“தமிழ் இனிது” நூல் வெளியீட்டு விழாக்கள் – நண்பர்கள் வருக!

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், 

வீதி -கலை இலக்கியக் கழகம், 

புதுக்கோட்டைத் தமிழ்ச் சங்கம் 

இணைந்து புதுக்கோட்டையில் நடத்தும்

நமது நூல் வெளியீட்டு விழா!

16-08-2024 - புதுக்கோட்டை

18-08-2024 காலை- பொள்ளாச்சி

18-08-2024 - மாலை - கோவை

நகரங்களில் உள்ள

நண்பர்கள் வருக!

உற்றோர் -அருகில் இருப்போர் - நேரில் வருக

மற்றோர் தம் நண்பர்களுக்குப் பகிர்க!

நூல் படித்து -வெற்றுப் புகழ்ச்சியாக அல்லாமல், 

பொருள் பொதிந்த சொற்களால் விமரிசனம் செய்து அனுப்புக

muthunilavanpdk@gmail.com எனும்

எனது மின்னஞ்சலுக்கு  அனுப்பி,

தகவல் தர வேண்டுகிறேன்

எனது செல்பேசி எண் - 91 94431 93293

விழாக்களில் கலந்து கொள்ள இசைவுதந்த, 

நடத்துகின்ற, வருகை தருகின்ற

அறிஞர்கள், தோழர்கள், நண்பர்களுக்கு 

எனது இதயம் கலந்த நன்றி!



 


---------------------------------------- 

பொள்ளாச்சி - 18-08-2024 ஞாயிறு- முற்பகல்

------------------------------------------

கோவை - 18-08-2024 -ஞாயிறு - பிற்பகல்

------------------------------------------------------------

புதுக்கோட்டை, பொள்ளாச்சி, கோவை 

நகரங்களில்  உள்ளோர் நேரில் வருகை தருக. 

மற்ற நண்பர்கள் 

20% கழிவு போக, ரூ.130க்கு

நூல் பிரதிகள் பெற்றுக் கொள்ள தொடர்பு எண்கள் –

சென்னை – திரு இன்பராஜன் – +91 74012 96562

புதுக்கோட்டை – திரு அஜ்மீர் - +91 98420 18544

அஞ்சல் செலிவின்றி ஆங்காங்கே உள்ள

இந்து-தமிழ் திசை நூல்விற்பனை நிலையங்களில் 

பெற்றுக் கொள்ள திரு இன்பராஜ் அவர்களிடம்

விவரம் கேட்டுக் கொள்ளலாம்.

----------------------

முனைவர் மகா.சுந்தர் அவர்களின்

 “தமிழ்இனிது” நூல் அறிமுகம் காண,

“தென்றல்“ தமிழ் வலைக்காட்சி இணைப்பு-

https://www.youtube.com/watch?v=MsKrFXmaeUQ

--------------------------------

இனிமைத் தமிழ்மொழி எமது -எமக்கு

                         இன்பம் தரும்படி வாய்த்த நல் அமுது

கனியைப் பிழிந்திட்ட சாறு -எங்கள் 

                        கதியில் உயர்ந்திட யாம் பெற்ற பேறு 

தனிமைச் சுவையுள்ள சொல்லை-எங்கள் 

                              தமிழினும் வேறெங்கும் யாம் கண்டதில்லை 

நனியுண்டு நனியுண்டு காதல்-நல்ல 

                     தமிழர்கள் யாவர்க்கு மேதமிழ் மீதில்!

-பாரதி தாசன்

------------------------------------------

7 கருத்துகள்:

  1. ஆகா! ஆகா!! புதுகையின் கொண்டாட்டம் என்பதிலிருந்து தமிழ்நாட்டின் கொண்டாட்டம் எனும் தரத்துக்கு உயர்ந்து நிற்கிறது 'தமிழ் இனிது'! செந்தலை நா.கவுதமன் ஐயா நடமாடும் வரலாற்றுப் பல்கலைக்கழகம். அவர் இந்நூல் பற்றிப் பேசுகிறார் என்றால் அதை விடச் சிறப்பு வேறென்ன! இதை விட விளம்பரம் வேறென்ன!! அன்பு கமழ் நல்வாழ்த்துக்கள் ஐயா!

    பதிலளிநீக்கு
  2. இன்று தமிழ் இனிதை கொண்டாடுவோம்

    பதிலளிநீக்கு
  3. இனிது இனிது தமிழ் இனிது
    இனிது இனிது நூல் இனிது
    இணைந்து கொண்டாடும் விழாக்கள் இனிது
    இணைய முடியாமை எனக்குக் கொடிது
    இருந்தாலும் மனம் கொள்ளும் மகிழ்வு இனிது
    - கிரேஸ் பிரதிபா
    அட்லாண்டா

    பதிலளிநீக்கு
  4. வாழ்த்துக்கள் ஐயா.

    பதிலளிநீக்கு