தமிழாசிரியர்களுக்கான ஐந்துநாள் பயிற்சிமுகாம்


புதுக்கோட்டை ஆர்.எம்.எஸ்.ஏ. நடத்தியது – தமிழாசிரியர்கள் புத்துணர்வு!

                 புதுக்கோட்டை அருகில் உள்ள கைக்குறிச்சி சுபபாரதி ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் -மாவட்டம் முழுவதிலும் இருந்து, 9,10ஆம் வகுப்புத் தமிழாசிரியர்கள் 210 பேர் கலந்துகொண்ட ஐந்துநாள் பயிற்சிமுகாம் நடந்தது. நேற்று-சனிக்கிழமையுடன் நிறைவடைந்த பயிற்சிமுகாமில் கலந்துகொண்ட தமிழாசிரியர்கள் பலரும் இந்தப் பயிற்சிமுகாம் தமக்குப் புத்துணர்வளித்ததாக மகிழ்ச்சி தெரிவித்தனர்.

ஆர்.எம்.எஸ்.ஏ திட்டத்தில் ஐந்து நாள் தமிழாசிரியர் பயிற்சி முகாம்

                          ஆர்.எம்.எஸ்.ஏ. எனப்படும் ‘அனைவருக்கும் இடைநிலைக் கல்வித்திட்டம்’ என்பது மத்திய மாநில அரசுகளின் நிதிஉதவியோடு நாடுமுழுவதும் செயல்படுத்தப் பட்டு வருகிறது. இத்திட்டத்தின் படி 9,10ஆம் வகுப்புகளை நடத்தும் ஆசிரியர்களுக்கான ஐந்துநாள் புத்துணர்வுப் பயிற்சிமுகாம் தற்போது மாநிலம் முழுவதும் நடத்தப் பட்டு வருகிறது.
                          இதன் ஒருபகுதியாக கடந்த28ஆம்தேதி தொடங்கிய புதுக்கோட்டை மாவட்டத் தமிழாசிரியர் பயிற்சி முகாம் நேற்று நிறைவடைந்தது. பயிற்சிமுகாமில் கலந்து கொண்டு தொடங்கிவைத்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சுகுமார் தேவதாஸ், “பள்ளிகளில் பாடம்நடத்தும் ஆசிரியர்கள் தங்கள்திறiமைகளை வளர்த்துக்கொள்வதோடு மாணவர்களின்; பலவகைத் திறமைகளையும் கண்டறிந்து வளர்க்கவே இதுபோன்ற முகாம்களை அரசு தம்செலவில் நடத்துகிறது” என்று தெரிவித்தார். முகாமை ஏற்பாடு செய்திருந்த ஆர்எம்எஸ்ஏ பொறுப்பாளர் முனைவர் ரெ.கனகசபாபதி பேசும்போது, “மற்றப் பாட ஆசிரியர்களை விடவும் தமிழ்ப்பாடம் நடத்தும் ஆசிரியர்களின் பணி கூடுதல் சிறப்பு வாய்ந்தது, அதனால்தான் மற்ற ஆசிரியர்களை சார், டீச்சர் என்று அழைக்கும் பள்ளிக் குழந்தைகள் தமிழாசிரியர்களை மட்டும்தான் அம்மா என்றும் அய்யா என்றும் அழைக்கிறார்கள் இந்த வகையான மாணவர்களின் உளவியல் நுட்பத்தைத் தமிழாசிரியர்கள் புரிந்து கொள்ளவேண்டும் என்றார். 
                              பயிற்சி நிகழ்ந்த ஐந்துநாட்களுக்கும், வகுப்பறைகள் மற்றும் கூட்ட அரங்கங்கள் மற்றும் ஒலி-ஒளி வசதிகளை நன்கொடையாக வழங்கிய சுப-பாரதி கல்விநிறுவனங்களின் தலைவர் குரு.தனசேகரன், செயலர் வீ.வைத்தியநாதன் ஆகியோர் பயிற்சிமுகாமில் கலந்து கொண்டு ஆசிரியர்களை வாழ்த்திப் பேசினர்.

குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், சோலை!
                                 இம்முகாமின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் கருத்தாளர்களாக புதுக்கோட்டை அரசு முன்மாதிரி மேல்நிலைப் பள்ளித் தமிழாசிரியரும் துணைமுதல்வருமான நா.முத்து பாஸ்கரன், கொப்பனாப் பட்டி மு.நா.செ. உயர்நிலைப் பள்ளித் தமிழாசிரியர் கு.ம.திருப்பதி, பெருங்குடி அரசு உயர் நிலைப் பள்ளித் தமிழாசிரியர் மகா.சுந்தர், காரையு|ர் மொ.அ.கா.மேல்நிலைப்பள்ளித் தமிழாசிரியர் சுப.கோபிநாத், ஆகிய நால்வரும் திறம்படப் பணியாற்றி பின்வருமாறு பயிற்சித் தலைப்புகளையும் பயிற்சிதரும் பேராசிரியரகள் மற்றும், தமிழறிஞர்களையும் ஒருங்கிணைத்திருந்தனர். மாவட்டம் முழுவதும் இருந்து வந்திருந்த 160க்கும் மேற்பட்ட பெண்ஆசிரியர்கள் உள்ளிட்ட 210 தமிழாசிரியர் களையும் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், மற்றும் சோலை என ஐந்து குழுக்களாகப் பிரித்து பெரும்பாலும் தனித்தனி வகுப்பாகவும், அவ்வப்போது இரண்டிரண்டு குழுக்களை மட்டும் இணைத்தும் பயிற்சி தரப்பட்டது.

பயிற்சிக் கையேடு, குறிப்பேடு எழுதுபொருட்கள் வழங்கப்பட்டன.
                           இம்முகாமில் கலந்துகொண்ட அனைத்துத்த தமிழாசிரியர்களுக்கும் மாநில அனைவர்க்கும் இடைநிலைக் கல்வித்திட்ட இயக்குநர் வெளியிட்டுள்ள ‘தமிழாசிரியர்களுக்கான பணியிடைப் பயிற்சிக் கையேடு’ எனும் நூலும், குறிப்பேடுகளுடன் எழுதுபொருளும் இலவசமாக வழங்கப்பட்டது. இதனை திட்டப் பொறுப்பாளர் முனைவர் ரெ.கனக சபாபதி அனைவருக்கும் வழங்கினார்.

பயிற்சித் தலைப்புகளும் பயிற்சிதந்த தமிழறிஞர்களும்
                            ‘தமிழாசிரியர் தகுதிகள்’, ‘வகுப்பறையும் தமிழாசிரியரும்’, ‘மாணவர்கள் நம் குழந்தைகள்’, ‘ஆசிரியர்-மாணவர் உறவு’, ‘செய்யுள் கற்பித்தல்’ ‘உரைநடை கற்பித்தல்’ ‘இனிக்கும் இலக்கணம்’ ‘மொழியாக்கமும் மொழிபெயர்ப்பும்’, ‘வாழ்வியல் திறன்கள்’, ‘கணினித்தமிழ் கற்போம்’ ‘இசையால்தமிழ்வளர்ப்போம்’,‘சங்க இலக்கியம்’, ‘காப்பிய இலக்கியம்’, ‘நீதி இலக்கியம்’, ‘பக்தி இலக்கியம்’, ‘சிற்றிலக்கியம்’, ‘நாட்டுப்புற இலக்கியம்’, ‘இலக்கண மாற்றங்கள்’ ‘காலந்தோறும்கல்வி’, ‘கதைகளும்கதைஆக்கமும்’, ‘மரபுக்கவிதையும் ஆக்கமும்’ ‘புதுக் கவிதையும் ஆக்கமும்’, ‘அய்க்கூவும் உருவாக்கமும்’, ‘பாநயம் மற்றும் பாவகைகள்’ ‘தமிழ்வளர்ச்சியில் சிற்;;றிதழ்கள்’, ‘பெரியாரின் கல்விச் சிந்தனைகள்’, ‘நாட்டுப் பற்றை வளர்க்கும் நற்கதைகள்’, ‘நன்னெறிக் கல்வி’ , ‘ஊடகத் தமிழ்’, ‘தமிழரும் தமிழும்’, ‘எழுத்துப் பிழை களைதல்’ ‘உச்சரிப்பில் குறைபாடு களைதல்’  ஆகிய 30க்கும்; மேற்பட்ட தலைப்புகளில், அந்தந்தத் துறை சார்ந்த கல்லூரி-பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், வல்லுநர்கள் மற்றும் தமிழறிஞர்களைக் கொண்டு ஐந்துநாள்களும் சிறப்பாகப் பயிற்சியளிக்கப் பட்டது. 
                             அரசு ஆசிரியர்பயிற்சிக் கல்லூரி முதல்வர் முனைவர் ம.அன்புச் செழியன் , ‘ஞானாலயா’ பா.கிரு~;ண மூர்த்தி, மதுரைக் கவிஞர் மதுக்கூர் இராமலிங்கம், சாகித்திய அகாதெமி ஆலோசனைக்குழு உறுப்பினர் கவிஞர் தங்கம் மூர்த்தி;, தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகப் பேராசிரியர் முனைவர் வெற்றிச் செல்வன், புதுக்கோட்டை மாமன்னர் கல்லூரிப் பேராசிரியர்கள் முனைவர் மு.பழனியப்பன், முனைவர் அ.செல்வராசு, முனைவர் ச.மாதவன், முனைவர் இரா.கலைச் செல்வி, மகளி;ர் கல்லூரிப் பேராசிரியர் முனைவர் திராவிடராணி, ஜெ.ஜெ.கல்லூரிப் பேராசிரியர் முனைவர் அ.விமலா, மதுரை சூரியன் பண்பலை நிகழ்ச்சித் தயாரிப்பாளர் ஸ்டீபன், பெரியாரியல் அறிஞரும் பணிஓய்வுப் பேராசிரியருமான நெடுஞ்செழியன், புலவர் மு.பாலசுப்பிரமணியன் (சுபபாரதி கல்லூரி) கவிஞர் வி.கே.கஸ்தூரி நாதன் (வி.எஸ்.கே.ஆசிரியப்பயிற்சி நிறுவனம்), புலவர் மா.நாகூர் (உலகத் திருக்குறள் பேரவை) தமுஎகசவைச் சேர்ந்த படைப்பாளர்கள் ஜீவி, ஆர்,நீலா, ரமா ராமநாதன், ராசி.பன்னீர்;;ச்செல்வன்(அறிவியல் இயக்கம்)  பாவலர் பொன்.கருப்பையா (நல்லாசிரியர்) ச.குமார் (மு.க.ஆசிரியர்) சுதர்சன் கல்லூரிப் பேராசிரியர் அ.கருப்பையா விஜயலட்சுமி (மாவட்ட அரசு ஆசிரியப் .பயிற்சி நிறுவனம்), கவிஞர் இரா.தனிக்கொடி (திரைப்படப்பாடலாசிரியர்) முதலியோருடன் ஒருங்கிணைப்பாளர்களும் அவ்வப்போது  கலந்து கொண்டு வகுப்புகளை ஆழமாகவும் கலகலப்பாகவும் நடத்தியதாக பயிற்சி பெற்ற தமிழாசிரியர்கள் தெரிவித்தனர். 

மாவட்டக் கல்வி அலுவலர் கலந்துகொண்ட நிறைவு விழா நிகழ்ச்சிகள்:
                               சனிக்கிழமை மாலை நடைபெற்ற நிறைவு விழாவில் அறந்தாங்கி மாவட்டக் கல்வி அலுவலர் வெ.தமிழரசு, மாவட்ட உதவித்திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் ரெ.கனகசபாபதியுடன், சுபபாரதி கல்விநிறுவனங்களின் தலைவர் குரு.தனசேகரன் மற்றும் செயலர் பேரா.வீ.வைத்தியநாதன் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.
                               பயிற்சி முகாம் மற்றும் விழா ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர்களுடன் இணைந்து, திட்ட அலுவலர்கள் ராஜேந்திரன் மற்றும் ரெத்தினகுமார் ஆகியோர் செய்திருந்தனர். முன்னதாக கு.ம.திருப்பதி வரவேற்புரையாற்ற, நன்றியுரையை மகா.சுந்தர் நிகழ்த்த, நா.முத்துபாஸ்கரன் மற்றும் சுப.கோபிநாத் இருவரும் தொகுத்துவழங்கினர். 

                                பயிற்சி முகாமில் கலந்து கொண்ட தமிழாசிரியர்கள் இப்பயிற்சி தமக்குப் பெரிதும் புத்துணர்ச்சி ஊட்டியதாகக் கூறியதோடு கணினித்தமிழ் உள்ளிட்ட பல புதிய கற்பித்தல் முறைகளை மேலும் தெரிந்துகொள்ள ஆர்வமாக இருப்பதாகத் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
------------------------------------------------------------------------------------

(இந்தச் செய்தியில் “பயிற்சித் தலைப்புகள்“ எனும் ஒரு பத்தியைத் தவிர, சற்றேறக்குறைய இந்தச் செய்தியை முழுவதுமாக -05-03-2012- வெளியிட்டிருந்த “தினமணி“, “தீக்கதிர்“  நாளிதழ்களின் புதுக்கோட்டைச் செய்தியாளர்கள் திரு.மோகன்ராம், திரு சு.மதியழகன் ஆகியோர்க்கும் இந்த நாளிதழ்களின் நிருவாகிகளுக்கும் நன்றி)

2 கருத்துகள்:

  1. பயிற்சியை வெற்றிகரமாக நடத்தியதற்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  2. தமிழகத்தில் எங்கும் நடக்காத சிறப்புக் கூறுகளோடு இப்பணியிடைப் பயிற்சி நடந்தது எனப் பயிற்சியில் கலந்து கொண்ட தமிழாசிரியர்கள் கூறினர் என்றால்
    இதனை இதனால் இவன்முடிக்கு மென்றாய்ந்து
    அதனை அவன்கண் விட்டமையால்தான். சரியாகத் திட்டமிட்டு நடத்திய ஒருங்கிணைப்பாளர்களுக்குப் பாராட்டுகள்.
    To: நா.முத்து நிலவன்
    From: pavalarponka@yahoo.com

    பதிலளிநீக்கு