சில “நல்ல” பள்ளிகளில் கோடை விடுமுறை விடுவதில்லையே இது சரிதானா?!



ங்கிலேயர் ஆரம்பித்ததுதான், ஆனாலும் நமதுபள்ளிகளுக்கான கோடை விடுமுறைஎன்பது நமது மண்சார்ந்த வகையில் -பள்ளிமாணவர் உளவியலும் உடல்நிலையும் சார்ந்த வகையில்- சரியானது தானே
அப்புறம் ஏன் தமிழகத்தின் ஆயிரக்கணக்கான தனியார் பள்ளிகளில் படிக்கும் லட்சக்கணக்கான நம் பிள்ளைகளுக்கு மட்டும் கோடை விடுமுறை மறுக்கப்படுகிறது? அவைதாம் “நல்ல பள்ளிகள்” என்ற நினைவுவேறு!
தனியார் பள்ளி விடுதிகளில் தங்கிப் படிக்கும் நமது தமிழகப் பிள்ளைகளில்  9,11ஆம் வகுப்புப் பிள்ளைகள் மட்டும் அவர்களின் ஆண்டு இறுதித்தேர்வு முடிந்ததும், “அம்மா... இந்த வருசம் சம்மர் லீவே இல்லையாம்மா... எனப் பேசுவதும், இந்த விசயம் முன்னரே தெரிந்த பெற்றோர்ஆமாடா கண்ணு. அடுத்த வருசம் நீ பப்ளிக் எக்ஸாம் எழுதப்போறயில்ல..? கொஞ்சம் கஷ்டப்பட்டுப படிச்சுறுப்பா... உன்ன அடுத்த வாரம் அப்பாவோட பாக்க வர்ரேன்”....  என்று தொலைபேசியில் கெஞ்சுவது இப்போது நடந்து வருகிறது.
ஏன் இப்படி?
குழந்தைகள் “ஓடி விளையாடு பாப்பாபாடலை ஓர் அறைக்குள் உட்கார்ந்து மனப்பாடம் செய்வதற்கா பாரதி எழுதினான்? இது தகுமா? இது முறையா? இதுசரியா?  இது நியாயம்தானா?
பள்ளிகளுக்கான பாடத்திட்டத்தை வகுத்தவர்கள்ஒருநாளைக்கு  இவ்வளவு நேரம் பாடம் நடக்க வேண்டும்விளையாட்டுகலைவகுப்புகள்  நடக்க வேண்டும் எனத் திட்டமிட்டுத் தந்தவர்கள் என்ன முட்டாள்களாஅறிவியல்  ரீதியாக அவர்கள் சொன்னதை மீறி, சிறப்பு வகுப்பு நடத்துவதே மாணவர் உளவியலுக்கு எதிரானதுகுதிரை கீழேதள்ளி குழியும் பறித்த கதையாக, கோடை விடுமுறையை யே மறுத்து  வகுப்புகள்  நடத்துவது  “குழந்தைகள்  மீதான  வன்முறை”  அல்லவா? 
யார் இதைக் கேட்பதுலட்சக் கணக்கான குழந்தைகள்,  பல்லாயிரக் கணக்கான  பெற்றோர் சார்பில் தமிழக அரசுதான்  கேட்க  முடியும், கேட்க வேண்டும்!   உடனே இதைத் தடுத்து நிறுத்தவும் வேண்டும்.
ங்கள் தாத்தா தன்காலத்துப் பெருமைகளைச் சொல்லும்போது "அந்தக் காலத்துலயே நான் ரெண்டாம்ப்புலருந்து 'டபுள்-ப்ரமோஷன்வாங்கி நேரா நாலாம்ப்புக்குப் போனவன்டா! அதுமட்டுமில்லமூணுவருச பி..,டிகிரி ஒரேவருசத்துல முடிச்சு 'ஹானர்ஸ்வாங்குனவன் தெரியுமில்ல?" என்று தனது வெள்ளை மீசையை நீவி விட்டுக்கொண்டே வீறாப்பாகச் சொல்வார்.
அதுபற்றி அப்போது எனக்கு ஆச்சரியமாக இருந்தாலும்வேறு ஒன்றும் கேட்டதில்லை. ஆனால். இப்போது நமது பிள்ளைகள் --9,11ஆம் வகுப்புகளில் படிப்பதாகச் சொல்லும் குழந்தைகள்-- அந்த வகுப்புப் பாடங்களையே படிக்காமல் அப்படியே முறையே 10, 12 வகுப்புப் பாடங்களையே இரண்டுவருடம் படிப்பதைப் பார்த்ததும் எனக்குத் தாத்தாவின் நினைவுதான் வந்தது! இந்த 'டபுள் ப்ரமோஷன்ஏன் இது நமது குழந்தைகளுக்குச் சரியா னதுதானா?   இது ஊரறிந்த ரகசியமாகப் பல்லாண்டுகளாகத் தொடர்வது ஏன்?
தமிழ்நாட்டின் அனைத்து மெட்ரிக்-பள்ளிகளிலும்பெரும்பாலான தனியார் பள்ளிகளிலும் 9,11ஆம் வகுப்புகளை  நடத்தும் வழக்கமே இல்லை! இந்த வியாதிபலபள்ளி மாணவரும் ஒரே ஆசிரியரிடம் தனிப்பயிற்சி படிப்பதால் தொற்றிக்கொள்ளும் வியாதி- இப்போது அரசுப் பள்ளிகளுக்கும் விடம்போலப் பரவி, குறைந்தது அரையாண்டுக்குப் பிறகாவது அடுத்தவருடப் பாடத்தைத் தொடங்கிவிடுவது என்னும் கைங்கரியம் நடந்துகொண்டுதான் இருக்கிறது. ஆக, அரசுப்பள்ளிகளில் 9,11ஆம் வகுப்புகளுக்கு அரைப்படிப்புத்தான்! மெட்ரிக், தனியார் பள்ளிகளில் அதுவும் இல்லைபோ என்னும் நிலைமை! ஏன் இப்படி?
மெட்ரிக் மற்றும் தனியார் பள்ளிகள் பலவற்றில், எட்டாம் வகுப்பு ஆண்டுத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவ-மாணவியர், 9ஆம் வகுப்பில் சேர்ந்தவுடனேயே, 10ஆம் வகுப்புப் பாடப்புத்தகங்களும் சேர்த்துத் தரப்படுகின்றன. தரப்படுவது என்ன, 'மெட்ரிக்குலேஷன்பள்ளிகளில்-ஆங்கில வழியில் -படிக்கும் மாணவர்கள் 9,10ஆம் வகுப்புப் பாடநூல்கள் இரண்டையும் ஒரே நேரத்தில் வாங்கிவிட வேண்டும்! 'மெட்ரிக்குலேஷன்பள்ளிகளில்தான் வெளியில் புத்தகங்களை வாங்க முடியாதே! வாங்கவும் கூடாதில்ல? அப்படி வாங்கிய 9ஆம் வகுப்புப் பாடப்புத்தகங்கள் சிலஒரு சில வாரங்களே நடத்தப்படும்! 'பெருந்தன்மை'யான சில பள்ளிகளில் காலாண்டு வரை நடப்பதுண்டு! அதற்குமேல் நிச்சயமாக 10ஆம் வகுப்புப் பாடங்கள் துவங்கி விடும்! அதிலிருந்து அந்த மாணவர்கள் 10-ஆம்வகுப்புப் பாடங்களையே இருமுறை -அதாவது சுமார் ஒன்னே முக்கால் ஆண்டுகளும் படிக்கிறார்கள்! (அப்படின்னா, +2 படிப்பு இரண்டு வருடம் மாதிரி,  பத்தாம் வகுப்பும் ரெண்டு வருடம் தானோ? என்மகன் பி.ஏசெகண்ட் இயர் படிக்கிறான்னு சொல்லிக்கிற மாதிரி என் மகள் டென்த் செகண்ட் இயர் படிக்கிறான்னு பெருமையா சொல்லிக்கலாம் ஆனா யாரும் சொல்லிக்கிறதில்லயே! ஏன்னா தன் மகன்ஃமகள்நல்லபள்ளியில் படிக்கும் ரகசியத்தைக் காப்பாற்ற வேண்டுமல்லவா?)
இதே கதை(கதி)தான் 11ஆம்வகுப்பு (+1) மாணவ-மாணவிகளுக்கும்! இதில் கூத்து என்னவென்றால்மெட்ரிக்குலேஷன் பள்ளிகளைப் போலவே  பெரும்பான்மையான அரசு மேல்நிலைப்பள்ளிகளில் -11ஆம் வகுப்பின் அரையாண்டுத் தேர்வுக்குப் பிறகு 12ஆம் வகுப்புப் பாடங்களைத் தொடங்கி விடுவது இப்போதெல்லாம் சர்வ சாதாரணமாகிவிட்டது என்பதுதான்!     
இப்படி --ஒன்பதாம் வகுப்பு மாணவர், 10ஆம் வகுப்புப் பாடத்தையே இரண்டுவருடமும், 11ஆம் வகுப்பு மாணவர், 12ஆம் வகுப்புப் பாடத்தையே இரண்டுவருடமும்- ஒரேபுத்தகத்தை 'உருப்போட்டமாணவர்தொழிற்கல்வி நுழைவுத் தேர்வுகளின்போது, 'உருப்படாதமதிப்பெண் எடுத்த ரகசியமும் இதுதான்! (எங்கள் மாவட்டத்தில் மெட்ரிக் பள்ளியில் படித்து மாவட்ட முதலிடம் பெற்ற மாணவி ஒருவருக்கு நுழைவுத் தேர்வில் தமிழ்நாட்டின் அரசுப பொறியியல் கல்லூரி எதிலும் இடம் கிடைக்காமல் நாக்பூர் போய்ப் படித்தது இங்குள்ள பலருக்கும் தெரிந்த ரகசியம்தான்!)
அந்தந்த வயதிற்கும் இருக்கக்கூடிய உளவியல், சொல்லாற்றல், பொருளுணர்தல், உலகஅறிவு பொதுகவனிப்புத் தன்மைக்கும் ஏற்பத்தான் பாடங்கள் தயாரிக்கப்படுவதாகக் கல்வியாளர்கள் சொல்கிறார்கள். உலகளவில் இது கடைபிடிக்கப்படுகிறது. இது உண்மைதான் எனில்இந்த வகுப்புகளைப்புறக்கணித்துவிட்டு -ஒரே தாண்டாகத் தாண்டி- அடுத்த வகுப்புக்கு மாணவர்களைக் 'கடத்திகொண்டு போவது ஏன்?
இப்படியான பள்ளிகளில்மாணவர்கள் மனப்பாட எந்திரமாக மாற்றப்படுவதன்றி வேறு வழியென்னபாடமும் புரியாமல்மனப்பாடமும் செய்ய முடியாமல் மாணவர்கள் படும் அவதியும், 'முடியாத'மாணவர்கள் கடுமையான தண்டனைக்கு ஆளாவதும் பள்ளிக் கூடத்தையே வெறுப்பதும்வாழ்க்கையே வெறுத்துப் போவதுமான நிலைமை தொடர்கதையாவதும் இப்படித்தானே! எப்படியாவது மதிப்பெண் வாங்கும் எந்திரமாக மாணவர்களை ஆக்கிவிடும் அவசரம்தானே இது மூன்றாவது கண்ணைத் திறக்கும் அவசரத்தில் இருக்கும் இரண்டு கண்களையும் ஒன்றரைக் கண்ணாக்கிவிடுவதன் விளைவு பற்றி யார் கவலைப்படுகிறார்கள்?  
    தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை தன் கட்டுப்பாட்டில் இருக்கும் பள்ளி அனைத்தும்  9,11ஆம் வகுப்புப் பாடநூல் முழுவதும் நடத்தி, ஆண்டுத் தேர்வும் நடத்தி, கோடை விடுமுறைக்கு பிறகே அடுத்தவகுப்புப் பாடங்களைத் தொடங்க வேண்டும் என்பதை  நடைமுறைப் படுத்த ஆணையிட வேண்டும்.
அதுவரை,மொழிப்பாடங்களில் செய்யுள்-உரைநடை-இலக்கணம்மொழிப்பயிற்சி மற்றும் கட்டுரை ஆகிய அனைத்தையும் ஒரே தேர்வில் எழுதிவந்த மாணவர்க்கு, 9ஆம்வகுப்பில்தான் இரண்டு தேர்வுத் தாள்களாகப் பிரிக்கப் படுகிறது. தமிழ் முதல்தாள் இரண்டாம் தாள் என்பது போலவேஆங்கிலத்திலும் 9ஆம் வகுப்பிலிருந்துதான் இரண்டு தாள்களுக்கும் தனித்தனித் தேர்வுகள் வைக்கப்படுகின்றன. அப்போதுதான் மொழிப்பயிற்சி சற்று மேம்படும் என்பதே இதன் நோக்கம். எனக்குத் தெரிந்து பல மெட்ரிக் பள்ளிகளில் கட்டுரை ஏடு என்னும் ஒன்றை மாணவர்கள் பார்த்த்தே இல்லை! அப்புறம் எப்படி மொழிவளம் கிடைக்கும்?
14 வயதில் -ஒன்பதாம் வகுப்பில்- இந்த மொழிப்பயிற்சிகள் விரிவாகத் தொடங்கப் படுவதற்கு அந்த வயதிற்கான கல்வி உளவியலே முக்கியமான காரணமென்பது கல்வியாளர் கருத்து.
இப்படிமுறையே 9,11 வகுப்பில் 10,12ஆம் வகுப்புப் பாடங்களை நடத்திக் கொண்டிருக்கும் ஆசிரியர்கள் அதையே தமது 'பாடக் குறிப்பேடு'களில் (Notes of Lesson) எழுத முடியாதுஅப்போதுதான், 'பூனை வெளியே வந்துவிடுமே?' இந்த நிலையை மாற்றிமுறைப்படுத்துவதன் மூலமாக ஆசிரியர்கள் அந்தந்த வாரமும் மாணவர்களுக்கு நடத்துவது ஒன்றுஏடுகளில் எழுதிவைப்பது ஒன்று என்னும் 'ஏமாற்றுவேலைக்கும் இடந்தரவேண்டியதில்லையே?
இதோடுமொழிப்பாடங்களில் அந்தந்த வயதிற்குரிய மொழிப்பயிற்சிகள் மீறப்படும் போதுஅல்லது விடப்படும்போதுஅதன் தொடர்ச்சி எவ்வாறு மாணவர்களுக்குக் கிடைக்கும்மொழிப்பயிற்சி முழுமையாகமலே எப்படி அந்த மாணவர்கள் 10, 12 ஆம் வகுப்புத் தேர்வை எழுத முடியும்கணிதப் பாடத்திலும்அறிவியல்வரலாற்றுப் பாடங்களிலும் முந்திய வகுப்பின் தொடர்ச்சியாகப் பல பாடங்கள் வருகின்றன. 9,11ஆம் வகுப்புப் பாட நூல்களையே பார்க்காத மாணவர் எப்படி அவற்றை உள்வாங்க முடியும்  எந்திர கதியாக 'உருப்'போடுவதன்றி வேறு என்ன செய்ய முடியும்?
கல்வியாளர் கருத்தையும்மாணவர் உளவியல் சார்ந்த உடல் நலனையும் பற்றிக் கவலைப் படாதவர்கள்தான் இந்தப் புதியவகை யிலான 'டபுள் ப்ரமோஷனைநடத்துகிறார்கள். விடுதிகளில் தங்கிப் படிக்கும் பல்லாயிரக் கணக்கான 9,11ஆம் வகுப்பு  மாணவரையும் பாடாய்ப் படுத்தி, பெற்றோரிடமும்கோடைக்கால சிறப்புத் தொடர்வகுப்புஎனும் என, லட்சக்கணக்கில் கொள்ளையடிக்கவும் செய்கிறார்கள்.
இந்தச் செயல் சரிதான் எனில், 9,11 ஆம் வகுப்பையே கல்வித்துறை எடுத்துவிடலாமே?
அப்படி எடுத்துவிடலாமெனில்இப்போது நடைமுறையில் இருக்கும்  15 வயதுக்குப் பதிலாக, 14 வயதிலேயே பள்ளி இறுதித்தேர்வை (SSLC) எழுதச் சொல்லிவிடலாமேஅதேபோல 17 வயதுக்குப் பதிலாக  16வயதிலேயே மேல்நிலைத் தேர்வை (+2) எழுதச்சொல்லிவிடலாமே? (இல்லை இல்லை தவறாகச் சொல்லிவிட்டேன், 14வயதில் SSLC, அடுத்த வருடமே+2, 15வயதில் கல்லூரிக்கே போய்விடலாம்!பிறகு 18 வயதில் இளங்கலை(BA), 20 வயதில் முதுகலை (MA) முடித்துவிடலாம்... வாழ்க்கையிலேயே இரண்டு வயதை 'மிச்சம்'பிடிக்கலாம்ங்கோ...!)
மாணவர்கள் 9,11ஆம் வகுப்புகளை இழப்பதன்மூலம் அந்தந்த  வருட அமைதியை இழக்கிறார்கள். 'அடுத்த வருடம்தான் அரசுத்தேர்வுஎனும் நினைவு தரும் மனஅமைதி முதலில் போய்விடுகிறது. முதலில் 10ஆம் வகுப்பு அரசுத்தேர்வுக்கு ஒன்பதாம் வகுப்பிலிருந்தும்பிறகு 12ஆம்வகுப்பு அரசுத்தேர்வுக்கு 11ஆம் வகுப்பிலிருந்தும் -ஒவ்வோராண்டுக்காலம்- முன்தயாரிப்பு எனும் நிதானம் மலையேறி 2+2 ஆக 4 ஆண்டுகளுமே பரபரப்புத்தான்! எதையுமே பரபரப்பாகச் செய்தால்அதன் ஆழ அகலப் பரிமாணங்கள் தெரியாமலேபோகும் என்பது எல்லா விஷயங்களுக்குமே பொருந்தும்தானே? 'அவசரத்தில் அண்டாப் பானையில்கூட கை நுழையாது'தானே?
அந்த மாணவ -மாணவிகளைப்  பார்த்திருக்கிறீர்களா? உண்மையிலேயே நன்றாகப் படிக்க வேண்டும் என்று நினைக்கிற மாணவர்கள்தான் அதிகமாகச் சிரமப்படுகிறார்கள்! (இந்தத் தத்துவத்தை அறிந்த சிலர்தான், 'பாடமே இது பொய்யடா- வெறும் 'மார்க்'கடைத்த பையடா' என்று 'வேறு'வழிகளில் பயிற்சி பெறுகிறார்கள்!)  'நன்மாணாக்கர்'களோ பாவம் -பரிதாபமாக அதிகாலை 4-1/2மணிக்கே எழுந்து, 5-6கணக்கு, 6-7இயற்பியல்,  7-8வேதியல். பிறகு 9-5 பள்ளிக்கூடம். பிறகு 5-1/2 மணிக்கு வீட்டுக்கு வந்தவுடன் உடை மாற்றிக்கொண்டே ஒருவாய் காப்பியை வாயில் ஊற்றிக்கொண்டே பரபரப்பார்கள்! மீண்டும்,-"மாலை முழுதும் விளை யாட்டு"என்றெழுதிய பாரதியை மனசாரத் திட்டிக்கொண்டே 6-7தாவரவியல், 7-8விலங்கியல் என்று சென்றிடுவார் எட்டுத்திக்கும்! அப்படி ('ட்யூஷன்')  சென்றால்தானே (மதிப்பெண்) செல்வங்கள்யாவும் கொணர்ந்திங்கு சேர்க்க முடியும்?
"இந்தப் பரபரப்பான உலகத்தில் எல்லாம் சகஜமப்பா!" என்று எதிலும் ஒட்டாதவர்களாக - கண் அங்கேயிங்கே பாவாமல், குதிரைக்கு ஒரு கண்பட்டையைப் பூட்டி விடுவார்களே அதுமாதிரி -உலக நியாய,  அநியாயங் களைக் கண்டுகொள்ளாமல், இப்படி, 'தானுண்டு,  தன்ட்யூஷன் உண்டு' என்று,  அப்போதே அவர்களுக்கு பிரச்சினைகளிலிருந்து 'அந்நியமாதல்-ஞானம்'  வந்துவிடாதா என்ன?
இது நம் தமிழகஅரசு பள்ளிக்கல்வித்துறைக்குத் தெரிந்தோ தெரியாமலோ நடக்கிறது. நிச்சயமாகத் தெரிந்து-அனுமதியுடன் நடக்கவாய்ப்பில்லை. ஆனால், நடப்பது நிச்சயம்  ஊரறிந்த ரகசியம்! இப்படி நடப்பது சரியா, சரியில்லையா எனும் விவாதத்திற்கே உளவியலில் இடமில்லை.
இது தொடர்வது சரிதானா?  என்பதுதான் இப்போது எழுந்திருக்கும் கேள்வி.
       அதிகமில்லை கனவான்களே! ''அந்தந்த ஆண்டு மாணவர்க்கு, அந்தந்த ஆண்டுக்குரிய பாடங்களில் மட்டுமே தேர்வு நடத்தப் படவேண்டும். இதைமீறி, ஓராண்டு நடத்த வேண்டிய பாடங்களை 3மாதம், 6மாதத்தில் நடத்துவதாகத்தெரிந்தாலோ, அடுத்த வகுப்புக்குரிய பாடங்களை முந்திய ஆண்டிலேயே நடத்தினாலோ, மாணவர் நலன்சார்நத கோடை விடுமுறை மறுக்கப் பட்டாலோ, அந்தக் கல்வி நிறுவனங்கள் மீது தமிழக அரசு - பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை மேற்கொள்ளும்'' என  சுற்றறிக்கை  அனுப்பினால் மட்டும் போதாது. கண்காணிப்பும் தொடர் நடவடிக்கைகளும் தேவை.
------------------------------ ( மீள் பதிவு படங்களுக்கு நன்றி - கூகுளார். ) ----------------------------
நன்றிதினமணிசென்னை-கருத்துக்களம் கட்டுரைப் பகுதி
- First Published : 22 April 2013 04:20 AM IST
 பின்னர் வெளிவந்த  “முதல்மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே!”
எனும் எனது கட்டுரைத் தொகுப்பில் இடம்பெற்றது.

---------------------------------------------------------------------------

17 கருத்துகள்:

  1. வணக்கம் அண்ணா,
    நம்மூர் நிலையை மாற்ற நினைக்கிறோம்..ஆனால் நம்மவர்கள் இங்கும் தங்கள் 'வேலையை'க் காட்டுகிறார்கள்! அதிக வீட்டுப்பாடம் கேட்கிறார்கள், மதிப்பெண் அது இது என்று நச்சரிக்கிறார்கள்...இந்தியக் குழந்தைகள் அதிக அழுத்தத்திற்கு உள்ளாகிறார்கள் என்று ஒரு ஆசிரியர் சொன்னார். அடுத்தததாக ஆசியரைச் சொல்கிறார்கள் - சீன, கொரிய மக்களும் நம் போல்தான். அடப்பாவிகளா, இங்க மதிப்பெண் ஓட்டத்தைக் கொண்டுவந்து விடாதிர்கள் என்றே மனம் துடிக்கிறது.
    அந்தந்த வயதிற்கு ஏற்ற பாடம் - சரிதான். இதிலும் நம்மவர்கள் அதிகம் சொல்லிக்கொடுக்கிறேன் என்று படுத்தும் பாட்டில், கடந்த வாரம் இளையவன் ஆசிரியரிடமிருந்து பெற்றோர்கள் அனைவருக்கும் பொதுவாக ஒரு மின்னஞ்சல் வந்தது, "பெருக்கல், வகுத்தல் இப்பொழுது சொல்லிக் கொடுக்காதீர்கள். சவாலான பாடங்கள் வேண்டும் என்றால் இவர்கள் வயதிற்குத் தகுந்தபடி நான் கொடுத்தனுப்புகிறேன், புரியாமல் மனப்பாடம் செய்ய வைக்காதீர்கள், பெரிய வகுப்பிற்குச் செல்லும்பொழுது பிள்ளைகள் குழம்பிப் போவார்கள்" என்று! யார் ஒன்றாம் வகுப்பில் வகுத்தல் சொல்லிக் கொடுத்திருப்பது என்று சந்தேகமே வேண்டாம் - நம்மவர்கள் தான்! இதில் peer pressure நம்ம இளையவருக்கு, அம்மா, வகுத்தல் கணக்குகள் கொடு என்று நின்றான். அவனுக்கு விளையாட்டாய் சில உதாரணங்களைச் சொல்லி, இது தான் வகுத்தல், ஆனால் பெரிய கணக்குகள் இப்பொழுது வேண்டாம் என்று புரிய வைத்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. க்ரேஸ் அங்கயுமா?? ஹும் நம்ம மக்கள் எங்க போனாலும் ரொமபவே அலப்பறை பண்ணுறாங்கப்பா. நாங்கள் அந்திருந்த போது என் மகன் நிஜமாகவே ரொம்பவே மகிழ்வாக அனுபவித்தான். அதுவும் கற்றல் குறைபாடு வேறு இருந்தது. ஆனால் அங்குள்ள பள்ளி மகனைக் கொண்டாடினார்கள்.

