தமுஎகச - பொன்விழா நிறைவு - சென்னை - தலைவர்கள் அழைப்பு

 கடந்த 1975ஆம் ஆண்டு

அவசர நிலைக்கால இருளில் 

மதுரையில் ஏற்றப்பட்ட அறிவுஒளி!

கலை-இலக்கியப் பண்பாட்டுத் தளத்தில்

கடந்த 50ஆண்டுகளாகத் தமிழ்நாட்டின் 

ஆயிரக்கணக்கான மேடைகளில்

மக்கள் இலக்கியச் சுடரேந்தி

பொதுமேடைகளில் மறுக்கப்பட்ட பறையிசையை

மக்கள் அனைவரும் ஏற்கச் செய்த 

மாபெரும் கலை-இலக்கிய அமைப்பு

அதன் பொன்விழாவின் தொடக்க நிகழ்வு 

கடந்த 12-07-2024 அன்று

மதுரையில் நடந்தது,

அந்த நாளில், நான்,

வடஅமெரிக்கத் தமிழ்சங்கப் பேரவை ("ஃபெட்நா")

நடத்திய நிகழ்வுக்கு அழைக்கப்பட்டு

நியூயார்க் தமிழ்ச்சங்கத்தில் பேசினேன்.

தமிழ்ச்சங்க நிர்வாகிகளிடம் இதேநாளில்

மதுரையில் தமுஎகச

பொன்விழாவின் தொடக்கவிழா 

நடப்பதைச் சொல்லி

தமுகஎச வெளியிட்டிருந்த சிறு நூலை 

நியூயார்க் தமிழ்ச்சங்க இலக்கியக்குழுத்

தலைவரும் எழுத்தாளருமான 

திரு.ஆல்ஃபி (எ) ஆல்பிரட் தியாகராஜன் அவர்களின் 

உதவியோடு  வழங்கி மகிழ்ந்தேன்.

இதோ - இப்போது -

பொன்விழா நிறைவு விழா 

சென்னை - நிகழ்ச்சிகளுக்கான

அழைப்பிதழ் வந்திருக்கிறது! 

நான் 1975இல் திருவையாறு அரசர் கல்லூரி மாணவன்!

அப்போதே அங்கே ஒரு கிளை தொடங்கி

கவிஞர் தணிகைச் செல்வனை அழைத்து 

நிகழ்ச்சி நடத்தியதும், அங்கிருந்து

ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தின்

முதல் மாவட்ட மாநாடு - நாகையில் நடந்தபோது

பிரதிநிதிகளோடு சென்று

கலந்து கொண்டதும் நினைவிலாடுகிறது!

பிறகு 1978இல் புதுக்கோட்டை வந்து,

முதல் கிளையைத் தொடங்கியதும்,

மாவட்டம் முழுவதும் கிளைபரப்பியதும்

1982இல் பாரதி நூற்றாண்டு விழாவை 

இரண்டு நாள் விழாவாக

புதுக்கோட்டை TELC பள்ளியில் நடத்தியதும்,

1983இல் கந்தர்வன் வந்தபின், வேகமெடுத்து

பல்வேறு நிகழ்ச்சிகளில், பல்வேறு 

கலை-இலக்கிய இளைஞர்களோடு இணைந்து 

தமுஎச வளர்ந்ததும் வளர்த்ததும், நான்

மாநிலத்துணைச் செயலர், துணைப்பொதுச் செயலர்

இப்போது மாநிலத் துணைத் தலைவர் என 

தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கிறேன்..

-----------------------------------------------------

இதோ எனது பொதுவாழ்வின் 50ஆம் ஆண்டு,

தமுஎகச - பொன்விழாவோடு இணைந்து..

-------------------------------------------------








பொன்விழா நிறைவுக் கொண்டாட்டத்திற்கு  

தலைவர்களின் காணொலி  அழைப்பு :

-----------------------------------------------

தமுஎகச மூத்த தலைவர்களில் ஒருவரான

தோழர் எஸ்.ஏ.பெருமாள்  உரை : 

 https://www.youtube.com/watch?v=xO04GN1A5Mg

 

தமுஎகச முன்னாள் தலைவரும்

எழுத்தாளரும், வழக்குரைஞருமான

தோழர். சிகரம் ச.செந்தில்நாதன்  உரை :  https://www.youtube.com/shorts/qNPLSC01lJ0


தமுஎகச முன்னாள் தலைவரும்

எழுத்தாளரும் தமிழ்ச் சமூகவியல் அறிஞருமான

தோழர். அருணன்  உரை : 

https://www.youtube.com/shorts/G29g6LfNHzU

 

