பணி ஓய்வு பெற்றேன், நன்றி வணக்கம். மற்றவை நேரில்…

18-12-1980 அன்று  பணியில் சேர்ந்த நான்,  31-5-2014 இன்று, 

நினைவலைகளில் மனம் தளும்ப ஓய்வு பெறுகிறேன்,
34ஆண்டுகள்! பதவிஉயர்வில் செல்லாத ஒரே பணி! 
நான் விரும்பி ஏற்ற தமிழாசிரியரப் பணி!  

இந்தப் பணிக்காலத்தில்

நல்ல நிகழ்வுகள் மிகுதியாக

கசப்பான நிகழ்வுகள் குறைவாக

வாய்க்கப்பெற்றது என் பெறுபேறு!

 

எத்தனை வகையான மாணவர்கள்!

எத்தனை வகையான பெற்றோர்கள்!!

எத்தனை வகையான ஆசிரியர்கள்!!!

எத்தனை வகையான அலுவலர்கள்...!  

எத்தனை வகை-வகையான மக்கள்!... அடடா!

(இவர்களைப் பற்றியெல்லாம் அவ்வப்போது சிறுகதை,கட்டுரை கவிதைகள் எழுதியிருந்தாலும் இன்னும் எழுத ஏராளமுண்டு) 

பத்தாம் வகுப்புக்குப் பாடம் நடத்தும் பட்டதாரி ஆசிரியராக (தமிழாசிரியராக) 1980இல் பணியில்சேர்ந்த நான், அதே நிலையிலேயே ஓய்வு பெறுகிறேன். 

“இந்தப் பணி மூப்பிற்கு, 2000ஆம் ஆண்டிலிருந்து 2014வரை, அடுத்தடுத்து முதுகலை ஆசிரியர் உ.நி.,பள்ளி மே.நி.பள்ளித் தலைமை ஆசிரியர் மாவட்டக் கல்வி அலுவலர் / ஆகி முதன்மைக்கல்வி அலுவலருக்கான பட்டியலில் இடம்பெற்றிருக்க வேண்டும், நீ இப்படி வெட்டியாத் திரியிறியேஎன்று திட்டிய நண்பருண்டு.

ஆசிரியப் பணியிலிருக்கும் மனநிறைவு

அலுவரானபின் இருக்காது என்பதில் நான்

இப்போதும் தெளிவாகவே இருக்கிறேன்.

எந்த வேலையாக இருந்தாலும் தன்னார்வமாய் அதைச் செய்யும் போது கிடைக்கும் மனநிறைவு, பதவி உயர்வால் கிடைக்கும் தற்காலிகப் பெருமையில் நிச்சயம் கிடைக்காது.

எதையும் கஷ்டப்பட்டுச் செய்தால் சரியாக வராது, இஷ்டப்பட்டுச் செய்தால் நிறைவாக அமையும்எனும் என் அனுபவத்தையே என் மாணவர்க்கும் சொல்லியிருக்கிறேன்.

எங்கள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்,

முனைவர் நா.அருள்முருகன்அவர்கள் போல்வார்,

மாநிலம் முழுவதும் தேடினாலும் கிடைப்பார்களா என்பதும் அரிதே!

இவர் விதிகளை மாற்றக்கூடிய விதிவிலக்கு, சத்திய வார்த்தை! 

நல்லவன் வாழ்வான் படத்தில் எம்.ஆர்.ராதா, “பணக்காரனா இருந்தும் எப்பிடிடா ஜேம்சு நீ நல்லவனா இருக்கே?!! என்று கேட்பது போல,

அதிகாரியாக இருந்தும் அன்பும், அறிவும் ஒருங்கே அமைவது அரிது! தொடர்வது அரிதினும் அரிது. 

இதுபற்றி ஒரு நகைச்சுவைக் கதையே சொல்வார்கள்!

