தமிழுக்கு விளம்பர வருவாய்! (Google AdSense for Tamil 2019) ஒரு நல்ல செய்தி!



தமிழில் வலைப்பக்கம் வைத்திருக்கும் நண்பர்களுக்கு,
என் அன்பின் வணக்கம். இதோ ஒரு நல்ல செய்தி!

எனது நூலுக்கு 262பேர் விமர்சனம்! வியப்பு கலந்த மகிழ்ச்சி!


“அக்குபங்சர்” மருத்துவர்களின்
தமுஎகச “அறம்”  குழுவினர்,
எழுத்தாளர் அ.உமர் ஃபாரூக் தலைமையில்
மதுரை, திருச்சி, காரைக்குடி, திருமயம் மற்றும்
புதுக்கோட்டை- பெருங்களுர் நண்பர்களும்
என் வீட்டுக்கு வந்த நெகிழ்வான தருணம்!

நெகிழ்வான, நெகிழி… “கைப்பிள்ளை” அரசுகளின் கார்ப்பரேட் விசுவாசம்!

ஜனவரி 1 முதல் தமிழகத்தில் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருள்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதை ஆரத்தழுவி வரவேற்கிறேன்... 
ஆனால்  

2018, கலை-இலக்கிய விருதுகள் ரூ.70,000! அறிவிப்பு!


தமுஎகச கலை-இலக்கிய விருதுகள்
(2018 ஆம் ஆண்டுப் படைப்புகளுக்கான போட்டி அறிவிப்புகள்)

2018 ஆம் ஆண்டுக்கான தமுஎகச கலை இலக்கிய விருதுகளுக்கான நூல்கள், குறும்படங்கள், ஆவணப்படங்கள் வரவேற்கப்படுகின்றன.
2018 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட நூல்கள் / தகடுகள் மட்டுமே அனுப்பப்படவேண்டும். ஒவ்வொன்றிலும் இரண்டு பிரதிகள்                            அனுப்பப்பட வேண்டும்.
2019 பிப்ரவரி 28  தேதிக்குள் கீழ்க்கண்ட முகவரிக்கு
அஞ்சல் / கூரியர் மூலம் அனுப்ப வேண்டும்

ஷார்ஜா - உலகப் புத்தகத் திருவிழா! ஒருநேரடி அனுபவம்!



------  நா.முத்துநிலவன் ----- 
இந்த ஆண்டு தீபாவளிநாள் நவம்பர்-06,  ஷார்ஜாவில் உலகப் புத்தக தீபாவளியாக நடந்தது!  37ஆண்டுகளாக நடந்துகொண் டிந்தாலும்,  இந்த ஆண்டுதான் தமிழுக்கென்று அரங்குகள் அமைந்த கண்கொள்ளாக் காட்சி கண்டு, அமீரகத் தமிழர்கள் பல்லாயிரவர் மகிழ, அது கண்டு உவந்து எழுந்ததே இச் சிலசொற்கள்!

சிறந்த நூல்கள், திரைப்பட- குறும்பட விருதுகளுக்கான அறிவிப்பு!


புதுக்கோட்டை புத்தகத் திருவிழா 
மூன்றாவது ஆண்டாக, 
2018இல்,
 நவம்பர்-24 சனிக்கிழமை முதல் 
திசம்பர்-03 திங்கள்கிழமை வரை 
பத்துநாள்கள்
புதுக்கோட்டை நகர்மன்றத்தில் 
சிறப்பாக நடக்கவுள்ளது.

புதிய விருதுகள் 
சிறந்த திரைக்கலைஞர்களை,
எழுத்தாளர்களைக் கௌரவிக்க
காத்திருக்கின்றன! 
முழுவிவரம் இதோ...

புதுக்கோட்டை புத்தகத் திருவிழா – 2018



புதுக்கோட்டை புத்தகத் திருவிழா – 2018
கஜா புயல் காரணமாகத் 
தள்ளிவைக்கப்பட்டது
நாள் பின்னர் அறிவிக்கப்படும் 

------------------------------------------------------ 


காரைக்குடி புத்தகவிழா – எனது பேச்சு காணொலி இணைப்பு


தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் 
காரைக்குடி நண்பர்கள் ஏற்பாடு செய்து நடத்திவரும் “முதலாவது புத்தகத் திருவிழா” நிகழ்வில் 
கடந்த 08-10-2018 அன்று 
நான் பேசிய பேச்சின் காணொலி இணைப்பு இது-
“புத்தகம் புது உலகின் திறவுகோல்”
பார்த்து, கேட்டுக் கருத்திடவும், 
இன்னும் 
எனது வலைப்பக்கத்தில்
FOLLOWER பட்டியலில் இணையாதவர்கள் 
அந்தப் பெட்டியில் 
தமது மின்னஞ்சலைத் தந்து இணையவும் 
அன்புடன் அழைக்கிறேன்.
வணக்கம்.
காணொலி இணைப்பு இது - 

நன்றி -  'K' STUDIO,  புதுக்கோட்டை  
----------------------- 

ஆண்டு முழுவதும் மத நல்லிணக்க விழாக்கள்! புதுக்கோட்டை மக்கள் ஒற்றுமை மேடை தீர்மானம்.


அண்ணல் காந்தியின் 150-ஆவது பிறந்த ஆண்டையொட்டி
ஆண்டு முழுவதும் மத நல்லிணக்க விழாக்கள்!
புதுக்கோட்டை மக்கள் ஒற்றுமை மேடை தீர்மானம்


     புதுக்கோட்டை, அக்-01 அண்ணல் காந்தியின் 150-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அக்டோபர் 2-ஆம் தேதி முதல் ஆண்டுமுழுவதும் மக்கள் ஒற்றுமை மதநல்லிணக்க ஆண்டாக கொண்டாடுவது என புதுக்கோட்டை மாவட்ட மக்கள் ஒற்றுமை மேடை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.