நிகழ்வுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நிகழ்வுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

பாராட்டுக்குரிய பத்திரிகையாளர் சங்கம்

வரலாற்றுப் பெருமையும் பண்பாட்டுப் பெருமையும் மிகுந்த 

தமிழ்நாட்டு மாவட்டங்களில் குறிப்பிடத்தக்க இடத்தைக்

கொண்டிருப்பது

புதுக்கோட்டை மாவட்டம் 

அதிலும் தொல்லியல் சான்றுகள் அதிகமுள்ளது 

புதுக்கோட்டை மாவட்டம்!

மனிதகுல வரலாற்றில் ஆதி இனக்குழு மக்கள் வாழ்ந்த 

சான்றுகளைக் கொண்டிருக்கும் உலகின் மிகச்சில இடங்களில்

புதுக்கோட்டைப் பகுதியும் ஒன்று!

உலகிலேயே அதிகமான கல்வெட்டுகள் கிடைத்திருப்பது 

இந்தியாவில் தான்

இந்தியாவிலேயே அதிகமான கல்வெட்டுகள்   60

விழுக்காட்டுக்கும் மேலாக, தமிழில்தான் உள்ளன 

என்பது ஒரு பெருமை எனில்

தமிழ்நாட்டிலும் மிக அதிகமான தொல்லியல் சான்றுகள்

குறிப்பாக சமணச் சான்றுகள்  அதிகமாக உள்ள  மாவட்டம்

புதுக்கோட்டைதான் என்பது தனிப் பெருமை!

இந்த எமது மாவட்டப் பெருமை இந்திய வரலாற்றில் சரியாகச் சொல்லப்பட வில்லையோ எனும் சந்தேகம் எனக்குண்டு! 

மன்னர் வரலாறுகளையே சொல்லிக்கொண்டிருக்கும் நாம், அதற்கும் முந்திய நம் ஆதித் தமிழர் வரலாற்றை எப்போது சொல்லப் போகிறோம் எனும் கவலை எப்போதும் என்னைக் குடையும்

அதைப் போக்கக் கூடிய வாய்ப்பு ஊடகத்திற்குத்தான் உண்டு!

அந்தப் பெருமைக்குரிய புதுக்கோட்டை மாவட்ட 

ஊடக நண்பர்கள் தற்போது, சங்கமாகச் சேர்ந்து, இணைந்து 

இயங்கிட ஓர் அலுவலகமும் பிடித்து

சூட்டோடு சூடாக ஒரு கையேட்டையும்  

சிறப்பான முறையில் கொண்டுவந்திருக்கிறார்கள்! 

அதுவும் எல்லாவற்றிலும், சாதி மற்றும் கட்சி-அரசியல் புகுந்து

தமிழரின் பெருமைகளைப் பின்னுக்கு இழுத்து வரும் 

இன்றைய சூழலில்  

இது எனக்குப் பெரிதும் மன நிறைவைத் தருவதாக உள்ளது.

பாராட்டுக்குரிய புதுக்கோட்டை மாவட்டப் 

பத்திரிகையாளர் சங்க நிர்வாகிகள் 

மிகுந்த பாராட்டிற்குரியவர்கள் –

மதுரை உலகத் தமிழ்ச்சங்கத்தில் எனது இணைய நேரலை உரை - காண வருக!

உலகத் தமிழ்ச் சங்கம் - மதுரை

நடத்தும்

'இணையத் தமிழ்க்கூடல்-10 '

 25-7-2020  சனிக்கிழமை  காலை10.30மணி

--தலைமை--

முனைவர் ப.அன்புச்செழியன் அவர்கள்,

இயக்குநர் (பொ) உலகத் தமிழ்ச்சங்கம், மதுரை 

----சிறப்புரை ---

இணையத்தில் வளரும் தமிழ்

கவிஞர் நா.முத்துநிலவன் அவர்கள்

கவிஞர், எழுத்தாளர், புதுக்கோட்டை

----------------- 0000000000000000 -----------------

ஒருங்கிணைப்பாளர்

முனைவர் சு.சோமசுந்தரி அவர்கள்,

ஆய்வறிஞர், உலகத் தமிழ்ச்சங்கம், மதுரை

இணைப்புக்குச் செல்லச் சொடுக்குக-

https://tinyurl.com/ybkpa3oj 

சான்றிதழ் வேண்டுவோர்க்கான பதிவுப் படிவம் -

https://tinyurl.com/y525m3nk

நிகழ்வின் பிறகு இணைத்தது-

"இணையத்தில் வளரும் தமிழ்"

எனது உரையின் வலையொளி இணைப்பு:

https://youtu.be/YzoLAQ9KZR0


உரையைக் கேட்டவர்கள்,
உரைபற்றிய கருத்தைப் 
பின்னூட்டத்தில் எழுதினால் மகிழ்வேன்
-----------------------------

ஷார்ஜா - உலகப் புத்தகத் திருவிழா! ஒருநேரடி அனுபவம்!



------  நா.முத்துநிலவன் ----- 
இந்த ஆண்டு தீபாவளிநாள் நவம்பர்-06,  ஷார்ஜாவில் உலகப் புத்தக தீபாவளியாக நடந்தது!  37ஆண்டுகளாக நடந்துகொண் டிந்தாலும்,  இந்த ஆண்டுதான் தமிழுக்கென்று அரங்குகள் அமைந்த கண்கொள்ளாக் காட்சி கண்டு, அமீரகத் தமிழர்கள் பல்லாயிரவர் மகிழ, அது கண்டு உவந்து எழுந்ததே இச் சிலசொற்கள்!

புதுக்கோட்டையில் “கக்கூஸ்” ஆவணப்படம் திரையிடல்

இயக்குநர் திவ்யாவுடன் கலந்துரையாட வருக நண்பர்களே!
என்னை அதிர்ச்சியடையச் செய்த ஆவணப்படம் என்று ஏற்கெனவே எனது வலைப்பக்கத்தில் எழுதியிருக்கிறேன். குறுகிய காலத்தில் எனது “அதிகமாகப் பார்க்கப்பட்ட பதிவுகள்” பத்தில் எட்டாம் இடம் வந்திருப்பது, எனது செல்வாக்கால் அல்ல, படத்தின் வீச்சு அத்தகையது! பார்க்க – http://valarumkavithai.blogspot.com/2017/02/blog-post_28.html

இந்தப் படத்தை, வரும் 15-04-2017 சனிக்கிழமை மாலை 6மணிக்கு, புதுக்கோட்டை- உசிலங்குளம் “கந்தர்வன் நூலக அரங்”கில் திரையிடுகிறோம்.
அதோடு இயக்குநர் திவ்யாவுடன் ஒரு கலந்துரையாடலும் உண்டு!