கவிதையின் கதை- எனது வானொலி உரைப் பதிவு கேளுங்கள்

கவிதையின் கதை 

திருச்சி வானொலி  எனது உரைப் பதிவு

இன்று 21-03-2025 உலகக் கவிதை நாள்

Kavithaiyin Kathai - My speech on Radio

இதையொட்டிஇன்று காலை திருச்சி வானொலியில் ஒலிபரப்பான 

எனது 26நிமிட உரை ஒலிப்பதிவு இது 

நான் எழுதிவரும் கவிதையின் கதை பெரு நூலின் சுருக்கம் இது

கடந்த கரோனாக் காலத்தில்-

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் 

புதுக்கோட்டை மாவட்டக் குழு நடத்திய 

இணைய நிகழ்வில் இதை முதன் முறையாகப் பேசினேன்.

பிறகு 

தமிழ்நாடு கலை-இலக்கியப் பெருமன்றத்தின் 

மாநிலக் குழு நடத்திய மாநிலம் தழுவிய 

இணைய நிகழ்வில் பேசினேன்

2023இல் 

நியு-யார்க் தமிழ்ச் சங்கத்தின் 

இலக்கியக் குழுத் தலைவராக இருந்த 

நண்பர் ஆல்ஃபி (எ) ஆல்பிரட் தியாகராஜன் அவர்கள் 

கேட்டுக் கொண்டபடி ஃபெட்நா  23 சிறப்பு மலரில் 

கட்டுரைச் சுருக்கமாக எழுதினேன்.

அதன் விளைவாக 

கடந்த ஃபெட்நா  2024 நிகழ்ச்சிக்குச் சிறப்பு விருந்தினராக 

அழைக்கப்பட்டு கடந்த சூலை-4,2024ஆம் தேதி முதல் 15நாள்கள் 

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கத்தின் சிறப்பு விருந்தினராக 

சான் ஆண்டோனியோ (டெக்சஸ்)அட்லாண்டா

நியு-இங்கிலாந்து (போஸ்டன்),மற்றும் 

நியு-யார்க் தமிழ்ச் சங்க நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தேன்.

(இதுபற்றித் தனியாக விரிவாக எழுத வேண்டும். 

தலைவர் பாலா.சுவாமிநாதன், செயலர் கிங்ஸ்லி, 

செயற்குழுவினர் சகோ.ரம்யா, பிரதிபா பிரேம் 

மற்றும் அட்லாண்டாவிற்கு என்னை அழைத்துச் சென்ற 

தங்கை கிரேஸ்பிரதிபா, 

பாஸ்டன் தம்பி அருண்-தமிழ்ச்செல்வி 

நியுயார்க் தமிழ்ச்சங்க நிருவாகிகள்

இனிய நண்பர் ஆல்ஃபி 

உள்ளி்ட்ட பலருக்கும்

நான் நன்றிக் கடன் பட்டிருக்கிறேன்.

இதுபற்றி விரிவாக எழுத வேண்டும்)

----------------------------------------

இவ்வளவுக்கும் காரணம் இந்த கவிதையின் கதைதான்! 

மற்றும் நான் பேசிய இணைய உரைகள்தாம்!

இதோ  இப்போது திருச்சி வானொலியின் காற்றலை வழியாக 

கேளுங்கள் கேட்டு விட்டுப் பேசுங்கள் 

இந்த இணைப்பைச் சொடுக்கிக் கேளுங்கள்


இதற்கு நான் இரண்டு பேருக்கு நன்றி சொல்லவேண்டும் 

ஒருவர் திருச்சி வானொலி நிகழ்ச்சி அமைப்பாளரும் 

தொடர் வாசிப்பாளரும் என் இனிய நண்பருமான 

திருமிகு அடைக்கலராஜ் 

என்னோடு அவ்வப்போது பேசி வானொலியில்

எதையாவது பேச வைக்கும் பேரன்பிற்கு...

மற்றவர் நான் என் போக்கில் சுமார் 50 நிமிடம் பேசிய 

உரையின் சாரம் குறையாமல்மையம் நகராமல்

தொடர்ச்சி அறாமல், 28 நிமிடத்திற்கு 

அழகாகத் தொகுத்து விட்ட திருச்சி வானொலி நிலையத்

 தொகுப்பாளரும், தமிழறிஞர் கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்களின் 

பேத்தியும் ஆன அன்புச் சகோதரி தனலட்சுமி 

அவர்களின் பணி என்னை வியப்பில் ஆழ்த்தியது

----------------------------------------------------- 

இதையே பெருநூலாக -கிட்டத்தட்ட 800-900 பக்கங்களில்

கவிதையின் கதை என்னும் தலைப்பிலேயே 

எழுதி வருகிறேன். பார்க்கலாம் விரைவில்...

