எனது புதிய மரபுகள் கவிதைத் தொகுப்பிலிருந்து


தெருப்புகழ்

கல்லத் தனை உள்ளத் தவ ரிடம்
எள்ளத் தனை கஞ்சிக் கென வெயர்
வெள்ளத் தினில் தள்ளா டியகொடும்  நிலைமாறி

வெட்டிப் பயி ரிட்டுப் புனலென
சொட்டித் திடு பச்சைச் குருதியை
விட்டுத் தினம் வைத்துப் பயிரிடும்   உழவோனே

தத்தம் உரி மைக்குப் பயிரினை
வித்திட் டதன் மொத்தப் பலனையும்
ஒத்துக் கொளும் இந்தக் கனவினி  நினைவாக

ஒட்டும் வயி றிங்கிவ் வுழவனை
எட்டும் பொழு தில்லை எனஒளிர்
பட்டப் பகல் வட்டத் திகிரியென் றெழுவோமே
---------------------------------------------------------------------------(1993)

1 கருத்து:

  1. தெருப்புகழ் பாடிய பெரும! நின் ஒக்கலொடு
    பாவியம் பாடி பெரும்பயன் உய்கவே!
    மு.இ.

    முனைவர் மு.இளங்கோவன்
    Dr.Mu.Elangovan
    Assistant Professor of Tamil
    Bharathidasan Govt.college For women
    Puducherry-605 003,India
    E.Mail : muelangovan@gmail.com
    blog: http://muelangovan.blogspot.com

    பதிலளிநீக்கு