வணக்கம்.
இன்று வந்த
'ஆனந்த விகடன்'
(சித்திரைச் சிறப்பிதழ் -15-4-2026)
எனது நேர்காணல் வந்துள்ளது.
நன்றி:
விகடன் நிர்வாக ஆசிரியர்
திருமிகு வெ.நீலகண்டன் அவர்கள்,
ஒளிப்படக் கலைஞர் திரு தீட்ஷித் - விகடன்
இதில் படிக்க இயலாதவர்கள்,
என்னை மன்னிப்பதோடு,
இன்றே இப்போதே சென்று
இன்று வந்துள்ள
ஆனந்த விகடன் சித்திரைச் சிறப்பிதழ்
வாங்கிப் படித்துக்
கருத்திட வேண்டுகிறேன்.
-------------------------------------------------
தமிழ்நாட்டுக்கு வெளியே வாழ்வோர்,
பின்வரும் இணைய இணைப்பில் சென்று
தொகை செலுத்திப் படிக்கலாம்:
https://www.vikatan.com/literature/writer-muthu-nilavan-interview
Get Unlimited Access to All Vikatan magazine
worth ₹250 for FREE. Install Vikatan
APP https://vikatanmobile.page.link/ShareButton
நன்றி வணக்கம்.
------------------------------------------
பி.கு.
இந்த நேர்காணலில்
மூன்று எழுத்து, தொடர்ப் பிழைகள் வந்துள்ளன!
கண்டு பிடித்துச் சொல்வோர்க்கு
சேரன் செல்வக் கடுங்கோ வாழியாதன்,
தன்னைப் பாடிய கபிலருக்கு,
''சிறுபுறமென நூறாயிரம் காணம் கொடுத்து,
'நன்றா' என்னும் குன்றேறி நின்று
தன் கண்ணிற்கண்ட நாடெல்லாம்
காட்டிக் கொடுத்தது" போல
என்னால் தர இயலாது என்பதால்
வீட்டுக்கு வந்தால்
என் கையால் நானே தயாரித்து,
ஒரு நல்ல தேநீர் தருவேன்,
சமூக இலக்கியம் பேசலாம்
என்பதைக் கனிவுடன்
தெரிவித்துக் கொள்கிறேன்!
(வருவதற்கு முன் பேசிவிடுங்கள்,
ஏனென்றால் நான் நல்ல ஊர்சுற்றி)
நன்றி, வணக்கம்.
எனது செல்பேசி எண்:
+91 94431 93293
--------------------------------




தமிழ் அழகு. உங்கள் எழுத்துக்கள் அந்த அழகுக்கு அழகு சேர்க்கிறது. அது உங்கள் ஒவ்வொரு பேச்சிலும் எழுத்திலும்.
பதிலளிநீக்கு