“தமிழ் இனிது” -நூல் பற்றி, வானொலியில் கலந்துரையாடல், பொள்ளாச்சி, கோவை நிகழ்ச்சிகள்

திருச்சி வானொலி, வானவில் பண்பலையில்

தமிழ் இனிதுநூல் பற்றிய கலந்துரையாடல்

வரும் 25-8-2024 ஞாயிறு காலை 10மணி முதல் 

ஒரு மணிநேரம் ஒலிபரப்பாகிறது 

(நினைவுக்கு :மங்க்கி பாத்நிகழ்ச்சிக்கு முன்பாக!

இந்நிகழ்வில்

திருச்சி வானொலி நிகழ்ச்சி அமைப்பாளர்

திருமிகு அடைக்கலராஜ் அவர்களும்

திருச்சி- வட்டாரக் கல்வி அலுவலர்

திருமிகு இரா.ஜெயலட்சுமி அவர்களும்

என்னுடன் கலகலப்பாகக் கேள்விகள் கேட்டு

சுவையான உரையாடலை நடத்தியிருக்கிறார்கள்.

(இருவருமே தொடர் வாசிப்பாளர்கள் என்பது 

அவர்களின் கேள்விகளால் விளங்கியது!)  

உலகம் முழுவதுமிருந்து

இணைய இணைப்பு வழியாக

வானொலி நிகழ்வைக் கேட்கலாம்

https://liveradios.in/air-trichy-fm-rainbow.html 

நண்பர்கள், தம் நண்பர்களுடன் கேட்டு

கருத்துரைக்க வேண்டுகிறேன்.

--------------------------------------------

கடந்த 18-8-2024 அன்று

பத்மஸ்ரீ கவிஞர் சிற்பி அய்யா அவர்களை 

பொள்ளாச்சியில் அவர்கள் இல்லத்தில் சந்தித்தேன்.

தமிழ் இனிதுநூலுக்கு ஆழமானதொரு

முன்னுரை வழங்கியதற்கு நன்றி தெரிவித்து

நூலின் இரண்டு படிகளை வழங்கி, வணங்கி மகிழ்ந்தேன் -

91வயதிலும் அவர்களின் உற்சாகம் நெகிழ வைத்தது! 

---------------------------------------  

18-8-2024 ஞாயிறு காலை 10மணியளவில்

பொள்ளாச்சி இலக்கிய வட்டம்நிகழ்வில்

நமதுதமிழ் இனிதுநூல் அறிமுகம் நடந்தது.


                                                       
இந்நிகழ்வில் எனது ஏற்புரை - காணொலி 

பொள்ளாச்சி இலக்கிய வட்ட நிர்வாகிகள் 

தலைவர் கவிஞர் அம்சப்பிரியா,

செயலர் கவிஞர் பூபாலன் 

ஆகிய இனிய நண்பர்களுக்கு

நமது புதுக்கோட்டை வீதி சார்பாக நன்றி தெரிவித்தேன்.

------------------------------ 

அதே 18-8-2024 மாலை 6மணியளவில்

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின்

கோவை மாவட்டம் - கிளைகளின் சார்பாக

தமிழ் இனிதுநூல் அறிமுகவிழா நடந்தது

செந்தலையார் வெளியிட நூலைப் பெற்றுக் கொள்பவர்

கோவை மாவட்ட தமுஎகச தலைவர் தோழர் மணி அவர்கள்

அண்ணன் செந்தலை ந.கவுதமன் முன்னிலையில்

தமுஎகச கோவை மாவட்டச் செயலர் எழுத்தாளர், 

வழக்குரைஞர் அ.கரீம் அவர்கள் சிறப்புச் செய்கிறார்

நூலறிமுகம் செய்த பேரா.முனைவர் மு.அன்பரசி அவர்கள். 

எனது ஏற்புரை - காணொலி இணைப்பு-

https://youtu.be/cRu9s7HUhQg?si=FbF-0hx7Gi29VQEN

 

மாவட்டத்தலைவர் தோழர்  மணி,

மாவட்டச் செயலர் தோழர் .கரீம் உள்ளிட்ட

நிர்வாகியர்க்கு எனது நெஞ்சார்ந்த நன்றி

கல்லூரிக்காலத்தில் முத்துபாஸ்கரனாக 

இருந்த என்னை,

 “முத்துநிலவன்ஆக்கிய அண்ணன்

தமிழறிஞர் செந்தலை புலவர் .கவுதமன் அவர்கள்

இந்நிகழ்வில் கலந்து கொண்டு

சிறப்புரையாற்றியது நான் பெற்ற பேறு!

-------------------------------

வானொலி நிகழ்வையும்

பொள்ளாச்சி, கோவை நிகழ்வுகளின்

காணொலிகளையும் பார்த்து,

கருத்துரைக்கும்படி

நண்பர்களை அன்புடன் வேண்டுகிறேன்.

--------------------------------   

இனி

கடந்த நமது பதிவில் குறிப்பிட்ட

புதுக்கோட்டை விழாப் படங்கள்









1 கருத்து: