தமுஎகச – 16ஆவது மாநில மாநாடு தஞ்சை அழைக்கிறது, வருக நண்பர்களே!

இதோ ஒரு பண்பாட்டுத் திருவிழா!








மாநாட்டு மைய முழக்கம் -
வெறுப்பின் கொற்றம் வீழ்க
அன்பே அறமென எழுக!
-----------------------------------------

எம்.ஜி.ஆர்.படங்களில் நானறிய ஒரே ஒருபடத்தில் 

ஒரே ஒரு பாடலுக்குத்தான் அவரது இயல்பை மீறி,  

ஒரே இடத்தில் உட்கார்ந்தும், நின்று கொண்டும் பாடுவார்.

ஏனெனில் அந்தப் பாடல் வரிகளின் கனம் 

தனது - கைகளை மேலே தூக்கி, ஓடி ஆடும் நடிப்பால்

 கவனிக்கப்படாமல் போய்விடும் 

என்று நினைத்திருப்பார் போல! (என்ன கவனம்!)

அந்தப் படம் – படகோட்டி

அந்தப் பாடல் – தரைமேல் பிறக்க வைத்தான்

வாலி எழுதிய இன்றும் வாழும் வரிகளுக்கு,  

இசை – விஸ்வநாதன்-ராமமூர்த்தி

அதுபோல

வழக்கமாக ஏதாவது எழுதியபின் பதிவிடும் நான்

எதுவுமே எழுதாமல் பதிவிடுவது இந்த நிகழ்வின்

கனம் குறைந்துவிடக் கூடாது என்பதால்தான்

வருக நண்பர்களே!

மாநாடு – தமிழ்நாடு முழுவதும் மாவட்டங்களில் இருந்து தேர்வுசெய்யப்பட்ட பிரதிநிதிகள் மட்டும்தான் அரங்கில் இருக்க முடியும் எனினும் நாள்முழுவதும் பார்க்க, ரசிக்க, குறிப்பெடுக்க, மாலையில் தினமும் நடக்கும் கலை-நிகழ்வுகளைக் காண நீங்கள் அனைவரும் வரலாம். 

அரங்கிலும் சில நிகழ்வுகள் 

பொதுவாக அனைவரும் அரங்கில் வந்து 

பார்க்குமாறும் உள்ளன 

தினமும் மாலை நிகழ்ச்சிகள் 

வெளி அரங்கில்தான்!

மேலே உள்ள அழைப்பிதழில் 

அந்த விவரம் காண்க.

விழாவில் - மாநாட்டு சிறப்பு மலர் வெளியீடும் உண்டு!

 முக்கியமாக 6-12-2025 அன்று என் தலைமையில் நீதியரசர் சந்துரு அவர்கள் பேசும் நிகழ்வும், அன்றிரவு பிரளயன் இயக்கத்தில் திரைக் கலைஞர் ரோகிணி அவர்கள் நடித்து அண்மையில் வந்த வனப்பேச்சி பேரண்டச்சிஎனும் “புதுமையான மிகச்சிறப்பான நாடகம்” என்று       ஊடகங்களால் பாராட்டுப் பெற்ற நாடகம் பார்க்க -                        

வருக வருக என அன்போடு அழைக்கிறேன். வணக்கம்

 (தேவைப்படுவோர் தெரிவித்தால் புலன -வாட்சாப்- வழி

அழைப்பிதழை அனுப்புவேன். நன்றி) 

மற்றவை நேரில்

-----------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக