“நாய்க்கு வேலை இல்லயாம், உட்கார நேரமில்லயாம்“

வலைப்பக்க வாசகர்கள் மன்னிக்க...

“நாய்க்கு வேலை இல்ல, உட்கார நேரமில்ல“  என்னும் பழமொழி எனக்காகவே உருவானதோ என்னும் நினைவு கடந்த ஒருமாதமாக (நான் அரசுப்பணி ஓய்வு பெற்றதிலிருந்து)  ஓடிக்கொண்டிருக்கிறது.

வரும் செப்டம்பர் ஏழு (07-09-2014-ஞாயிறு மாலை) புதுக்கோட்டையில் எனது 3 நூல்களின் வெளியீட்டு விழா ஏற்பாடுகள் நடந்து வருகின்றன...

புதுக்கோட்டையின் பிரபல கல்வியாளரும், சாகித்திய அகாதெமியின் ஆலோசனைக் குழு உறுப்பினரும், பாரதிதாசன் பல்கலைக் கழக ஆட்சிக் குழு உறுப்பினருமான என் இனிய நண்பர் கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்களின் தலைமையில்  இந்த எனது நூல் வெளியீட்டுவிழா ஏற்பாடுகள் நடந்து வருகின்றன....

விஜய் டிவி மகாபாரதத்தில் “சகுனி“யின் அற்புத நடிப்பு!

       

தொடர்ந்து பார்க்க வில்லை என்றாலும்,வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் நான் பார்க்கும் இரண்டு தொடர்களில் ஒன்று விஜய் டிவியில் வரும் மகாபாரதம். தமிழில் நாமறிந்த கதைகளில் சிற்சில மாற்றங்களோடு, வாழ்வியல் உண்மைகளை அள்ளித் தெளித்துவரும் வசனம் ஒரு காரணம் என்றால், அதில் நடிக்கும் கிருஷ்ணன் மற்றும் சகுனியின் நடிப்புக்கு நான் ரசிகனாகிவிட்டேன்.

சென்னை-அருகில் இருக்கும் நண்பர்களுக்கு ஓர் அன்பான அழைப்பு

வலை நண்பர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி -



மறைந்த எழுத்தாளர் ஜெயந்தன் நினைவாக, மணப்பாறையில் இயங்கும் செந்தமிழ் அறக்கட்டளை’  ஒவ்வொரு ஆண்டும் சிறந்த இலக்கிய நூல்களைத் தேர்ந்தெடுத்து விருதுகள் வழங்கி வருகிறது.


புதியமாதவி எழுதி அண்மையில் (dec - 2013) இருவாட்சி பதிப்பக வெளியீடாக வந்திருக்கும் “பெண் வழிபாடு“ சிறுகதை நூலுக்கு சிறந்த சிறுதைக்கான விருது வழங்கப்பட உள்ளது.

அரசியல் நாகரிகத்தின் முன்னோடி காமராசர்!

நன்றி - தினமணி நாளிதழ்

புதுக்கோட்டை – ஜூலை,16 
      தூய மரியன்னை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த காமராசர் விழாவில் சிறப்புரையாற்றிய கவிஞர் நா.முத்துநிலவன், எதிரிகளைப் பழிவாங்கும் அரசியல் உலகில் வித்தியாசமானவர் காமராசர், அவர், தன் கட்சிக்குள் தன்னை எதிர்த்து நின்று தோற்றுப் போனவர்களைத் தனது அமைச்சரவையில் முக்கியமான பொறுப்புக் கொடுத்த அரசியல் நாகரிக முன்னோடி என்று பெருந்தலைவர் காமராசருக்குப் புகழாரம் சூட்டினார்.

கோவை சி.ஐ.ட்டி பொறியியல் கல்லூரியில் தமிழ்மன்றத் தொடக்கவிழா....

கல்லூரியா அது?.. மாபெரும் கல்விக்கடல்... 
ஆழம் அதிகம்.. சாதாரணக் கட்டுமரங்கள் நீண்ட தூரம் செல்ல முடியாதல்லவா? 
தமிழ்நாட்டின் தலைசிறந்த பொறியியற் கல்லூரிகளில் முன்வரிசையில் இருக்கும் கல்லூரி... தமிழ்மணம் கமழக் கமழ நடந்தது!

தமிழ்மன்றத்தின் சார்பில், அருமையான மாணவர் மலர் ஒ்னறையும் ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறார்கள்... இந்தக் கல்லூரிப் பொறியியல் மாணவர்களின் தமிழார்வம் என்னை வியக்க மட்டுமல்ல மயக்கவும் வைத்தது. 

திரைப்படக் கவிஞர் நா.முத்துக் குமார்,  
பாரதி கிருஷ்ணகுமார்,  தமிழருவி மணியன் எனப் பிரபலமானவர்கள் வந்த மன்றங்களின் தொடக்கவிழாவில் இந்த வருடம் நான். 

புதுக்கவிதை -- வெற்றிபெற்ற வரலாற்றுச் சுருக்கம்

அப்துல் ரகுமான்
புதுக்கவிதை தோன்றிய சமூகப் பின்னணி:
அளவு மாற்றம் குணமாற்றத்தை நிகழ்த்தும் எனும் மார்க்சிய விஞ்ஞானம் கலை இலக்கியத்திலும் மெய்ப்பிக்கப்பட்டது.
குழுமக்கள் சமுதாய நிலையின் இறுதியில் படிப்பாளிகள் காதே கருவியாய்த் தத்துவ விளக்கம் தந்து பெற்றுக் கொண்டமைக்கு சுருதிகள் (காதால் கேட்கப்பட்டவை என்பது பொருள்) எனும் சொல் வழக்கு சான்றாகும்.

