தமுஎகச -16ஆவது மாநில மாநாடு - வரவேற்புக்குழு அமைப்புக் கூட்டம்

                                          எனது பொதுவாழ்வுக்கு வயது -50

என் உயிரோடும் உணர்வோடும் கலந்த

தமுஎகச வுக்கும் வயது 50

சொல்லப் போனால்

தமுஎகச அமைப்பு மதுரையில்

              நமது முன்னோடிகளால் அமைக்கப்பட்ட              

1975ஆம் ஆண்டில்

திருவையாறு அரசர் கல்லூரி மாணவன் நான்!

அப்போதே

திருவையாறு நகரில் தமுஎச கிளை தொடங்கி

அதன் செயலராகச் செயற்பட்டு,

கவிஞர் தணிகைச் செல்வனை அழைத்து

கவியரங்கம் நடத்தினேன்!

அவர் முழங்கினார் -

"முந்தாநாள் மழையில்

முளைத்தெழுந்த காளான்கள்

ஐந்தம்சத் திட்டத்தை

அரற்றுகின்ற காலமிது"

அப்போது அதன் முழுமையான 

பொருள் எனக்குப் புரியவில்லை

பிறகு புரிந்தது -

பள்ளி, கல்லூரி கற்றுத்தராத

உலக அறிவுக் கல்வியை 

தமுஎகச கற்றுத் தந்தது!

பிறகு 1978இல் புதுக்கோட்டை வந்து

முதல் கிளையை அமைத்த பிறகு

மாவட்டம் முழுவதும் 16 கிளைபரப்பி

மாவட்டச் செயலரானேன்.

1982இல் பாரதி நூற்றாண்டு விழாவை

தசுலுச (TELC) பள்ளியில் 

இரண்டு நாள் நடத்தினோம்

தோழர் கே.முத்தையா வந்திருந்தார்.

1984இல் கந்தர்வன் மாவட்டத் தலைவரானார்..

பிறகு 1991இல் மாநிலத் துணைச்செயலர்..

பிறகு மாநிலத் துணைத்தலைவராக...

காலம் விரைவாக ஓடுகிறது!

இதோ... இப்போது...

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின்

50ஆவது ஆண்டில் தஞ்சையில் நடக்கவுள்ள

16ஆவது மாநில மாநாட்டுக்கான

வரவேற்புக்குழு அமைப்புக் கூட்டம் 

இன்று மாலை தஞ்சையில் நடக்கிறது

மாநில மாநாடு தஞ்சையில் வரும் டிசம்பரில்!

வரவேற்புக்குழு அழைப்பிதழ் இதோ 

வாய்ப்புள்ளோர் தஞ்சை நகருக்கு வருக


 

--------------------

எங்கள் ஒவ்வொருவர் பேச்சிலும்

நந்தலாலா இருப்பான்!

கரிசல் பாடிக்கொண்டிருப்பான்!

நாறும் பூ மணம் வீசுவார்!

உங்கள் பணிகளை

நம் தோழர்களோடு கைகோத்து

தொடர்வோம் தோழர்களே!!!

-------------------------------- 

‘கலைஞரும் சமூக நீதியும்” மதுரை உலகத் தமிழ்ச்சங்கத்தில் எனது உரை – காணொலிப் பதிவுடன்

 கலைஞரும் சமூக நீதியும்”  

மதுரை உலகத் தமிழ்ச்சங்கத்தில் 

எனது உரை – காணொலிப் பதிவுடன் 

07-08-2025 வியாழன் முற்பகல்


அழைப்பிதழ் 



உலகத் தமிழ்ச் சங்கத்தின் புதிய இயக்குநர்

முனைவர் இ.சா.பர்வீன் சுல்தானா அவர்கள்
--------------------------------------------------------- 


( ஏற்கெனவே எனது நூல்களைத் தந்துவிட்டதால் ) 

இயக்குநர் பொறுப்பில் 'இனிய உதயமாக' வந்திருப்பதால்,

எனது கட்டுரை வந்திருக்கும்

ஆகஸ்டு2025 "இனிய உதயம்" 

இலக்கிய மாத இதழைத் தந்து மகிழ்ந்தேன்.

அவர்கள் எனது நீண்டகால மேடைத் தோழர் என்பதால்

அவர்களது புதிய பொறுப்புக்கு எனது 

இனிய வாழ்த்துகளையும் 

தெரிவித்து மகிழ்ந்தேன்
-------------------------------- 

நிகழ்ச்சியைச் சிறப்பாக வடிவமைத்திருந்த

மதுரை - உலகத் தமிழ்ச் சங்கத்தின்

ஆய்வு வளமையர்  முனைவர் ஜ.ஜான்சி ராணி,

ஆய்வறிஞர்  முனைவர் சு.சோமசுந்தரி

ஆகியோர்க்கு எனது இதய நன்றி

-------------------------

இனி விழாப் படங்கள்


மதுரை தொல்காப்பியர் மன்றத் தலைவர் 
அய்யா இருளப்பன் நூல்தந்து மகிழ்ந்தார் - மகிழ்ந்தேன்.



மேனாள் இயக்குநர்
முனைவர் பசும்பொன் அவர்களுடன் 



கலந்துகொண்ட ஆர்வலர்கள், மாணவர்கள்



கவிஞர் கவிதாசன், அய்யா இருளப்பன்,
கவிஞர் சோழ.நாகராஜன்,
உடன் எழுத்தாளர் தக்கலை 
 உறலீமா அவர்கள்
(எனது மரபுக் கவிதை வகுப்பு மாணவர் கவிதாசன்!!!)
 


மதுரை தமுஎகச தோழர்கள்
செ.தமிழ்ராஜ், சோழ.நாகராஜன்,
எழுத்தாளர் தக்கலை உறலீமா உடன்



உ.த.ச. நூலகத்திற்கு
நமது நூல்களைத் தந்தேன்




அன்புத் தோழர், நல்ல கவிஞர் பா.மகாலட்சுமி
தனது 2,3ஆவது கவிதை நூல்களான 'கூழாங்கற்கள் உருண்ட காலம்', இருட்டிலிருந்து முனகும் வெளிச்சம் இரண்டையும் தந்தார்



பார்வையாளர்களில்  அண்ணன் மூரா.

------------------------------------------- 

(காணொலி காண - கேட்க, 

அடுத்த வரியை அழுத்துங்கள்,

அல்லது வெட்டி தேடுபொறியில் ஒட்டுங்கள்)



மேலுள்ள இணைப்பை வெட்டி ஒட்டி
எனது உரையைக் கேட்டுவிட்டு
உங்கள் கருத்துகளைப் பகிர வேண்டுகிறேன்

எனது உரை -
சரியாக 17ஆவது மணித்துளியில் தொடங்கி,
ஒருமணி நேரம் 
-------------------------------------------- 
விழாவுக்கு வந்து சிறப்பித்த நமது தோழர்
இளங்கோவன் கார்மேகம் அவர்களையும்,
இந்த அழைப்பிதழையே தனது முகநூலில் 
எப்போதும்போல
எடுத்துப் பதிவிட்ட அருமை நண்பர்
கவிஞர் இரா.இரவியைச் சந்தித்தது மகிழ்ச்சி
--------------------------------------

முக்கியமான நன்றி : 
(1) திருமங்கலம் அரசுக் கல்லூரி மாணவ மாணவியர்,
தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் வளர்மதி,
(2) உ.த.ச. காணொலி, புகைப்பட நண்பர்க்கு
-------------------------------------

கீழடி - மக்கள் நீதி மய்யம் நடத்தும் இணைய நிகழ்வில் இணைய அழைக்கிறேன்

 கீழடி - தமிழரின் வேரடி

சிறப்பு விருந்தினராக

கலந்து கொண்டு,

சிறப்புரை ஆற்ற வருகிறார்:

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின்

மாநிலத் துணைத் தலைவர்

கவிஞர் நா.முத்துநிலவன் அவர்கள்

09.08.2024 சனிக்கிழமை

நேரம் மாலை 7:30 - 8:30

கீழுள்ள இணைப்பைச் சொடுக்கி

மக்கள் நீதி மய்யம்

தோழர்களோடு 

இணைந்திருங்கள்

https://x.com/i/spaces/1mnxegNnNrWGX


- நன்றி -

 திருமிகு  செந்தில் குமார் அவர்கள்

மண்டல அமைப்பாளர்  

- I T Wing

மக்கள் நீதி மய்யம்

புதுக்கோட்டை

------------------------------------


ஆகஸ்டு -2025 'இனிய உதயம்" இதழில் வந்த எனது கட்டுரை - வள்ளுவரோடு விளையாடும் கவர்னர்!

 வள்ளுவரோடு விளையாடும் கவர்னர்!

--நா.முத்துநிலவன்--

2016-17இல் -- கூடுதல் பொறுப்போடு - தமிழ்நாட்டு ஆளுநராக ஓர் ஆண்டு மட்டுமே இருந்த திரு சி.வித்யாசாகர் ராவ் அவர்கள், தமிழ்நாடு அரசு ஏற்பளித்திருக்கும் திருவள்ளுவர் உருவச் சிலையை ஆளுநர் மாளிகையில் 18-6-2017 அன்று திறந்து வைத்தார். ஆனால், இன்றைய ஆளுநர் திரு ஆர்.என்.ரவி, அந்தத் திருவள்ளுவர் சிலைக்கு அப்படியே மரியாதை செய்தால் அது தனது சனாதன தர்மத்திற்குப் அபகீர்த்தி ஆகி விடும் என்று நினைத்தோ என்னவோ, அந்தச் சிலையின் முன்னால் காவி உடையும், நெற்றியில் திருநீற்றுப் பட்டையும், கழுத்தில் ருத்ராட்சக் கொட்டையும் அணிந்த ஒரு திருவள்ளுவர் தயார்செய்து வைத்து, வணங்கும் காட்சி தினசரிகளில் வந்தபோதே தமிழக மக்கள் அதிர்ந்து போனார்கள்.

புதிய கல்விக்கொள்கை உருவாக்கக் காரணமாக திருவள்ளுவர் தான் இருந்துள்ளார் என்று ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார்! இதன் மூலமாக, புதிய கல்விக் கொள்கையை வகுத்து தொகுத்து எழுதியவரில் தமிழ் தெரிந்தவர் யார்? என்று அடுத்த இ.ஆ.ப.தேர்வுக்கு ஒரு கேள்வியே வைக்கலாம் என்று எடுத்துக் கொடுத்திருக்கிறார்! அதன் பிறகும் சனாதன தர்மத்தைத்தான் திருக்குறள் சொல்கிறது என்று ஒரு போடு போட்டு வள்ளுவரையே மிரட்டி விட்டார்! பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற குறள் மனுதர்மத்துடன் எப்படிப் பொருந்திப் போகிறது என்னும் ஆய்வுக்கும் வழிவகுத்துத் தந்தவர் நம் ஆளுநர்! அடுத்து, ‘பிரதமர் மோடி அவர்கள் திருக்குறளின் தீவிர பக்தர் என்றும் சொல்லி - வடிவேலு மாதிரி நா எங்கய்யா அப்படிச் சொன்னேன் என்று - மோடியையே திகைக்க வைத்தார்! சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள திருவள்ளுவர் திருநாட் கழத்தில் மட்டுமல்ல போகுமிடமெல்லாம் இந்தப் பேச்சுத்தான்

இப்போது -

இல்லாத திருக்குறள் ஒன்றைப் போட்டு அதை எழுதியவர் திருவள்ளுவர் என்றும் திருக்குறள் எண் -944 என்றும் அச்சிட்டு, தமிழ்நாடு அரசு சின்னத்தோடு மருத்துவர் தின சிறப்புப் பரிசாக மருத்துவர்களை அழைத்து பரிசளித்திருக்கிறார் நமது ஆளுநர்.

அவர்கள் பதித்துத் தந்த குறள் இதுதான்

செருக்கறிந்து சீர்மை பயக்கும் மருப்பொடு                      

மன்னுஞ்சொல் மேல்வையப் பட்டு குறள் -944 (!)

ஆனால்,

மருந்து என்ற அதிகாரத்தில்,  

944 எண் இட்டு, திருக்குறளில் உள்ள குறள் இதுதான் :

‘‘அற்றதுஅறிந்துகடைப்பிடித்துமாறல்ல                                                             துய்க்க துவரப் பசித்து.’’ (குறள் 944) என்பதுதான் திருக்குறளில் உள்ளது. ஆளுநர் தந்த குறளல்ல! சரி எண் எதுவும் மாறியிருக்குமோ என்று பார்த்தால் எந்த எண்ணிலும் இந்தக் குறள் இல்லை. 

எனவே இது ஆளுநரின் அபத்தக் குரல்தான் என்பது தெளிவு!

இப்போது உள்ள குறள் எண்களை அமைத்துத் தந்தவர் பரிமேலழகர் என்பது பலரும் அறியாத உண்மை! திருக்குறள் உரைக்கொத்து எனும் பெயரில் 10பேரின் பழைய உரையுடன் ஆங்கில மொழிபெயர்ப்பையும் சேர்த்து வெளியிட்டிருக்கும் சில பதிப்புகளைப்  பார்த்தால் உண்மை புரியும். பத்து உரையாசிரியர்களும் ஆளுக்கு ஒரு வரிசை தந்திருப்பார்கள்.  ஆக இன்று நிலைபெற்று விட்ட பரிமேலழகர் தந்த - குறள் எண்கள் எதிலும் இப்படி ஒரு குறள் இல்லை, எனவே இது ஆளுநரின் அபத்தக் குரல்தான் என்பது உறுதியாகிறது

அது பற்றித் தமிழ்நாட்டின் அரசியல் தலைவர்கள், தமிழறிஞர்கள் பற்பலரும் கண்டித்துக் கருத்துத் தெரிவித்து வருகிறார்கள்

அவருக்குத் தமிழே தெரியாது, ஏதோ ஆர்வத்தில் நல்லதாக ஒரு குறளை மேற்கோளிட்டு நினைவுப்பரிசு தர நினைத்திருக்கலாம்,  தவறான குறளை யாரோ ஏ.ஐ.இடம் கேட்டுப் போட்டிருக்கலாம், வேண்டுமென்றே யாராவது தவறான திருக்குறளைப் போடுவார்களா? தமிழ் தெரியாத அவருக்கு எப்படி இது தவறு என்று தெரியும்? இதற்கு அவரையே குற்றஞ்சுமத்தலாமா?’ என்று கேட்பவரும் உண்டு. திருக்குறள் போட வேண்டும் என்று நினைத்தவர் அது திருக்குறள்தானா? என்று கவனித்துப் போட வேண்டும் என்னும் அக்கறை இல்லாதவரின் முந்திய பாவங்கள் இப்படித்தான் முடியும்!

வள்ளுவரின் தாய் தந்தையர் ஆதி  பகவன் என்னும் கருத்தும், வாசுகி - வள்ளுவர் என்னும் பெயர்களும் மட்டுமல்ல, அவரது  உருவப் படமும் கூட கற்பனைதான்! அது நல்ல நோக்கத்தோடு உருவாக்கப் பட்ட ஓவியம். கதைகள் அப்படியல்ல!

அதே போல இந்தக் கற்பனையும் நல்ல நோக்கத்தில் வந்ததாகத் தெரியவில்லை என, ஆளுநரின் கடந்தகாலச் செயல்பாடுகளே நம்மை சந்தேப்பட வைக்கின்றன.

133அதிகாரக் குறளை மாற்ற யாருக்கும் அதிகாரமில்லை! தவறாக வந்துவிட்டது என்று ஆளுநரே வருத்தம் தெரிவித்திருக்க வேண்டும். அதிகாரி வருத்தம் தெரிவிப்பது, குறளுக்கு மீண்டும் செய்யும் அவ மரியாதை அல்லவா?

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும், அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு                                    – இதுவும் திருக்குறள்தான் (எண்-423) 




இனிய உதயம் இதழை

வாங்கிப் படித்து, இதுபற்றிய உங்கள் கருத்துகளை

இனிய உதயம் இதழுக்கும், இந்த வலைப்பக்கத்தின்

 பின்னூட்டத்திலும் எழுத வேண்டுகிறேன்.

 நன்றி - 

இனிய உதயம் 

இலக்கியத் திங்களிதழ் - ஆகஸ்டு - 2025

ஆசிரியர் - நக்கீரன் கோபால் அவர்கள்

இணை ஆசிரியர் - 

கவிஞர் ஆரூர் தமிழ்நாடன் அவர்கள்,

இனிய தோழர்

கவிஞர் மு.முருகேஷ் அவர்கள்

------------------------------------------------