வைக்கம்-100 தமுஎகச கருத்தரங்கு
உரைவீச்சு - நா.முத்துநிலவன்
(காணொலிப் பதிவுக்கு நன்றி
- தீக்கதிர் வலைக்காட்சி)
கடந்த 06-4-2023 அன்று திருப்பூர்
மாவட்ட தமுஎகச நடத்திய
வைக்கம்-100
கருத்தரங்கில் நா.முத்துநிலவன் உரை
பதிவு செய்து தனது வலைக்காட்சியில் ஏற்றிய
தீக்கதிருக்கு நன்றி
அழைப்பிதழ்
நிகழ்ச்சிப் படங்கள்
செய்தி வெளியீடு
உரையின் காணொலி இணைப்பு –
நன்றி - தீக்கதிர் நாளிதழ் முகநூல்
நிகழ்ச்சி ஏற்பாடு செய்த மாநிலச் செயற்குழுத் தோழர் ஈஸ்வரன், மாவட்டச் செயலர் தோழர் குமார் உள்ளிட்ட திருப்பூர் தமுஎகச மாவட்டக்குழுத் தோழர்கள்
பார்த்து, கேட்டு கருத்திட வேண்டுகிறேன்
வணக்கம்.
பின் குறிப்பு -
மன்னிக்க வேண்டும்-
எனது உரையில் பழ.அதியமான் அவர்களின் புத்தகம் பற்றிக் குறிப்பிடும்
போது, சின்னப் புத்தகம் என்று சொல்லிவிட்டேன். உண்மையில், ஜோசப் இடமருகு அவர்கள் எழுதிய “நாராயண குரு”
என்னும் நூல்தான் சிறிய 102-பக்க நூல்.
பழ.அதியமான் அவர்களின் “வைக்கம் போராட்டம்” 600-பக்கங்களுக்கு மேலான அரிய நூல். நாப்பிழைக்கு மன்னிக்கவும்.
---------------------------------------------------
உரை தயாரிப்பில் உதவிய நூல், கட்டுரைகள்
(1) முனைவர் வா.நேரு (தலைவர் பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) அவர்கள் எழுதிய கட்டுரை (திராவிடப் பொழில்-அக்-டிச-2021) “வைக்கம்-இந்தியச் சமூகவிடுதலைப்போராட்டத்தின் முன்னோடி”
(2) “இவர்தான் நாராயண குரு”
- ஜோசப் இடமருகு (தலைவர் இந்தியப் பகுத்தறிவாளர் சங்கம்)
(3) பழ.அதியமான் அவர்கள் எழுதிய “வைக்கம் போராட்டம்” காலச்சுவடு வெளியீடு, நாகர்கோவில் -
மற்றும்
பழ.அதியமான் இந்து -தமிழ் நாளிதழ்(30-3-2023 கட்டுரை
யு.கே.சிவஞானம் தீக்கதிர் நாளிதழ் -30-3-2023 கட்டுரை
ஆசிரியர் கி.வீரமணி -விடுதலைக் கட்டுரை
கி.தளபதிராஜ், விடுதலை ஞாயிறுமலர்-26-3-2023
---------------------------------