நமது மதிப்பிற்குரிய அய்யா முனைவர் வெ.இறையன்பு இஆப அவர்கள் நமது ‘தமிழ்இனிது” நூலுக்கு அருமையானதொரு விமரிசனம் எழுதி சில வாரம் முன்பே எனக்கு அனுப்பியிருந்தார்கள்.
‘அய்யா, இதை ஏதாவது ஓர் இதழுக்கு அனுப்பலாமே?” என்ற என் கேள்விக்கு, ‘நான் ராணி வார இதழில் ஒரு ‘வாழ்வியல் தொடர்”எழுதி வருகிறேன். அதில் வரும். பொறுங்கள்” என்று பதில் தந்திருந்தார்.
இதோ இன்று வந்துவிட்டது!
நானோ, இன்று முற்பகலில், புதுக்கோட்டை தமிழ்வளர்ச்சித் துறை நடத்திய ‘தமிழ் அறிஞர்கள் எழுத்தாளர்கள் நினைவு போற்றும்” கருத்தரங்கில் புதுகை ஜெஜெ கல்லூரியில் பேசப் போய்விட்டேன்!
மதியம் கருத்தரங்கம் முடித்து, வெளியில்
வரும்போது, மதுரை நண்பர் முனைவர் ஞா.சந்திரன் அழைத்து,
‘அய்யா ‘தமிழ்இனிது” நூல் பற்றி இறையன்பு
அய்யா இவ்வார ராணி வார இதழில் எழுதி வந்து விட்டது பார்த்தீர்களா?” என்று கேட்டார். இன்ப அதிர்ச்சி!
கருத்தரங்கம் முடித்து, வரும்
வழியில் ராணி வார இதழை வாங்கிக் கொண்டு வந்து பார்த்து நெகிழ்ந்து மகிழ்ந்தேன்.
இதோ அது –
-----------------------------------------------------------------------------------------------------------
அதோடு,
இன்றைய தமிழ்வளர்ச்சிக் கருத்தரங்கில்
நான், ‘அன்னை முத்துலட்சுமி” பற்றிப் பேசிய ஒளிப்படங்களும் உடன்
உள்ளன.
அன்பு நண்பர்கள் கும.திருப்பதி தமிழறிஞர் வ.சுப.மாணிக்கனார் பற்றியும், பேரா.சா.விஸ்வநாதன் எழுத்தாளர் அகிலன் பற்றியும் எனது அன்புத் தங்கையும் ‘வீதி” கலைஇலக்கியக் களத்தின் ஒருங்கிணைப்பாளருமாக கவிஞர் மு.கீதா, குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா பற்றியும் பேசினோம் –
அந்தப் படங்கள் இதோ -
கவிஞர் மு.கீதா அவர்கள்
நான் தான் (!)
![]() |
பேரா .சா.விஸ்வநாதன் அவர்கள் |
![]() |
புலவர் கும.திருப்பதி அவர்கள் |
நன்றி –
தமிழ்வளர்ச்சித் துறையின்
புதுக்கோட்டை துணை இயக்குநர்
திருமிகு சீதாலட்சுமி் அவர்கள்,
மற்றும்
ஜே.ஜே.கல்லூரி நிர்வாகம்.
----------------------------------------------------------