வற்றிய கண்கள் எமதாக, வற்றாத இதயம் உமதாக!


வைகறை நடத்திய இறுதிக் கூட்டம் – “வீதி-26” (17-4-2016)
இதன் பின்னர் நான்கே நாள் கழித்து (21-07-2016அன்று) அவர் நம்மைப் பிரிந்தார் என்று சொன்னால் நம்பமுடிகிறதா?
அந்த வீதி நிகழ்வு பற்றிய தொகுப்பு இது -

அடுத்த கூட்டம் (04-5-2016) அவனுக்கான அஞ்சலிக் கூட்டமானது!

இந்தக் கூட்டத்தில் முடிவெடுத்தபடி இப்போது
கவிஞர் வைகறை குடும்ப நிதி வழங்கும் விழா (வீதி-29)
இதோ 31-07-2016 நடக்கிறது.

27ஆவது வீதிக் கூட்டத்தில் முடிவெடுத்து
29ஆவது வீதிக் கூட்டத்தில் நிதியளிப்பு…
இதற்கிடையில் ரூ.2,00,000 சேர்ந்துவிட்டது! 
இதை வேறெங்கும் சொன்னால் நம்புவார்களா என்ன?!

இது என்ன மாயம்?
இத்தனைக்கும் “வீதி” ஓர் அமைப்பே கிடையாது!

இம்மாத “வீதி”யில் இரண்டு மிகமுக்கிய நிகழ்வுகள்

புத்தக அறிமுக விழா மற்றும்
கவிஞர் வைகறை குடும்பநிதி வழங்கும் விழா

(1) “புதுக்கோட்டை மாவட்டப் பாறை ஓவியங்கள்” நூலறிமுகவிழா. (புதுகையில் பணியாற்றிய போது எமது வீதி கலைஇலக்கியக் களத்தையும், கணினித் தமிழ்ச் சங்கத்தையும் தொடங்கி ஓராண்டுக்காலம் நடத்தி, தற்போது கோவை மாவட்டத்தில் முதன்மைக்கல்வி அலுவலராகப் பணியாற்றி வருகின்ற 
   தமிழறிஞர் முனைவர் நா.அருள்முருகன் அவர்கள் எழுதிய தொல்பழங்காலப் பாறைஓவியம் பற்றிய ஆய்வு நூல்)

பார்க்க -

(2) நம்மோடிருந்து, 35வயதில் அகாலமரணம் அடைந்த- நம் வீதி, மற்றும் கணினித் தமிழ்ச்சங்கத்தின் பிரிக்கமுடியாத வைரத்தை வைகறையைக் காலம் பறித்துக் கொண்டதால்.. 
   கவிஞர் வைகறையின் குடும்ப நிதி வழங்கும் விழா.

அப்பா! – திரைப் பாடம்!


அப்பா! – திரைப் பாடம்! 
தன் மகன் மதிப்பெண்ணைக் கடந்து இந்த உலகைப் புரிந்து தன் திறமையை வளர்த்து இயல்பாகக் கற்கவேண்டும் எனும் அப்பா ஒருவர்.
தன்மகன் முதல்மதிப்பெண் வாங்கி டாக்டராகி, செட்டிலாகி என்று கருவிலிருந்தே மகனைத் திட்டமிட்டு வளர்க்கும் தந்தை இன்னொருவர்.
“எதிலும் மாட்டிக்காம இருக்குற இடம்தெரியாமே இருக்கணும்டா“ என்று தன் மகனை, பத்தோடு பதினொன்றாக வளர்க்க நினைக்கும் தந்தை! – என மூன்று இயல்பான இன்றைய –பாசமுள்ள- அப்பாக்களின் வாழ்வில் அவர்களின் பிள்ளைகள் என்ன, எப்படி ஆகிறார்கள் என்பதே கதை!

ஏரிகளின் காதலர் பியூஷ் மனுஷ்-க்கு ஏனிந்தக் கொடுமை?

''சேலம் சிறையில் என் கணவரை 30 பேர் சேர்ந்து அடித்து உதைத்தனர்'' 

-- பியூஷ் மனுஷ் மனைவி கதறல்... 

யார் இந்த பியூஸ் மனுஷ்?  

ஏரிகளின் காதலருக்கு ஏனிந்தக் கொடுமை?

முக்கியத் தகவல்கள் - 

பியூஷ் மனுஷ் -
சேலம் தருமபுரி மாவட்டங்களில் பணியாற்றி வரும் 
சூழலியல் செயற்பாட்டாளர், விருது பெற்ற சமூக சேவகர். 

ஏரிகளை மீட்டு எடுத்தும்காடுகளை உருவாக்கியும் 
சாதனை புரிந்த முன்னுதாரண மனிதர்.

சேலம் சிறையில் காவல்துறையினரால் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சமூக சேவகர் "பியூஸ் மனுஷ்" -க்கு தோள் கொடுக்க சமூக வலைத்தள இளைஞர்படை தயாராகி வருவதாகச் செய்திகள் வருகின்றன. 

அஞ்சலகத்தில் கங்கை நீர் விற்பனை! - சில முக்கியக் குறிப்புகள்...


முதலில் தந்தி தொலைக்காட்சியின் இந்த விவாதத்தைப் பாருங்கள் –
(நான்கு இணைப்புகள் அடுத்தடுத்து வருவதைக் கவனிக்க)

இனி, இந்தச் செய்தியைப் படியுங்கள் –
புனித கங்கை நீர் விற்பனை திட்டத்தின்படி, அந்த நீர் அஞ்சல் அலுவலகங்களில் அமோக விற்பனையாகியது.
ரிஷிகேஷ், கங்கோத்ரி ஆகிய இரு இடங்களிலிருந்து கங்கை நீர் பெறப்படுகிறது. அங்கு சென்று தரிசிக்க முடியாதவர்கள் நீரை பெறும் விதமாக, அஞ்சல் அலுவலகங்களில் புனித கங்கை நீர் விற்பனையை பாட்னாவில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மத்திய அமைச்சர்கள் ரவி சங்கர் பிரசாத், மனோஜ் சின்ஹா ஆகியோர் தொடக்கி வைத்தனர்.
உத்தரகண்ட் அஞ்சல் ஊழியர்கள் பாட்டிலில் அடைக்கும் பணியை மேற்கொண்டு, நாடு முழுவதும் அனுப்பி வைக்கின்றனர். இதில், ரிஷிகேஷ் நீர் 200 மி.லி. அளவு ரூ.15-க்கும், 500 மி.லி. அளவு ரூ.22-க்கும், கங்கோத்ரி நீர் 200 மி.லி. பாட்டில் ரூ.25-க்கும், 500 மி.லி. பாட்டில் ரூ.35-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தமிழகத்தில் 7 இடங்களில்...: தமிழகத்தில், முதல்கட்டமாக திருச்சி, தஞ்சை, மதுரை, சேலம், கோவை, தருமபுரி, ஈரோடு ஆகிய 7 தலைமை தபால் அலுவலகங்களில் கங்கை நீர் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டுள்ளது.
சென்னை அண்ணா சாலை, ஜார்ஜ் டவுன் உள்ளிட்ட அஞ்சல் அலுவலகங்களில் கங்கை நீர் விற்பனை செவ்வாய்க்கிழமை தொடங்கியது. ஆனால், சில நிமிடங்களிலேயே அனைத்து கங்கை நீர் பாட்டில்களும் விற்றுத் தீர்ந்தன.
இதுகுறித்து சென்னை மாநகர மண்டல அஞ்சல்துறை தலைவர் மெர்வின் அலேக்சாண்டர் கூறுகையில், தமிழகத்தில் உள்ள 94 தலைமை தபால் அலுவலகத்திலும் கங்கை நீர் விற்பனை செய்யப்பட உள்ளது என்றார்.
இதுகுறித்து சென்னையைச் சேர்ந்த கிருஷ்ணராஜன், ரஞ்சனா தேவி கூறுகையில், “கங்கை நீரில் புனித நீராடுவது இந்து மக்களிடையே பாரம்பரியமிக்க ஒன்றாக இருந்து வருகிறது. அதோடு, அனைவராலும் கங்கைக்கு சென்று வர முடியாதுஇதற்காக, அஞ்சல் அலுவலகங்களில் புனித கங்கை நீர் விற்பனை செய்யப்படுவதை வரவேற்கத்தக்கது“ என்றனர் – (தினமணி-13-07-2016) 

கமல் எழுதிய கவிதைகள்!

