பணி ஓய்வு பெற்றேன், நன்றி வணக்கம். மற்றவை நேரில்…

18-12-1980 அன்று  பணியில் சேர்ந்த நான்,  31-5-2014 இன்று, நினைவலைகளில் மனம் தளும்ப ஓய்வு பெறுகிறேன்,
34ஆண்டுகள்! பதவிஉயர்வில் செல்லாத ஒரே பணி! 
நான் விரும்பி ஏற்ற தமிழாசிரியர் பணி!  

இந்தப் பணிக்காலத்தில், நல்ல நிகழ்வுகள் மிகுதியாக, கசப்பான நிகழ்வுகள் குறைவாக வாய்க்கப்பெற்றது என் பெறுபேறு!

எத்தனை வகையான மாணவர்கள்!
எத்தனை வகையான பெற்றோர்கள்!!
எத்தனை வகையான ஆசிரியர்கள்!!!
எத்தனை வகையான அலுவலர்கள்...!  
எத்தனை வகை-வகையான மக்கள்!... அடடா!
(இவர்களைப் பற்றியெல்லாம் அவ்வப்போது சிறுகதை,கட்டுரை கவிதைகள் எழுதியிருந்தாலும் இன்னும் எழுத ஏராளமுண்டு) 

பிரதமர் மோடியின் இணைய தளம் - சிக்கலா? ஏமாற்றா?



நமது பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் 26-05-2014 அன்று, 15ஆவது இந்தியப் பிரதமராகப் பதவியேற்றவுடன், தொடங்கி வைத்த இணைய தளத் தகவல் எனது மின்னஞ்சலுக்கும் நேராக வந்திருந்தது.
'பரவாயில்லையே, தகவல் தொடர்புச் சாதனங்களைப் பயன்படுத்தி ஆட்சிக்கு வந்ததுபோல, நல்லாட்சி தரும் முயற்சிக்கும் இதனைப் பயன்படுத்த நினைக்கிறாரே!" என்று உடனடியாக எனது கருத்தைப் பிரதமரின் இணைய தளப் பின்னூட்டப் பகுதியில் எழுதினேன்.
எழுதினேன் எழுதினேன் எழுதினேன்... ஏற்கவில்லை.

இணையத் தமிழ்ப்பயிற்சி - இரண்டாம்நாள்.. தொகுப்பு

முதன்மைக் கல்வி அலுவலர் முனைவர் நா.அருள்முருகன் அவர்களுடன்
இணையத் தமிழ்ப்பயிற்சி அமைப்புக் குழுவினர்.

கலந்துகொண்டு பயன்பெற்ற வலை நண்பர்களின் ஒரு பகுதியினர்

வாய்மொழிப் பாடம் முடிந்து செய்முறைப் பயிற்சி

முதல்நாள் கணினித்தமிழின் “அரிச்சுவடி” வகுப்பைத் தொடங்கி நடத்திய
சிவகங்கை முனைவர் மு.பழனியப்பன் அவர்கள்http://manidal.blogspot.in/ 

விக்கிப்பீடியாவில் தமிழ் எழுதுவது எப்படி?
பிரின்சு என்னாரெசுப் பெரியார்http://princenrsama.blogspot.in
இவர் தன் அருமைச் சகோதரர் பெரியார் சாக்ரடீசு அவர்களின் அகால மரணம் நிகழ்ந்த ஒருவாரத்தில் வந்து கலந்துகொ்ண்டது அனைவரையும் நெகிழ வைத்தது 

“மூங்கில் காற்று“  தி.ந.முரளிதரன் -http://tnmurali.blogspot.com/ 
“வலைச்சித்தர்“ திண்டுக்கல் தனபாலன் - 
http://dindiguldhanabalan.blogspot.com/
இருவரும் இணைந்து கலக்கிய வகுப்பில்...
----------------------------------------------------------------------------------------------- 


வகுப்பின்போது வலைப்பக்கம் உருவாக்கியவர்கள் மற்றும் ஏற்கெனவே வலைப்பக்கம் இருந்தும் செயல்படுத்தாமல் இருந்து, இந்த வகுப்பின் பின் புதிய வடிவமைப்போடும், இணைப்புகளோடும் எழுதத் தொடங்கியவர்கள் எனும் இரண்டு பட்டியல் இவை -
பேராசிரியர் முனைவர் பா.மதிவாணன் - http://inithuinithu.blogspot.in/
தமிழறிஞர் ஜோசப் விஜூ - http://oomaikkanavugal.blogspot.in/
ஆசிரியர் ஸ்டாலின் சரவணன் - http://stalinsaravanan.blogspot.in/
தமிழாசிரியர்  பானுமதி - http://nithimathi.blogspot.in/
தமிழாசிரியர்  பிரியதர்ஷினி - http://thamizhyazhini.blogspot.in/
தமிழாசிரியர் ரேவதி - http://tamizhal.blogspot.in/2014/05/blog-post.html
தமிழாசிரியர் மகா.சுந்தர் - http://mahaasundar.blogspot.in/ 
உ.தொ.க.அலுவலர் ஜெயா – http://jayalakshmiaeo.blogspot.in/ 

தலைமை ஆசிரியர் மாலதி - http://malathik886.blogspot.in/
பாவலர் பொன்.க. - http://pudugaimanimandram.blogspot.in/
சர்மா அச்சக நண்பர் குமார் - http://pudugaismkumar.blogspot.in/
நமது அய்யா முனைவர் நா.அ.மு - http://nadainamathu.blogspot.com/
கவிஞர் மு.கீதா - http://velunatchiyar.blogspot.in/
தமிழாசிரியர் அ.பாண்டியன் - http://pandianpandi.blogspot.com/
ஆங்கில ஆசிரியர் கஸ்தூரி - http://www.malartharu.org/
எழுத்தாளர் ராசி.பன்னீர்செல்வன் - http://rasipanneerselvan.blogspot.in/
கவிஞர் சுவாதி - http://swthiumkavithaium.blogspot.com/
--------------------------------------------- 
இரண்டுநாளும் கலந்துகொண்டு, புகைப்படங்களை எடுத்துத் தந்துதவிய 
திருச்சி தி.தமிழ் இளங்கோ - http://tthamizhelango.blogspot.com/  
கரந்தை ஜெயக்குமார் - http://karanthaijayakumar.blogspot.in/
இந்த வகுப்பில் விக்கிபீடியாவில்...எழுதக்கற்று்க்கொண்ட அய்யா முனைவர் பா.ஜம்புலிங்கம் -http://drbjambulingam.blogspot.in/   - 
ஆகியோர்க்கு நன்றி கலந்த வணக்கங்கள்.
நமது கணினித்தமிழ்ப்பயணம் தொடரட்டும் நண்பர்களே!

வந்து வகுப்பெடுத்துக் கணினித் தமிழறிவை வழங்கியதோடு,  அனுபவங்களையும் பகிர்ந்துகொண்ட நம் கணித்தமிழ் ஆசான்கள் -
                                                   
                                                  முனைவர் மு.பழனியப்பன்  - 
                                                                                  http://manidal.blogspot.in/ 

“மூங்கில்காற்று“ தி.ந.முரளிதரன் - 

“வலைச்சித்தர்“ திண்டுக்கல் தனபாலன் - 

பிரின்சு என்னாரெசுப் பெரியார் - 

புதுக்கோட்டை சர்மா அச்சகம் வாசு - http://easytype.in/   
ஆகியோர்க்கு நன்றி சொல்லப் போவதிலலை, 
இன்னும் எழும் சந்தேகங்கள் மற்றும் புதியவர்களுடன், 
அடுத்த வகுப்பில் சந்தித்து வணங்குவோம்.. அவ்வளவே!
ஆனால், தனித்தனியாக ஒருவருக்கு ஒருநாள் முழுவதும், ஆர்வமும் தேவையும் உள்ளவர்க்கு மட்டும் அது பத்துப்பேராயினும்... 
கூடுதலாக இருந்தால் அடுத்த 10பேர் அடுத்த பட்டியலில்... 
பத்துப்பேரை பத்துக் கணினியுடன் ஒரே ஆசிரியரிடம் 
குறைந்தது 5மணிநேரம் விட்டுவிடுவதுதான் சரி. 
அதுவும் விரைவில் நடக்கும்.
இதற்காக வழிகாட்டிய எங்கள் முதன்மைக்கல்வி அலுவலர் தமிழறிஞர் முனைவர் நா.அருள்முருகன், இடத்துடன் கணினி இணைப்பு உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் செய்ததோடு, இரண்டுநாளும் இரண்டுவேளை தேநீர்,வடை மற்றும் நம் விருந்தினர்க்கு அன்பான அருமையான மதிய உணவும் தந்த வெங்கடேஸ்வரா கல்விக்குழும  நிர்வாகிகளுக்கும், முதல்வர், கணினி விரிவுரையாளர் கற்பூரசுந்தரபாண்டியன், 
என்னுடன் உழைத்த நண்பர்கள், 
வெளியிலிருந்தும் வந்து ஆர்வத்துடன் கலந்துகொண்ட 
வலையுலக நண்பர்களுக்கு நன்றி, வணக்கம்.
இணைய வகுப்பு அனுபவத்தை  எழுதியிருக்கும் நண்பர்கள் அ.பாண்டியன், மு.கீதா,கஸ்தூரியுடன், திருச்சி தமிழ்இளங்கோ அவர்களுக்கும், வகுப்பும் எடுத்து-பதிவும் தொடுத்த செ்ன்னை தி.ந.முரளிதரன் அய்யாவுக்கும் மனம் நெகிழ்ந்த நன்றிகள்.
------------------------------------------------------------- 
முக்கியமான பின்குறிப்பு -
இந்த இணைய வகுப்பின் இடையில், முனைவர் நா.அருள்முருகன் அவர்களின் “புதுக்கோட்டையில் ராசராசப் பெருவழித்தடம்” எனும் அரிய வரலாற்றுத் தகவல் கிடைத்தது. அதனை “தினமணி” 25-05-2014 ஞாயிறு “கொண்டாட்டம்” பகுதியில் முழுவதுமாகப் படிக்கலாம்.
அந்த இணைப்பு - http://epaper.dinamani.com/276425/Kondattam/25052014#page/1/1
---------------------------------------------------------------
(புகைப்படங்கள் - 
மு.கீதா, கஸ்தூரி, டீலக்ஸ் சேகர், 
மற்றும் திருச்சி தி. தமிழ்இளங்கோ.)

தமிழில் மாணவர் தோல்விக்குக் காரணமென்ன?



கடந்த கல்வியாண்டில் பத்தாம்வகுப்புத் தேர்வில் நம் பிள்ளைகள் மதிப்பெண்களை வாரிக்குவித்து “தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறடிஎன்பதை நிலை நாட்டியிருக்கிறார்கள். 
மாநில முதல்மதிப்பெண் 500க்கு 499 என்பதும், அதையும் 19பேர் பகிர்ந்திருப்பதும், அடுத்த 498ஐ 125பேரும், 497ஐ 321பேரும் பெற்றிருக்கிறார்கள் என்பதும் மகிழ்வான செய்திதான்
இதுவரை இல்லாத அளவில்கடந்த கல்வியாண்டில் மாணவ-மாணவியர் மதிப்பெண்களை வாரிக் குவித்திருந்தாலும், பல்லாயிரம்பேர் கணித-அறிவியல் பாடங்களில் 100 விழுக்காடு பெற்றிருந்தாலும், தமிழ்ப்பாடத்தில் மதிப்பெண்கள் குறைவாகவே இருப்பதும், 10முதல் 15விழுக்காட்டினர் தோல்வியடைவதும் தொடர்கிறதே ஏன்? அதிலும் தேர்வெழுதிய சுமார் 11லட்சம் மாணவர்களில் 63,000பேர் தமிழில் தோல்வியடைந்திருக்கிறார்களே ஏன்? என்பது ஒரு முக்கியமான கேள்வி.

இணையத்தமிழில் இணையற்ற ஜனநாயகம் - பயிற்சியில் முதல்நாள்

இணையற்ற ஜனநாயகம் 
இணையத்தமிழில் கிடைக்கிறது
இணையத் தமிழ்ப் பயிற்சிப் பட்டறையில் 
திருச்சிப் பேராசிரியர் 
முனைவர் பா.மதிவாணன் பேச்சு
இணையத்தமிழ்ப்பயிற்சிப் பட்டறையில், சர்மாவின் “எளிய தமிழ்த்தட்டச்சு முறை“ கையேடடை முதன்மைக்கல்வி அலுவலர் முனைவர் நா.அருள்முருன் வழங்க, ஆசிரியரும் எழுத்தாளருமான மு.கீதா பெற்றுக்கொள்கிறார். அருகில் முனைவர் பா.மதிவாணன், முனைவர் மு.பழனியப்பன், கல்லுரி நிர்வாகிகள் ஆர்.எம்.வீ.கதிரேசன்,பி.கருப்பையா, முதல்வர் கலியபெருமாள், மற்றும் நா.முத்துநிலவன் ஆகியோர் உள்ளனர்.
-------------------------------------------------------------------------------------------------------------

      புதுக்கோட்டையை அடுத்த கைக்குறிச்சி ஸ்ரீவெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரியில் நடந்த “இணையத் தமிழ்ப்பயிற்சிப் பட்டறை“ வகுப்பில் சிறப்புரை யாற்றிய பாரதிதாசன் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் பா.மதிவாணன், “வெளியில் கிடைக்காத பேச்சுரிமை, எழுத்துரிமை ஜனநாயகம் இணையத்தில் எழுதும் எழுத்தாளர்களுக்குக் கிடைக்கிறது“ என்றார்.