 அன்றைய இந்தச் சமுதாய நிலையில் வெகு சிலரே படிப்பாளிகள் என்பதும் தவிர்க்க முடியாமலிருந்தது
பின்னர் குறுமன்னர்-பெருமன்னர் காலத்தில்-(நிலப்பிரபுத்துவ சமுதாய நிலையில்) ஏடுகளும் எழுத்தாணிகளுமே கருவிகளாய்க் கற்று வந்தனர். இப்போது வட்டம் சிறிதே வரிவடைந்து நின்றது. என்றாலும் அது வெகு ஜனங்களைப் பாதிக்கவில்லை. 

சமச்சீர்க் கல்வி: அரசும், ஆசிரியர்களும்

பாரதி பாடிய வாராது போல்வந்த மாமணியைத் தோற்போமோ?’ எனும் வரிகளைத் தமிழர்கள் பலரும் மறந்துவிட்டோம். ஆனால், எப்போது நினைத்தாலும் மனசைப் பிசையும் அந்த ஏக்க வரிகளை மீண்டும் மீண்டும் நினைவுபடுத்துவதாகத்தான் இன்றைய தமிழகத்தின் கல்விச் சூழல் இருக்கிறது! 
பாரம்பரியமான பண்பாட்டுக்குப் புகழ்பெற்ற நமதுதமிழ்ச்சமுதாயத்தில் மிகுந்துவரும் இன்றைய சிக்கல்களை தமிழ் இளைஞர்கள் புரிந்து கொள்ளாமல் இருப்பதற்கு, இவர்கள் கற்ற கல்வியே முதன்மைக் காரணமாக உள்ளது. 
மெக்காலேகல்விமுறை இவர்களைச் சமுதாயத்திலிருந்து பிரித்து, ‘தனக்குத்தேவையானதை அறிந்திருப்பதே அறிவுஎன்று நம்பவைத்து தனித்துப் பிரித்து விட்டது.

நம் தமிழைத் தெரிந்து கொள்வோம்

   இன்று மாலை கஜகஸ்தானிலிருந்து நம் வலைநண்பர் திரு.சம்பத் பேசினார்...  அப்படியே தமிழின் இன்றைய நிலை குறித்த கவலையில் போய் நின்றது உரையாடல். பள்ளி கல்லூரித் தேர்வுகளில் நல்ல மதிப்பெண் எடுக்கிறவர்களே பின்னால் தமிழில் தடுமாறுவதையும், வரவர “தமிழ் தெரியாது அல்லது ஆங்கிலம் அளவுக்கு(?) தமிழ் வராது“ என்பதைப் பெருமையாகப் பேசும் நிலை எங்கே கொண்டுபோய் விடும்? இந்தக் கவலையோடு, கடந்த சில ஆண்டுகளாக அரசுப்பணியாளர் தேர்வுகளுக்கான சிறப்பு வகுப்புகளில் நான் தயாரித்துத் தந்த வினாத்தாளில் முழு மதிப்பெண் எடுத்தவரும் இருந்ததை நினைத்துக்கொண்டேன்... அந்த வினாத்தாள் மாதிரிகளில் ஒரு மாதிரி இது... 

இது நம் வலை-நண்பர்களுக்கான 
போட்டித் தமிழ்த்தேர்வு!
யார் வேண்டுமானாலும் 
எழுதிப் பார்க்கலாம்
மதிப்பெண்களைச் சொல்ல வேண்டிய
அவசியமில்லை
(சும்மா நமக்குநாமேதெரிந்து கொள்ளத்தானே?)

அடடே!.. விடை எழுதத் தயாராகுங்க...  ஆங்....!

இதோ கேள்விகள் ... 

கற்பதன் நோக்கம் சிந்திக்கப் பழக்குவதே!

வகுப்புகள் தொடக்கவிழாவில் நா.முத்துநிலவன் பேச்சு
புதுக்கோட்டை – ஜூலை 3. பள்ளி கல்லூரிகளில் கற்றுத்தரப் படுவது வெறும் தகவல் அறிவுதான், அதைவிடவும் பெரியது சிந்தனைஅறிவு. மாணவர்கள் அதனைப் பெற முயற்சி செய்ய வேண்டும் என்றார் கவிஞர் நா.முத்துநிலவன் 
     புதுக்கோட்டை அருகில் உள்ள பெருங்களுரைச் சேர்ந்த, ஸ்ரீ அன்னை அபிராமி பாலிடெக்னிக் கல்லூரியின் முதலாம்ஆண்டு வகுப்புகளைத் தொடங்கி வைத்துச் சிறப்புரையாற்றிய அவர், மேலும் பேசியபோது தெரிவித்தது –

பெண்ணுரிமை என்பது ஆணுக்கு எதிரானதல்ல! சமமானது!



ரோட்டரி பெண்கள் விழாவில் கவிஞர் நா.முத்துநிலவன் பேச்சு
புதுக்கோட்டை-ஜூலை 5. பெண்ணுரிமை என்பது பலரும் நினைப்பது போல் ஆணுக்கு எதிரானதல்ல, மாறாக ஆண்-பெண் சமம் எனும் கருத்திலானது என்றார் கவிஞர் நா.முத்துநிலவன்.