-----------------------------------------------

புதுக்கோட்டை தமிழ்ச்சங்கம் நடத்தும் சீனு.சின்னப்பா நினைவு இலக்கிய விருதுகள் ரூ.ஒருலட்சம்


நடத்தினால் எதையும் பெரிதாகவே நடத்திப் பழகியவர்

    கவிஞர் தங்கம் மூர்த்தி

             அவர் தலைவராக இருக்கும்             

புதுக்கோட்டை தமிழ்ச்சங்கம் சார்பாக, 

கடந்த ஆண்டு நடத்திய

புதுக்கோட்டையின் புகழ்வாய்ந்த

பேக்கரி மகராஜ்” சீனு சின்னப்பா அவர்களின் 

நினைவைப் போற்றும் வகையில்

அவரது அன்புமகன் 

திருமிகு அருண்சின்னப்பா அவர்கள்

தனது தந்தையார் பெயரில் வழங்கும்

ரூபாய் ஒருலட்சம் மதிப்பிலான

இலக்கிய விருதுகளை வழங்க

விழா மிகப் பிரம்மாண்டமாக நடந்தது.

விருதுபெற்ற அனைவரையும்

வாசலிலேயே மாலையிட்டு வரவேற்று

மேடையில் அமரவைத்து

மரியாதை மிகுந்த விருதுகளை வழங்கியது

இன்னும் நினைவில் இருக்கிறது.

இதோ இரண்டாமாண்டு

விருதுகள் அறிவிப்பு வந்துவிட்டது.

விருதுகள் அறிவிப்பு இதோ-

 


----------------------------------------------------------------

இதன் உண்மையான பெருமையை

கடந்த ஆண்டு நடந்த

விழா நிகழ்வுப் பதிவுகளைப் பார்த்தால் புரியும் 

--------------------------------------------------------------- 

இதோ 2024 நிகழ்வுப் பதிவுகள்:





அப்புறம் என்ன?

படைப்பாளிகளைக் கொண்டாடும்

விருதுவழங்கும் விழாவில் பங்கேற்க

இப்போதே உங்கள் நூல்களை அனுப்புங்கள்

இதை உங்கள் நண்பர்களுக்கும்

தெரிவித்து அவர்களையும் 

பங்கேற்கச் செய்யுங்கள்

வாழ்த்துகள்

-------------------------

 

 

வானொலியில் "எனைத்தானும் நல்லவை கேட்க" எனது சிற்றுரை – கேட்டு மகிழுங்கள்

                                     நாளை செவ்வாய் தொடங்குகிறது.

04-03-2025-செவ்வாய்

11-03-2025-செவ்வாய்

18-03-2025- செவ்வாய்

25-03-2025- செவ்வாய்

என நான்கு வாரங்களுக்கு

(இந்த மார்ச்சு மாதம் முழுவதும்)

“எனைத்தானும் நல்லவை கேட்க”

காலை மணி 6-10 முதல் 6-15 வரை

5-நிமிட உரை தந்திருக்கிறேன்!

காலை மணி 6-10 முதல் 6-15 வரை

தமிழ்நாட்டின் அனைத்து வானொலிகள்

மற்றும் அவற்றின் பண்பலைகளில் நீங்கள்

கேட்டு மகிழலாம்.

(திருச்சி, சென்னை, மதுரை, கோவை

புதுச்சேரி, காரைக்கால், நெல்லை

தூத்துக்குடி, நாகர்கோவில்)

(என்ன ஒன்னு...?

அந்த நேரத்துல

எழுந்திருக்கணும்!

அம்புட்டுதேங்!

😜😜😍😂😁

------------------------------------------

         இன்று -02-03-2025- ஒலிபரப்பான 
உரை இணைப்பு 
-----------இதே பதிவில்-------
இந்த இடத்திலேயே
விரைவில் பதிவிடுவேன்.
-----------------------------------------

முனைவர் வெ.இறையன்பு இஆப அவர்கள் எழுதிய ‘தமிழ்இனிது” நூல் விமரிசனமும், இன்றைய எனது நிகழ்வும் ...

           நமது மதிப்பிற்குரிய அய்யா முனைவர் வெ.இறையன்பு இஆப அவர்கள் நமது தமிழ்இனிது” நூலுக்கு அருமையானதொரு விமரிசனம் எழுதி சில வாரம் முன்பே எனக்கு அனுப்பியிருந்தார்கள். 

     ‘அய்யா, இதை ஏதாவது ஓர் இதழுக்கு அனுப்பலாமே?” என்ற என் கேள்விக்கு, ‘நான் ராணி வார இதழில் ஒரு வாழ்வியல் தொடர்”எழுதி வருகிறேன். அதில் வரும். பொறுங்கள்” என்று பதில் தந்திருந்தார்.

இதோ இன்று வந்துவிட்டது!

    நானோ, இன்று முற்பகலில், புதுக்கோட்டை தமிழ்வளர்ச்சித் துறை நடத்திய தமிழ் அறிஞர்கள் எழுத்தாளர்கள் நினைவு போற்றும்” கருத்தரங்கில் புதுகை ஜெஜெ கல்லூரியில் பேசப் போய்விட்டேன்!