புதியதலைமுறை இதழ் ஆசிரியர் எழுத்தாளர் மாலன் அவர்களை ஆசிரியராகக் கொண்டு “திசைகள்“ இணையஇதழ் வெளிவந்தபோது -10ஆண்டுகள் இருக்கும்- 
அதில் ஒரு கமல் கவிதை 
படித்ததாக நினைவு
(அ) வேறு இதழா நினைவில்லை.

ஆனால் தலைப்பு நினைவில் இருக்கிறது
“பீ அள்ளும் தாயம்மா” 
இதுதான் கமல்!

அவர் எழுதியதாக இப்போதும் 
சில கவிதைகள் உள்ளன.
கூகுளார் அருளால் தேடிப் பிடித்தேன் –
நீங்களும் படிக்கலாம்.

குருமூர்த்தியின் ஆபத்தான கட்டுரை - ச.தமிழ்ச்செல்வன்

கோவை விஜயா பதிப்பகத்தின் சார்பில் “ஜெயகாந்தன் நினைவு விருது” வழங்கப்பட்ட விழாவில் ஏற்புரை நிகழ்த்துகிறார் ச.தமிழ்ச்செல்வன்
-------------------------------------------------------------------------------- 
( மாதொரு பாகன் நாவலைத் தடைசெய்யக் கூடாது என்று நீதிமன்றம் சென்றவர், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர், “நெல்லுச்சோறு” உள்ளிட்ட நாற்பது நூல்களின் ஆசிரியர் மற்றும்,  “பூ”திரைப்படக் கதாசிரியர்
மற்ற பத்திரிகைகள் எல்லாம் பெருமாள்முருகன் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பை வரவேற்று கருத்துரிமையை இத்தீர்ப்பு நிலைநாட்டியுள்ளதாகக் கட்டுரைகளும் தலையங்கங்களும் எழுதிக்கொண்டிருக்கும்போது தினமணி மட்டும் சங் பரிவார அறிவாளியான திரு.எஸ்.குருமூர்த்திஜியிடம் இரண்டு கட்டுரைகளை வாங்கி தொடர்ந்து நேற்றும் இன்றும் வெளியிட்டு தன்நடுநிலையை நிலை நாட்டியுள்ளது.

விஸ்வநாதன்-ராமமூர்த்தியும், ஜேம்ஸ் வசந்தனும்

 முன்னர் எனது பதிவு ஒன்றில், “இன்றைய இளைஞர்கள் நினைத்தால் தஞ்சைப் பெரியகோவிலையும், ஆக்ரா தாஜ்மகாலையும் கூட விஞ்சக்கூடிய விஞ்ஞான அறிவும், கலைமேன்மையும் கொண்டவர்கள்” என்று எழுதியிருந்தேன். 

பலரும் இதில் குறைப்பட்டுக்கொண்டார்கள்!
ஆனால், இதைப் பாருங்கள் – பாடலைக் கேளுங்கள்
இன்றைய இளையவர்களைப் பற்றிய பெருமை 
நெஞ்சுக்குள் பொங்கிவரும்! 

“பெருமாள் முருகன் துணிவோடு பயமின்றி எழுதட்டும்”

பிடித்தெழ முயல்கிறேன்.. எழுந்துவிடுவேன் 
எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய மாதொருபாகன்நாவலுக்கு தடை விதிக்க மறுத்த சென்னை உயர் நீதிமன்றம்,
ஆசிரியர் பெருமாள்முருகன், புதைக்கப்பட்ட விஷயங்களில் இருந்து எதையெல்லாம் சிறந்ததாக எழுத முடியும் என நினைக்கிறாரோ, அதை துணிவோடு பயமின்றி எழுதட்டும் 
எனக் கூறியுள்ளது

இதைத்தொடர்ந்து உயர் நீதி மன்றத் தீர்ப்பு குறித்து பெருமாள் முருகன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில்...