நண்பர் சுலைமானுக்கு நன்றி -

அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா கைகுலுக்கிக் கொண்டு இருக்கும் இந்தச் சிறுமி யார்?
அப்படி என்ன செய்துவிட்டாள் இந்த இந்தியச் சிறுமி?
அப்படித்தானே கேட்க்கத் தோன்றுகிறது??
இந்திய மூளையைக் கொண்டிருக்கும் இந்தச் சிறுமியை ’அமெரிக்காவின் தலைசிறந்த இளம் ஆராச்சியாளர்’ என்று சொந்தம் கொண்டாடுகிறது அமெரிக்கா.
ஆச்சர்யமா இருக்கா??
உண்மைதான், கேரளாவின் தலைநகரம் திருவனந்தபுரத்தைச் சார்ந்த பெற்றோருக்குப் பிறந்த தீபிகா குரூப் தற்போது பொற்றோருடன் அமெரிக்காவின் போஸ்டன் நகரில் வசிக்கிறார்.
14 வயதே ஆன தீபிகா தனது விடுமுறை நாள்களை கழிப்பதற்காக இந்தியா வந்தபோது பார்த்த ஒரு நிகழ்வு அவரை ஒரு ஆராச்சியாளராக மாற்றியுள்ளது.
தீபிகா தன் கண்ணால் பார்த்த காட்சி எது தெரியுமா? கிராமத்தில் வாழும் சிறுவர்கள் தேங்கிக் கிடக்கும் குட்டையில் தண்ணீர் குடித்ததைப் பார்த்ததுதான். மாசு நிறைந்த தண்ணீரைக் குடிக்கிறார்களே.... இவர்களுக்காக ஏதேனும் செய்தாகனும் என்ற முடிவுடன் அமெரிக்கா திரும்பிய தீபிகா தனது ஆராய்ச்சியினைத் துவக்கினார்.

--ரஃபீக் சுலைமான்.(07-10-2013)
https://www.facebook.com/notes/rafeeq-sulaiman/
பகிர்வுக்கு நன்றி ஐயா.
பதிலளிநீக்குதீபிகாவுக்கு வாழ்த்துக்கள்.
குழந்தை தீபிகாவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குபெருமை கொள்ள வேண்டிய விஷயம்.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் தீபிகா
நல்ல பதிவு நாளைக்கான நம்பிக்கையை நாம் அடுத்த தலைமுறையில் இருந்துதான் பெற வேண்டும்
பதிலளிநீக்குவணக்கம் அய்யா,
பதிலளிநீக்குதீபிகாவின் கண்டுபிடிப்பு போற்றத்தக்கது. வாழ்த்துக்கள் தீபிகாவிற்கு. இப்படிப்பட்ட இளைஞர்கள் இந்தியாவில் நிரம்பி உள்ளனர். அவர்களுக்க்கு நல்ல கட்டமைப்பும், நிதி ஆதாரமும் இருந்தால் தினம் ஒரு கண்டுபிடிப்பு இந்தியாவில் உதயமாகும் என்பது எனது கருத்து. அரசு முயற்சித்து இளம் விஞ்ஞானிகளைக் கண்டறிந்து ஊக்கப்படுத்தி உதவ வேண்டும். பகிர்வுக்கு நன்றீங்க அய்யா.
தீபிகா அவர்களுக்கு வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குவணக்கம்
பதிலளிநீக்குஎனது வலைப்பக்கத்தை இணைத்தமைக்கு மிக்க நன்றி.தங்களின் படைப்புகல் மென்மேலும் வளர வாழ்த்துகிண்றேன்.தீபிகா போல் எல்லாக் குழந்தைகளுக்கும் பொறுப்பை உணர்த்தி விட்டால் போதும்.வருங்காலம் சிறக்கும்.
இந்த தீபிகா சாதனைதான் வியக்க வைக்கிறது !
பதிலளிநீக்கு