நெடுங்காலம் கழித்து, சாகித்திய அகாதெமி நிகழ்ச்சி!
வாய்ப்பிருப்போர் வருக!
வர இயலாதோர், வருவோர்க்குச் சொல்லுக!
இடையில் அய்யா சிற்பி அவர்களால்,
ஓர் இணையவழி அகாதெமிக் கவியரங்கில்
கலந்து கொண்டாலும்,
நினைத்ததைப் பேச முடியாத நிகழ்ச்சி!
----------------------------------------
25ஆண்டுகளுக்கு முன்னதாக,
கவிஞர் பாலா அவர்களோடு, திருவனந்தபுரம் போய்,
சாகித்திய அகாதெமி நடத்திய
தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு எனும் நான்கு மொழிப் படைப்பாளிகளுக்கான மண்டல வெள்ளிவிழா
நிகழ்வில்
தமிழ் மொழியின் சார்பாக,
கவிதைப் போக்குகள் பற்றிப் பேசினேன்.
நான் தமிழில் எழுதி, கவிஞர் பாலா அவர்களின் உதவியோடு
ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துப் படித்த கட்டுரை அது!
(அதன் பிறகு
சாகித்திய அகாதெமி விருதுக்கான முதற்கட்டத் தேர்வு நூல்களைத் தேர்ந்தெடுத்து
10நூல்களைப் பரிந்துரைக்கும் முதற்கட்ட நடுவர் குழுவில் இரண்டு முறை பணியாற்றி
இருக்கிறேன். என்றாலும் அதை வெளியில் சொல்வது முறையல்ல என்பதால்
சொல்லவில்லை)
இப்போது
தமிழ்க் கவிதையின்
தற்போதைய போக்குகள்
பற்றி..!
நன்றி – கவிஞர் தங்கம் மூர்த்தி!
அவர் தலைவராக இருந்து சிறப்பாக நடத்திவரும்
புதுக்கோட்டை தமிழ்ச்சங்கமும் சாகித்திய அகாதெமியும்
நடத்தும் நிகழ்வில் என்னைத் தலைமையேற்க
வைத்து,
அவர் ஒரு தலைப்பில் பேசுகிறார்!
அவர் நினைத்திருந்தால், அவரே தலைமை தாங்கியிருக்க
முடியும்.
இதைத்தான் வள்ளுவர் ‘பணியுமாம் என்றும் பெருமை' என்றார்!
அவரது உயரத்துக்கான காரணங்களில் இது முக்கியமானது.
மூர்த்தி என்றாலே நேர்த்தி என்பது பலரும் அறிந்ததே
இன்ன பிற பண்புகளால்,
உங்களுக்கான உயரம்
இன்னும் காத்திருக்கிறது மூர்த்தி!
-----------------
சரி நண்பர்களே!
வாய்ப்பிருப்போர் வருக!
வர இயலாதோர் வருவோர்க்குச் சொல்லுக!
வணக்கம்.
---------------------------------------------------------
நமது 18-6-2025 புத்தக வெளியீடு பற்றி
இன்னும் வலைப்பதிவு எழுத வில்லை!
படங்கள், காணொலியைப் பார்த்து,
பதிவிட வேண்டும்.
அடுத்த வாரம் பதிவிடுவேன்.
-----------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக