![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEid6xCGCZpEd7hp2onSOTkyH56BrLKJNYiq8T3venywq4LPYCM8_3unYJ1NmK4GnC2H_doS6Gj0XAqExa3qCQE_ShN1cJg0FXxZmtncz-dQoPVVolxo44olyzdfzKr24z5k1IEsh_D448gR/s1600/Book+Fn.jpg)
“நாய்க்கு வேலை இல்ல, உட்கார நேரமில்ல“ என்னும் பழமொழி எனக்காகவே உருவானதோ என்னும் நினைவு கடந்த ஒருமாதமாக (நான் அரசுப்பணி ஓய்வு பெற்றதிலிருந்து) ஓடிக்கொண்டிருக்கிறது.
வரும் செப்டம்பர் ஏழு (07-09-2014-ஞாயிறு மாலை) புதுக்கோட்டையில் எனது 3 நூல்களின் வெளியீட்டு விழா ஏற்பாடுகள் நடந்து வருகின்றன...
புதுக்கோட்டையின் பிரபல கல்வியாளரும், சாகித்திய அகாதெமியின் ஆலோசனைக் குழு உறுப்பினரும், பாரதிதாசன் பல்கலைக் கழக ஆட்சிக் குழு உறுப்பினருமான என் இனிய நண்பர் கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்களின் தலைமையில் இந்த எனது நூல் வெளியீட்டுவிழா ஏற்பாடுகள் நடந்து வருகின்றன....