நமது இன்றைய அரசு அமைப்பில்,

தாசில்தார் வீட்டு நாய் செத்துப் போனால்

ஊரே திரண்டு வருமாம்,

தாசில்தாரே செத்துப்போனால்

ஒரு நாய்கூட வராதாம்!

இதுதான் பதவியின் தற்காலிகப் பெருமை!

என் தனிப்பட்ட பணியால் வரும் பெருமை நிரந்தரமானது!

இதை வேறு யாரும் பறித்துவிட முடியாது!

ஆனால்

இன்னும் எனக்குள் ஒரு பெரும் குறை உள்ளது.

இந்த மக்களுக்காக,ஏழை மாணவர்க்காகப் பணியாற்றினேன்என்னும் பெருமை எனக்குள் இருந்தாலும் ஒரு பெரும் குறை!

அது, தனிப்பட்ட நான் பொருளாதாரத்தில் வளர்ந்த அளவிற்கு என் ஏழை மக்கள் உயரவில்லையே எனும் குறை.

அதற்கு என் பணி பயன்படவில்லையோ எனும் ஆற்றாமை!

1980இல், நான் வேலையில் சேர்ந்தபோதுமிதிவண்டி விலை 500ரூபாய்! அப்போது அது நான் வாங்கிய மொத்தச் சம்பளம் : அடிப்படைச் சம்பளம்-ரூ450+ அகவிலைப்படிரூ20+ ஊரக அரசு ஊழியர் ஊக்க ஊதியம் (RSIA) ரூ10.,  

ஆக, மொத்தச் சம்பளமேரூ.480தான்) எனவே, ரொக்கம் தந்து வாங்கமுடியாமல் மாதம் ரூ.50 வீதம்(!) செலுத்துவதாக ஆவுடையார் கோவில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் கடன் பெற்று, புதிய மிதிவண்டி வாங்கினேன்!

இப்போது ஓய்வு பெறும் முன், 60,000ரூபாய்க்கு மேல் விற்கும் “ஆக்டிவா“ இருசக்கர வாகனத்தை, வங்கிக் கடன் வாங்காமலே

என் மாதச்சம்பளத்திற்குள் வாங்கியிருக்கிறேன்!

இதுதான்
, எனது அரசுப்பணியின்

34ஆண்டுக்கால பொருளாதார வரலாற்றின் ஒருவரிச் சுருக்கம்!

போராட்டத்தில் விளைந்த கவிதைகள் -

இந்த ஊதிய வளர்ச்சி யாருடைய கருணையாலோ, பெருந்தன்மையாலோ கிடைத்துவிட வில்லை! 1985-86, 89,2003ஆம் ஆண்டுகளில் லட்சக் கணக்கில் அரசுஊழியர்களும் ஆசிரியர்களும் வீதியில் இறங்கிப் போராடி, மாதக் கணக்கில் சிறையிருந்து, பெற்ற உரிமை! 1985 “ஜேக்டீ“ போராட்டடத்தில் புதுக்கோட்டைச் சிறையில் 50நாள்களுக்குமேல் சிறையிருந்த அரசுஊழியர் ஆசிரியர்களில் நானும் ஒருவன்! அப்போது தீபாளியன்று உண்ணாவிரதம் இருந்து, நடத்திய சிறைக் கவியரங்கில் நான் தலைமையேற்று நடந்த கவியரங்கில் நான் பாடிய “ஏணிகளே தோணிகளே இங்கு வந்த ஞானிகளே, அந்தோணி கையிலே அகப்பட்ட பிராணிகளே!” என்ற வரிகள் சிறையைத் தாண்டியும் பிரபலமானது! அதில் நான் வாசித்த “எங்கள் கிராமத்து ஞானபீடம்” கவிதை சில மாதங்கள் கழித்து, கல்கி வார இதழின் கடைசி முழுப்பக்கக் கவிதையாக வெளிவந்தது – 

(2-3-1986 கல்கி வார இதழின் கடைசிப் பக்கத்தில்
முழுப்பக்கக் கவிதையாக வெளிவந்த எனது கவிதை,
எனது இயற்பெயரிலேயே வெளிவந்தது!)  
------------------------------------------- 
இந்தக் கவிதை  வெளிவந்த அட்டைப்படம் கீழே உள்ளது:




இன்னொரு அரசியல் கவிதையும் 

“கல்கி”வார இதழிலேயே சற்றே முன்னர் வந்திருந்தது. 

இவை எனது போராட்டக்கால இலக்கியங்கள்-

அந்தக் கவிதை இதோ -

(இவை இரண்டும் 1993ஆம் ஆண்டு சிவகங்கை கவிஞர் மீரா அவர்களின் அன்னம்பதிப்பக வெளியீடாக வந்த எனது முதல் வெளியீடான       புதிய மரபுகள் கவிதைத் தொகுப்பில் இடம் பெற்றது.

இந்தத் தொகுப்பு, மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் முதுகலைத் தமிழ் மாணவர்க்கான பாடநூலாக 1995-2015 ஆண்டுகளில் இடம் பெற்றது. இதற்குக் காரணமான பேரா.முனைவர் இரா.மோகன் அவர்களுக்கு நன்றி.

இந்த நூலை இரண்டாம் பதிப்பாக 2015இல் வெளியிட்ட அன்னம்பதிப்பக உரிமையாளர் தம்பி மீரா.கதிர் அவர்களுக்கும் எனது நன்றி)

இந்தக் கவிதை வெளிவந்த

கல்கி இதழின் அட்டைப் படம் கீழுள்ளது :



இவை எனது போராட்டக்கால இலக்கியங்கள்!

எனினும் -?

இனி என் ஓய்வூதியம் 

பாதிச் சம்பளமே எனினும்

முன்னிலும் அதிகமாக 

மக்களுக்கு நான் செய்ய வேண்டிய 

பணியின் -அவசியத்தை உணர்கிறேன்..

 

இன்னும் படிப்பேன், எழுதுவேன், பேசுவேன்,

உடலில் சக்தியிருக்கும்வரை உழைப்பேன்.

இதுதான் எனது பணிஓய்வு நாள் செய்தி.

 

என் நண்பர்கள் -

இப்போதும் என்மேல் அன்புடன் இருக்கிறார்கள்,

இதுதான் நான் சரியானவன் என்பதன் அடையாளம்!

என் எதிரிகள் -

இப்போதும் என்மேல் கோபத்தில் இருக்கிறார்கள்,

அதுதான் நான் நேர்மையானவன் என்பதன் அடையாளம்!

 

கடந்த 34ஆண்டுகளாக நான் பணியாற்றிய பள்ளிகளில், அமைப்புகளில், இணைந்து இயங்கிய இயக்கங்களில், கலந்து கொண்ட போராட்டங்களில், இருந்த சிறைகளில், என் பணிகளுக்குப் பக்க பலமாக இருந்த ஆசிரிய நண்பர்கள், தலைமைஆசிரியர்கள், கல்வி அலுவலர்கள் மற்றும் பிற அரசுத் துறை நண்பர்கள் அனைவர் கைகளையும் குலுக்கி, பணிவும் கனிவும் கலந்த நன்றிப் பூக்களைத் தூவுகிறேன்...

நன்றி வணக்கம், மற்றவை நேரில்...

-----------------------------------------

சரி சரி அதுக்காக, ஒரு தேநீர் விருந்துகூட இல்லையா என்று உரிமையுடன் கேட்கும் நண்பர்களுக்கு ஒரு முன்செய்தி

வரும் சூலை அல்லது ஆகஸ்டு மாதத்தில் எனது நூல்கள் சிலவற்றின் வெளியீட்டு விழாவுடன் எனது பணிஓய்வுச் சிறுவிருந்தும் நடைபெறும். தவறாமல் அனைவரும் வந்து வாழ்த்துங்கள்.

