அனிருத் கனடாவிலேயே கைதாக ஒரு வாய்ப்புள்ளது.

தற்போது கனடாவின் டொரண்டோ நகரில் பதுங்கி(?)யிருக்கும் “பீப்பாடல் புகழ்“ அனிருத் கனடாவிலேயே கைதாக வாய்ப்புள்ளது.

தமிழ்நாட்டுக் காவல் துறை கொஞ்சம் முயற்சி எடுத்தால் போதும்.  இன்று வந்த செய்திதான் எனக்கு இந்தக் கருத்தைத் தந்தது - காவல் துறை செய்யுமா?

கனடாவில் முதன்முறையாக நேற்றுத்தான் ஒரு தமிழ்ப்பெண் நீதிபதியாகியுள்ளாராம். அவர் பெயர் வள்ளியம்மை. (நமது உச்சநீதி மன்றத்தின் முன்னாள் நிதிபதி ஏ.ஆர்.லட்சுமணன் அவர்களின் உறவினராம்)

தொடர்புடைய செய்தி படிக்க –

'தமிழருக்கு பெருமை: கனடா நாட்டில் ஐகோர்ட்டு நீதிபதியாக தமிழ் பெண் நியமனம்'

எனவே, “பீப் புகழ்“ அனிருத், தமிழ்நாட்டுக்கு வந்தால் எங்கே கைதாகி விடுவோமோ என்று கனடாவிலேயே பதுங்கி இருப்பதைக் கைவிட்டு, உடன்  தமிழ்நாடு திரும்புவது நல்லது. நல்லதோ கெட்டதோ இங்கேயே நடக்கட்டும்! நாஞ்சொல்றது? சரிதானுங்களே?
------------------------------------------- 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக