ஆசிரியர்கள், அடுத்த தலைமுறைக்கான சமூக ஆசிரியர்களாக மாறவேண்டும்!



நூல்வெளியீட்டில், கவிஞர் நா.முத்துநிலவன் சிறப்புரை
புதுக்கோட்டை, மே.29
புதுக்கோட்டையருகில் மதுரைச் சாலையில் உள்ள ரோட்டரி மகாலில்  நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய கவிஞர் நா.முத்துநிலவன், “ஆசிரியர்கள், அடுத்த தலைமுறைக்கான சமூக ஆசிரியர்களாக மாறவேண்டும், தமிழ்நாட்டு ஆசிரியர்களில் சொந்தமாக சிந்தித்து நூல்எழுதுவோர் குறைந்து போனதே தமிழ்வளர்ச்சிக்குத் தடையானதுஎன்றார்.
புதுக்கோட்டை ரோட்டரி சங்க விழாவுக்கு ரோட்டரித் தலைவர் கே.திருப்பதி தலைமையேற்றார்.செயலர் ஆர்.ஜெயக்குமார் வரவேற்றார்.
மேலைச்சிவபுரி கணேசர் கலைஅறிவியல் கல்லூரியின் முன்னாள் உடற்கல்வி இயக்குநர் முனைவர் நா.விஜயரெகுநாதனும், இராணியார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியின் உடற்கல்வி இயக்குநர் வி.ராஜசரோவும் இணைந்து எழுதியயோகாவும் உடல் நலமும்எனும் நூலை எழுத்தாளரும் பட்டிமன்றப் பேச்சாளருமான கவிஞர் நா.முத்துநிலவன் வெளியிட்டார். அதே கல்லூரி முன்னாள் முதல்வரும் தமிழ்ப் பேராசிரியருமான முனைவர் தா.மணி முதல்பிரதியை பெற்றுக்கொண்டு  வாழ்த்துரை வழங்கினார்.
ஆயுள் காப்பீட்டுக் கழக வளர்ச்சி அதிகாரி நா.விஜயகுமார், ஆனந்த யோகா பவுண்டேசன் யோகா செல்வராஜ், மூத்த ரொட்டேரியன் திருப்பதி, பிஎஸ்கே பள்ளித் தாளாளர் பி.கருப்பையா ஆகியோர் நூலின் சிறப்புகளைக் குறித்து, உரையாற்றினர்.
நூலை வெளியிட்டு சிறப்புரையாற்றிய நா.முத்துநிலவன் பேசும்போது-

பன்னிரண்டாம் வகுப்பில் தமிழ் வேண்டாமா?!?!?



நா.முத்துநிலவன் - கட்டுரை
தற்போதைய தமிழக அரசிடம், பள்ளிக் கல்வித்துறையில் புதிய இரண்டு பரிந்துரைகள்  தரப்பட்டுள்ளதாகச் செய்திகள் வந்துள்ளன. இவற்றைக் கல்வி அமைச்சர் மறுத்திருப்பதாகவும் ஒரு செய்தி வந்திருக்கிறது.

10,12ஆம் வகுப்பு மொழிப்பாடத் தேர்வுமுறை மாற்றம், மற்றும் 12ஆம் வகுப்பில் தமிழ், ஆங்கில மொழிப் பாடங்கள் இரண்டில் ஒன்றை மட்டும் எடுத்துப் படிப்பது பற்றியே இந்தப் பரிந்துரைகள் உள்ளனவாம்! எனினும், இது வெறும் பள்ளிமாணவர் சார்ந்த செய்தியல்ல, அடுத்தடுத்த தலைமுறை சார்ந்த, கவனமாகக் கையாளவேண்டிய செய்தி! எனவே இதுபற்றிக் கல்வியாளர், தமிழார்வலர், சமத்துவ சமுதாயம் காணும்  முன்னேற்றத்தில் அக்கறையுள்ள அனைவருமே கவனிக்க வேண்டிய செய்தியாகவிட்டது.

இதுபற்றிய சில தகவல்களோடு பரிந்துரைகள் பற்றியும் பார்ப்போம்.

பாடப்பகுதியைத் தாண்டிப் படிப்பதே பொதுஅறிவு!



கவிஞர் நா.முத்துநிலவன் பேச்சு

புதுக்கோட்டை- மே,5 கைக்குறிச்சி ஸ்ரீபாரதி கல்வியியல் கல்லூரியின் 14ஆவது ஆண்டுவிழாவில் சிறப்புரையாற்றிய  கவிஞர் நா.முத்துநிலவன், “பாடப்பகுதிப் புத்தகங்களைத் தாண்டியும் படிப்பதே பொதுஅறிவு என்று பேசினார்

ஆண்டுவிழா நிகழ்ச்சிகளுக்கு, கல்லூரித் தலைவர் குரு.தனசேகரன் தலைமையேற்றார். கல்லூரிச் செயலர் கேஆர் குணசேகரன், அறங்காவலர்கள் ஏ.கிருஷ்ணமூர்த்தி, கே.ரெங்கசாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். கல்வியியல் கல்லூரி முதல்வர் முனைவர் சுப.தாரகேஸ்வரி ஆண்டறிக்கை வாசித்தார். மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன.