ஊட்டி - குன்னூர் பிராவிடன்ஸ் மகளிர் கல்லூரியில் முத்துநிலவன் பேச்சு


தினமலரில் வெளிவந்த முத்துநிலவன் பேச்சு


அறிவுக்கும் மதிப்பெண்ணுக்கும் தொடர்பு இல்லை என்று கவிஞர் முத்துநிலவன் தன்னம்பிக்கை அளித்தார்.

குன்னூர் பிராவிடன்ஸ் மகளிர் கல்லூரி முத்தமிழ் பேரவை சார்பில மனஅழுத்தம் குறித்த கருத்தரங்கு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட முத்துநிலவன் பேசியதாவது


அறிவுக்கும் மதிப்பெண்ணுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. குறைவான மதிப்பெண் பெற்று, தோல்வியடையும் மாணவ, மாணவிகள் புத்திசாலி இல்லை என்ற முடிவுக்கு வந்துவிடக்கூடாது. அவர்களுக்குள் புதைந்துள்ள மற்ற திறமைகளை வெளிக் கொணர வேண்டும். பள்ளித் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெறுவது நுண்ணறிவு என்றுதான் சொல்ல வேண்டும்

ஆண்களைவிட, பெண்கள் கல்வியில் சிறந்து விளங்குகின்றனர். சமுதாயத்தில் மாணவர்கள் சாதனைகளைப் புரிந்து நிலையான பெயர் பெற வேண்டும். அடுத்தவர்களின் திறமையை மதிக்க வேண்டும். தகுதியைப் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு முத்துநிலவன் பேசினார். 


செய்து முடிக்க முடியாத காரியத்தில் தலையிட்டு, அது கைகூடாத போது, நாம் விரும்பாத காரியத்தை பிறர் செய்யும்போது நினைத்த காரியத்தை செயல்படுத்த முடியாத போது என மன அழுத்தம் ஏற்பட பல காரணங்கள் உள்ளன. அதை எதிர்கொள்ளும் ஆற்றலை மாணவ, மாணவியர் பெற வேண்டும். எதை செய்து முடிக்க முடியுமோ அந்த காரியங்களை முனைப்புடன் செய்து முடிக்க வேண்டும். சுயநலம் இல்லாதவர்களால் மட்டுமே மற்றவர்களின் மன அழுத்தத்தைக் குறைக்க முடியும். மனிதர்களை நம்புவதை விட ஆன்மிக ஆற்றலை அதிகப்படுத்திக் கொள்வது மன அழுத்தத்தில் இருந்து விடுபட பெரிதும் உதவும் என்று குன்னூர் டி.எஸ்.பி., தர்மராஜ் தெரிவித்தார். 

கல்லூரி துணை முதல்வர் ஷீலா தலைமை வகித்தார். பேராசிரியை சுதா நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார். தமிழ்த்துறை பேராசிரியை சுஜாதா நன்றி கூறினார்.

இணைப்பு - http://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?cat=1&id=4183 

1 கருத்து:

  1. கவிஞர் முத்துநிலவன் தன்னம்பிக்கை வரிகளை நானும் விரும்புகிறேன்.

    பதிலளிநீக்கு