போட்டு விற்பார்கள். இத்தனை விதமான மனிதர்களுக்கு மத்தியில் தனி ஒருவனாக தாய்மொழி வழி கல்விக்காக குரல் கொடுத்து கவனம் ஈர்க்கிறார் வினோத்குமார்.
உங்கள் குழந்தைகளின் எதிர்காலம்