      அங்கும் இந்திய மாணவன் வொக்காபுலரியில் ஃபுல், கணக்கில் புலி அங்கு இந்திய மாணவர்கள்தான் முதல் மதிப்பெண் எடுக்கிறார்கள் என்றெல்லாம் அவ்வப்போது செய்திகள் அடிபடும். இப்போதுதான் தெரிகிறது நீங்கள் சொல்லியிருப்பதிலிருந்து என்ன ப்ரஷர் கொடுக்கப்பட்டிருக்கும் என்று.

      பெற்றோர்களுக்கு வந்திருக்கும் இமெயில் மிகவும் சரியே...புரியாமல் மனப்பாடம்செய்ய வைக்காதீர்கள்...எவ்வளவு சரியான வார்த்தைகள். இங்கு கணக்கையே மனப்பாடம் செய்கிறார்கள்...!!! என்ன சொல்ல..இதில் நம்மவர்கள் சொல்லுவார்கள் அங்குள்ள குழந்தைகளுக்கு ஒன்றுமே தெரியவில்லை என்று....என்ன சொல்ல..எந்தக் குழந்தையையுமே நாம் குறை சொல்லக் கூடாது என்பதை ஏன் இவர்கள் ஏற்பதில்லை என்று தெரியவில்லை..

      அமெரிக்காவும் லிட்டில் இந்தியாவாக மாறிவிடாமால் இருந்தால் சரி....நீங்கள் சொல்லியிருப்பது போல் மதிப்பெண் ஓட்டத்தை....
      கீதா

      நீக்கு
    2. ஆமாம் கீதா. பள்ளிகளில் கொண்டாடத்தான் செய்கிறார்கள், அனைத்துக் குழந்தைகளையும் ஒன்றாகத் தான் பார்க்கிறார்கள். ஆனால் நம்மவர், சீனர், கொரியர் அதிகமிருக்கும் பள்ளிகளில் பள்ளிகளில் இடையூறு இருக்கத்தான் செய்கிறது. குமான், அபாகஸ், ஈனோபி, இன்னும் நிறைய வகுப்புகள் - எங்கும் இந்தியர் கூட்டம்!!
      லிட்டில் இந்தியாவா இப்போவே பாதி மாறிடுச்சுனு நினைக்கிறேன் கீதா.
      என் மகன் வகுப்புத் தோழன் அவன் அம்மாவிடம் சொல்லியிருக்கிறான், "அவன் அம்மா பிரஷர் கொடுப்பதில்லை" என்று. என்னிடம் அவர் குறையாகச் சொன்னார். ஹாஹாஹா என்னைப் பொறுத்தவரை பிள்ளைகள் வெளியே விளையாடவில்லை என்றால் டென்சன் ஆவேன் :)
      நன்றி கீதா.

      நீக்கு
  2. கட்டுரையைப் பற்றிச் சொல்லாமல் விட்டுவிட்டேனே..
    இப்படியே தொடரக் கூடாது, பிள்ளைகளுக்கு விடுமுறை மிக அவசியம். அடுத்த அரசாவது நடவடிக்கை எடுத்தால் நல்லது..