தமுஎகச முன்னாள் தலைவரும் எழுத்தாளருமான தோழர்.ச.தமிழ்ச்செல்வன்  உரை : 

https://www.youtube.com/shorts/YTR0y-dZZvI

 

தமுஎகச தலைவரும் பேச்சாளரும், எழுத்தாளரும் ஊடகவியலாளருமான

தோழர். மதுக்கூர் ராமலிங்கம் உரை

https://www.youtube.com/shorts/K9P1L2_NYkM

 

தமுஎகச பொதுச்செயலரும் 

எழுத்தாளருமான

தோழர் ஆதவன் தீட்சண்யா உரை- 

https://www.youtube.com/shorts/1Ly6HoHIerc

 

தமுஎகச மாநிலத் துணைத் தலைவரும் 

திரைக்கலைஞருமான 

தோழர் ரோகிணி  உரை  

https://www.youtube.com/shorts/x07eMOy_3vQ

 

தமுஎகச துணைப் பொதுச் செயலரும்

எழுத்தாளருமான 

தோழர் களப்பிரன்  உரை  

https://www.youtube.com/shorts/eZBuXlxdX7w

 

தமுஎகச பொன்விழாக் குழுத் தலைவரும்

தொல்லியல் தமிழறிஞரும், எழுத்தாளருமான

முனைவர் ரெ.பாலகிருஷ்ணன்  உரை 

 https://www.youtube.com/shorts/C5iDrUwrAVA

 ================================================

வாருங்கள் கலை-இலக்கியத் தோழமைகளே!

சாதி-மதமற்ற, சமத்துவ சமூகத்துக்கான

கலை-இலக்கியத்தை உயர்த்துவோம்!

புதியதோர் தமிழ்நாடு!

புதியதோர் இந்தியா!!

புதியதோர் உலகம்!!! படைக்க 

தொடர்ந்து எழுவோம் எழுதுவோம்!

------------------------------------------- 

--- கடந்த ஆண்டு இதே நாள் ---

2024 சூலை 1 முதல் 15வரை

அமெரிக்காவில் இருந்ததால்

தமுஎகச பொன்விழாத் தொடக்க நிகழ்வில்

நான் கலந்து கொள்ள இயலாது போனது

அமெரிக்க (ஃபெட்நா) நிகழ்வுகளை

இன்னும் நான் நமது

வலைப்பக்கத்தில் எழுத வில்லை!

விரைவில் எழுதுவேன் -

அந்த நிகழ்வுகளில் ஒன்று -

------------------------------------------------------------------------- 

சாகித்திய அகாதெமி நிகழ்ச்சி! வாய்ப்பிருப்போர் வருக!


 வணக்கம் நண்பர்களே!

நெடுங்காலம் கழித்து, சாகித்திய அகாதெமி நிகழ்ச்சி!

வாய்ப்பிருப்போர் வருக!

வர இயலாதோர், வருவோர்க்குச் சொல்லுக! 


இடையில் அய்யா சிற்பி அவர்களால்

ஓர் இணையவழி அகாதெமிக் கவியரங்கில் 

கலந்து கொண்டாலும்

நினைத்ததைப் பேச முடியாத நிகழ்ச்சி!

----------------------------------------

25ஆண்டுகளுக்கு முன்னதாக,

கவிஞர் பாலா அவர்களோடு, திருவனந்தபுரம் போய்,

சாகித்திய அகாதெமி நடத்திய

தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு எனும் நான்கு மொழிப் படைப்பாளிகளுக்கான மண்டல வெள்ளிவிழா நிகழ்வில்

தமிழ் மொழியின் சார்பாக

கவிதைப் போக்குகள் பற்றிப் பேசினேன்.

நான் தமிழில் எழுதி, கவிஞர் பாலா அவர்களின் உதவியோடு ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துப் படித்த கட்டுரை அது!

(அதன் பிறகு சாகித்திய அகாதெமி விருதுக்கான முதற்கட்டத் தேர்வு நூல்களைத் தேர்ந்தெடுத்து 10நூல்களைப் பரிந்துரைக்கும் முதற்கட்ட நடுவர் குழுவில் இரண்டு முறை பணியாற்றி இருக்கிறேன். என்றாலும் அதை வெளியில் சொல்வது முறையல்ல என்பதால் சொல்லவில்லை)

இப்போது

தமிழ்க் கவிதையின் 

தற்போதைய போக்குகள் பற்றி..!

நன்றி – கவிஞர் தங்கம் மூர்த்தி!

          அவர் தலைவராக இருந்து சிறப்பாக நடத்திவரும்  

புதுக்கோட்டை தமிழ்ச்சங்கமும் சாகித்திய அகாதெமியும் 

நடத்தும் நிகழ்வில் என்னைத் தலைமையேற்க வைத்து,  

அவர் ஒரு தலைப்பில் பேசுகிறார்!

அவர் நினைத்திருந்தால், அவரே தலைமை தாங்கியிருக்க முடியும்.

இதைத்தான் வள்ளுவர் பணியுமாம் என்றும் பெருமை'  என்றார்!

அவரது உயரத்துக்கான காரணங்களில் இது முக்கியமானது.

மூர்த்தி என்றாலே நேர்த்தி என்பது பலரும் அறிந்ததே

இன்ன பிற பண்புகளால்,

உங்களுக்கான உயரம் 

இன்னும் காத்திருக்கிறது மூர்த்தி!

-----------------

சரி நண்பர்களே!

வாய்ப்பிருப்போர் வருக!

வர இயலாதோர் வருவோர்க்குச் சொல்லுக!

வணக்கம்.

--------------------------------------------------------- 

நமது 18-6-2025 புத்தக வெளியீடு பற்றி 

இன்னும் வலைப்பதிவு எழுத வில்லை!

படங்கள், காணொலியைப் பார்த்து, 

பதிவிட வேண்டும்.

அடுத்த வாரம் பதிவிடுவேன்.

-----------------------------------------------

“கீழடி அறிக்கையை முழுமையாக வெளியிடுக”! தொடர் முழக்க நிகழ்ச்சி

இந்திய ஒன்றியத் தொல்லியல் துறையே

'கீழடி' யின் தொன்மையைக் குறைக்காதே!

ஆய்வு அறிக்கையைத் திருத்தாதே!

எனும் கோரிக்கையை முன்வைத்து

த.மு.எ.க.ச. நடத்தும்

மண்டல அளவிலான தொடர்முழக்கம்!

(ஏற்கெனவே சென்னை, மதுரை மண்டலங்களில் நடத்தப்பட்டது

இப்போது திருச்சி மண்டல அளவிலான நிகழ்ச்சி)

------------------------------------- 

         தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின்            கிழக்கு மண்டல நிகழ்ச்சிக்கு அன்புடன் அழைக்கிறோம்!

(திருச்சிராப்பாள்ளி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்கள்)

நிகழ்நிரல்

புதுக்கோட்டை மாவட்ட தமுஎகச அழைப்பு : -


மண்டல அளவிலான த.மு.எ.க.ச. அழைப்பு

 

 


---------------------------------------------------------------------------- 

இப்போது வந்திருக்கும் செய்தி - கீழடி போலப் பல்வேறு தொல்லியல் சான்றுகள் கிடைக்கக் கூடிய புதுக்கோட்டையை அடுத்த பொற்பனைக் கோட்டை அகழாய்வுப் பணிகளை நிறுத்தப் போவதாக...!

இது தொடர்பான எனது மற்றொரு கட்டுரை படிக்க

புதுக்கோட்டையில் ஒரு கீழடி, பொற்பனைக் கோட்டை

இந்து தமிழ் நாளிதழில் வந்த எனது கட்டுரை பார்க்க

https://valarumkavithai.blogspot.com/2021/09/blog-post.html

(நன்றி - 03-9-2021 இந்து-தமிழ் திசை நாளிதழ)

------------------------------------------ 

 

எனது வலைப் பக்கத்தின் 1000ஆவது பதிவு!

எனது புதிய நூல்களின் வெளியீட்டு விழா அழைப்பு!

எனது வலைப்பக்க வாசகர்களுக்கு வணக்கம்.

உங்களால் இது நடக்கிறது, 

உங்களுக்கு என் முதல் வணக்கம்

    தமிழறிஞராகவும், அப்போதைய எங்கள் மாவட்டத்தின் முதன்மைக் கல்வி அலுவலராகவும் பணியாற்றிய எங்கள் அய்யா முனைவர் நா.அருள்முருகன் அவர்களின் தூண்டுதலில், கடந்த 2011இல்,  20,30பேர்  இணையத்தில் எழுதும் ஆர்வத்தில் வலைப்பக்கம் தொடங்கினோம். இப்போது பலரும் – பலரும் என்ன, அனேகமாக எல்லாருமே – இதைத் தொடராத போதும் நான் மட்டும் வலைப்பக்கத்தில் எதையாவது எழுதிக் கொண்டே – அல்லது இதழ்களில் வெளிவரும் எனது படைப்புகளை எடுத்துப் பதிவிட்டுக் கொண்டே இருந்தேன்...!

      பிறகு பார்த்தால் ... இதில் எழுதியவற்றையே நூலாக வெளியிடலாம் என்று நண்பர்கள் அவ்வப்போது தூண்டியதுண்டு.

அடுத்து 2014இல் நான் பணிஓய்வு பெற்றபோது, பணிஓய்வு விழாவை விரும்பாத நான், அதையும் எனது வலைப்பக்கத்தில் எழுத, அதுதான் இன்று வரையும் எனது வலைப்பக்கத்திலேயே அதிகம் பேர் பார்த்த பதிவாக –சுமார் 3லட்சம்+பேர்- பார்த்ததாக இப்போதும் உள்ளது எனக்கே வியப்பாகத்தான் இருக்கிறது. 2015இல் அதுவரை எழுதியதைத் திரட்டி 3நூல்கள் கொண்டு வந்தேன். அதை வெளியிட்டதும் அண்ணன் கவிஞர் மீரா அவர்களின் மகன், நண்பர் கதிர்.மீரா அவர்கள்தான்

நன்றி, எனது வலைப்பக்கமே!

இந்த வலைப்பக்கம் இல்லாவிட்டால் இவ்வளவு நூல்கள் எழுதியிருப்பேனா என்று தெரியவில்லை. தோன்றாத் தூண்டலாக இது திகழ்ந்து வருகிறது என்பது உண்மைதான்.

வாசகர்கள் அதிகரித்திருப்பதால் இதில் விளம்பரம் போடலாம் என்றும் சொன்னார்கள். நான் அதை விரும்பவில்லை.

1993இல் புதிய மரபுகள்” எனும் எனது முதல் கவிதைத் தொகுப்பை அண்ணன் மீரா அவர்கள் தனது அன்னம் வெளியீடாக வெளியிட்டார்கள். அதுமுதலே 15ஆண்டுக்கும் மேலாக அந்த நூல் மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தின் முதுகலை தமிழ் வகுப்புக்குப் பாடமாக இருந்தது. என்னை முன்பின் அறியாத பேரா.முனைவர் இரா.மோகன்தான் இப்படிச் செய்திருக்கிறார் என்பது பின்னால் புரிந்தது.

புதிய மரபுகள் கவிதைத் தொகுப்பிற்குப் பிறகு நான் வெளியிட்ட படைப்புகள் எல்லாம், எனது இந்த வலைப்பக்கத்திலிருந்து எடுத்த தொகுப்புகள் தான்!

இந்த வலைப்பக்கத்தின் 1000ஆவது பதிவு இது! 

இந்த வலைப்பக்கத்தில் எழுதி, அல்லது வேறுசில இதழ் வெளியீட்டுக்காக எழுதி, பிறகு இந்த வலைப்பக்கத்தில் இட்ட பதிவுகள்! இப்போது புதிய நூலாகி அதன் வெளியீட்டு விழா அழைப்பிதழ்தான் எனது 1000ஆவது பதிவு என்பதால் இந்த எனது  வலைப்பக்கம் என் நன்றிக்குரியது தானே?

இதோ நமது அன்பு நண்பர்களின் விருப்பத்திற்கேற்ப (எனது 70ஆவது பிறந்த நாளையொட்டி - பிறந்த நாளை அந்த அழைப்பிதழிலேயே கொண்டு வராமல்)   நூல்வெளியீடு மற்றும் எனது படைப்புகள் பற்றிய ஆய்வரங்கமாகவே அழைப்பிதழ் வந்திருப்பது எனக்கு நிறைவைத் தருகிறது. 

இதோ அந்த அழைப்பிதழ்!

அருகில், வரக்கூடிய தூரமும் - நேரமும் உள்ள நமது நண்பர்கள் வந்தால் அதைவிட மகிழ்ச்சி வேறென்ன? எனது அன்பான அழைப்புடன் அந்த அழைப்பிதழையே 1000ஆவது பதிவாக இடுவதில் இரட்டை மகிழ்ச்சி அடைகிறேன்.



விழாவில் வெளியிட உள்ள நூல்கள் :

(முன்னுரை - கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்கள்)
--------------------------------------------------------------------------------

(முன்னுரை - முனைவர் வீ.அரசு அவர்கள்)
------------------------------------------------------------------------- 
நூல் வெளியீடுகளில் பங்கேற்க வருகை தரும் பெருமக்கள்-

அமைச்சர் எஸ்.ரகுபதி அவர்கள்
---------------------------------------------------------------- 
அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் அவர்கள்
---------------------------------------------------------------- 

நாடாளுமன்ற உறுப்பினர் 

திருமிகு எம்.எம். அப்துல்லா அவர்கள்


அண்ணன் செந்தலை ந.கவுதமன் அவர்கள்,


கவிஞர் மதுக்கூர் இராமலிங்கம் அவர்கள்


புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர்
மருத்துவர் திருமிகு வை.முத்துராஜா அவர்கள்

கந்தர்வ கோட்டை சட்ட மன்ற உறுப்பினர் 
தோழர் மா.சின்னதுரை அவர்கள்

மேனாள் சட்டமன்ற உறுப்பினர்
கவிச்சுடர் இரா.சு.கவிதைப் பித்தன் அவர்கள்

என்றும் எனதன்பிற்குரிய
தோழர் 'பூபாளம்'  பிரகதீஸ்வரன் அவர்கள்
மற்றும்
மார்க்சியப் பொதுவுடமைக் கட்சியின்

மேனாள் மாவட்டச் செயலர் கவிஞர் கவிவர்மன் அவர்கள்

இந்நாள் மாவட்டச் செயலர் தோழர் அ.சங்கர் அவர்கள்

புதுக்கோட்டை மாநகராட்சி உறுப்பினர்களும்

என் அன்பு மகள்களுமான

செந்தாமரை பாலு அவர்கள், 

அன்புமேரி முத்தால் அவர்கள்

மற்றும்

தோழமைச் சங்கங்களின் அன்புத்தலைவர்கள்

உள்ளிட்ட 

சான்றோர் பெருமக்கள் அனைவரையும்

வணங்கி வரவேற்கக் காத்திருப்பது

'வீதி' கலைஇலக்கியக் களம்,

புதுக்கோட்டை தமிழ்ச்சங்கம்,

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கம்.

-----------------------------------------------------------------------

இதிலும் தன்வீட்டு வேலை போல இதை எடுத்துச் செய்துகொண்டிருக்கும் 

புதுக்கோட்டை தமிழ்ச் சங்கத் தலைவர்

கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்கள்

வீதி கலை-இலக்கியக் களம் ஒருங்கிணைப்பாளர்

கவிஞர்  மு.கீதா அவர்கள்

தமுஎகச மாவட்டத் தலைவர்

கவிஞர் ராசி.பன்னீர்செல்வம் அவர்கள்

தமுஎகச மாவட்டச் செயலர்

கவிஞர் ஸ்டாலின் சரவணன் அவர்கள்

இவர்களோடு இயங்கி என்னையும் இயக்கிவரும்

இந்த அமைப்புகளின் உற்சாகத் தோழர்கள்

இவர்களால் இந்த விழா ஏற்பாடு களைகட்டி வருகிறது!

இவர்களோடு

என்னைத் தங்கள் குடும்பத்தில் ஒருவனாகவே 

உறவு பாராட்டும் தங்கைள், மகள்கள், தம்பிகள்

 இவர்களால் நான்  இருக்கிறேன்!

நம் தோழர்கள், நண்பர்கள்

எனது அன்பான குடும்பத்தினர் என

வருகை தரும் அனைவரையும்

அன்பால் நெகிழ்ந்து வரவேற்கிறேன்.

வாழும் காலத்தில் 

உள்ளுரில் விழா நடப்பது போல

ஒரு படைப்பாளிக்கு

வேறென்ன வேண்டும்? 

வருக! வணக்கம்

------------------------------------------------------- 

ஒரு முக்கியமான பின்குறிப்பு.-

அப்பாடா! 

'ஆயிரம் பதிவாச்சே ஆயிரம் பதிவாச்சே!

சொக்கா!'  என்றும்,

''ஆயிரம் பதிவு கண்ட அபூர்வ சிகாமணி'' 

என்றும் யாராவது 

பதிவு போட்டீங்க..? 

போட மாட்டிங்க 

என்பதற்கும்

இப்போதே நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

---------------------------------------