    மதியம் கருத்தரங்கம் முடித்து, வெளியில் வரும்போது, மதுரை நண்பர் முனைவர் ஞா.சந்திரன் அழைத்து, ‘அய்யா தமிழ்இனிது” நூல் பற்றி இறையன்பு அய்யா இவ்வார ராணி வார இதழில் எழுதி வந்து விட்டது பார்த்தீர்களா?” என்று கேட்டார். இன்ப அதிர்ச்சி!

    கருத்தரங்கம் முடித்து, வரும் வழியில் ராணி வார இதழை வாங்கிக் கொண்டு வந்து பார்த்து நெகிழ்ந்து மகிழ்ந்தேன்.

இதோ அது



 நன்றி நன்றி அய்யா! மிக்க நன்றியும் மகிழ்ச்சியும்!

நன்றி - ராணி வார இதழ்

-----------------------------------------------------------------------------------------------------------

    அதோடு,

    இன்றைய தமிழ்வளர்ச்சிக் கருத்தரங்கில் நான், அன்னை முத்துலட்சுமி” பற்றிப் பேசிய ஒளிப்படங்களும் உடன் உள்ளன.

அன்பு நண்பர்கள் கும.திருப்பதி தமிழறிஞர் வ.சுப.மாணிக்கனார் பற்றியும், பேரா.சா.விஸ்வநாதன் எழுத்தாளர் அகிலன் பற்றியும்     எனது அன்புத் தங்கையும் வீதி” கலைஇலக்கியக் களத்தின் ஒருங்கிணைப்பாளருமாக கவிஞர் மு.கீதா, குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா பற்றியும் பேசினோம் –

அந்தப் படங்கள் இதோ -

கவிஞர் மு.கீதா அவர்கள்

நான் தான் (!)

பேரா .சா.விஸ்வநாதன் அவர்கள்
 


புலவர் கும.திருப்பதி அவர்கள்


                      -------------------------------------------------------------

நிகழ்ச்சிப் படங்கள்



நன்றி – 

தமிழ்வளர்ச்சித் துறையின் 

புதுக்கோட்டை துணை இயக்குநர்

திருமிகு சீதாலட்சுமி் அவர்கள்,  

மற்றும் 

ஜே.ஜே.கல்லூரி நிர்வாகம்.

----------------------------------------------------------  

மும்பை - மராட்டிய மாநிலத் தமிழ் எழுத்தாளர் மன்ற வெள்ளி விழா!

கடந்த 02-02-2025 அன்று

மராத்திய மாநிலத் தமிழ் எழுத்தாளர் மன்றத்தின்

வெள்ளிவிழா நிகழ்வு

மும்பையில் - நவிமும்பை 

பாண்டுப் பிரைட் மேனிலைப் பள்ளியில் 

மிகச் சிறப்பாக நடந்தது

------------------------------------------------

நன்றி - தலைவர்

பாவரசு வதிலை பிரதாபன் அவர்கள்

(செல்பேசி +91 78758 48340)

மற்றும்

அன்பிற்குரிய நிர்வாகியர்

(இப்பதிவின் இறுதிப் பக்கம் விவரம்)



அன்பின் விருது














நிகழ்வுத் தொகுப்பு வெளியீட்டுக்கு நன்றி:

"குறள் முழக்கம்" இணையத் திங்களிதழ்

ஆசிரியர்

தமிழ்த்திரு மறைமலை இலக்குவனார் அவர்கள்

செல்பேசி - +91 97918 61662 
---------------------------------------------------------------- 
அப்புறம்,

நான் மிகவும் மதிக்கும்

மும்பை வாழ் முற்போக்கு எழுத்தாளர்

கவிஞர் புதிய மாதவி அவர்கள்

விழாவுக்கு கவிஞர் தமிழ்நேசன் உடன் வந்து,

அவரது அண்மைய கவிதைத் தொகுப்பைத்

தந்து சென்றார்!

மகிழ்ச்சியாக இருந்தது.
------------------------------------------------------------ 


------------------------------------------------------------------------ 

மும்பை - தமிழறிஞர் குமணராசன் அவர்களுக்கு
நமது தமிழ் இனிது நூலை வழங்கி மகிழ்ந்தேன்
திருவள்ளுவர் சாட்சியாக (!)

----------------------------------------------

                                                           எங்கள் பட்டிமன்றம் :                                                                                                               'இன்றைய சமூக ஊடகங்கள்                                                    வளர்ச்சியா? தளர்ச்சியா?'

----------------------------------------------------- 

சிறப்பித்தவரை நாங்கள்
சிறப்பித்து மகிழ்ந்தோம்

                                          முன்னதாக வந்த எங்கள் விமானத்திற்கும்                                          முன்னதாக வந்திருந்து தந்த வரவேற்பு!

---------------------------------------------------------------------