நன்றி வணக்கம்.

------------------------------------------------ 

பின் குறிப்பு – 

இந்தப் பதிவு பல்லாண்டுகளாக எனது வலைப்பதிவுகளில் 

லட்சக்கணக்கானோர் படித்து, 

பின்னூட்டம் இட்டதில் முதலிடத்தில் உள்ளது.

எனவே, இதன் அவசியம் கருதி, 

போராட்டக் காலக் கவிதைகள் எனும் பகுதியை 

இன்றைய அரசு ஊழியர் - ஆசிரியர்களுக்கு 

சங்கத்தின் தேவை குறித்துச் சொல்ல வேண்டிய 

அவசியம் உள்ள சூழலைக் கருதி 

பின்னர் சேர்த்திருக்கிறேன்.  

இதைப் படிக்கும் 

அரசு ஊழியர், ஆசிரியர் தலைவர்கள் 

தாம்படித்ததோடு 

இன்றைய இளைஞர்களுக்கும் 

பகிர வேண்டுகிறேன்.

------------------------------------------------ 

பிரதமர் மோடியின் இணைய தளம் - சிக்கலா? ஏமாற்றா?



நமது பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் 26-05-2014 அன்று, 15ஆவது இந்தியப் பிரதமராகப் பதவியேற்றவுடன், தொடங்கி வைத்த இணைய தளத் தகவல் எனது மின்னஞ்சலுக்கும் நேராக வந்திருந்தது.
'பரவாயில்லையே, தகவல் தொடர்புச் சாதனங்களைப் பயன்படுத்தி ஆட்சிக்கு வந்ததுபோல, நல்லாட்சி தரும் முயற்சிக்கும் இதனைப் பயன்படுத்த நினைக்கிறாரே!" என்று உடனடியாக எனது கருத்தைப் பிரதமரின் இணைய தளப் பின்னூட்டப் பகுதியில் எழுதினேன்.
எழுதினேன் எழுதினேன் எழுதினேன்... ஏற்கவில்லை.

இணையத் தமிழ்ப்பயிற்சி - இரண்டாம்நாள்.. தொகுப்பு

முதன்மைக் கல்வி அலுவலர் முனைவர் நா.அருள்முருகன் அவர்களுடன்
இணையத் தமிழ்ப்பயிற்சி அமைப்புக் குழுவினர்.

கலந்துகொண்டு பயன்பெற்ற வலை நண்பர்களின் ஒரு பகுதியினர்

வாய்மொழிப் பாடம் முடிந்து செய்முறைப் பயிற்சி

முதல்நாள் கணினித்தமிழின் “அரிச்சுவடி” வகுப்பைத் தொடங்கி நடத்திய
சிவகங்கை முனைவர் மு.பழனியப்பன் அவர்கள்http://manidal.blogspot.in/ 

விக்கிப்பீடியாவில் தமிழ் எழுதுவது எப்படி?
பிரின்சு என்னாரெசுப் பெரியார்http://princenrsama.blogspot.in
இவர் தன் அருமைச் சகோதரர் பெரியார் சாக்ரடீசு அவர்களின் அகால மரணம் நிகழ்ந்த ஒருவாரத்தில் வந்து கலந்துகொ்ண்டது அனைவரையும் நெகிழ வைத்தது 

“மூங்கில் காற்று“  தி.ந.முரளிதரன் -http://tnmurali.blogspot.com/ 
“வலைச்சித்தர்“ திண்டுக்கல் தனபாலன் - 
http://dindiguldhanabalan.blogspot.com/
இருவரும் இணைந்து கலக்கிய வகுப்பில்...
----------------------------------------------------------------------------------------------- 


