ஐந்தாவது தமிழ் ஐக்கூ உலக மாநாடு!
புதுக்கோட்டைத்
தமிழ்ச் சங்கம்,
இனிய நந்தவனம்
இதழ் மற்றும்
உலகத் தமிழ் ஐக்கூ
கவிஞர்கள் மன்றம்
இணைந்து நடத்துகின்றன.
மாநாட்டிற்கு
புதுக்கோட்டைத்
தமிழ்ச்சங்கத் தலைவரும்
விரல்விட்டு
எண்ணத்தக்க
மிகச்சிறந்த கவிஞருமான
அருமைச் சகோதரர்
கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்கள்
தலைமை வகிக்கிறார்கள்
சிறப்புத் தகவல்கள்:
நாள்: மே 17, 2026 ஞாயிற்றுக்கிழமை
முழுநாளும்
இடம்: மகராஜ் மகால், புதுக்கோட்டை,
சிறப்பு: இது ஐந்தாவது தமிழ் ஐக்கூ உலக மாநாடு ஆகும்.
பங்கேற்பாளர்கள்: உலகத் தமிழ் ஐக்கூ கவிஞர்கள்
ஏற்கெனவே 2022 தொடங்கி 2025 முடிய
முதல் மாநாடு திருச்சியிலும்,
இரண்டாவது மாநாடு அந்தமானிலும்,
மூன்றாவது மாநாடு மதுரையிலும்
நான்காவது மாநாடு இலங்கையிலும்,
நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
இப்போது ஐந்தாவது மாநாடு புதுக்கோட்டையில்!
இதோ
முன்னோட்டத் தகவல்
அழைப்பிதழ்
https://www.facebook.com/thangam.moorthy.3/
மற்றும்
https://www.facebook.com/haiku.mumu/
மேலும்
https://www.facebook.com/groups/HSWTP100/posts/33870859352557999/
--------------------------------------------------------
இப்போது, ஐக்கூக்
கவிதையின் முன்னோடியாகத் திகழும் –
கவிஞர் மு.முருகேஷ் அவர்கள்,
புதுக்கோட்டையில் இருந்தபோது
முதன்முதலாக வெளியிட்ட –
‘விரல் நுனியில் வானம்” அய்க்கூ நூலுக்கு
நான் எழுதிய முன்னுரை படிக்க-
https://valarumkavithai.blogspot.com/2013/09/blog-post_29.html
(இந்த
முன்னுரை, மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தின்
தமிழ் ஆய்வு
மாணவர்க்கான பாடநூலில்
இடம்பெற்றிருந்தது
குறிப்பிடத் தக்கது)
- மேலும் -
தமிழ் – ஆங்கிலம் – இந்தி
மூன்று மொழிகளில் வெளிவந்த,
கவிஞர் மு.முருகேஷ் எழுதிய
“மலர்க ஐக்கூ”
மும்மொழி நூலை முன்வைத்து
‘கணையாழி’ இலக்கியத்
திங்கள் இதழில்
நான் எழுதிய மதிப்புரை
https://valarumkavithai.blogspot.com/2020/12/blog-post_14.html
வாய்ப்பிருப்போர்
படித்துப் பார்க்கலாம்
------------------------------------------------------------
அனைவரும்
கவிதைக் கோட்டையாகத்
திகழும்
புதுக்கோட்டைக்கு
வருக
வருக என
அன்போடு அழைக்கிறோம்
-------------------------------------
முன்னோட்ட அழைப்பிதழ் பார்த்துப்
பதிவு
செய்யுங்கள்,
-------------------------------------
நூல்
வெளியிடத் தயாராகுங்கள்
-------------------------------------
தொகுப்பில்
இடம்பெற ஐக்கூ அனுப்புங்கள்
-------------------------------------
மாநாட்டுக்குத்
தவிராது வருக கவிஞர்களே!
(தவறாது வருக என்பது, தவறான தொடர்.
தவிராது -தவிர்க்காது எனப் பொருள் தரும்
சரியான சொல்தான்)
-----------------------------------------
வணக்கம்
-நா.முத்துநிலவன்,
புதுக்கோட்டை
-------------------------------------






கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக