13-9-2024 முற்பகல் தமிழ்நாட்டு வானொலிகளில் நமது “தமிழ் இனிது” நூல் பற்றிய கலந்துரையாடல்

நண்பர்களுக்கு வணக்கம்.

நமது “தமிழ் இனிது” நூல் பற்றிய 

திருமிகு அடைக்கலராஜ் -திருச்சி வானொலி

திருமிகு இரா.ஜெயலட்சுமி BEO ஆகியோரின்

கேள்விகளுக்கு

நூலாசிரியர் நா(ன்).முத்துநிலவன்

தந்த நடைமுறை விடைகளுடன் நடத்திய

அருமையான கலந்துரையாடல்

கடந்த 25-8-2024 அன்று திருச்சி வானொலியில் 

ஒலிபரப்பானது தாங்கள் அறிந்ததே.

அந்த நிகழ்ச்சி,

வரும் 13-9-2024 வெள்ளிக்கிழமை முற்பகல்

சென்னை, திருநெல்வேலி, புதுச்சேரி, தூத்துக்குடி, தருமபுரி 

வானொலி நிலையங்களில் ஒருமணிநேரம் ஒலிபரப்பாகிறது.

அந்தந்த நிலைய இணைப்புகளுடன்,

ஒலிபரப்பாகும் நேரமும் இணைப்பில் தருகிறேன்-

------------------------------------------

இதோ அந்தந்த வானொலிக்கான இணைப்புகள் -

https://onlineradiofm.in/tamil-nadu/chennai/fm-rainbow

Chennai FM Rainbow 101.4 at 11.02am for 58minutes

 -----------------------------------------------------

https://onlineradiofm.in/tamil-nadu/tirunelveli/fm-rainbow

Thirunelveli FM Rainbow 102.6 at 11.02am for 58minutes

 ----------------------------------------------------- 

https://onlineradiofm.in/puducherry/puducherry/fm-rainbow

Pondicherry FM Rainbow 102.8 at 11.02am for 58minutes

  -----------------------------------------------------

ttps://onlineradiofm.in/stations/all-india-air-tuticorin

Thoothukudi PC 1053MW at 11.02am for 58minutes

 -----------------------------------------------------

https://onlineradiofm.in/stations/all-india-air-dharmapuri

Dharmapuri FM rainbow 102.5 at 2.30pm for 30 minutes

  ----------------------------------------------------- 

உங்கள் நண்பர்களுக்கும் தகவல் பகிர்ந்து,

நட்பு-உறவினருடன் கேட்டு, 

தங்கள் கருத்தைத் தெரிவிக்க வேண்டுகிறேன்.

வணக்கம்.

--------------------------------------------- 


                                   
சென்னை, தமிழக வானொலிகளில் 

நமது நூல் பற்றிய கலந்துரையாடல்!

---------------------------


(மகா விஷ்ணு பேசிய) அசோக் நகர் பள்ளி மாணவியரிடையே, அமைச்சர் முன்னிலையில் நான் பேசினேன்.

சென்னையில் வேறொரு பள்ளிக்கு

ஆசிரியர் தினவிழாவில் பேச 

என்னை அழைத்திருந்தார்கள்.

அது முடிந்த மறுநாள்..செப்-06ஆம் தேதி..

“அரசுப் பள்ளி மாணவரிடையே

மடத்தனமாகப் பேசிய மகா விஷ்ணுதான் உலகம்

என்று நம்பிவிடாதிருக்க”,

மாணவியரிடையே உரையாற்ற

என்னை அழைத்தார்கள்.

திடீர் அழைப்பு தான்!

(முதல்நாள் இரவு 10மணிக்கு அழைப்பு!)

மறுநாள் காலை 10மணிக்கு நிகழ்ச்சி

சென்னை அசோக் நகர் மகளிர் மேநி பள்ளியில்..

(அந்த “மூடநம்பிக்கைப் பேச்சாளர் மகாவிஷ்ணு”

உரையாற்றிய அதே பள்ளியில்... நடந்தது!

----------------------------------

“அதே பள்ளி அதே மாணவியர்

உரை தான் வேறு ”

என்ற தலைப்பில் எனது உரையை

நமது கல்வியமைச்சர் அவர்கள்

தமது தளத்திலும், கல்வித்துறையின்

இணையத் தளத்திலும் பகிர்ந்திருந்த 

எனது உரை இதுதான்-

(25நிமிடம்தான்)

இணைப்பைச் சொடுக்கிப் பாருங்கள்

                              https://youtu.be/cn42bxd93OU?si=_TmuICBym-MUN9Qz 

அமைச்சர் அவர்களுக்கு எனது உளம் கனிந்த நன்றி, நன்றி. ஏற்கெனவே இப்படித்தான் பேசிவருகிறேன் என்றாலும், இனி இன்னும் ஊர் ஊராகப் பேசும் உற்சாகம் உங்களால் வந்திருக்கிறது! நன்றி நன்றி!


அருகில் பள்ளிக் கல்வி இயக்குநர் திரு கண்ணப்பன் அவர்கள், நீலச் சட்டையில் நமது இணை-இயக்குநர் முனைவர் நா.அருள்முருகன் அவர்கள்

அறிவுக்குரல் எழுப்பிய ஆசிரியர் முனைவர் சங்கர் 





எனது உரையில் நான் பாராட்டிப் பேசிய அந்தப் பள்ளி மாணவியரை உடனடியாக மேடைக்கு அழைத்துப் பாராட்டி நூல்களைப் பரிசாக வழங்கினார் நமது அமைச்சர் அவர்கள்
----------------------------------------------------------------

என்மேல் நம்பிக்கை வைத்து பேசப் பரிந்துரைத்த

முனைவர் நா.அருள்முருகன் அவர்களுக்கு நன்றி நன்றி!

உரை முடிந்தபின் நன்றி தெரிவித்த இயக்குநர் 

திரு கண்ணப்பன் அய்யா அவர்களுக்கு எனது வணக்கம்.

--------------------------------------------------

எந்தவித முன்தயாரிப்பும் இன்றிப் பேசிய உரை அது

(மாணவரிடையே வழக்கமாக நாம் பேசுவதுதானே?)


...பள்ளிக் கல்வித்துறையின் வலைத்தளங்களில்...



--------------------------------------------- 


மற்ற மாநிலங்களை விட முற்போக்கான

அரசியல் நடக்கும் நமது தமிழ்நாட்டில்,

பள்ளி கல்லூரி ஆசிரியர் அமைப்புகளும்

சமூக உணர்வுள்ள பிற அமைப்புகளும்

சில பல அரசியல் கட்சிகளும் கூட

உடனடியாக இதற்குக் குரல்கொடுக்காதது ஏன்?” 

என்பது எனக்குள் எழும் கேள்வி!

(எழுப்பியிருந்து, எனக்குத் தெரியாதிருந்தால் அன்பு கூர்ந்து

 தெரிவியுங்கள் திருத்திக் கொள்கிறேன்)

(அசோக் நகர் பள்ளியின் வாயிலில், 

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் -DYFI- மற்றும்

இந்திய மாணவர் சங்கம் -SFI- இரண்டு அமைப்பினரும்

ஜனநாயகக் குரல் எழுப்பியதைப் பாராட்டுகிறேன்) 

---------------------------------