வகுப்பின்போது வலைப்பக்கம் உருவாக்கியவர்கள் மற்றும் ஏற்கெனவே வலைப்பக்கம் இருந்தும் செயல்படுத்தாமல் இருந்து, இந்த வகுப்பின் பின் புதிய வடிவமைப்போடும், இணைப்புகளோடும் எழுதத் தொடங்கியவர்கள் எனும் இரண்டு பட்டியல் இவை -
பேராசிரியர் முனைவர் பா.மதிவாணன் - http://inithuinithu.blogspot.in/
தமிழறிஞர் ஜோசப் விஜூ - http://oomaikkanavugal.blogspot.in/
ஆசிரியர் ஸ்டாலின் சரவணன் - http://stalinsaravanan.blogspot.in/
தமிழாசிரியர்  பானுமதி - http://nithimathi.blogspot.in/
தமிழாசிரியர்  பிரியதர்ஷினி - http://thamizhyazhini.blogspot.in/
தமிழாசிரியர் ரேவதி - http://tamizhal.blogspot.in/2014/05/blog-post.html
தமிழாசிரியர் மகா.சுந்தர் - http://mahaasundar.blogspot.in/ 
உ.தொ.க.அலுவலர் ஜெயா – http://jayalakshmiaeo.blogspot.in/ 

தலைமை ஆசிரியர் மாலதி - http://malathik886.blogspot.in/
பாவலர் பொன்.க. - http://pudugaimanimandram.blogspot.in/
சர்மா அச்சக நண்பர் குமார் - http://pudugaismkumar.blogspot.in/
நமது அய்யா முனைவர் நா.அ.மு - http://nadainamathu.blogspot.com/
கவிஞர் மு.கீதா - http://velunatchiyar.blogspot.in/
தமிழாசிரியர் அ.பாண்டியன் - http://pandianpandi.blogspot.com/
ஆங்கில ஆசிரியர் கஸ்தூரி - http://www.malartharu.org/
எழுத்தாளர் ராசி.பன்னீர்செல்வன் - http://rasipanneerselvan.blogspot.in/
கவிஞர் சுவாதி - http://swthiumkavithaium.blogspot.com/
--------------------------------------------- 
இரண்டுநாளும் கலந்துகொண்டு, புகைப்படங்களை எடுத்துத் தந்துதவிய 
திருச்சி தி.தமிழ் இளங்கோ - http://tthamizhelango.blogspot.com/  
கரந்தை ஜெயக்குமார் - http://karanthaijayakumar.blogspot.in/
இந்த வகுப்பில் விக்கிபீடியாவில்...எழுதக்கற்று்க்கொண்ட அய்யா முனைவர் பா.ஜம்புலிங்கம் -http://drbjambulingam.blogspot.in/   - 
ஆகியோர்க்கு நன்றி கலந்த வணக்கங்கள்.
நமது கணினித்தமிழ்ப்பயணம் தொடரட்டும் நண்பர்களே!

வந்து வகுப்பெடுத்துக் கணினித் தமிழறிவை வழங்கியதோடு,  அனுபவங்களையும் பகிர்ந்துகொண்ட நம் கணித்தமிழ் ஆசான்கள் -
                                                   
                                                  முனைவர் மு.பழனியப்பன்  - 
                                                                                  http://manidal.blogspot.in/ 

“மூங்கில்காற்று“ தி.ந.முரளிதரன் - 

“வலைச்சித்தர்“ திண்டுக்கல் தனபாலன் - 

பிரின்சு என்னாரெசுப் பெரியார் - 

புதுக்கோட்டை சர்மா அச்சகம் வாசு - http://easytype.in/   
ஆகியோர்க்கு நன்றி சொல்லப் போவதிலலை, 
இன்னும் எழும் சந்தேகங்கள் மற்றும் புதியவர்களுடன், 
அடுத்த வகுப்பில் சந்தித்து வணங்குவோம்.. அவ்வளவே!
ஆனால், தனித்தனியாக ஒருவருக்கு ஒருநாள் முழுவதும், ஆர்வமும் தேவையும் உள்ளவர்க்கு மட்டும் அது பத்துப்பேராயினும்... 
கூடுதலாக இருந்தால் அடுத்த 10பேர் அடுத்த பட்டியலில்... 
பத்துப்பேரை பத்துக் கணினியுடன் ஒரே ஆசிரியரிடம் 
குறைந்தது 5மணிநேரம் விட்டுவிடுவதுதான் சரி. 
அதுவும் விரைவில் நடக்கும்.
இதற்காக வழிகாட்டிய எங்கள் முதன்மைக்கல்வி அலுவலர் தமிழறிஞர் முனைவர் நா.அருள்முருகன், இடத்துடன் கணினி இணைப்பு உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் செய்ததோடு, இரண்டுநாளும் இரண்டுவேளை தேநீர்,வடை மற்றும் நம் விருந்தினர்க்கு அன்பான அருமையான மதிய உணவும் தந்த வெங்கடேஸ்வரா கல்விக்குழும  நிர்வாகிகளுக்கும், முதல்வர், கணினி விரிவுரையாளர் கற்பூரசுந்தரபாண்டியன், 
என்னுடன் உழைத்த நண்பர்கள், 
வெளியிலிருந்தும் வந்து ஆர்வத்துடன் கலந்துகொண்ட 
வலையுலக நண்பர்களுக்கு நன்றி, வணக்கம்.
இணைய வகுப்பு அனுபவத்தை  எழுதியிருக்கும் நண்பர்கள் அ.பாண்டியன், மு.கீதா,கஸ்தூரியுடன், திருச்சி தமிழ்இளங்கோ அவர்களுக்கும், வகுப்பும் எடுத்து-பதிவும் தொடுத்த செ்ன்னை தி.ந.முரளிதரன் அய்யாவுக்கும் மனம் நெகிழ்ந்த நன்றிகள்.
------------------------------------------------------------- 
முக்கியமான பின்குறிப்பு -
இந்த இணைய வகுப்பின் இடையில், முனைவர் நா.அருள்முருகன் அவர்களின் “புதுக்கோட்டையில் ராசராசப் பெருவழித்தடம்” எனும் அரிய வரலாற்றுத் தகவல் கிடைத்தது. அதனை “தினமணி” 25-05-2014 ஞாயிறு “கொண்டாட்டம்” பகுதியில் முழுவதுமாகப் படிக்கலாம்.
அந்த இணைப்பு - http://epaper.dinamani.com/276425/Kondattam/25052014#page/1/1
---------------------------------------------------------------
(புகைப்படங்கள் - 
மு.கீதா, கஸ்தூரி, டீலக்ஸ் சேகர், 
மற்றும் திருச்சி தி. தமிழ்இளங்கோ.)

தமிழில் மாணவர் தோல்விக்குக் காரணமென்ன?



கடந்த கல்வியாண்டில் பத்தாம்வகுப்புத் தேர்வில் நம் பிள்ளைகள் மதிப்பெண்களை வாரிக்குவித்து “தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறடிஎன்பதை நிலை நாட்டியிருக்கிறார்கள். 
மாநில முதல்மதிப்பெண் 500க்கு 499 என்பதும், அதையும் 19பேர் பகிர்ந்திருப்பதும், அடுத்த 498ஐ 125பேரும், 497ஐ 321பேரும் பெற்றிருக்கிறார்கள் என்பதும் மகிழ்வான செய்திதான்
இதுவரை இல்லாத அளவில்கடந்த கல்வியாண்டில் மாணவ-மாணவியர் மதிப்பெண்களை வாரிக் குவித்திருந்தாலும், பல்லாயிரம்பேர் கணித-அறிவியல் பாடங்களில் 100 விழுக்காடு பெற்றிருந்தாலும், தமிழ்ப்பாடத்தில் மதிப்பெண்கள் குறைவாகவே இருப்பதும், 10முதல் 15விழுக்காட்டினர் தோல்வியடைவதும் தொடர்கிறதே ஏன்? அதிலும் தேர்வெழுதிய சுமார் 11லட்சம் மாணவர்களில் 63,000பேர் தமிழில் தோல்வியடைந்திருக்கிறார்களே ஏன்? என்பது ஒரு முக்கியமான கேள்வி.

