tag:blogger.com,1999:blog-3817666928335657661.post3402883593537265703..comments2024-03-28T14:36:28.784+05:30Comments on வளரும் கவிதை: சில “நல்ல” பள்ளிகளில் கோடை விடுமுறை விடுவதில்லையே இது சரிதானா?!நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttp://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-3817666928335657661.post-91274162283602842842016-04-09T16:31:26.716+05:302016-04-09T16:31:26.716+05:30முற்றிலும் உண்மை ஐயா. அரசும், பள்ளிக்கல்வி துறையும...முற்றிலும் உண்மை ஐயா. அரசும், பள்ளிக்கல்வி துறையுமே இதற்கு முழு பொறுப்பு. என்னை கேட்டால் ஒவ்வொரு வருடமும் பாடத்திட்டத்தை மாற்றி விடலாம், மனப்பாடம் செய்தால் பலனளிக்காத வகையில் கேள்வித்தாளை ஏற்பாடு செய்யலாம். ஒன்பதாம், பதினொன்றாம் வகுப்பில் பாடங்கள் நடத்தப்படுகிறதா என்பதை பள்ளிகல்வித்துறை கடுமையாக கண்காணிக்க வேண்டும்.சீனிவாசன்https://www.blogger.com/profile/14258657590196715150noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-25775531599215605982016-04-08T11:55:48.115+05:302016-04-08T11:55:48.115+05:30இவை போன்ற நிகழ்வுகளால் நல்ல பழக்கவழக்கங்கள் நம் கு...இவை போன்ற நிகழ்வுகளால் நல்ல பழக்கவழக்கங்கள் நம் குழந்தைகளிடமிருந்து அந்நியப்பட்டுப் போய்விடுகின்றன. இதற்கு நாமும் ஒரு காரணமாக இருந்துவிடுகிறோமே என்ற நிலையில் வருத்தமாக உள்ளது. சுயத்தை இழந்து, போலியான வாழ்க்கை என்ற நிலையிலேயே மாணவர்களின் வாழ்க்கையும் அமைவதைப் பார்க்கும்போது வேதனையாக உள்ளது.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-40310127663274034552016-04-08T09:07:46.448+05:302016-04-08T09:07:46.448+05:30குழந்தைகளின் சமூகப் பண்பு வளர்ச்சியில் கோடை விடும...குழந்தைகளின் சமூகப் பண்பு வளர்ச்சியில் கோடை விடுமுறைக்கு முக்கியப் பங்கு உண்டு. உறவினர் வீட்டுக்கு செல்லுதல்,சுற்றுலா செல்லுதல்,விளையாடி மகிழ்தல்.நண்பர்களுடன் அளவளாவுதல்,நூல்கள் வாசித்தல். திரைப்படங்கள் பார்த்தல் போன்றவற்றை தடை செய்துவிடுகிறது கோடை வகுப்புகள். சமூகக் கல்வியை நேரடியாக பெறுவதை வகுப்பறை சிறைச்சாலைகள் தடைசெய்வது நியாயமல்ல. இதில் முக்கியமாக பார்க்க வேண்டியது பெற்றோர் கோடை விடுமுறை விடும் பள்ளிகளை விரும்புவதில்லை என்பதே v <br />டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-87186115583965562582016-04-07T21:23:02.237+05:302016-04-07T21:23:02.237+05:30கல்வி முறையும் தேர்வு முறையும் மாறவேண்டும்! வெளியே...கல்வி முறையும் தேர்வு முறையும் மாறவேண்டும்! வெளியே தாங்க முடியாத வெப்பமென்றால். மாணவர்களின் உள்ளத்திலே அதைவிட அதிகமான வெப்பம்!.மலர வேண்டிய 'மனிதம்'கருகிக்கொண்டே இருக்கிறது!Mahasundarhttps://www.blogger.com/profile/07966342762149750471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-41316255959053447482016-04-07T19:35:03.281+05:302016-04-07T19:35:03.281+05:30ஆமாம் கீதா. பள்ளிகளில் கொண்டாடத்தான் செய்கிறார்கள்...ஆமாம் கீதா. பள்ளிகளில் கொண்டாடத்தான் செய்கிறார்கள், அனைத்துக் குழந்தைகளையும் ஒன்றாகத் தான் பார்க்கிறார்கள். ஆனால் நம்மவர், சீனர், கொரியர் அதிகமிருக்கும் பள்ளிகளில் பள்ளிகளில் இடையூறு இருக்கத்தான் செய்கிறது. குமான், அபாகஸ், ஈனோபி, இன்னும் நிறைய வகுப்புகள் - எங்கும் இந்தியர் கூட்டம்!! <br />லிட்டில் இந்தியாவா இப்போவே பாதி மாறிடுச்சுனு நினைக்கிறேன் கீதா. <br />என் மகன் வகுப்புத் தோழன் அவன் அம்மாவிடம் சொல்லியிருக்கிறான், "அவன் அம்மா பிரஷர் கொடுப்பதில்லை" என்று. என்னிடம் அவர் குறையாகச் சொன்னார். ஹாஹாஹா என்னைப் பொறுத்தவரை பிள்ளைகள் வெளியே விளையாடவில்லை என்றால் டென்சன் ஆவேன் :)<br />நன்றி கீதா.தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-48849151339390722952016-04-07T15:57:59.819+05:302016-04-07T15:57:59.819+05:30ஆமாம் ரமணி சார் "நல்ல" பெற்றோரும் காரணம்...ஆமாம் ரமணி சார் "நல்ல" பெற்றோரும் காரணம்தான்...சரியாகச் சொன்னீர்கள்..<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-10726107998797477932016-04-07T07:08:28.416+05:302016-04-07T07:08:28.416+05:30விடுமுறை அவசியம் தேவை நண்பரே
விடுமுறை அவசியம் தேவை நண்பரே<br />Ajai Sunilkar Josephhttps://www.blogger.com/profile/04185003893682398815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-51273511032640375192016-04-06T22:41:43.001+05:302016-04-06T22:41:43.001+05:30க்ரேஸ் அங்கயுமா?? ஹும் நம்ம மக்கள் எங்க போனாலும் ர...க்ரேஸ் அங்கயுமா?? ஹும் நம்ம மக்கள் எங்க போனாலும் ரொமபவே அலப்பறை பண்ணுறாங்கப்பா. நாங்கள் அந்திருந்த போது என் மகன் நிஜமாகவே ரொம்பவே மகிழ்வாக அனுபவித்தான். அதுவும் கற்றல் குறைபாடு வேறு இருந்தது. ஆனால் அங்குள்ள பள்ளி மகனைக் கொண்டாடினார்கள்.<br /><br />அங்கும் இந்திய மாணவன் வொக்காபுலரியில் ஃபுல், கணக்கில் புலி அங்கு இந்திய மாணவர்கள்தான் முதல் மதிப்பெண் எடுக்கிறார்கள் என்றெல்லாம் அவ்வப்போது செய்திகள் அடிபடும். இப்போதுதான் தெரிகிறது நீங்கள் சொல்லியிருப்பதிலிருந்து என்ன ப்ரஷர் கொடுக்கப்பட்டிருக்கும் என்று. <br /><br />பெற்றோர்களுக்கு வந்திருக்கும் இமெயில் மிகவும் சரியே...புரியாமல் மனப்பாடம்செய்ய வைக்காதீர்கள்...எவ்வளவு சரியான வார்த்தைகள். இங்கு கணக்கையே மனப்பாடம் செய்கிறார்கள்...!!! என்ன சொல்ல..இதில் நம்மவர்கள் சொல்லுவார்கள் அங்குள்ள குழந்தைகளுக்கு ஒன்றுமே தெரியவில்லை என்று....என்ன சொல்ல..எந்தக் குழந்தையையுமே நாம் குறை சொல்லக் கூடாது என்பதை ஏன் இவர்கள் ஏற்பதில்லை என்று தெரியவில்லை..<br /><br />அமெரிக்காவும் லிட்டில் இந்தியாவாக மாறிவிடாமால் இருந்தால் சரி....நீங்கள் சொல்லியிருப்பது போல் மதிப்பெண் ஓட்டத்தை....<br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-13026134012257222502016-04-06T22:12:17.014+05:302016-04-06T22:12:17.014+05:30அருமையான பின்னூட்டம். எழுத்தாளர் என் சொக்கன் அவர்...அருமையான பின்னூட்டம். எழுத்தாளர் என் சொக்கன் அவர்கள் சொல்லியிருப்பது அதிச்சியாக இருக்கிறது. <br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-81466310992868087912016-04-06T21:54:15.716+05:302016-04-06T21:54:15.716+05:30அண்ணா மிக மிக அருமையான நச் கட்டுரை! நீங்கள் சொல்ல...அண்ணா மிக மிக அருமையான நச் கட்டுரை! நீங்கள் சொல்லியிருக்கும் கருத்துகள் அனைத்தும் குழந்தைகளின் உளவியல் சார்ந்த கருத்துகள்! மனம் துள்ளிக் குதித்து, கற்பனைச் சிறகுகளில் பறந்து, சுய சிந்தனைகள் வளர்த்து, ஒவ்வொரு குழந்தையின் திறன்கள் - க்ரியேட்டிவிட்டி வளர்க்கப்படாமல் பாவம் குழந்தைகள். கணினிகளைப் போல் ஆக்கப்படுகின்றார்கள். இப்போது இதற்கு முடிவுகட்டவில்லை என்றால் எதிர்காலம் நிச்சயமாகச் சிதறும் நிலைதான். இப்போதே கவுன்சலிங்க் நிறைய குழந்தைகளுக்குத் தேவைப்படுகிறது..<br />சரி யார் கொண்டுவருவார்கள் அண்ணா? எங்கிருந்து ஆரம்பிக்கும்? பெற்றோர்கள்/மக்கள் மாற வேண்டும் இல்லையே அரசாங்கம் சட்டம் கொண்டுவர வேண்டும். <br /><br />அருமையான கட்டுரை...என் மனதில் தோன்றும் கல்வி சார்ந்த எண்ணங்கள் அனைத்தும் அனைத்தும்!!!! <br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-37862838750816395072016-04-06T21:01:34.855+05:302016-04-06T21:01:34.855+05:30பலப்பேரின் மனக்கருத்தை/மனக்குமுறலை பதிவாக்கிய உங்க...பலப்பேரின் மனக்கருத்தை/மனக்குமுறலை பதிவாக்கிய உங்களுக்கு நன்றி...நண்பாhttps://www.blogger.com/profile/16858892546752903510noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-32064137473657922712016-04-06T20:03:53.611+05:302016-04-06T20:03:53.611+05:30வணிகமயமாகிவிட்ட இந்தியக் கல்விமுறையில் மாணவர் உளவ...வணிகமயமாகிவிட்ட இந்தியக் கல்விமுறையில் மாணவர் உளவியல் பற்றியோ, பன்முகத் திறன் வளர்ச்சி பற்றியோ அரசோ, மக்களோ சிறிதும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. பிறகு எப்படி மனிதவளம் பெருகும்? <br />மணிச்சுடர்https://www.blogger.com/profile/10906214196033785912noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-30375348200716717162016-04-06T14:51:02.163+05:302016-04-06T14:51:02.163+05:30இந்த கொடுமையை அருமையாக சொன்னீர்கள்.இந்த கொடுமையை அருமையாக சொன்னீர்கள். வேகநரிhttps://www.blogger.com/profile/05875509541930578990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-82794360944804377942016-04-06T12:30:44.390+05:302016-04-06T12:30:44.390+05:30"நல்ல " பள்ளிகள் மட்டுமா
"நல்ல &quo..."நல்ல " பள்ளிகள் மட்டுமா<br />"நல்ல " பெற்றோருமே இதற்குக் காரணம்<br />விரிவான ஆழமான, அருமையான அலசல்<br />பூனைக்கு யார் மணி கட்டுவது ?Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-71687057856543134292016-04-06T10:31:24.090+05:302016-04-06T10:31:24.090+05:30தமிழக அரசும், பள்ளிக்கல்வித்துறையும் நடவடிக்கை எடு...தமிழக அரசும், பள்ளிக்கல்வித்துறையும் நடவடிக்கை எடுக்கும்,எடுக்கும் எனக் காத்திருந்தது ஒரு பயனும் ஏற்பட்டதாய் தெரியவில்லை. மாணவர்களின் கல்வியில் அக்கறை கொண்ட அரசு அமையாதவரை இது வெறும் வெற்று கோசங்களாக மட்டுமே இருக்கும். சமீபத்தில் அப்துல் கலாமின் ஆலோசகர் திரு. பொன்ராஜ் கலந்து கொண்ட கூட்டத்தில் ஒரு தகவலைப் பதிந்தார். நீங்கள் சொல்லி இருப்பதன் நேரடி பாதிப்பைச் சொன்னார். அதாவது மருத்துவக்கல்லூரியில் பயிலும் மாணவர்களில் சில நூறு பேர் அந்தப் பருவத் தேர்வில் திசுவியல் பாடத்தில் தோல்வி அடைந்திருப்பதைக் கண்டு அதற்கான காரணத்தை ஆராய மாணவர்களிடம் கலந்துரையாடல் நடத்தி இருக்கிறார்கள், அப்போது மாணவர்கள் அந்தப் பாடம் பதினொன்றாம் வகுப்பு பாடத்தில் இருக்கிறது. ஆனால் பள்ளியில் அதை எங்களுக்கு நடத்தாமல் நேரடியாக பன்னிரெண்டாம் வகுப்பு பாடம் நடத்தியதால் இப்பொழுது அதில் தேர்ச்சி பெற முடியவில்லை என்று சொன்னார்களாம். தன் பள்ளிக்கூடத்தின் ரிசல்ட்டைக் காட்டிக் கடத்தி விட்டால் போதும் என நினைக்கும் பள்ளிகள் புற்றீசல்களாய் பெருகியதன் விளைவு தான் இது. அரசாங்கமோ அதைத் தடுப்பதற்குப் பதிலாக தன் பெட்டியை நிரப்ப புதிய அனுமதிகளை அளித்துக் கொண்டிருக்கிறது. <br />பள்ளிகள் பாடபுத்தகங்கள் தரும் வகையில் எப்படி கொள்ளையடிக்கின்றன? அதற்காகச் சம்பந்தப்பட்ட பதிப்பகங்களுடன் இணைந்து அவர்கள் செய்யும் மறைமுக வேலைகள் என்ன என்பதைப் பற்றி சில தினங்களுக்கு முன் எழுத்தாளர் என்.சொக்கன் முகநூலில் பதிந்த விசயம் இன்னொரு அதிர்ச்சி. கொள்ளையர்களின் கூடாரமாகி வருகிறது கல்வி நிலையங்கள்!<br />கோடை விடுமுறை குறித்து சொல்லி இருக்கிறீர்கள். சில வாரங்களுக்கு முன் என் மகன் என்னிடம் பேசும் போது டாடி......ஸ்கூலில் ஒரு பெரிய லிஸ்ட் தந்திருக்கிறார்கள், அதில் உள்ள கோச்சிங் கிளாசில் சேரவா? ஒவ்வொன்றிற்கும் தனித்தனியா பணம் கட்ட வேண்டுமாம் என்று கூறினான். அதற்கு நான் பணம் முக்கியமில்லை. கோடை விடுமுறை என்பது உனக்கு விளையாடுவதற்கான மாதம். அதில் ஏதாவது விளையாட்டு கற்றுக் கொள்ள வேண்டுமானால் அதில் சேர்ந்து கொள். கோச்சிங் கிளாசெல்லாம் வேண்டாம். அப்படியே மிஸ் கேட்டா ஸ்கூல் லீவு விளையாடுறதுக்காகத் தான் விடுறாங்களாம், அதுனால அந்த மாசத்துல கோச்சிங் கிளாசெல்லாம் போக வேண்டாம் என என் டாடி சொல்லி விட்டார்கள் எனச் சொல்லிவிடு என்றேன். அவனும் அப்படியே சொல்லிவிட்டு இந்த லீவில் என்ன விளையாடலாம்? எந்த சொந்தக்காரவங்க வீட்டுக்கு போகலாம் என லிஸ்ட் போட்டுக் கொண்டிருக்கிறான்.<br />பிள்ளைகளின் எதிர்காலத்தைக் காட்டி பெற்றோர்களை நிர்பந்தப்படுத்தியாவது தன் எண்ணத்தைப் பள்ளிக்கூடங்கள் சாதிக்க நினைக்கின்றன. <br />சரியான நேரத்தில் எழுதப்பட்ட கட்டுரை. பொறுப்புக்குரியவர்கள் கவனிக்க வேண்டும் என்பதே பெரு விருப்பம்.<br />மு. கோபி சரபோஜிhttps://www.blogger.com/profile/15552643860553095838noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-80520880597518861512016-04-06T09:12:19.556+05:302016-04-06T09:12:19.556+05:30கட்டுரையைப் பற்றிச் சொல்லாமல் விட்டுவிட்டேனே..
