முனைவர் வெ.இறையன்பு இஆப அவர்கள் எழுதிய ‘தமிழ்இனிது” நூல் விமரிசனமும், இன்றைய எனது நிகழ்வும் ...

           நமது மதிப்பிற்குரிய அய்யா முனைவர் வெ.இறையன்பு இஆப அவர்கள் நமது தமிழ்இனிது” நூலுக்கு அருமையானதொரு விமரிசனம் எழுதி சில வாரம் முன்பே எனக்கு அனுப்பியிருந்தார்கள். 

     ‘அய்யா, இதை ஏதாவது ஓர் இதழுக்கு அனுப்பலாமே?” என்ற என் கேள்விக்கு, ‘நான் ராணி வார இதழில் ஒரு வாழ்வியல் தொடர்”எழுதி வருகிறேன். அதில் வரும். பொறுங்கள்” என்று பதில் தந்திருந்தார்.

இதோ இன்று வந்துவிட்டது!

    நானோ, இன்று முற்பகலில், புதுக்கோட்டை தமிழ்வளர்ச்சித் துறை நடத்திய தமிழ் அறிஞர்கள் எழுத்தாளர்கள் நினைவு போற்றும்” கருத்தரங்கில் புதுகை ஜெஜெ கல்லூரியில் பேசப் போய்விட்டேன்!

    மதியம் கருத்தரங்கம் முடித்து, வெளியில் வரும்போது, மதுரை நண்பர் முனைவர் ஞா.சந்திரன் அழைத்து, ‘அய்யா தமிழ்இனிது” நூல் பற்றி இறையன்பு அய்யா இவ்வார ராணி வார இதழில் எழுதி வந்து விட்டது பார்த்தீர்களா?” என்று கேட்டார். இன்ப அதிர்ச்சி!

    கருத்தரங்கம் முடித்து, வரும் வழியில் ராணி வார இதழை வாங்கிக் கொண்டு வந்து பார்த்து நெகிழ்ந்து மகிழ்ந்தேன்.

இதோ அது



 நன்றி நன்றி அய்யா! மிக்க நன்றியும் மகிழ்ச்சியும்!

நன்றி - ராணி வார இதழ்

-----------------------------------------------------------------------------------------------------------

    அதோடு,

    இன்றைய தமிழ்வளர்ச்சிக் கருத்தரங்கில் நான், அன்னை முத்துலட்சுமி” பற்றிப் பேசிய ஒளிப்படங்களும் உடன் உள்ளன.

அன்பு நண்பர்கள் கும.திருப்பதி தமிழறிஞர் வ.சுப.மாணிக்கனார் பற்றியும், பேரா.சா.விஸ்வநாதன் எழுத்தாளர் அகிலன் பற்றியும்     எனது அன்புத் தங்கையும் வீதி” கலைஇலக்கியக் களத்தின் ஒருங்கிணைப்பாளருமாக கவிஞர் மு.கீதா, குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா பற்றியும் பேசினோம் –

அந்தப் படங்கள் இதோ -

கவிஞர் மு.கீதா அவர்கள்

நான் தான் (!)

பேரா .சா.விஸ்வநாதன் அவர்கள்
 


புலவர் கும.திருப்பதி அவர்கள்


                      -------------------------------------------------------------

நிகழ்ச்சிப் படங்கள்



நன்றி – 

தமிழ்வளர்ச்சித் துறையின் 

புதுக்கோட்டை துணை இயக்குநர்

திருமிகு சீதாலட்சுமி் அவர்கள்,  

மற்றும் 

ஜே.ஜே.கல்லூரி நிர்வாகம்.

----------------------------------------------------------  

மும்பை - மராட்டிய மாநிலத் தமிழ் எழுத்தாளர் மன்ற வெள்ளி விழா!

கடந்த 02-02-2025 அன்று

மராத்திய மாநிலத் தமிழ் எழுத்தாளர் மன்றத்தின்

வெள்ளிவிழா நிகழ்வு

மும்பையில் - நவிமும்பை 

பாண்டுப் பிரைட் மேனிலைப் பள்ளியில் 

மிகச் சிறப்பாக நடந்தது

------------------------------------------------

நன்றி - தலைவர்

பாவரசு வதிலை பிரதாபன் அவர்கள்

(செல்பேசி +91 78758 48340)

மற்றும்

அன்பிற்குரிய நிர்வாகியர்

(இப்பதிவின் இறுதிப் பக்கம் விவரம்)



அன்பின் விருது














நிகழ்வுத் தொகுப்பு வெளியீட்டுக்கு நன்றி:

"குறள் முழக்கம்" இணையத் திங்களிதழ்

ஆசிரியர்

தமிழ்த்திரு மறைமலை இலக்குவனார் அவர்கள்

செல்பேசி - +91 97918 61662 
---------------------------------------------------------------- 
அப்புறம்,

நான் மிகவும் மதிக்கும்

மும்பை வாழ் முற்போக்கு எழுத்தாளர்

கவிஞர் புதிய மாதவி அவர்கள்

விழாவுக்கு கவிஞர் தமிழ்நேசன் உடன் வந்து,

அவரது அண்மைய கவிதைத் தொகுப்பைத்

தந்து சென்றார்!

மகிழ்ச்சியாக இருந்தது.
------------------------------------------------------------ 


------------------------------------------------------------------------ 

மும்பை - தமிழறிஞர் குமணராசன் அவர்களுக்கு
நமது தமிழ் இனிது நூலை வழங்கி மகிழ்ந்தேன்
திருவள்ளுவர் சாட்சியாக (!)

----------------------------------------------

                                                           எங்கள் பட்டிமன்றம் :                                                                                                               'இன்றைய சமூக ஊடகங்கள்                                                    வளர்ச்சியா? தளர்ச்சியா?'

----------------------------------------------------- 

சிறப்பித்தவரை நாங்கள்
சிறப்பித்து மகிழ்ந்தோம்

                                          முன்னதாக வந்த எங்கள் விமானத்திற்கும்                                          முன்னதாக வந்திருந்து தந்த வரவேற்பு!

--------------------------------------------------------------------- 

தமிழ்த்தடாகம் - மின்னிதழில் எனது 9பக்க நேர்காணல்

வணக்கம்

பதிவுத் துறையின் உயர்அலுவலராக இருந்து

ஒய்வு பெற்றாலும், தமிழார்வம் ஓயாத

 எழுத்தாளர் 

கவிஞர் வடிவழகி தேவசகாயம் அவர்கள் 

தன் சக பெண் படைப்பாளிகளை இணைத்து,

"தமிழ்த் தடாகம்" 

என்றொரு மின்னிதழை நடத்தி வருகிறார்.

அந்த இதழுக்காக அவர்கள்

என்னை நேர்காணல் எடுத்தார்கள்.

இந்த (ஜனவரி-2025) தை மாத சிறப்பிதழில்

வெளிவந்திருக்கும் 

எனது நேர்காணலை

நண்பர்கள் பார்வைக்கு வைக்கிறேன்.

படித்துக் கருத்திடுங்கள் நண்பர்களே!

(தமிழ்த்தடாகம் மின்னிதழ் - ஜனவரி-2025)


(நேர்காணல்- பக்-1/9)


(நேர்காணல்- பக்-2/9)


(நேர்காணல்- பக்-3/9)


(நேர்காணல்- பக்-4/9)


(நேர்காணல்- பக்-5/9)


(நேர்காணல்- பக்-6/9)


(நேர்காணல்- பக்-7/9)


(நேர்காணல்- பக்-8/9)

(நேர்காணல்- பக்-9/9)

----------------------------------------------------------- 
நன்றி

சகோதரி

கவிஞர் வடிவழகி அவர்கள்

தமிழ்த்தடாகம் மின்னிதழ்க் குழு

(சென்னை 
/ பட்டுக் கோட்டை / அமெரிக்கா) 

இதழின் முகநூல் இணைய  இணைப்பு

https://www.facebook.com/share/g/15W8yAVifn/?mibextid=wwXIfr

முழுமையான இதழைப் பார்ப்பதோடு
இணைந்து படியுங்கள் படையுங்கள்
புதிய படைப்பாளிகளைக் காணுங்கள் 

------------------------------------------------------------------------------------