“தமிழ் இனிது“ - நூலாகிறது! நன்றி!!

(நன்றி - இந்து தமிழ் - 16-6-2024)

வலைப்பக்கத்தில் என்னைத் தொடரும்                                                      வாசக நண்பர்களுக்கு வணக்கம்.

“இந்து தமிழ்“ நாளிதழில் 06-06-2023முதல் -ஓராண்டாக-

வாரம்தோறும் செவ்வாய் அன்று வெளிவந்த நமது

“தமிழ்இனிது” தொடர், இன்றைய (16-6-2024-ஞாயிறு)

50ஆவது கட்டுரையுடன் நிறைவடைகிறது.

அடுத்த வாரம்

இந்துதமிழ் பதிப்பக வழி                           

நூலாக வருகிறது.

“இந்துதமிழ் இயர்புக்“ அளவில் 160பக்கங்கள்.

மதிப்பிற்குரிய கவிஞர் சிற்பி அய்யா,

அன்பிற்குரிய அண்ணன் சுப.வீரபாண்டியன் இருவரும் 

சிறப்பான மதிப்புரைகளை  வழங்கியுள்ளனர்.

நானும், நன்றி கூறி, என்னுரை எழுதியிருக்கிறேன்.

தொடரில் வெளிவந்த படங்களும் இடம்பெறுகின்றன.

இன்றைய கட்டுரை பற்றி மட்டுமல்ல, வெளிவந்த 50கட்டுரைகளைப் பற்றிய உங்கள் கருத்தை, இந்த வலைப்பக்கப்பின்னூட்டத்திலோ , எனது மின்னஞ்சல் வழியோ பகிர்ந்தால், அது ஆக்கம் தரும் “நூல் அறிமுகமாக” இருந்தால், தமிழ் இதழ்களுக்கு – அவரவர் பெயரிலேயே - அனுப்ப உதவியாக இருக்கும். அடுத்த பதிப்பில் நல்ல கருத்துகளையும், சரியான திருத்தங்களையும் அவரவர் பெயருடன் வெளியிட எண்ணியிருக்கிறேன்.(செல்பேசி எண் அவசியம். பொதுவில் எண் பகிர விரும்பாதவர் கீழுள்ள எனது எண்ணில், மின்னஞ்சலில் விவரம் தரலாம்)

தமிழ்ச் சமூகத்திற்கு இன்று தேவையான ஒரு நல்ல நூலைத் தந்த நிறைவு எனக்கு. அதை ஊக்கப்படுத்தி வளர்த்த பெருமை உங்களுக்கு!

இதுவரை எனது வலைப்பக்கத்தின் பின்பற்றுவோர் பட்டியலில் இணையாத நண்பர்கள் ‘Follower பெட்டியில் உங்கள் மின்னஞ்சலைத் தந்து இணைந்து எனது அடுத்தடுத்த படைப்புகளைப் பெற அழைக்கிறேன்.

நூலோடும், மற்றொரு   -                                                                                                      மிகவும் மகிழ்ச்சி தரக்கூடிய செய்தியோடும்                                                            அடுத்த வாரம் சந்திப்போம், 

நன்றி நன்றி நன்றி வணக்கம்.

என்றும் தங்கள் தோழமையுள்ள,

நா.முத்துநிலவன்,

புதுக்கோட்டை – 4

செல்பேசி – 94431 93293

மின்னஞ்சல் –muthunilavanpdk@gmail.com  

இலக்கிய ஆய்வுப் பட்டிமன்ற நடுவர் உரை -நா.முத்துநிலவன் (காணொலி இணைப்பு)

 

இராமநாதபுரம் புத்தகத் திருவிழா: 
இலக்கிய ஆய்வுப் பட்டிமன்றம்
அழியாத் தமிழின் அடையாளம் யார்? 
தொல்காப்பியரா? 
வள்ளுவரா? 
கம்பரா? 
பாரதியா? 
நடுவர் உரை- காணொலி