2014 – தேர்தல்- தமிழன் என்றோர் இனமும், தனியே அவர்க்கோர் குணமும்“


     இந்தியாவைத் தாய்நாடாக ஏற்றுக்கொண்டாலும், தமிழ் இனம் தனிஒரு குணம் கொண்டதாகத்தான் பல நூறாண்டுகளாக இருந்து வருகிறது என்பது 2014-தேர்தலிலும் மீண்டும் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

+2 தேர்ச்சி: ஈரோடு, நாமக்கல் மாவட்டங்கள் முதல், இரண்டு இடங்களைப் பெற்றது எப்படி?

 “பணம்கட்ட வருகிறவர்கள் ஆயிரம்ரூபாய் கட்டுகளாகக் கொண்டுவர வேண்டும். நூறு ரூபாய்க் கட்டுகளை வாங்க இயலாது“ – இது ஏதோ சாராயக்கடை ஏலத்திலோ, அல்லது  சவுளி மொத்தக் கொள்முதல் கடையிலோ கேட்ட குரலல்ல!
கடந்தஆண்டு, நாமக்கல் பள்ளி ஒன்றின் வாசலில் பத்தாம்வகுப்புத் தேர்வு முடிவு வெளியான அன்று காலை 10மணிக்கே - கூடிய கூட்டத்தினிடையே பள்ளி நிர்வாகத்தின் சார்பில் வந்த ஒலிபெருக்கிச் சத்தம்தான் இது!
அதாவது, பத்தாம் வகுப்புத் தேர்வுமுடிவு வெளிவந்த சில நிமிடங்களில் பலலட்சம் கல்லாக் கட்டிய பள்ளிகளின் வாசல் அறிவிப்புத்தான் இது! (சிலலட்ச ரூபாய் ரொக்கத்துடன், முதல் நாளே குடும்பத்துடன் போய், ரூம் எடுத்துத் தங்கி, விடிகாலையிலேயே பள்ளிமுன்பாக விண்ணப்பம் வாங்கும் வரிசையில் அம்மா இடம் பிடித்து நிற்க, அப்பாவும் பிள்ளையும் நெட் செண்டருக்குப் போய் மதிப்பெண் பட்டியலை எடுத்துக் கொண்டுவந்து வரிசையில் சேர்ந்துகொள்ளும் சாமர்த்தியம் அட! அட!! அடட!!! “தந்தை மகற்காற்றும் நன்றி “வரிசையில்“ முந்தியிருப்பச் செயல்“ என்று கிள்ளுவன் சொன்னது இதைத்தானோ?
+2 தேர்ச்சி: ஈரோடு, நாமக்கல் மாவட்டங்கள்  முதல், இரண்டு இடங்களைப் பெற்றது எப்படி?
பிளஸ்2 தேர்ச்சியில் 28ஆண்டாக, மாநில முதலிடத்தில் இருந்த விருதுநகர், இம்முறை மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது.  ஏன் தெரியுமா? எப்படித் தெரியுமா? 

இணையத் தமிழ்ப் பயிற்சி முகாம் - 2014 - புதுக்கோட்டை



வணக்கம். புதுக்கோட்டையில் கணினித் தமிழ்ப் பயிற்சி முகாம் ஒன்றைக் கடந்த அக்டோபர் 05,06, 2013  தேதிகளில்   நடத்தினோம். அதில் பெண் ஆசிரியர் 17பேர் உட்பட மொத்தம் 40 பேர் கலந்துகொண்டனர். 
பயிலரங்கில் உந்தப்பெற்ற பலர், வலைப்பக்கம் மற்றும் முகநூல் தொடங்கி எழுதியும் வருகின்றனர். மேலும் இணையப்  பயிற்சிபெற ஆர்வமுடன் இருக்கும் பலரும் அதுபற்றிக் கேட்டுக் கொண்டே இருப்பதால், அடுத்த பயிற்சிப் பட்டறை இதோ...

இந்தியச் சமூகவியல் ஆய்வுக்கட்டுரைப் போட்டி - ரூ.50,000 பரிசுத் தொகை


இந்தியச் சமூகவியல் ஆய்வுக்கட்டுரைப் போட்டி 
 பெருமதிப்பிற்குரியீர்  வணக்கம் .
  
  தமிழ்ச் சமூகத்தின் பண்பாட்டுத்தளத்தில் அம்பேத்கரிய -பெரியாரிய - மார்க்ஸிய சிந்தனைகளின் அடிப்படையில் உன்னதமான சமத்துவ வாழ்நிலையை கண்டடையும் அயராத முயற்சிகளோடு அபெகா பண்பாட்டு இயக்கம் இயங்கி வருகிறது .

0 அபெகா-வின் செயல் திட்டங்களின் ஒரு  பகுதியாக இவ்வாண்டு  எழுத்தாளர்கள் மற்றும்   ஆய்வாளர்களுக்கான இந்திய சமூகவியல் ஆய்வுக்கட்டுரை போட்டியினை கீழ்கண்ட 25 தலைப்புகளில் அறிவிப்பதில்  மகிழ்ச்சியடைகிறது .

0  ஒவ்வொரு தலைப்பிலும் ஒரு கட்டுரை வீதம் 25 கட்டுரைகள் தேர்வு  செய்யப்படும் 

0  தேர்வுபெறும்  ஒவ்வொரு கட்டுரைக்கும் ரூ 2000 வீதம் பரிசுத்தொகை வழங்கப்படும் 

தெருப்புகழ்

தெருப்புகழ்

கல்லத் தனை உள்ளத் தவரிடம்
எள்ளத் தனை கஞ்சிக் கெனவெயர்
வெள்ளத் தினில் தள்ளா டியகொடும்  நிலைமாறி,

வெட்டிப் பயி ரிட்டுப் புனலென
சொட்டித் திடு பச்சைச் குருதியை
விட்டுத் தினம் வைத்துப் பயிரிடும்   உழவோனே,

தத்தம் உரி மைக்குப் பயிரினை
வித்திட் டதன் மொத்தப் பலனையும்
ஒத்துக் கொளும் இந்தக் கனவினி  நினைவாக,

ஒட்டும் வயி றிங்கிவ் வுழவனை
எட்டும் பொழு தில்லை எனஒளிர்
பட்டப் பகல் வட்டத் திகிரியென் றெழுவோமே!!


எளியபொருள்

”நடிகர் திரு சூர்யாவும் நானும் கலந்துகொண்ட விழா“ (அல்லது) “கல்லூரி விழாக்களில் சினிமாக்காரர்கள்“ என இரண்டு தலைப்புகள் கொண்ட பதிவு இது...


நான் கல்லூரிகளில் படித்த காலத்தில் பெரும்பாலும் புகழ்பெற்ற அரசியல் தலைவரின் இலக்கியப் பேச்சுக்காகவே கல்லூரி விழாக்களுக்கு அழைப்பார்கள். ஆனால் இப்போது?....  எல்லாம் சினிமாக்காரர்கள் ... இதில் என்போலும் பேச்சாளரையும் சேர்த்து அழைத்து சிக்கல் பண்ணுகிறார்கள்...

நான் படித்த திருவையாற்று அரசர் கலலூரியில் -
எனக்கு முந்திய ஆண்டு மாணவர்களான திரு செந்தலை கவுதமன், திரு.மு.இளமுருகன் முதலான -அன்றைய தமிழியக்கதலைவர்கள், தந்தை பெரியாரை அழைத்திருந்தார்கள்.தேவநேயப் பாவாணர் அய்யாவை அழைத்திருந்தார்கள். பிறகு நெ.து.சு அவர்களை அழைத்திருந்தோம். சினிமாக்காரர்கள் யாரும் எங்கள் கல்லூரிக்கு வந்ததில்லை....

எங்களைப் போலவே எங்களுக்கு முந்திய-1960களின்-  தலைமுறைக் கல்லூரி மாணவர்களும் திராவிட இயக்கத் தலைவர்களையே கல்லூரிகளுக்கு அழைத்துப் பேசவைத்தார்கள் என்றே அதன் தாக்கம் அடுத்த பத்தாண்டுகளில் தமிழகத்தின் ஆட்சி அரசு மாறியது...

அப்படியானால் --

பாரதீ! என்னை மன்னித்துவிடு!


பண்டைப் புகழும் பாரம்பரியப்
     
   பண்புகள் மிக்கதும் இந்நாடே அற்பச்
சண்டையில் எங்கள் அண்டை வீட்டவர்
   
   மண்டை உடைவதும் இந்நாடே!            (1