இணையத்தமிழில் இணையற்ற ஜனநாயகம் - பயிற்சியில் முதல்நாள்

இணையற்ற ஜனநாயகம் 
இணையத்தமிழில் கிடைக்கிறது
இணையத் தமிழ்ப் பயிற்சிப் பட்டறையில் 
திருச்சிப் பேராசிரியர் 
முனைவர் பா.மதிவாணன் பேச்சு
இணையத்தமிழ்ப்பயிற்சிப் பட்டறையில், சர்மாவின் “எளிய தமிழ்த்தட்டச்சு முறை“ கையேடடை முதன்மைக்கல்வி அலுவலர் முனைவர் நா.அருள்முருன் வழங்க, ஆசிரியரும் எழுத்தாளருமான மு.கீதா பெற்றுக்கொள்கிறார். அருகில் முனைவர் பா.மதிவாணன், முனைவர் மு.பழனியப்பன், கல்லுரி நிர்வாகிகள் ஆர்.எம்.வீ.கதிரேசன்,பி.கருப்பையா, முதல்வர் கலியபெருமாள், மற்றும் நா.முத்துநிலவன் ஆகியோர் உள்ளனர்.
-------------------------------------------------------------------------------------------------------------

      புதுக்கோட்டையை அடுத்த கைக்குறிச்சி ஸ்ரீவெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரியில் நடந்த “இணையத் தமிழ்ப்பயிற்சிப் பட்டறை“ வகுப்பில் சிறப்புரை யாற்றிய பாரதிதாசன் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் பா.மதிவாணன், “வெளியில் கிடைக்காத பேச்சுரிமை, எழுத்துரிமை ஜனநாயகம் இணையத்தில் எழுதும் எழுத்தாளர்களுக்குக் கிடைக்கிறது“ என்றார்.

2014 – தேர்தல்- தமிழன் என்றோர் இனமும், தனியே அவர்க்கோர் குணமும்“


     இந்தியாவைத் தாய்நாடாக ஏற்றுக்கொண்டாலும், தமிழ் இனம் தனிஒரு குணம் கொண்டதாகத்தான் பல நூறாண்டுகளாக இருந்து வருகிறது என்பது 2014-தேர்தலிலும் மீண்டும் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

+2 தேர்ச்சி: ஈரோடு, நாமக்கல் மாவட்டங்கள் முதல், இரண்டு இடங்களைப் பெற்றது எப்படி?

 “பணம்கட்ட வருகிறவர்கள் ஆயிரம்ரூபாய் கட்டுகளாகக் கொண்டுவர வேண்டும். நூறு ரூபாய்க் கட்டுகளை வாங்க இயலாது“ – இது ஏதோ சாராயக்கடை ஏலத்திலோ, அல்லது  சவுளி மொத்தக் கொள்முதல் கடையிலோ கேட்ட குரலல்ல!
கடந்தஆண்டு, நாமக்கல் பள்ளி ஒன்றின் வாசலில் பத்தாம்வகுப்புத் தேர்வு முடிவு வெளியான அன்று காலை 10மணிக்கே - கூடிய கூட்டத்தினிடையே பள்ளி நிர்வாகத்தின் சார்பில் வந்த ஒலிபெருக்கிச் சத்தம்தான் இது!
அதாவது, பத்தாம் வகுப்புத் தேர்வுமுடிவு வெளிவந்த சில நிமிடங்களில் பலலட்சம் கல்லாக் கட்டிய பள்ளிகளின் வாசல் அறிவிப்புத்தான் இது! (சிலலட்ச ரூபாய் ரொக்கத்துடன், முதல் நாளே குடும்பத்துடன் போய், ரூம் எடுத்துத் தங்கி, விடிகாலையிலேயே பள்ளிமுன்பாக விண்ணப்பம் வாங்கும் வரிசையில் அம்மா இடம் பிடித்து நிற்க, அப்பாவும் பிள்ளையும் நெட் செண்டருக்குப் போய் மதிப்பெண் பட்டியலை எடுத்துக் கொண்டுவந்து வரிசையில் சேர்ந்துகொள்ளும் சாமர்த்தியம் அட! அட!! அடட!!! “தந்தை மகற்காற்றும் நன்றி “வரிசையில்“ முந்தியிருப்பச் செயல்“ என்று கிள்ளுவன் சொன்னது இதைத்தானோ?
+2 தேர்ச்சி: ஈரோடு, நாமக்கல் மாவட்டங்கள்  முதல், இரண்டு இடங்களைப் பெற்றது எப்படி?
பிளஸ்2 தேர்ச்சியில் 28ஆண்டாக, மாநில முதலிடத்தில் இருந்த விருதுநகர், இம்முறை மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது.  ஏன் தெரியுமா? எப்படித் தெரியுமா? 

இணையத் தமிழ்ப் பயிற்சி முகாம் - 2014 - புதுக்கோட்டை



வணக்கம். புதுக்கோட்டையில் கணினித் தமிழ்ப் பயிற்சி முகாம் ஒன்றைக் கடந்த அக்டோபர் 05,06, 2013  தேதிகளில்   நடத்தினோம். அதில் பெண் ஆசிரியர் 17பேர் உட்பட மொத்தம் 40 பேர் கலந்துகொண்டனர். 
பயிலரங்கில் உந்தப்பெற்ற பலர், வலைப்பக்கம் மற்றும் முகநூல் தொடங்கி எழுதியும் வருகின்றனர். மேலும் இணையப்  பயிற்சிபெற ஆர்வமுடன் இருக்கும் பலரும் அதுபற்றிக் கேட்டுக் கொண்டே இருப்பதால், அடுத்த பயிற்சிப் பட்டறை இதோ...

இந்தியச் சமூகவியல் ஆய்வுக்கட்டுரைப் போட்டி - ரூ.50,000 பரிசுத் தொகை


இந்தியச் சமூகவியல் ஆய்வுக்கட்டுரைப் போட்டி 
 பெருமதிப்பிற்குரியீர்  வணக்கம் .
  
  தமிழ்ச் சமூகத்தின் பண்பாட்டுத்தளத்தில் அம்பேத்கரிய -பெரியாரிய - மார்க்ஸிய சிந்தனைகளின் அடிப்படையில் உன்னதமான சமத்துவ வாழ்நிலையை கண்டடையும் அயராத முயற்சிகளோடு அபெகா பண்பாட்டு இயக்கம் இயங்கி வருகிறது .

0 அபெகா-வின் செயல் திட்டங்களின் ஒரு  பகுதியாக இவ்வாண்டு  எழுத்தாளர்கள் மற்றும்   ஆய்வாளர்களுக்கான இந்திய சமூகவியல் ஆய்வுக்கட்டுரை போட்டியினை கீழ்கண்ட 25 தலைப்புகளில் அறிவிப்பதில்  மகிழ்ச்சியடைகிறது .

0  ஒவ்வொரு தலைப்பிலும் ஒரு கட்டுரை வீதம் 25 கட்டுரைகள் தேர்வு  செய்யப்படும் 

0  தேர்வுபெறும்  ஒவ்வொரு கட்டுரைக்கும் ரூ 2000 வீதம் பரிசுத்தொகை வழங்கப்படும்