நா.முத்துநிலவன் பேச்சு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நா.முத்துநிலவன் பேச்சு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

பொறியியல் வகுப்புத் தொடக்கவிழா - நா.முத்துநிலவன் உரை

வித்தியாசமான உழைப்பும் 
வேறுபட்ட சிந்தனையும் தேவை! 

பொறியியல் வகுப்புத் தொடக்கவிழாவில் 
நா.முத்துநிலவன் உரை 

புதுக்கோட்டை-செப்.12 கைக்குறிச்சி ஸ்ரீபாரதி மகளிர் பொறியியல் கல்லூரியில் பாரதி நினைவுநாளன்று -11-9-2023- நடந்த முதலாண்டு வகுப்புகள் தொடங்கி வைத்து, மாணவிகளிடம் உரையாற்றும்போது பேசிய கவிஞர் நா.முத்துநிலவன், “வெறும் உழைப்பால் பயனில்லை, வித்தியாசமான உழைப்புடன் கூடிய வேறுபட்ட சிந்தனையே இப்போதைய தேவை” என்று பேசினார் 
              பாரதி பொறியியல் கல்லூரியின் பதினைந்தாம் ஆண்டு நிகழ்வாக, முதலாண்டு பொறியியல் வகுப்புகளைத் தொடங்கி வைத்துப் பேசிய எழுத்தாளர் நா.முத்துநிலவன் மேலும் பேசியதாவது- “உழைப்பே உயர்வு தரும் என்பது உண்மைதான் என்றாலும், வெறும் கடின உழைப்பால் மட்டும் பலன் கிடைக்காது. வித்தியாசமான உழைப்போடு, வேறுபட்ட சிந்தனைகளும் சேரும்போதுதான் அதன் பலன் வீட்டுக்கும் நாட்டுக்கும் பயன் தரும். இன்று உலகம் முழுவதும் நம் நாட்டு இளைஞர்கள் உலகப் பெரும் நிறுவனங்களின் முக்கியமான பொறுப்புகளில் இருப்பதன் ரகசியம் இதுதான்! ஒரு நாட்டின் அடையாளமாக அந்த நாட்டின் பெருநகரக் கட்டுமான வளர்ச்சியே முன்னிற்கிறது. சிங்கப்பூர், அரபு நாடுகளின் அடையாளம் அங்குள்ள வானளாவிய கட்டடங்களே கண்ணையும் கருத்ததையும் கவர்ந்து நெஞ்சில் நிற்கின்றன. வளரும் நாடுகளில் இவை போலும் பெரும் கட்டுமானப் பணிகள் நிறைய உருவாகின்றன. 
        ஏட்டளவில் படித்துப் பட்டம் பெற்றால் அதற்குப் பலனிருக்காது. மாறாக, படிப்போடு, கற்பனை ஆற்றலையும் கலந்து புதிய புதிய மென்- பொருள்களை உருவாக்கி, “கற்பனையைக் கருவியாக்கி விற்பனை செய்த ஆற்றல்”தான் பில்கேட்ஸை உலகப் பணக்காரர் வரிசையில் பல ஆண்டுகள் உட்கார வைத்தது. இப்போதும் உலகம் முழுவதும் கணினி மென்பொருள் வன்பொருள் பொறியாளர்க்கான தேவை அதிகரித்துக் கொண்டே வருகிறது. வேலைக்குப் போன பிறகும் மக்களுக்கான பணிகளைத் தொடரும் யாரையும் மக்கள் மறப்பதில்லை. அப்துல் கலாம், கல்பனா சாவ்லா, தாமஸ் ஆல்வா எடிசன், கலிலியோ என மறைந்த பிறகும் வாழ்பவராக மக்கள் பயன்பாட்டுக்கான அறிவியலைக் கண்டுபிடித்துத் தந்தவர்கள் வாழ்ந்து கொண்டே இருக்கிறார்கள்.        
            பாரதியும் அப்படித்தான் “நான் வீழ்வேன் என நினைத்தாயோ?” என்று கேட்டதுபோல இந்த 103ஆவது நினைவு நாள் அன்றும் நினைக்கப் படுகிறான். தான்பெற்ற கல்வியால் வீடும், நாடும், உலகமும் பயனடையும்படி, இன்று தொடங்கும் உங்கள் கல்வி அமையவேண்டும் அதிலும் குறிப்பாகப் பெண்கள் படிப்பதே அவர்கள் வாழ்க்கையை முன்னேற்றும். பெற்றோர்கள் தம் பெண்களுக்கு வேறு சொத்து ஏதும் சேர்த்து வைக்க வேண்டியதில்லை, கல்வி தந்தால் அதுவே மிகப் பெரிய திருமணச் சீராக இருக்கும் எனவே இங்குள்ள பெற்றோரை இடையில் “பொருந்தி வருகிறது” என்று, படிப்பை முடிக்கும் முன்னரே திருமணம் செய்து, படிப்பை நிறுத்திவிட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்” இவ்வாறு எழுத்தாளர் நா.முத்துநிலவன் உரையாற்றினார். 
        வகுப்புகள் தொடக்கவிழாவுக்கு, ஸ்ரீ பாரதி கல்விக் குழுமங்களின் தலைவர் குரு.தனசேகரன் தலைமை ஏற்றார். கல்லூரி முதல்வர் முனைவர் ச.திலகவதி வரவேற்புரையாற்றினார். தாளாளர் கனகராஜன், அறங்காவலர் கிருஷ்ண மூர்த்தி, பஷீர் முகமது வாழ்த்துரையாற்றினர். கல்லூரி மாணவியரின் கலை-நிகழ்ச்சி நடனமும் நடைபெற்றது. விழாவில் முதலாண்டு மாணவியர், அவர்களின் பெற்றோர் உட்பட சுமார் 400பேர் பங்கேற்றுச் சிறப்பித்தனர். நாட்டுப் பண்ணுடன் விழா நிறைவு பெற்றது. 
    மகாகவி பாரதியின் 103ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, கல்லூரி வளாகத்திலிருந்த பாரதியின் உருவச் சிலைக்கு கல்லூரித் தலைவர், தாளாளர்கள், முதல்வர்கள், பணியாளர்கள், மாணவியர் முன்னிலையில் எழுத்தாளர் நா.முத்துநிலவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி அஞ்சலி செலுத்தியபின் விழா தொடங்கியது. 
------------------------------------------------ 




நன்றி - தீக்கதிர் நாளிதழ் -12-9-2023


புகைப்படங்கள் - நன்றி அருண் ஸ்டுடியோ, புதுக்கோட்டை


நன்றி - புதுகை வரலாறு நாளிதழ் -13-9-2023

பண்பாட்டுப் பட்டிமன்றம் காண வருக

 அமெரிக்காவிலிருந்து ஒளிபரப்பாகும் அதிகாலை  இணைய ஊடகத்தில் கடந்த 01-5-2021 -மே தினத்தன்று காலை 7மணிக்கு நாங்கள் பேசிய பட்டிமன்றம் இது:

நான் நிறைவுப் பேச்சாளராகப் பேசியிருக்கிறேன்  வாய்ப்புள்ளோர் கேட்டு, பார்த்து கருத்துரைக்க வேண்டுகிறேன் 

என்ன, கணினித் தமிழ்ச்சங்கத் தோழர்களுக்குக் கேட்ட பெயராகத் தோன்றுகிறதா? ஆமா.. அவரேதான்! 2015இல் புதுக்கோட்டை கணினித் தமிழ்ச்சங்கம் சார்பாக நடத்தப்பட்ட “வலைப்பதிவர் சந்திப்புத் திருவிழா-2015”இல் வந்து கலந்து கொண்டு பேசிய அதே நவீன் சீதாராமன்தான்! 

அப்படியே, 

நமது சிவகங்கைச் சீமையிலிருந்து, அமெரிக்கா சென்று அங்கும் இணையத் தமிழ் வளர எதையாவது செய்துகொண்டிருக்கும் நண்பர் நவீன் சீதாராமன் அவர்களின் பணிகளுக்கு உதவியாக அவரது அதிகாலை வலையொளியில் இணைந்து (Subscribeசெய்தும் மணியை ஒலிக்கச் செய்தும்) உதவ, உங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

இவரைத் தொடர்வது நம் பணிகளில் ஒன்றல்லவா?

இதோ பட்டிமன்ற இணைப்பு -

https://youtu.be/XMnqLkizMWQ 

ஆசிரியர்கள், அடுத்த தலைமுறைக்கான சமூக ஆசிரியர்களாக மாறவேண்டும்!



