நூல் விருதுகள் -இணையத் தமிழ் எழுத்தாளர்க்கு விருதுகள் - அறிவிப்பு

 ஐந்தாவது புதுக்கோட்டை புத்தகத் திருவிழா-2022ஐ முன்னிட்டு சிறந்த நூல்களுக்கான விருதுகள் வழங்கும் அறிவிப்பு  வந்துள்ளது

---------------------------------- 

இதில் முக்கியமாக,

உலக சமூக வலைதளக் காட்சிகளில் 

முதன்முறையாக(?)

இணைய எழுத்தாளர்க்கு 

விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

வலைப் பக்க எழுத்தாளர்கள் வருக

--------------------------------------------------

இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் திருமிகு கவிதா ராமு இஆப அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகமும், தமிழ்நாடு அறிவியல்

இயக்கமும் இணைந்து நடத்தும்

5ஆவது புதுக்கோட்டை புத்தகத்திருவிழா

ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 7, 2022 வரை பத்துநாட்கள்

புதுக்கோட்டை நகர்மன்றத்தில் நடைபெறவுள்ளது.

இப்புத்தகத் திருவிழாவினையொட்டி

மாணவர்க்கான கலை இலக்கியப் போட்டிகள், புத்தகப் பேரணிகள், புதுக்கோட்டை வாசிக்கிறது போன்ற பல்வேறு நிகழ்வுகளுக்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், ஐந்தாவது புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவில் 2020, 2021ஆகிய

இரண்டு ஆண்டுகளில் தமிழில் வெளியான சிறந்த நூல்கள் மற்றும்

இணையத்தில் வெளியான படைப்புகள் தேர்வு செய்யப்பட்டு புத்தகவிழா

மேடையில் விருதுகள் வழங்கப்பட உள்ளது.

கீழ்க்கண்டவாறு விருதுகள் வழங்கப்பட உள்ளன.

கவிதை பிரிவில் மரபுக் கவிதைபுதுக்கவிதைஹைக்கூ கவிதை

ஆகிய மூன்று விருதுகள்  

கட்டுரை - அரசியல், சமூகம், வரலாறு, அறிவியல் மற்றும் கல்வி சார்ந்த கட்டுரை நூல் ஒன்றிற்கும், கலை இலக்கியம் சார்ந்த கட்டுரை நூல் ஒன்றிற்குமாக இரண்டு விருதுகள்

சிறுகதை நூல் விருது ஒன்று

நாவல் விருது ஒன்று

சிறார் இலக்கியம் விருது ஒன்று

இணையத்தில் மட்டுமே வெளியாகி நூலாக வெளிவராத, தமிழ்- புனைவு(கதை, கவிதை) படைப்பு ஒன்றிற்கும், அபுனைவுப் (கட்டுரை) படைப்பு ஒன்றிற்கும் என இரண்டு விருதுகள்

என

மொத்தம் 10 விருதுகள் வழங்கப்படவுள்ளன.

தேர்வு செய்யப்படும் ஒவ்வொரு விருதுக்கும் ரூ 5000 பரிசுத்தொகையும்,

பாராட்டுச்சான்றிதழுடன், விருதுப் பட்டயமும் 

29-7-2022 - 07-8-2022 பத்துநாள் புதுக்கோட்டை புத்தகவிழாவில்

விழா மேடையில் வழங்கப்படவுள்ளது.

மேற்படி விருதுகளுக்கான பரிசீலனைக்கு – பதிப்பகத்தார், படைப்பாளிகள் மற்றும் வாசகர்கள் தங்கள் நூல்களையும், தாங்கள் பரிந்துரைக்கும் நூல்களையும் அனுப்பி வைக்கலாம்.

நூல்களின்  3 பிரதிகளை அனுப்ப வேண்டிய முகவரி-

ழுத்தாளர் ராசி.பன்னீர் செல்வன்,

தலைவர் - விருதுக்குழு,

புதுக்கோட்டை புத்தகத் திருவிழா-2022,

தமிழ்நாடு அறிவியல் இயக்கம்,

ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில்,

புதுக்கோட்டை-622001

என்ற முகவரிக்கு 12-7-2022க்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.

(அனுப்பிய நூல்கள் கிடைத்த  விவரத்தைக் கேட்க -9486752525)

இணையப் படைப்புகளின் இணைப்பினை rasipanneerselvan@gmail.com  என்ற

மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

முக்கியமான குறிப்புகள்

படைப்புகள் வந்துசேர வேண்டிய கடைசித் தேதி 12.07.2022

படைப்புகள் மேற்குறிப்பிட்ட காலத்தில் முதல்பதிப்பாக வெளிவந்ததை உறுதிசெய்ய வேண்டும்.

தேர்வு பெற்றோர் விவரம் ஊடகவழியும், விருது பெற்றோர்க்கு செல்பேசி, மின்னஞ்சல் மூலமும் தெரிவிக்கப்படும். நூல்களை அனுப்பியபின், கிடைத்த விவரம் கேட்டுத் தெரிந்து கொள்வதன்றி, விருதுத் தேர்வு அறிவிப்புகள் வரை எந்தத் தொடர்பும் விரும்பத்தக்கதல்ல.

-------------------------------------------------------- 



3 கருத்துகள்:

  1. சிறப்பு...

    நண்பர்களிடமும் பகிர்ந்து கொண்டுள்ளேன்... நன்றி ஐயா...

    பதிலளிநீக்கு
  2. வாழ்த்துகள் எமதும்...
    கில்லர்ஜி தேவகோட்டை

    பதிலளிநீக்கு
  3. ஆகா! ஆகா!! ஆகா!!! சாதித்து விட்டீர்கள் ஐயா! இணையத் தமிழுக்கும் விருதுகள் கொடுத்து அதையும் மற்ற வகைத் தமிழ்ப் படைப்புகள் போல் ஏற்பிசைவளிக்க வேண்டும் எனத் தொடர்ந்து குரல் கொடுத்து வந்து கடைசியில் அதை நீங்களே முன்னின்று சாதித்தும் காட்டி விட்டீர்கள். இங்கிருந்தபடியே மனதார உங்கள் பொற்கரங்களுக்கு ஒரு முத்தம்!

    பதிலளிநீக்கு