எழுத்தாளர்களுக்கு ஓர் இனிய செய்தி
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின்
புதுக்கோட்டை மாவட்டக்குழு சார்பில்
மறைந்த எழுத்தாளர் கந்தர்வனின் நினைவாக
சிறுகதைப் போட்டி-2026 அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக
கந்தர்வன் நினைவு - கலை-இரவு நிகழ்வின்
வரவேற்புக் குழுத் தலைவரும்,
புதுக்கோட்டை தமிழ்ச்சங்கத்தின் தலைவருமான
கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்கள்
வெளியிட்டுள்ள பத்திரிகைச் செய்தி:
தமிழ் இலக்கியத்தில் எளிய மனிதர்களின் வாழ்வை
முற்போக்குக் கருத்தியலோடும்
மார்க்சிய அழகியலோடும் எழுதியவர் கவிஞர் கந்தர்வன்.
தமுஎகச-வின் முன்னோடித் தலைவர்களில் ஒருவரான
அவரது படைப்புகளை
தமிழ்நாடு அரசு நாட்டுடைமையாக்கிப்
பெருமை சேர்த்துள்ளது.
அவரது நினைவாக சிறுகதைப் போட்டிகளை
தமுஎகச நடத்திவருகிறது.
அதன் தொடர்ச்சியாக தற்போது 6-ஆவது
கந்தர்வன் நினைவுச் சிறுகதைப் போட்டி
அறிவிக்கப்படுகிறது.
போட்டிக்கான விதிமுறைகள்:
கதைகள் எப்பொருளிலேனும்
ஏ4 தாளின் 6பக்க அளவில் அமைய வேண்டும்.
ஒருவரே எத்தனை கதைகள் வேண்டுமானாலும் அனுப்பலாம்.
கையெழுத்திலோ, கணினி அச்சிலோ இருக்கலாம்.
-------------------------------------------------------------
கதைகளின் பக்கங்களில் ஆசிரியர் குறித்த
எவ்வித விவரங்களும் இருத்தல் கூடாது.
-----------------------------------------------------------
ஆசிரியர் பெயர் ,முகவரி, மின் அஞ்சல் ,
அலைபேசி எண் ஆகியன
தனித்தாளில் மட்டுமே எழுதப்பட்டு
தனியே இணைக்கப் படவேண்டும்.
------------------------------------------------------
கதைகள் மொழிபெயர்ப்பாகவோ
தழுவலாகவோ இருத்தல் கூடாது.
கதைகள் எவ்வித ஊடகத்திலும் இதுவரை
வெளிவராதவையாக இருக்கவேண்டும்.
தேர்வுபெறும் படைப்புகளுக்குக் கீழ்கண்டவாறு
பரிசுத்தொகை, விருதுக்கேடயம்
மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.
முதற்பரிசு ரூ.10000,
இரண்டாம் பரிசு ரூ.7500,
மூன்றாம் பரிசு ரூ.5000,
ஆறுதல் பரிசுகள் ரூ.2000 வீதம்
5 கதைகளுக்கு வழங்கப்படும்.
பரிசளிப்பு நிகழ்வு
புதுக்கோட்டையில் 07.02.2026 அன்று
நடைபெறும் கந்தர்வன் கலை இரவில்
மாநிலத் தலைவர்கள், சிறப்பு விருந்தினர்களால்
பாராட்டி வழங்கப்படும்.
தேர்வு பெறும் கதைகள் செம்மலர் இதழில் பிரசுரிக்க
ஆசிரியர் குழுவிற்குப் பரிந்துரைக்கப்படும்.
மின்னஞ்சல் வழியோ, அஞ்சல் வழியோ
கதைகள் வந்து சேரக் கடைசி நாள் 25.01.2026.
கதைகளை அனுப்ப வேண்டிய : அஞ்சல்முகவரி:
கவிஞர் நா. முத்துநிலவன்,
மாநிலத் துணைத்தலைவர் - தமுஎகச,
2711, சீனிவாசநகர் மூன்றாம் வீதி,
மச்சுவாடி அஞ்சல்
புதுக்கோட்டை - 622 004.
செல்பேசி - 94431 93293.
மின்னஞ்சல்:
--------------------------------------------------------
செய்தி வெளியீட்டுக்கு நன்றி
![]() |
| "இந்து தமிழ் திசை" நாளிதழ் புதுக்கோட்டை செய்தியாளர் திரு சுரேஷ் |
![]() |
| "தினமணி" நாளிதழ் செய்தியாளர் திரு ஜெயப்பிரகாஷ் |
![]() |
| நன்றி - செம்மலர் திங்களிதழ் - ஜனவரி -2026 |
![]() | ||
செய்தியாளர் திரு சு.மதியழகன்
|
கதைகள் வந்து சேர்ந்ததும் தகவல் தெரிவிக்கப்படும்.
அதிகபட்சம்ஒருவாரத்திற்குள்
கதை கிடைத்த தகவல் கிடைக்கவில்லை என்றால்
மேலுள்ள செல்பேசி எண்ணில் பேசி
உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.
சிறுகதைப் போட்டி முடிவுகள்,
பிப்ரவரி 1,2 தேதிகளில்
கந்தர்வன் கலை-இரவு நிகழ்வுக்கு முன்னதாகவே
செய்தித் தாள்களிலும்,
இந்த வலைப்பக்கத்திலும்
வெளியிடப் படும்.
வெற்றி பெற்றோர்க்கு மட்டும் தனித்தனியே
மின்னஞ்சல், செல்பேசி வழியிலும்
தகவல் தெரிவிக்கப் படும்.
முடிவு அறிவிக்கும் வரை அதுபற்றித்
தொடர்பு கொள்வதைத் தவிர்க்க வேண்டுகிறோம்.
- இவண் -
கவிஞர் ராசி பன்னீர் செல்வன் – மாவட்டத் தலைவர்,
கவிஞர் ஆலங்குடி வெள்ளைச்சாமி – மாவட்டச் செயலர்
கவிஞர் மு.கீதா – மாவட்டப் பொருளர்
தமுஎகச மாவட்டக்குழு, புதுக்கோட்டை
நன்றி
----------------------------------------------------





