நூல்வெளியீட்டில், கவிஞர் நா.முத்துநிலவன் சிறப்புரை
புதுக்கோட்டை, மே.29
புதுக்கோட்டையருகில் மதுரைச் சாலையில் உள்ள ரோட்டரி மகாலில்  நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய கவிஞர் நா.முத்துநிலவன், “ஆசிரியர்கள், அடுத்த தலைமுறைக்கான சமூக ஆசிரியர்களாக மாறவேண்டும், தமிழ்நாட்டு ஆசிரியர்களில் சொந்தமாக சிந்தித்து நூல்எழுதுவோர் குறைந்து போனதே தமிழ்வளர்ச்சிக்குத் தடையானதுஎன்றார்.
புதுக்கோட்டை ரோட்டரி சங்க விழாவுக்கு ரோட்டரித் தலைவர் கே.திருப்பதி தலைமையேற்றார்.செயலர் ஆர்.ஜெயக்குமார் வரவேற்றார்.
மேலைச்சிவபுரி கணேசர் கலைஅறிவியல் கல்லூரியின் முன்னாள் உடற்கல்வி இயக்குநர் முனைவர் நா.விஜயரெகுநாதனும், இராணியார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியின் உடற்கல்வி இயக்குநர் வி.ராஜசரோவும் இணைந்து எழுதியயோகாவும் உடல் நலமும்எனும் நூலை எழுத்தாளரும் பட்டிமன்றப் பேச்சாளருமான கவிஞர் நா.முத்துநிலவன் வெளியிட்டார். அதே கல்லூரி முன்னாள் முதல்வரும் தமிழ்ப் பேராசிரியருமான முனைவர் தா.மணி முதல்பிரதியை பெற்றுக்கொண்டு  வாழ்த்துரை வழங்கினார்.
ஆயுள் காப்பீட்டுக் கழக வளர்ச்சி அதிகாரி நா.விஜயகுமார், ஆனந்த யோகா பவுண்டேசன் யோகா செல்வராஜ், மூத்த ரொட்டேரியன் திருப்பதி, பிஎஸ்கே பள்ளித் தாளாளர் பி.கருப்பையா ஆகியோர் நூலின் சிறப்புகளைக் குறித்து, உரையாற்றினர்.
நூலை வெளியிட்டு சிறப்புரையாற்றிய நா.முத்துநிலவன் பேசும்போது-

பாடப்பகுதியைத் தாண்டிப் படிப்பதே பொதுஅறிவு!



கவிஞர் நா.முத்துநிலவன் பேச்சு

புதுக்கோட்டை- மே,5 கைக்குறிச்சி ஸ்ரீபாரதி கல்வியியல் கல்லூரியின் 14ஆவது ஆண்டுவிழாவில் சிறப்புரையாற்றிய  கவிஞர் நா.முத்துநிலவன், “பாடப்பகுதிப் புத்தகங்களைத் தாண்டியும் படிப்பதே பொதுஅறிவு என்று பேசினார்

ஆண்டுவிழா நிகழ்ச்சிகளுக்கு, கல்லூரித் தலைவர் குரு.தனசேகரன் தலைமையேற்றார். கல்லூரிச் செயலர் கேஆர் குணசேகரன், அறங்காவலர்கள் ஏ.கிருஷ்ணமூர்த்தி, கே.ரெங்கசாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். கல்வியியல் கல்லூரி முதல்வர் முனைவர் சுப.தாரகேஸ்வரி ஆண்டறிக்கை வாசித்தார். மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன.

கருப்புச்சட்டை! சிவப்புச்சட்டை!! நீலச்சட்டை!!!


கவிஞர் சோலச்சியின்
“கருப்புச்சட்டையும்
கத்திக் கம்புகளும்”
சிறுகதை நூல் வெளியீடு

புதுக்கோட்டை-[_ன்,8 புதுக்கோட்டை அருகிலுள்ள வயலோகம் துர்க்கா அரங்கில் நடைபெற்ற கவிஞர் சோலச்சியின் “கருப்புச் சட்டையும் கத்திக் கம்புகளும்” நூலை வெளியிட்டுப் பேசிய கவிஞர் நா.முத்துநிலவன், “படித்தவர்கள் வெறும் பார்வையாளராகவே இருந்துவிடாமல், நாட்டில் நடந்துவரும் நல்லனவற்றின் பங்கேற்பா ளராகவும் வரவேண்டும்”என்றார்.

நா.முத்துநிலவன் பேச்சு


திருமணத்திற்குப் பின் பெண்களின் திறமைகள் முடக்கப்படுகின்றன!

கவிஞர் நா.முத்துநிலவன் பேச்சு 


(செய்திகளை அவரவர் கோணத்தில் படத்துடன் எழுதி அனுப்பிய செய்தியாளர்கள் தீக்கதிர் மதி, தினகரன் கண்ணன், தினமணி சுரேஷ். ஆகியோருக்கும் வெளியிட்ட நாளிதழ்களுக்கும் நன்றி. ஆனால், அந்தப் படங்களை நமது வலையில் ஏற்றும் தொழில் நுட்பம் எனக்குத் தெரியவில்லையே! -விரைந்து அதையும் கற்போம்.)

புதுக்கோட்டை -பிப்.4.
              அரசு ஊழியராக இருக்கும் பெண்கள் கூட திருமணத்திற்குப் பிறகு தங்களது தனித்திறமைகளை வெளிப்படுத்துவதில்லை.இந்த நிலை மாறவேண்டும் என்றார் கவிஞர் நா.முத்துநிலவன்

              புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் கடந்த வெள்ளிக் கிழமையன்று நடந்த இலக்கியமன்ற ஆண்டுவிழா வில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட அவர் மேலும் பேசியதாவது

            படிக்கும் காலங்களில் பெண்கள் கல்வியிலும், ஏனைய தனித் திறமைகளிலும் ஆண்களை விடவும் சிறந்து விளங்குகின்றனர். ஆனால்  திருமணத்திற்குப் பிறகு இவர்களின் திறமைகள் மதிப்பிழக்கச் செய்து முடக்கப்படுகின்றன. அரசு வேலைக்குச் செல்லக் கூடிய பெண்களுக்கும் இதே நிலைமைதான் நீடிக்கிறது. அவர்களின் திறமையான பங்களிப்புகள் இந்தச் சமூகத்திற்குப் பயன்பட வேண்டும்.
          ஒரு கருத்தை ஆண்கள் எதிர்த்துப் பேசினால் அவர்களைத் தைரியசாலி என்கின்றனர். அதையே பெண்கள் பேசினால், வாயாடி என்கின்றனர்.அதையும் பெண்களை விட்டே பேசவைக்கின்றனர். பேச வேண்டிய நேரத்தில் பேசாமல் இருப்பது அழிவையே தரும். எனவே பெண்கள் இந்தத் தடைகளை முறியடித்து முன்னுக்கு வரவேண்டும் என சமூகம் எதிர் பார்க்கிறது.
         சமூகத்தை உயர்த்தும் பொறுப்பு ஆண்-பெண் என இரு பாலருக்கும் உள்ளது. இதற்குப் படிப்பே அடித்தளமாக இருக்க முடியும்
         இவ்வாறு பேசிய கவிஞர் நா.முத்து நிலவன் முன்னதாக நடத்தப்பட்ட ஆண்டுவிழா இலக்கியப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவிகளுக்கும், தேர்ச்சி விழுக்காட்டில் திறமை காட்டிய ஆசிரியர்களுக்கும் பரிசுப் புத்தகங்களை வழங்கினார்.

         விழாவிற்குப் பள்ளித் தலைமை ஆசிரியர் ஏ.ஞான சேகரன் தலைமை ஏற்றார்.முன்னதாக உதவித் தலைமை ஆசிரியர் எம்.சின்னத்தம்பி வரவேற்க. ஆசிரியர் பி.வெள்ளைச் சாமி நன்றி கூறினார். மாணவியரின் வண்ணமிகு கலை நிகழ்ச்சிகளோடு விழா இனிது நிறைவேறியது. ஆண்டு விழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி மாணவியரும் ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.  

- செய்தியாளர் -சு.மதியழகன் தீக்கதிர்மதுரைப்பதிப்பு பக்கம்-6,  05-02-2012 - 
                            --------------------------------------------------------- 
ஆலங்குடி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழாவில்
கவிஞர் முத்துநிலவன் பேச்சு.
ஆலங்குடி பிப் 5.
     புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமையாசிரியர் ஞானசேகரன் தலைமை வகித்தார். முதுகலைத் தமிழாசிரியர் பரமசிவம் ஆண்டறிக்கை வாசித்தார். முதுகலை ஆசிரியை கேசவி அனைவரையும் வரவேற்றார். ஓவியர்கள் கருப்பையாபுகழேந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
     இந்நிகழ்ச்சியில் பட்டி மன்றப் பேச்சாளர் கவிஞர் முத்துநிலவன் சிறப்புரையாற்றினார். அப்போது "பள்ளிப் படிப்பில் தேர்ச்சி விகிதம் மட்டுமல்லாது அதிக மதிப்பெண்கள் பெறுவதிலும் பெண்கள் முன்னணியில் இருக்கிறார்கள். அதே நேரத்தில் கல்வியில் முன்னணியில் இருந்தபோதிலும் பிற்காலத்தில் அந்தப் பெண்கள் இருக்குமிடம் தெரியாத அளவிற்கு தங்கள் திறமைகளை வெளிக் கொண்டு வருவதிலும் தங்களை சமூகத்தில் நிலைப் படுத்திக் கொள்வதிலும் கவனம் செலுத்தாமல் இருந்து விடுகிறார்கள். இது மாணவிகள் மட்டுமில்லை. ஆசிரியர் பணிக்குச் சென்று விட்ட பெண்களும் அப்படித்தான் இருக்கிறார்கள். அவர்கள் கணவர்பிள்ளைகள்சமையல்பணி என்று தங்களுக்குள் ஒரு வட்டத்தைப் போட்டுக் கொண்டு இருந்து விடுகிறார்கள்.
     உலகிலேயே மிகவும் அழகான பெண்மணி அன்னை தெரசாதான். அவர் இறந்தபோது உலகமே அவருக்காகக் கண்ணீர் சிந்தியது. அவரது இறுதி ஊர்வலத்தில் பத்து லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பங்கேற்றார்கள். பெண்வர்க்கம் எப்போது எதிர்த்துப் போராடத் துவங்குகிறதோ அப்போதுதான் ஆண்களின் கொடூரக் குணம் குறையும். தாக்குதலும் குறையும். பிற்போக்குத் தனங்களைக் கைவிட்டு விட்டு முற்போக்காகச் சிந்தக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.
     தனது பள்ளிப் பருவத்தில் ஒன்பதாம் வகுப்பில் படிப்பு ஏறாததால் வகுப்பறையிலிந்து ஆசிரியர்களால் வெளியேற்றப் பட்டார். அவர்தான் இசையுலகில் இருமுறை ஆஸ்கார் விருதினைப் பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான்.  இந்தச் சமூகம் பெண்கள் நிறையக் கற்றிருக்க வேண்டும் என்று பெண்களிடமிருந்து நிறையவே எதிர் பார்க்கிறது.
     ஆண்கள் பேசினால் திறமை என்கிற சமூகம் பெண்கள் பேசினால் வாயாடி என்கிறது. பேச வேண்டிய நேரத்தில் பேச வேண்டும். பேசாமல் இருந்து விட்டால் அதுவே முழுதாக அழித்து விடும். குழந்தைகளை வளர்ப்பதில் ஆண்களுக்கும் சமமாக கடமை உள்ளது. நியாயமும் உரிமையும் பெண்களுக்குக் கிடைக்க வேண்டுமெனில் பெண்கள் படிக்க வேண்டியது அவசியமாகும். சமூக சிந்தனையும் அக்கறையும் பொறுப்பும் உள்ளவர்கள் மட்டும்தான் சமூகத்தில் உயர்ந்து நிற்க இயலும். பெண்கள் படிப்பில் மட்டுமல்லாது பல்வேறு துறைகளிலும் சிறந்து விளங்க வேண்டும்." இவ்வாறு பேசினார்.
            ------------------------------------------ 
செய்தியாளர் - கண்ணன்,“தினகரன்05-02-2012-திருச்சிப்பதிப்பு பக்கம்-15 
              -------------------------------------------


“குறுகிய வட்டத்தை விட்டுப் பெண்கள் வெளியே வரவேண்டும்“ 
ஆலங்குடி-பிப்-5.
   குடும்பத்தில் கணவர், பிள்ளைகள், சமையல், பணி என்பதுதான் வாழ்க்கை என்ற குறுகிய வட்டத்தை விட்டுப் பெண்கள் வெளியேங வரவேண்டும் என்றார் கவிஞர் நா.முத்துநிலவன்.
  ஆலங்குடி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் அண்மையில் நடைபெற்ற ஆண்டுவிழாவில் சிறப்பிடம் பெற்ற மாணவிகளைப் பாராட்டி அவர் பேசியது - 
   பள்ளி கல்லூரிக் காலங்களில் சிறப்பிடம் பெறும் மாணவிகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும், அதன் பிறகு அந்தத் திறமைகளைச் சமூகத்தில் நிலைப்படுத்திக் கொள்வதில் தவறவிடுவதால் இளமையில் முயன்று பெற்ற திறமைகள் வீணாகி விடுகின்றன.
  ஆகையால், தனக்கான உரிமைகளைப் பெறவும் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளவும் சமூக நலன் சார்ந்த கல்வி அவசியம் என்பதால் பாடப்புத்தகங்களோடு பிற புத்தகங்களையும் வாசிக்க வேண்டும் என்றார் அவர். 
   விழாவுக்குப் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஞானசேகரன் தலைமை வகித்தார். ஓவியர்கள் கருப்பையா, புகழேந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதுகலைத் தமிழாசிரியர் பரமசிவம் ஆண்டறிக்கை வாசித்தார். முதுகலை ஆசிரியர் கேசவி வரவேற்றார். 
   -- செய்தியாளர்-சுரேஷ், 
தினமணி- நாளிதழ் பக்-2, 06-02-2012 -திருச்சி பதிப்பு
--------------------------------------------------------------