எனது அமெரிக்க (FeTNA) இலக்கியப் பயணக் கட்டுரை

--தமுஎகச மாநாட்டு மலர்க் கட்டுரையின் விரிவு—  

(மலரில் கட்டுரைக்கு  -4 தாளில் 3பக்கம் என அளவு தந்திருந்ததால் 

எனது இந்தக் கட்டுரையை மலரில் 3பக்க அளவில் அமைத்தேன்.

(அதன் விரிவே இந்தக் கட்டுரை நமது வலைக்காக)

மலர்க்குழுவில் இருந்துமலரைத் தொகுத்த நானே

 அளவை மீறக் கூடாதல்லவா?) 

----------------------------------------------------- 

ட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப்  பேரவை FeTNA  (Federation of  Tamil Sangams of North America) என்பது, அமெரிக்கா, கனடா நாடுகளில் இயங்கிவரும் 71 தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு. அமெரிக்க விடுதலை நாளான ஜூலை 4ஆம் தேதியை மையப்படுத்தி, ஆண்டுதோறும், ஒரு மாநிலத் தமிழ்ச் சங்கத்துடன் இணைந்து, 3நாள்  தமிழ் விழாவை மிகப்பெரிதாக பிரம்மாண்டமாக நடத்துகிறார்கள்!

சான்-ஆண்டோனியோ

2024இல் டெக்சஸ் மாநிலம், சான்-ஆண்டோனியோ நகரத் தமிழ்ச் சங்கத்துடன் இணைந்த 37ஆவது பேரவை விழாவுக்கு என்னை அழைத்திருந்தார்கள், (ஏற்கெனவே 2023ஆம் ஆண்டு, நியூயார்க்கில் நடந்த பேரவை நிகழ்வுக்கே அழைப்பு வந்த போதிலும், அப்போதுகொரோனாகாரணமாக நுழைவுஇசைவு (விசா) கிடைக்காததால் என்னால் போக முடியாமல் போனது! இதை இப்போது அழைத்த பேரவைச் செயலர் திரு கிங்ஸ்லி சாமுவேல் அவர்களிடம் சொல்ல, அதற்கான தொகை கட்டுவது, போகவர விமானப் பயணக் கட்டணம், தங்குமிடச் செலவு உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளையும் அவர்களே செய்து வி்ட்டார்கள்! திரும்பும் போது கைநிறைய  'டாலர்'களும் தந்தார்கள்!) 

சூலை-3, 2024 அன்று சென்னையிலிருந்து 4மணிநேர விமானப் பயணத்தில் துபாய் வந்து, விமானம் மாறி, அங்கிருந்து டெக்சஸ் போக 20மணிநேரப் பயணம்! மொத்த விமானப் பயணம் 24மணி நேரம்!

அமெரிக்க நிலப்பரப்பு, இந்தியாவை விட  மும்மடங்கு பெரியது, மக்கள் தொகை ஏறத்தாழ ஐந்து மடங்கு குறைவானது!  இந்தியாவில் இமயம் முதல் குமரி வரை ஒரே கடிகார நேரம் தானே?  அமெரிக்காவில் நான்கு கடிகார நேரம்! அவ்வளவு பெரிய நாடு!

நான் சென்ற விமானத்திலும் பிற விமானங்களிலும் நாற்பதுக்கு மேற்பட்டோர் தமிழ்நாட்டிலிருந்து வந்திருந்தார்கள்! எல்லாரும் தங்குவதற்கு அருமையான விடுதியில் வெகு சிறப்பான ஏற்பாடுகள்! டெக்சஸ் சென்று சேர்ந்த என்னுடன் எழுத்தாளர்கள் அ.வெண்ணிலா, அழகிய பெரியவனுடன் –(சன் தொலைக்காட்சிகயல்தொடரில் பிறகு வில்லனாக வந்த)- இளைய நடிகர் விஜய்விஷ்வாஸ் ஆகியோர் சான் ஆண்டோனியோ போய்ச் சேர 3மணி நேரமானது.

தமிழ்நாட்டில் இருந்து வந்தவர்களுக்குப் பெரிய விடுதியில் தனித்தனி பெரிய அறைகள்! (நான் ஒருவன் தங்கியிருந்த அறைக்கு, இந்திய ரூபாயில் ஒருநாள் வாடகை 28,000 ரூபாயாம்! – என் பேரன் கணக்கிட்டுச் சொன்னான்! ஆனால் இப்படி எல்லாவற்றையும் இந்திய மதிப்பில் பார்க்கக் கூடாது, அமெரிக்க மதிப்பில் அது இயல்புதானாம்!)

மூன்றாம் தேதி காலை சென்னையில் விமானம் ஏறி 24 மணிநேரப் பயணத்தில் அமெரிக்கா போனால், அங்கும் மூன்றாம் தேதி மாலைதான்! உலக நேர மாற்றம் அப்படி! ஒரு நாள் முழுக்க ஓய்வெடுக்கச் சொன்னார்கள்!  விமானப் பயணத்தில் நாள் குழப்பம் காரணமாகப் பகல் இரவு குழப்பம் இருக்குமாம்! இதைஜெட்லாக்என்று சொல்கிறார்கள் சிலருக்கு 2,3நாள் கூடஜெட்லாக்இருக்குமாம்!

சான்-ஆண்டோனியோ போன அன்று நள்ளிரவு -நமக்குப் பகல் நேரம் என்பதால்- எனக்குத் தூக்கம் வராமல், விடுதியை விட்டு எதிரில் உள்ள சிறிய பூங்காவுக்குப் போனால், என்னைப் போலவே, கைலி கட்டி அங்கொருவர் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார். பார்த்தால் திரு ஜெயரஞ்சன்! த.நா. திட்டக்குழுத் துணைத் தலைவர்! அவரோடு பேசிக் கொண்டிருந்து விட்டு --அமெரிக்க இரவு 3மணிக்கு-- விடுதிக்குத் திரும்பும்போது, கதவு திறக்க நான் சிரமப்பட, ‘இருங்க அங்கிள்என்று ஓடிவந்து உதவிய பெண்ணைஎங்கோ பார்த்த மாதிரி இருக்கே?’ என்ற குழப்பத்தில், ‘சூப்பர் சிங்கராம்மா?” என்று நான் கேட்க, அருகில் இருந்தவர்  இவுங்களத் தெரியல? பிக்பாஸ் அர்ச்சனாஎன்றார்!  

அடுத்த நாள் காலை முதல் பேரவை நிகழ்ச்சிகள் தொடங்கின!

பேரரங்கும் இணையரங்குகளும் - தமிழ்நாடு போலத்தான் அமெரிக்கத் தமிழர்களின் ரசனையும் போல! திரைக் கலைஞர்கள் வந்தால் அலைமோதும் கூட்டம், கருத்தரங்கப் பக்கம் காத்தாடியது! இதை முன்னுணர்ந்த விழாக்குழுவினர், எங்களைத் தனித்தனிஇணையரங்குகளில் பேச வைத்தனர்! முனைவர் கு.ஞானசம்பந்தன், ஜெயரஞ்சன், த.வா.க.வேல்முருகன், அற்புதம்மாள், சுந்தர ஆவுடையப்பன், ஆளுர் ஷாநவாஸ், கவிதா ஜவகர்,  நடிகர் சூரி, ‘சூப்பர் சிங்கர்’, ‘பிக்-பாஸ்பிரபலங்கள், மற்றும் பலப்பல –(பளபள?) நட்சத்திரங்கள்! (படம்-1-பார்க்க)

எழுத்தாளர்கள் அழகிய பெரியவன், வெண்ணிலா இருவரும் வேறுவேறு கூட்டங்களில் பேசினாலும், எங்கள் மூவருடன், முனைவர் கு.ஞானசம்பந்தன், ரெ.பாலகிருஷ்ணன் இஆப., கலியமூர்த்தி இகாப., பாலச்சந்திரன் இஆப., சேர்ந்து சில நிகழ்வுகளில் பேசினோம். 


  பாவலர் அண்ணன் அறிவுமதி அவர்களுக்கு, பேரவையின் பேரரங்கில் வாழ்நாள் சாதனையாளர் விருதளித்து கவுரவித்தனர்!

கவிதைப்போட்டி வைத்து, முன்பே தேர்ந்தெடுத்த கவிஞர்கள் ஆறுபேர், என் தலைமையில், இவர்கள் நடத்தும் சமத்துவப் பாடம் இன்னும் புரியலையா? என, சிறப்புக் கவியரங்கம் நடத்தினோம். கவிஞர்கள் கிரேஸ் பிரதிபா, மருதயாழினி பிரதிபா, நளினி சுந்தர்ராஜன், இளங்கோவன் தங்கவேலு, கார்த்திக் பாலசுப்பிரமணியன் டாக்டர் நாகலிங்கம் சிவயோகம் என  ஆறு கவிஞர்கள்  ஆறு தலைப்புகளில் என் தலைமையில்  கவிபாடினார்கள்! (படம்)


எமது சிறப்புக் கவியரங்கம் நடந்தது

அண்ணன் அறிவுமதி கவிஞர்களுக்கு

நினைவுப்பரிசு வழங்கினார்  கிரேஸ்பிரதிபா பெறுகிறார்

இனி, இணையரங்குகளில்...



                          இது இந்தப் பேரவைக்கும் முன்னதாக -அச்சாரமாக? 

                               இணைய வழியில் நடந்த சுழலும் சொல்லரங்கம்! 

(இந்த நிகழ்வின் அடுத்தநாள் எனக்குப் பேரவை அழைப்பு வந்தது!)

தமிழ்இனிதுநூல் வெளியீடு - அதே வளாகத்தில் வேறு வேறு அரங்குகளில், வேறுவேறு இணையமர்வுகள் நடந்து கொண்டிருந்தன! அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களின் தமிழ்ச் சங்கப் படைப்பாளிகள் குழுமியிருந்த அமர்வுகளில் நாங்கள் பேசியதோடு, பேரவையின் மைய முழக்க மானசமத்துவம் தமிழரின் தனித்துவம்எனும் தலைப்பிலும், பேசினோம். இடையில் நமதுதமிழ்இனிதுநூல் வெளியீடும் நடந்தது.


இனி எழுத்தாளர் கூடல் நிகழ்வில்...

மூன்றுநாள் போனதே தெரியவில்லை! மதியம் மட்டும் அனைவர்க்கும் தமிழ்நாட்டு உணவு  தந்தனர். காலை-இரவுச் சிற்றுண்டிகளைத் தன்னார்வ இளைஞர்கள், நாங்கள் தங்கியிருந்த விடுதியிலேயே தந்தனர். நிர்வாகக்குழு கவிஞர் இரம்யாவின் கணவரும், பிள்ளைகளுமாகப் பலரும் குடும்பத்துடன் பணியாற்றியது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது! 3நாள் விழாவுக்குச் சில கோடி செலவாகியிருந்தாலும் இந்தத் தன்னார்வலர்களின் பணிகள், தலைவர் பாலா, செயலர் கிங்ஸ்லி குழுவினரின் பணிகளுக்கு விலைமதிப்பேது? 

அட்லாண்டா-

ஏழாம்தேதி காலையில் விடுதியைக் காலி செய்துவிட்டு, சான்-ஆண்டோனியோவில் பணியிலிருந்த என் மாணவர் சாமிநாதன் வீட்டில் காலைச் சிற்றுண்டி! நான்குநாள் கழித்து, தமிழ்நாட்டு இட்லி சாம்பார், காஃபி சுவைக்கு, நாவூறியது! அவர்களின் மகள் ஜ்யோத்ஸ்னா பேரவை நிகழ்வில் குறள், இசைப் போட்டிகளில் பரிசு வாங்கியிருந்தாள்! என் மாணவர் குடும்பம் என்று பரிசு வழங்கிய மேனாள் காவல் அதிகாரி கலியமூர்த்தி அவர்களிடம் சொல்லி மகிழ்ந்தேன் சாமு விமான நிலையம் வரை கொண்டுவந்து விட 12மணிக்கு விமானம் ஏறினோம்!

 

மகன் ஆலனுடன் பேரவை நிகழ்விற்கும், கவியரங்கில் பங்கேற்கவும் வந்திருந்த தங்கை கவிஞர் கிரேஸ்பிரதிபா அட்லாண்டாவுக்கு என்னை விமானத்தில் அழைத்துச் சென்றார்.

அவரது அழகான வீட்டின் இயற்கை எழிலும், தங்கை கிரேஸ், வினோத் மற்றும் மருமக்கள் ஆலன், ஆல்வின் அன்பும், ஊர்சுற்றிய 2நாள், ஒலிம்பியாட் நினைவுச் சின்னம், மார்ட்டின் லூதர்கிங் அருங் காட்சியகத்தில் காந்திசிலை மறக்கவே இயலாதவை!  


ஒலிம்பிக் சின்னத்தின் முன் வினோத், கிரேஸ், ஆலனுடன்..

கிரேஸ்-வினோத் வீட்டின் கொல்லைப்புறத்தில் 
மான் காட்டில் வினோத் உடன்!

மருமகன் ஆலன் உடன், மார்ட்டின் லூதர்கிங் நினைவக 
காந்திசிலையருகில்...

அடுத்த நாளே அட்லாண்டா வந்ததால், பேரவையிலிருந்து தமிழ்ச் சங்க நிர்வாகிகள் யாரும் திரும்ப முடியாததால் அட்லாண்டா தமிழ்ச் சங்க நிகழ்வை ஏற்பாடு செய்ய முடியாமல் போனது தங்கை கிரேஸ் பிரதிபாவுக்குப் பெரிய குறையாகவே இருந்தது. (ஏற்கெனவே இரண்டு ஆண்டு முன்னதாகவே எனதுமுதல்மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே!நூலறிமுகத்தை அட்லாண்டா தமிழ்ச் சங்கத்தில் கிரேசுடன் வேறு நண்பர்களும் இணைய வழியில் பேசியிருந்தார்கள்!)

மதுரையைச் சேர்ந்த தங்கை கிரேஸ் பிரதிபாவுக்கு புதுக்கோட்டைக் கவிஞர்கள் தங்கம் மூர்த்தி, முனைவர் மகா.சுந்தர். மு.கீதா, மைதிலி, கஸ்தூரி, மாலதி, ஸ்ரீமலையப்பன் தலைமையிலான விதைக்கலாம் இளைஞர்கள் எனப் பெரிய நட்பு வட்டாரமே உண்டு! அவரது இரண்டு கவிதைத் தொகுப்புகளுக்கு நான் முன்னுரை எழுதியிருக்கிறேன்! மூன்றாவதற்கும் நானே எழுத வேண்டும் என்றதைஅது ஓவராயிடும்னு சொல்லி அன்பால் மறுக்கப் பலபாடு பட்டுவிட்டேன்! 

பாஸ்டன்-

9ஆம் தேதி அட்லாண்டாவிலிருந்து விமானத்தில் ‘பாஸ்டன்நகர் வந்து சேர  --என்னுடன் பணியாற்றிய நண்பர் ரவீந்திரனின் -- அன்புமகன் அருண் - தமிழ்ச்செல்வி இணையர் வந்து அழைத்துச் சென்றனர் 

ஊர்சுற்றிக் காண்பித்த அருண், ‘அவன் தந்தை வரமுடியாத ஏக்கம், என்னால் தீர்ந்ததென்று சொல்ல, அவன் இணையர் தமிழ்ச்செல்வி, மகள்ஷாலினி அன்பில் நெகிழ்ந்து போனேன். 11ஆம் வகுப்புப் படிக்கும் ஷாலினி தனது பி.எம்.டபிள்யூ.காரில் பள்ளி நேரம் போக ஒரு உணவு விடுதியில் மாலை நேரத்தில் வேலை பார்க்கிறாள்! இது அங்கு இயல்பு!

மூவரும், 1990-91இல் அறிவொளி இயக்கத் தலைவராகவும் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராகவும் இருந்த -- ஷீலாராணிசுங்கத் அவர்களின் குடும்பம் பாஸ்டனில் இருப்பதறிந்து, வீட்டுக்குப் போனோம்! இரண்டு முன்னாள் ஆட்சியர் இணையரின் அன்பை ஏற்கெனவே நானறிவேன், அருண் குடும்பம்தான் அசந்துபோனது! பேத்தி தியாவின் மழலைத் தமிழ், பரிமாறிய உணவில் சுவையூட்டியது! (படங்கள் -- ) 

இடமிருந்து -மோகன் வர்கீஸ் சுங்கத் இஆப., நான், 
ஷீலாராணி சுங்கத் இஆப., 
அருண் மகள் ஷாலினி, அருண் இணையர் தமிழ்ச்செல்வி, ஷீலாராணியின் மகள் அனு, குழந்தைகள், மருமகன்...  
நாவூறும் வீட்டு விருந்து!
----------------------------------------------------------------

                     அடுத்தநாள், பாஸ்டன் தமிழ்ச்சங்க நிகழ்வு:

--------------------------------------------------
நியூயார்க்- 11ஆம் தேதி, நியூயார்க் வந்துசேர, எழுத்தாளரும், கிறித்துவப் பாதிரியாரும் என் இணைய நண்பருமான, ஆல்ஃப்ரெட் தியாகராஜன் (எ) ஆல்ஃபி - நியூயார்க்கைச் சுற்றிக் காட்டினார். சீனர்கள் அதிகம் வாழ்ந்த பகுதிகளில் சீன எழுத்திலேயே கடைகள், வங்கிகள் இருந்தன!  தமிழர் அதிகமிருந்த பகுதியில் தமிழில் விளம்பரங்கள்! ஒரு கோவிலில் இந்துச் சாமிகள் எல்லாம் இருந்தன!  சரவணபவனில் நல்ல கூட்டம்!

ஆல்ஃபியின் வீடே அருங்காட்சியகமாக 

ரசனையோடு  இருந்தது.  

அவரது மகள் திருமண ஏற்பாட்டின் இடையிலும் 

என்னை வீட்டில் தங்க வைத்துக் கொண்டார்!


சுதந்திர தேவிசிலையைப் பார்க்க நான் மட்டும் கிளம்பினேன். ஆல்ஃபியின் வீட்டிலிருந்து கார், ரயில், ஆட்டோ, படகுப் பயணங்களின் பிறகு, 93மீட்டர் உயர சுதந்திர தேவி சிலையை நிமிர்ந்து பார்க்க முடியாமல் வியந்து போனேன்! 

படமாக எடுத்துத் தள்ளினேன். திரும்பும்போது 

என் செல்பேசி கடலுக்குள் விழுந்துவிட்டதூ.....!!! 

நல்வாய்ப்பாக, நண்பர் ஆல்ஃபி வரைபடமாக எழுதித் தந்திருந்த தாள் பையிலிருந்தது! அதில் ஆல்ஃபியின் செல்பேசி எண்ணும் இருந்தது!  முன்பின் தெரியாத அமெரிக்கர் ஒருவரிடம் -- எனது அரைகுறை ஆங்கிலத்தில் -- நிலைமையைச் சொல்லி, உதவி கேட்க, சற்றும் தயங்காமல், தாளை வாங்கியவர் ஆல்ஃபிக்குத் தகவல் சொல்ல, நியூயார்க் ரயிலில் வந்து சேர்ந்த என்னை, ரயில் நிலையத்திற்கே வந்து ஆல்ஃபி அழைத்துக் கொண்டார், நான் பிழைத்துக் கொண்டேன்! நன்றி ஆல்ஃபி!

புதுக்கோட்டை நகரின் நான்கு வீதிகள் அளவிற்கு இருந்த நியூயார்க் ரயில் நிலையத்தில், அன்றுபார்த்து, நான் போகும் ரயிலின் நடைமேடை மாற்றப்பட்டு, அங்கு, ‘SORRY NEWYORK YOUR PLATFORM IS CHANGED TO… SORRY FOR YOUR INCONVENIENCE’ என்று மின்பலகை சிரித்தது! 

 உஸ்...அப்பப்பா! 

எடுத்த படங்கள் எல்லாம் போச்!!! 

(சென்னை வந்து, புதிய செல்பேசி வாங்கி, எண்கள்

படங்களை ஓரளவு மீட்டெடுத்தேன் - நன்றி கூகுள்!) 

நியூயார்க் தமிழ்ச்சங்கம்- பேரவைத் தலைவர் பாலா. சுவாமிநாதன் அவர்களின் அரண்மனை போலும் வீட்டில் நடந்தது.தமிழ் மகாகவிகள் என ஒருமணிநேரம் பேசினேன்  நியூயார்க் தமிழ்ச் சங்கம் நடத்தும் தமிழ்ப்பள்ளிகளின் நிர்வாகிகள், ஆசிரியர்கள் -பள்ளி விடுமுறையாக இருந்தும்- குடும்பம் குடும்பமாக வந்திருந்தனர் 


ஆல்ஃபியுடன் ஃபெட்நா தலைவர் பாலா சுவாமிநாதன், 
நியூயார்க் தமிழ்ச்சங்க நண்பர்கள், விஜய்விஷ்வா

நியூயார்க் தமிழ்ப் பள்ளிகளின் ஆசிரியர்களுடன்
அதே (சூலை இரண்டாம்)வாரம், மதுரையில் தமுஎகச பொன்விழா நடப்பதைச் சொல்லி, 10,15ஆண்டுக்கு முன் தமுஎகச வெளியிட்ட சங்கஇலக்கியம், உவேசாபற்றிய 16பக்க சிறுநூலை --ஆல்ஃபி பிரதி யெடுத்துத் தர -- அங்கிருந்த அனைவருக்கும் வழங்கினோம்

நண்பர் ஆல்ஃபி அவர்களின் அன்பை எண்ணி நெகிழ்ந்தபடியும், பேரவை நண்பர்களின் திட்டமிட்ட கடின உழைப்பை வியந்தபடியும் நியூயார்க்கிலிருந்து பறந்து, 17-7-24 காலை சென்னையில் இறங்கினேன்.

------------------------------------------------------------------------------------------------ 

தமுஎகச மாநாடு! தஞ்சை அழைக்கிறது!

இதோ தஞ்சையில் ஒரு பண்பாட்டுத் திருவிழா!

பொன்விழாவைக் கடந்து வெற்றி நடைபோடும்

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் 

கலைஞர்கள் சங்கத்தின்

 16ஆவது மாநில மாநாடு!

தஞ்சை அழைக்கிறது!

வருக!  வருக!!



















மாநாட்டு மைய முழக்கம்:
வெறுப்பின் கொற்றம் வீழ்க
அன்பே அறமென எழுக!
-----------------------------------------

வருக நண்பர்களே!

மாநாடு – தமிழ்நாடு முழுவதும் மாவட்டங்களில் இருந்து தேர்வுசெய்யப்பட்ட பிரதிநிதிகள் மட்டும்தான் அரங்கில் இருக்க முடியும் எனினும் நாள்முழுவதும் பார்க்க, ரசிக்க, குறிப்பெடுக்க, மாலையில் தினமும் நடக்கும் கலை-நிகழ்வுகளைக் காண

நீங்கள் அனைவரும் 

பொது நிகழ்வுகளுக்கு நேரில் வரலாம். 

அரங்கிலும் சில காலை, மாலை நிகழ்வுகள் உள்ளன.

தினமும் மாலை நிகழ்ச்சிகள் 

தஞ்சை திலகர் திடலில்தான்!

மேலே உள்ள அழைப்பிதழில் 

அந்த விவரம் காண்க.

விழாவில்  

நானும் மலர்க்குழுவினரும்

ஒரு மாதமாகத் தொகுத்த

மாநாட்டு சிறப்பு மலர் வெளியீடும் உண்டு!

 முக்கியமாக 6-12-2025 அன்று என் தலைமையில் 

நீதியரசர் சந்துரு அவர்கள் பேசும் நிகழ்வும்

அன்றிரவு பிரளயன் இயக்கத்தில் 

திரைக் கலைஞர் ரோகிணி அவர்கள் நடித்து 

அண்மையில் வந்த வனப்பேச்சி பேரண்டச்சிஎனும் 

“புதுமையான மிகச்சிறப்பான நாடகம்” என்று       

                    ஊடகங்களால் பாராட்டுப் பெற்ற நாடகம் பார்க்க -                        

வருக வருக என அன்போடு அழைக்கிறேன். வணக்கம்

 (தேவைப்படுவோர் தெரிவித்தால் புலன -வாட்சாப்- வழி

அழைப்பிதழை அனுப்புவேன். நன்றி) 

மற்றவை நேரில்

----------------------------------------- 

நண்பர்கள் இந்தப் பக்கத்தை

உங்கள் சமூகத் தளங்களில் பகிர்ந்து 

தகவல் பரவ உதவ வேண்டுகிறேன்

------------------------------------------

“உண்மை” இதழில் எனது தொடர் ' வாழ்வியல் தமிழ்'

     

        உலகளவில் சமத்துவ (Socialist) கருத்துகளைப் பரப்புவதற்கென நிறைய இதழ்கள் பொதுவுடைமைக் கட்சிகளால் நடத்தப் படுகின்றன. அதில் நாத்திக (Athiest) கருத்துகளும் அவ்வப்போது வரும்.

ஆனால், உலகிலேயே நாத்திகக் கருத்துகளுக்கு முதலிடம் தந்து சமத்துவக் கருத்துகளையும் பரப்புவதற்கென ஒருசில நாளிதழ்களே வருவதாக நினைக்கிறேன். அய்யா கி.வீரமணி அவர்களை ஆசிரியராகக் கொண்டு, பல்லாண்டுகளாக வரும் நாளிதழ் விடுதலை நாளிதழாகும்.

உலகில் சமத்துவ அரசியல் கொண்ட நாடுகள் பல உள்ளன. சீனா, வடகொரியா, லாவோஸ், கியூபா, வியட்நாம் உள்ளிட்ட நாடுகள் அப்படி சமத்துவ அரசியல் கொண்ட நாடுகளாகும்.

இவை தவிர நாத்திகக் கருத்துக் கொண்ட மக்கள் உலகெங்கும் – முதலாளித்துவ ஆட்சியிலும் கூட – வாழ்கிறார்கள். அப்படியான சில நாடுகளின் பட்டியலைப் பார்க்கலாம்-                                    

நாடுகளின் பெயர், அங்கு வாழும் நாத்திகர் விழுக்காடு

சீனா

91%

ஜப்பான்

86%

ஸ்வீடன்

78%

செக் குடியரசு

75%

இங்கிலாந்து (UK)

72%

பெல்ஜியம்

72%

எஸ்டோனியா

72%

ஆஸ்திரேலியா

70%

நார்வே

70%

கூடுதலாக, வட கொரியா மற்றும் வியட்நாம் போன்ற நாடுகள் அதிகாரப்பூர்வமான நாத்திக அரசுகளாகும்.

