தந்தை பெரியாரின் குடியரசு எழுத்துகள் – மின்தொகுப்பு

 தந்தை பெரியாரின் குடியரசு எழுத்துகள் – மின்தொகுப்பு

(1925 முதல் 1938 வரை – 14 ஆண்டுகள் - 10,562 பக்கங்கள்)

பத்தாயிரம் பக்கங்களுக்கும் அதிகமான 

(1925முதல் 1938வரையான)

குடியரசு இதழ்த் தொகுப்புகளை, 

ஈடுபாடு மிக்க உழைப்பைத் தந்து  

தந்தை பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள்                        

மின்-தொகுப்பாக்கித் தந்திருக்கிறார்கள்.

அவர்களுக்கு நமது விழிப்புறும் தமிழகம் 

பெரும் கடன் பட்டுள்ளது.

தந்தை பெரியாரை இளைய சமூதாயத்திற்கு எளிதாக அறிமுகப்படுத்தும் மிகப் பெரிய பணியைச் செய்திருக்கும் அவர்களுக்கு நமது இதயம் கனிந்த வாழ்த்துகளும் நன்றியும் பாராட்டுகளும் வணக்கமும்.

இதை

திருச்சி தோழர் அரசெழிலன் அவர்கள்,

“நூல்வெளி” புலனக் குழுவில் பகிர்ந்திருந்தார்.

இவ்விருவரின் அனுமதியோடு 

இதன் 1926 ஆம் ஆண்டுத் தொகுதி

அட்டையை மட்டும் இங்குப் பகிர்கிறேன்.

விரும்புவோர் 
எனது செல்பேசிக்கோ 
இந்த வலைப்பக்கத்தின் பின்னூட்டம் பகுதியிலோ 
தெரிவித்து மின்னஞ்சல் தந்தால் 
மின்தொகுப்பை அனுப்பி மகிழ்வேன். 
இது என்னாலான சிறு பணி.

மூடநம்பிக்கை-சடங்குள்-சாதி-மதங்களைப் பரப்பி, மக்களின் எழுச்சியை மடைமாற்றும் சுயநல அரசியல் வாதிகளின் சூழ்ச்சியை முறியடிக்கும் தந்தை பெரியாரின் அறிவாயுதங்களை நாடெங்கும் வழங்குவோம். குறிப்பாக இளைய சமூகம் எழுச்சியடைய இது நல்ல வாய்ப்பு

நன்றி,

நா.முத்துநிலவன்,

புதுக்கோட்டை

செல்பேசி + 91 94431 93293

1 கருத்து:

  1. ஐயா, வணக்கம்.
    மின்தொகுப்பினை என் மின்னஞ்சல் முகரிக்கு அனுப்பி உதவிட வேண்டுகிறேன். நன்றி
    karanthaikj@gmail.com

    பதிலளிநீக்கு