ஐந்தாம் வகுப்பு மாணவர்க்கு அரசுத் தேர்வா?!

ஆண்டைகளுக்கு நம்பிள்ளைகளை

 அடிமைகளாக்கி அனுப்ப    
ஐந்தாம்வகுப்பில் அரசுத் தேர்வா?!

---நா.முத்துநிலவன்---

அரசு ஆணை வந்துவிட்டது! 5, 8ஆம் வகுப்பு தமிழ்நாட்டு மாணவர்கள் அரசுப் பொதுத்தேர்வு எழுதத் தயாராக வேண்டுமாம்! தமிழ்நாடு அரசுத் தேர்வுகள்இயக்குநரின் (ந.க.எண்-077171/எச்-1/2019 நாள்-28.11.2019) அனைத்துப் பள்ளிகள் மற்றும் ஊடகங்களுக்கு வந்துவிட்டது. “ஏற்கெனவே வாய் கோணலாம், இதுல கொட்டாவி வேறயா” எனும் பழமொழிதான் எனது நினைவிற்கு வருகிறது! இந்தக் கொடுமை உலகில் எங்காவது உண்டா?