“இந்த நாடுகளில் வாழும் பெரும்பான்மையான மக்கள் மத நம்பிக்கைகளை கொண்டிருக்கவில்லை அல்லது மதம் தங்கள் வாழ்க்கையில் முக்கியமானது என்று கருதவில்லை என்று கூகுளார் கூறுகிறார். உண்மையில் இவற்றைவிடவும் பொதுவுடமைக் கருத்துக் கொண்டோரும் நாத்திகக் கருத்துக் கொண்டோரும் வாழும் முதலாளித்துவ நாடுகள் இன்னும் அதிகமாகவே இருக்கும் என்பது என் கருத்து, நாம் வாழும் இந்தியாவைப் போல!

திராவிடர் கழகத் தலைவர்களில் ஒருவரான நமது மதிப்பிற்குரிய வழக்குரைஞர் அருள்மொழி அவர்கள் ஒரு விவாதத்தில் சொன்னது எனக்கு வியப்பும் மகிழ்ச்சியும் தந்தது –

அவர் சொன்னார், ‘நாத்திகர்களை நீங்கள் சிறுபான்மையினர் தானே என்று சொன்னீர்கள்! உண்மையில் நாம் வாழும் உலகில் நாத்திகர்கள்தான் அதிகம்” என்றார்! கேள்வி கேட்டவரும், நிகழ்ச்சியின் பார்வையாளரும் உண்மையில் வியந்துபோய்ப் பார்த்தோம். 

அவரே தொடர்ந்து சொன்னார் – அல்லாவை நம்புகிறவர்கள் மற்ற கடவுளை நம்புவதில்லை, கிறிஸ்துவை வணங்குகிறவர்கள் மற்ற கடவுள்களை வணங்குவதில்லை. இந்து மதத்தைத் தீவிரமாக நம்புவோரும் மற்ற மதத் தெய்வங்களை ஏற்பதில்லை. இப்படி ஒரு மதநம்பிக்கை உள்ளவரும் மற்ற மதக் கடவுளை வணங்காத நாத்திகர்தானே?” என்று கேட்டார்! உண்மைதானே? அப்படிப் பார்த்தால் அனைவரும் நாத்திகர்தானே? எனவே நாத்திகர்களை அதிகம்  கொண்ட உலகில், அதைப் பரப்ப நாம் அனைவருமே கடமைப்பட்டவர் தானே

அடடா! என்ன அருமையான மறுக்க முடியாத விளக்கம்?!

இது நிற்க.

தந்தை பெரியாரால் தொடங்கப்பட்டு, திராவிடர் கழகத்தால் தொடர்ந்து நடத்தப்படுவது விடுதலை நாளிதழ். மற்றும் உண்மை இதழ். இது நாத்திகர்களால் நாத்திகத்தைப் பரப்புவதற்காகவே நடத்தப் படும் மாதம் இருமுறை இதழ்.

நானும் ஒரு நாத்திகன் மற்றும் சமத்துவன் என்பதால், உண்மை இதழில் எழுதச்சொல்லி, திருச்சி தோழர் வி.சி.வில்வம் அவர்கள் கேட்டதும் ஒப்புக் கொண்டு, வாழ்வியல் தமிழ் எனும் தொடரை, கடந்த நவம்பர்-1-15 முதல் உண்மை இதழில் எழுதி வருகிறேன்.

இப்போது வாருங்கள் வாழ்வியல் தமிழ்படிப்போம் –





நண்பர்கள் தொடர்ந்து இதழை வாங்கிப் படித்து, எனது தொடர் பற்றிய கருத்துகளைப் பகிர்ந்து கொள்வதோடு தொடரில் என்னென்ன எழுதலாம் என்றும் எனக்கு யோசனை சொல்ல வேண்டுகிறேன். நல்ல யோசனைகளை அவரவர் பெயரிட்டே எழுதுவேன் என்பது இந்து தமிழ் நாளிதழில் நானெழுதிய “தமிழ் இனிது”தொடர் படித்தவர்க்குத் தெரியும்.

நன்றி

-----------------------------------------