இப்...கட்டுரையைப் பற்றிச் சொல்லாமல் விட்டுவிட்டேனே..<br />இப்படியே தொடரக் கூடாது, பிள்ளைகளுக்கு விடுமுறை மிக அவசியம். அடுத்த அரசாவது நடவடிக்கை எடுத்தால் நல்லது..தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-90742449015236610132016-04-06T09:10:30.079+05:302016-04-06T09:10:30.079+05:30வணக்கம் அண்ணா,
நம்மூர் நிலையை மாற்ற நினைக்கிறோம்....வணக்கம் அண்ணா, <br />நம்மூர் நிலையை மாற்ற நினைக்கிறோம்..ஆனால் நம்மவர்கள் இங்கும் தங்கள் 'வேலையை'க் காட்டுகிறார்கள்! அதிக வீட்டுப்பாடம் கேட்கிறார்கள், மதிப்பெண் அது இது என்று நச்சரிக்கிறார்கள்...இந்தியக் குழந்தைகள் அதிக அழுத்தத்திற்கு உள்ளாகிறார்கள் என்று ஒரு ஆசிரியர் சொன்னார். அடுத்தததாக ஆசியரைச் சொல்கிறார்கள் - சீன, கொரிய மக்களும் நம் போல்தான். அடப்பாவிகளா, இங்க மதிப்பெண் ஓட்டத்தைக் கொண்டுவந்து விடாதிர்கள் என்றே மனம் துடிக்கிறது.<br />அந்தந்த வயதிற்கு ஏற்ற பாடம் - சரிதான். இதிலும் நம்மவர்கள் அதிகம் சொல்லிக்கொடுக்கிறேன் என்று படுத்தும் பாட்டில், கடந்த வாரம் இளையவன் ஆசிரியரிடமிருந்து பெற்றோர்கள் அனைவருக்கும் பொதுவாக ஒரு மின்னஞ்சல் வந்தது, "பெருக்கல், வகுத்தல் இப்பொழுது சொல்லிக் கொடுக்காதீர்கள். சவாலான பாடங்கள் வேண்டும் என்றால் இவர்கள் வயதிற்குத் தகுந்தபடி நான் கொடுத்தனுப்புகிறேன், புரியாமல் மனப்பாடம் செய்ய வைக்காதீர்கள், பெரிய வகுப்பிற்குச் செல்லும்பொழுது பிள்ளைகள் குழம்பிப் போவார்கள்" என்று! யார் ஒன்றாம் வகுப்பில் வகுத்தல் சொல்லிக் கொடுத்திருப்பது என்று சந்தேகமே வேண்டாம் - நம்மவர்கள் தான்! இதில் peer pressure நம்ம இளையவருக்கு, அம்மா, வகுத்தல் கணக்குகள் கொடு என்று நின்றான். அவனுக்கு விளையாட்டாய் சில உதாரணங்களைச் சொல்லி, இது தான் வகுத்தல், ஆனால் பெரிய கணக்குகள் இப்பொழுது வேண்டாம் என்று புரிய வைத்தேன்.தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.com