ஐந்தாவது தமிழ் ஐக்கூ உலக மாநாடு! புதுக்கோட்டைக்கு வருக!

தமிழ்க் கவிஞர்களுக்கோர் நற்செய்தி!

கவிக்கோட்டையாம் புதுக்கோட்டை அழைக்கிறது! 

ஐந்தாவது தமிழ் ஐக்கூ உலக மாநாடு!

புதுக்கோட்டைத் தமிழ்ச் சங்கம்,

இனிய நந்தவனம் இதழ் மற்றும்

உலகத் தமிழ் ஐக்கூ கவிஞர்கள் மன்றம்

இணைந்து நடத்துகின்றன.


மாநாட்டிற்கு  

புதுக்கோட்டைத் தமிழ்ச்சங்கத் தலைவரும்

விரல்விட்டு எண்ணத்தக்க

மிகச்சிறந்த கவிஞருமான

அருமைச் சகோதரர்

கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்கள்

தலைமை வகிக்கிறார்கள்


சிறப்புத் தகவல்கள்:

 

நாள்: மே 17, 2026 ஞாயிற்றுக்கிழமை முழுநாளும்

இடம்: மகராஜ் மகால், புதுக்கோட்டை,

சிறப்பு: இது ஐந்தாவது தமிழ் ஐக்கூ உலக மாநாடு ஆகும்.

பங்கேற்பாளர்கள்: உலகத் தமிழ் ஐக்கூ கவிஞர்கள்

ஏற்கெனவே 2022 தொடங்கி 2025 முடிய

முதல் மாநாடு திருச்சியிலும்,

இரண்டாவது மாநாடு அந்தமானிலும்,

மூன்றாவது மாநாடு மதுரையிலும் 

நான்காவது மாநாடு இலங்கையிலும், 

நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

இப்போது ஐந்தாவது மாநாடு புதுக்கோட்டையில்!


இதோ 

முன்னோட்டத் தகவல் 

அழைப்பிதழ்

 







---------------------------------------------  

முகநூலில் தொடர 

https://www.facebook.com/thangam.moorthy.3/

மற்றும் 


https://www.facebook.com/haiku.mumu/


மேலும்


https://www.facebook.com/groups/HSWTP100/posts/33870859352557999/


--------------------------------------------------------

இப்போது, ஐக்கூக் கவிதையின் முன்னோடியாகத் திகழும் –

கவிஞர் மு.முருகேஷ் அவர்கள்,

புதுக்கோட்டையில் இருந்தபோது

முதன்முதலாக வெளியிட்ட –

விரல் நுனியில் வானம்” அய்க்கூ நூலுக்கு

நான் எழுதிய முன்னுரை படிக்க-

https://valarumkavithai.blogspot.com/2013/09/blog-post_29.html

(இந்த முன்னுரை, மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தின்

தமிழ் ஆய்வு மாணவர்க்கான பாடநூலில்

இடம்பெற்றிருந்தது குறிப்பிடத் தக்கது)

-    மேலும் -

தமிழ் – ஆங்கிலம் – இந்தி 

 மூன்று மொழிகளில் வெளிவந்த,

கவிஞர் மு.முருகேஷ் எழுதிய 

மலர்க ஐக்கூ” 

மும்மொழி நூலை முன்வைத்து

கணையாழிஇலக்கியத் திங்கள் இதழில்

நான் எழுதிய மதிப்புரை

https://valarumkavithai.blogspot.com/2020/12/blog-post_14.html

வாய்ப்பிருப்போர் படித்துப் பார்க்கலாம்

------------------------------------------------------------

அனைவரும்

கவிதைக் கோட்டையாகத் திகழும்

புதுக்கோட்டைக்கு

வருக வருக என

அன்போடு அழைக்கிறோம்

-------------------------------------

முன்னோட்ட அழைப்பிதழ் பார்த்துப்

பதிவு செய்யுங்கள்,

-------------------------------------

நூல் வெளியிடத் தயாராகுங்கள்

-------------------------------------

தொகுப்பில் இடம்பெற ஐக்கூ அனுப்புங்கள்

-------------------------------------

மாநாட்டுக்குத் தவிராது வருக கவிஞர்களே!

(தவறாது வருக என்பது, தவறான தொடர். 

தவிராது -தவிர்க்காது எனப் பொருள் தரும் 

சரியான சொல்தான்)

----------------------------------------- 

வணக்கம்

-நா.முத்துநிலவன்,

புதுக்கோட்டை

------------------------------------- 

சிறுகதைப் போட்டி முடிவும், தமிழ்ச்சங்க விருதுகள் அறிவிப்பும்

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் 

கலைஞர்கள் சங்கம் 

புதுக்கோட்டை மாவட்டக்குழு  நடத்திய

கந்தர்வன் நினைவு சிறுகதைப் போட்டி

முடிவு அறிவிப்பு


இறுதிநாள் 25-01-2026 என்று அறிவித்திருந்தும்,

30-1-2026வரை கதைகள் வந்து கொண்டிருந்தன!

ஆனால் 

நமது போட்டி விதிகளின்படி

அவற்றை ஏற்க இயலவில்லை.

25-ஞாயிறு, 26-குடியரசுதினம் இரண்டு நாளும் 

அரசு விடுமுறை என்பதால் 

27-01-2026வரை கிடைக்கப்பெற்ற அஞ்சல், கூரியரில் வந்த 

கதைகள் மட்டும் ஏற்கப்பட்டன.

மின்னஞ்சலில் 25-01-26 இரவு 11.59வரை வந்த

கதைகள் மட்டுமே ஏற்கப்பட்டன.

என்னும் தகவலையும்

தெரிவித்துக் கொள்கிறோம்!

---------------------------------------------------------------
நன்றி - தினமணி நாளிதழ் 05-02-2026
--------------------------------------------------------------

                        போட்டியில் கலந்து கொண்டு 700+சிறுகதைகளை 

அனுப்பி திக்கு-முக்காடச் செய்த

எழுத்தாளர் பெருமக்களுக்கும்,

கட்டம் கட்டமாகச் சிறுகதைகளைத் 

தேர்வுசெய்து தந்து

 தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாத

(விழாவில் சிறப்பிக்கப்பட உள்ள)  

நடுவர் பெருமக்களுக்கும்

உரிய உதவிகளைச் செய்து தந்த 

தமுஎகச பொதுச் செயலர்

எழுத்தாளர் களப்பிரன் அவர்கள்,

ஆகியோர்க்கு நன்றி நன்றி நன்றி

பிப்ரவரி - 7, சனிக்கிழமை மாலை

நகர்மன்றக் கலை-இரவில் சந்திப்போம்

வருக! வருக!!

--------------------------------------------------------

முக்கியமான ஒரு பின்குறிப்பு:

தேர்வு பெற்ற கதைகளோடு மற்றொரு சிறுகதைப் பட்டியலையும் தேர்ந்தெடுத்து, மொத்தமாக 15முதல் 20சிறுகதைகளை ஒரு தொகுப்பாக்கி வெளியிடும் ஒரு யோசனையும் உள்ளது.

அதில் தேர்வு பெற்ற கதைகளை எழுதிய எழுத்தாளர்க்குத் தகவல் தந்து ஒப்புதல் பெற்றபின் அந்தப் பணிகளை, இந்த விழாவுக்குப் பிறகு தொடங்க எண்ணம். வழிபிறக்க யோசிப்போம். 

நன்றி வணக்கம்

---------------------------------------------------------------------------

-- இவண் -- 

கவிஞர் தங்கம் மூர்த்தி,

கந்தர்வன் கலை-இரவு வரவேற்புக்கழுத் தலைவர்

கவிஞர் ராசி பன்னீர் செல்வம் - மாவட்டத் தலைவர்

கவிஞர் ஆலங்குடி வெள்ளைச் சாமி - மாவட்டச் செயலர்,

கவிஞர் மு.கீதா - மாவட்டப் பொருளர்

மற்றும் 

தமுஎகச மாவட்ட நிர்வாகிகள், மாவட்டக் குழுவினர்

புதுக்கோட்டை மாவட்டம்

------------------------------------------------------

அடுத்து நடக்க உள்ள 

மாபெரும் இலக்கியத் திருவிழாவுக்குத்

தயாராகுங்கள் !

புதுக்கோட்டைத் தமிழ்ச்சங்கம் நடத்தும்

அறமனச்செம்மல்

சீனு. சின்னப்பா நினைவாக 

3ஆம் ஆண்டு

இலக்கிய விருதுகள் -2026 அறிவிப்பு :


படைப்பாளிகள் எழுக!
படைப்புகளை உரிய காலத்தில் தருக!
பரிசுகளை தகுதியோடு பெறுக!

-----------------------------------------------

கந்தர்வன் நினைவு கலை-இரவு அழைப்பிதழ்

                                    வணக்கம்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு

புதுக்கோட்டை தமுஎகச நடத்தும்

கந்தர்வன் நினைவு கலை-இரவும்

சிறுகதைப் போட்டிப் பரிசளிப்பும்

வரும் 07-02-2026 சனிக்கிழமை மாலை

புதுக்கோட்டை நகர்மன்றத்தில் நடைபெற உள்ளது

அழைப்பிதழ் இதோ –

அனைவரும் வருக வருக

-------------------------------------------------

சிறுகதைப் போட்டி அறிவித்த ஒருமாதத்திற்குள்

எழுநூறுக்கும் (700+) மேற்பட்ட கதைகள் உலகெங்கும் இருந்து

வந்து குவிந்துவிட்டன!

(உண்மையிலேயே உலகெங்கும் இருந்துதான்! இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்து மட்டுமின்றி, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ஜெர்மன், கனடா, அரபுநாடுகள், முதலான பல நாடுகளிலிருந்தும் கதைகள் வந்துள்ளன.

ஒரு பெரும் நடுவர் குழு முதற்கட்ட, இரண்டாம் கட்ட, மூன்றாம்கட்டத் தேர்வுகளின் அடிப்படையில் வரும் 03-02-2026 அன்றுதான் இறுதிக்கட்ட – பரிசுக்குரிய மற்றும் வெளியிடத்தக்க கதைகளை முடிவுசெய்ய ஆலோசித்திருக்கிறது.

04-2-2026 அன்று தேர்வு பெற்றவர்க்குத் தனித்தனியாக அலைபேசி வழியாகவும், மற்ற அனைவர்க்கும் செய்தித்தாள், சமூக வலைதளங்கள் வழியாகவும் 05-02-2026 தேதிக்குள் தகவல் கிடைக்கும்.

செல்பேசி வழியாக

தனித்தனியாக விசாரிக்க வேண்டாம்

என்று மிகுந்த அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

அன்றே எனது இந்த வலைப்பக்கத்திலும்

தகவல் பதிவிட முயற்சி செய்வேன்.

------------------------------------------------------------------

கலை-இரவுப் பணிகளில்

தீயாய் சுழன்றுவரும்

மாவட்ட நிர்வாகிகள், மாவட்டக்குழுத் தோழர்கள்

மிகுந்த உற்சாகமோடு

30-01-2026 வெள்ளி மாலை

அழைப்பிதழை வெளியிட்டனர்

இதோ அந்த அழைப்பிதழ்

-------------------------------------------------------------- 














கலை இரவில் சந்திப்போம் வருக!

கந்தர்வனைக் கொண்டாடுவோம் 

வருக!வருக!!

----------------------------------------------------------- 

இவண் 

கவிஞர் தங்கம் மூர்த்தி

கலை-இரவு வரவேற்புக்குழுத் தலைவர்,

கவிஞர் ராசி.பன்னீர்செல்வன் - மாவட்டத் தலைவர்,

கவிஞர் ஆலங்குடி வெள்ளைச் சாமி - மாவட்டச் செயலர்,

கவிஞர் மு.கீதா - மாவட்டப் பொருளர்

மற்றும்

மாவட்டத்திலுள்ள மாநிலச் செயற்குழு, மாநிலக்குழு, 

மாவட்டத் துணை நிர்வாகிகள், 

மாவட்டச் செயற்குழு, மாவட்டக் குழுத் தோழர்கள்

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், 

புதுக்கோட்டை மாவட்டம்

-------------------------------------------------------------------