பிடாரிக்கதை கேட்டிருப்பீங்க, விஞ்ஞானத்தின் பெயரிலேயே
இதுபோல
“பிம்பிளிக்கா”க்கதை இதுபோல் கேட்டிருக்கீங்களா?
கேட்டிருக்கீங்களா?
என்று சூர்யா பாணியில் கத்தவேண்டும்போலுள்ளது!
“பாம்புக்கு நாமதான் பாம்பு ன்னு பேர்
வச்சிருக்கிறோமே தவிர, பாம்புக்குப் பாம்பு ன்னு நாம பேர்வச்சிருக்கிறது
பாம்புக்கே தெரியாது!” – இது எனது நண்பன் மதுக்கூர் இராமலிங்கம்சொல்லும்
வேடிக்கை செய்தி!
இதுபோலத்தான், இன்று தேடினாலும்,
இணையத்தில் பயங்கரமாக உலவிவரும்
ஒரு முகநூல் தகவலின் சாரம் இது. நதிமூலம் ரிஷிமூலம் கேட்கக் கூடாது இது பழைய கதை!
முகநூலில் முதலில் பதிவிட்டது யார் என்பது தெரியாதது புதிய கதை!