    பதிலளிநீக்கு
  3. தமிழக அரசும், பள்ளிக்கல்வித்துறையும் நடவடிக்கை எடுக்கும்,எடுக்கும் எனக் காத்திருந்தது ஒரு பயனும் ஏற்பட்டதாய் தெரியவில்லை. மாணவர்களின் கல்வியில் அக்கறை கொண்ட அரசு அமையாதவரை இது வெறும் வெற்று கோசங்களாக மட்டுமே இருக்கும். சமீபத்தில் அப்துல் கலாமின் ஆலோசகர் திரு. பொன்ராஜ் கலந்து கொண்ட கூட்டத்தில் ஒரு தகவலைப் பதிந்தார். நீங்கள் சொல்லி இருப்பதன் நேரடி பாதிப்பைச் சொன்னார். அதாவது மருத்துவக்கல்லூரியில் பயிலும் மாணவர்களில் சில நூறு பேர் அந்தப் பருவத் தேர்வில் திசுவியல் பாடத்தில் தோல்வி அடைந்திருப்பதைக் கண்டு அதற்கான காரணத்தை ஆராய மாணவர்களிடம் கலந்துரையாடல் நடத்தி இருக்கிறார்கள், அப்போது மாணவர்கள் அந்தப் பாடம் பதினொன்றாம் வகுப்பு பாடத்தில் இருக்கிறது. ஆனால் பள்ளியில் அதை எங்களுக்கு நடத்தாமல் நேரடியாக பன்னிரெண்டாம் வகுப்பு பாடம் நடத்தியதால் இப்பொழுது அதில் தேர்ச்சி பெற முடியவில்லை என்று சொன்னார்களாம். தன் பள்ளிக்கூடத்தின் ரிசல்ட்டைக் காட்டிக் கடத்தி விட்டால் போதும் என நினைக்கும் பள்ளிகள் புற்றீசல்களாய் பெருகியதன் விளைவு தான் இது. அரசாங்கமோ அதைத் தடுப்பதற்குப் பதிலாக தன் பெட்டியை நிரப்ப புதிய அனுமதிகளை அளித்துக் கொண்டிருக்கிறது.
    பள்ளிகள் பாடபுத்தகங்கள் தரும் வகையில் எப்படி கொள்ளையடிக்கின்றன? அதற்காகச் சம்பந்தப்பட்ட பதிப்பகங்களுடன் இணைந்து அவர்கள் செய்யும் மறைமுக வேலைகள் என்ன என்பதைப் பற்றி சில தினங்களுக்கு முன் எழுத்தாளர் என்.சொக்கன் முகநூலில் பதிந்த விசயம் இன்னொரு அதிர்ச்சி. கொள்ளையர்களின் கூடாரமாகி வருகிறது கல்வி நிலையங்கள்!
    கோடை விடுமுறை குறித்து சொல்லி இருக்கிறீர்கள். சில வாரங்களுக்கு முன் என் மகன் என்னிடம் பேசும் போது டாடி......ஸ்கூலில் ஒரு பெரிய லிஸ்ட் தந்திருக்கிறார்கள், அதில் உள்ள கோச்சிங் கிளாசில் சேரவா? ஒவ்வொன்றிற்கும் தனித்தனியா பணம் கட்ட வேண்டுமாம் என்று கூறினான். அதற்கு நான் பணம் முக்கியமில்லை. கோடை விடுமுறை என்பது உனக்கு விளையாடுவதற்கான மாதம். அதில் ஏதாவது விளையாட்டு கற்றுக் கொள்ள வேண்டுமானால் அதில் சேர்ந்து கொள். கோச்சிங் கிளாசெல்லாம் வேண்டாம். அப்படியே மிஸ் கேட்டா ஸ்கூல் லீவு விளையாடுறதுக்காகத் தான் விடுறாங்களாம், அதுனால அந்த மாசத்துல கோச்சிங் கிளாசெல்லாம் போக வேண்டாம் என என் டாடி சொல்லி விட்டார்கள் எனச் சொல்லிவிடு என்றேன். அவனும் அப்படியே சொல்லிவிட்டு இந்த லீவில் என்ன விளையாடலாம்? எந்த சொந்தக்காரவங்க வீட்டுக்கு போகலாம் என லிஸ்ட் போட்டுக் கொண்டிருக்கிறான்.
    பிள்ளைகளின் எதிர்காலத்தைக் காட்டி பெற்றோர்களை நிர்பந்தப்படுத்தியாவது தன் எண்ணத்தைப் பள்ளிக்கூடங்கள் சாதிக்க நினைக்கின்றன.
    சரியான நேரத்தில் எழுதப்பட்ட கட்டுரை. பொறுப்புக்குரியவர்கள் கவனிக்க வேண்டும் என்பதே பெரு விருப்பம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அருமையான பின்னூட்டம். எழுத்தாளர் என் சொக்கன் அவர்கள் சொல்லியிருப்பது அதிச்சியாக இருக்கிறது.

      கீதா

      நீக்கு
  4. "நல்ல " பள்ளிகள் மட்டுமா
    "நல்ல " பெற்றோருமே இதற்குக் காரணம்
    விரிவான ஆழமான, அருமையான அலசல்
    பூனைக்கு யார் மணி கட்டுவது ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ரமணி சார் "நல்ல" பெற்றோரும் காரணம்தான்...சரியாகச் சொன்னீர்கள்..

      கீதா

      நீக்கு
  5. இந்த கொடுமையை அருமையாக சொன்னீர்கள்.

    பதிலளிநீக்கு
  6. வணிகமயமாகிவிட்ட இந்தியக் கல்விமுறையில் மாணவர் உளவியல் பற்றியோ, பன்முகத் திறன் வளர்ச்சி பற்றியோ அரசோ, மக்களோ சிறிதும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. பிறகு எப்படி மனிதவளம் பெருகும்?

    பதிலளிநீக்கு
  7. பலப்பேரின் மனக்கருத்தை/மனக்குமுறலை பதிவாக்கிய உங்களுக்கு நன்றி...

    பதிலளிநீக்கு
  8. அண்ணா மிக மிக அருமையான நச் கட்டுரை! நீங்கள் சொல்லியிருக்கும் கருத்துகள் அனைத்தும் குழந்தைகளின் உளவியல் சார்ந்த கருத்துகள்! மனம் துள்ளிக் குதித்து, கற்பனைச் சிறகுகளில் பறந்து, சுய சிந்தனைகள் வளர்த்து, ஒவ்வொரு குழந்தையின் திறன்கள் - க்ரியேட்டிவிட்டி வளர்க்கப்படாமல் பாவம் குழந்தைகள். கணினிகளைப் போல் ஆக்கப்படுகின்றார்கள். இப்போது இதற்கு முடிவுகட்டவில்லை என்றால் எதிர்காலம் நிச்சயமாகச் சிதறும் நிலைதான். இப்போதே கவுன்சலிங்க் நிறைய குழந்தைகளுக்குத் தேவைப்படுகிறது..
    சரி யார் கொண்டுவருவார்கள் அண்ணா? எங்கிருந்து ஆரம்பிக்கும்? பெற்றோர்கள்/மக்கள் மாற வேண்டும் இல்லையே அரசாங்கம் சட்டம் கொண்டுவர வேண்டும்.

    அருமையான கட்டுரை...என் மனதில் தோன்றும் கல்வி சார்ந்த எண்ணங்கள் அனைத்தும் அனைத்தும்!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  9. விடுமுறை அவசியம் தேவை நண்பரே

    பதிலளிநீக்கு
  10. கல்வி முறையும் தேர்வு முறையும் மாறவேண்டும்! வெளியே தாங்க முடியாத வெப்பமென்றால். மாணவர்களின் உள்ளத்திலே அதைவிட அதிகமான வெப்பம்!.மலர வேண்டிய 'மனிதம்'கருகிக்கொண்டே இருக்கிறது!

    பதிலளிநீக்கு
  11. குழந்தைகளின் சமூகப் பண்பு வளர்ச்சியில் கோடை விடுமுறைக்கு முக்கியப் பங்கு உண்டு. உறவினர் வீட்டுக்கு செல்லுதல்,சுற்றுலா செல்லுதல்,விளையாடி மகிழ்தல்.நண்பர்களுடன் அளவளாவுதல்,நூல்கள் வாசித்தல். திரைப்படங்கள் பார்த்தல் போன்றவற்றை தடை செய்துவிடுகிறது கோடை வகுப்புகள். சமூகக் கல்வியை நேரடியாக பெறுவதை வகுப்பறை சிறைச்சாலைகள் தடைசெய்வது நியாயமல்ல. இதில் முக்கியமாக பார்க்க வேண்டியது பெற்றோர் கோடை விடுமுறை விடும் பள்ளிகளை விரும்புவதில்லை என்பதே v

    பதிலளிநீக்கு
  12. இவை போன்ற நிகழ்வுகளால் நல்ல பழக்கவழக்கங்கள் நம் குழந்தைகளிடமிருந்து அந்நியப்பட்டுப் போய்விடுகின்றன. இதற்கு நாமும் ஒரு காரணமாக இருந்துவிடுகிறோமே என்ற நிலையில் வருத்தமாக உள்ளது. சுயத்தை இழந்து, போலியான வாழ்க்கை என்ற நிலையிலேயே மாணவர்களின் வாழ்க்கையும் அமைவதைப் பார்க்கும்போது வேதனையாக உள்ளது.

    பதிலளிநீக்கு
  13. முற்றிலும் உண்மை ஐயா. அரசும், பள்ளிக்கல்வி துறையுமே இதற்கு முழு பொறுப்பு. என்னை கேட்டால் ஒவ்வொரு வருடமும் பாடத்திட்டத்தை மாற்றி விடலாம், மனப்பாடம் செய்தால் பலனளிக்காத வகையில் கேள்வித்தாளை ஏற்பாடு செய்யலாம். ஒன்பதாம், பதினொன்றாம் வகுப்பில் பாடங்கள் நடத்தப்படுகிறதா என்பதை பள்ளிகல்வித்துறை கடுமையாக கண்காணிக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு