தமுஎகச – 16ஆவது மாநில மாநாடு தஞ்சை அழைக்கிறது, வருக நண்பர்களே!

இதோ ஒரு பண்பாட்டுத் திருவிழா!








மாநாட்டு மைய முழக்கம் -
வெறுப்பின் கொற்றம் வீழ்க
அன்பே அறமென எழுக!
-----------------------------------------

எம்.ஜி.ஆர்.படங்களில் நானறிய ஒரே ஒருபடத்தில் 

ஒரே ஒரு பாடலுக்குத்தான் அவரது இயல்பை மீறி,  

ஒரே இடத்தில் உட்கார்ந்தும், நின்று கொண்டும் பாடுவார்.

ஏனெனில் அந்தப் பாடல் வரிகளின் கனம் 

தனது - கைகளை மேலே தூக்கி, ஓடி ஆடும் நடிப்பால்

 கவனிக்கப்படாமல் போய்விடும் 

என்று நினைத்திருப்பார் போல! (என்ன கவனம்!)

அந்தப் படம் – படகோட்டி

அந்தப் பாடல் – தரைமேல் பிறக்க வைத்தான்

வாலி எழுதிய இன்றும் வாழும் வரிகளுக்கு,  

இசை – விஸ்வநாதன்-ராமமூர்த்தி

அதுபோல

வழக்கமாக ஏதாவது எழுதியபின் பதிவிடும் நான்

எதுவுமே எழுதாமல் பதிவிடுவது இந்த நிகழ்வின்

கனம் குறைந்துவிடக் கூடாது என்பதால்தான்

வருக நண்பர்களே!

மாநாடு – தமிழ்நாடு முழுவதும் மாவட்டங்களில் இருந்து தேர்வுசெய்யப்பட்ட பிரதிநிதிகள் மட்டும்தான் அரங்கில் இருக்க முடியும் எனினும் நாள்முழுவதும் பார்க்க, ரசிக்க, குறிப்பெடுக்க, மாலையில் தினமும் நடக்கும் கலை-நிகழ்வுகளைக் காண நீங்கள் அனைவரும் வரலாம். 

அரங்கிலும் சில நிகழ்வுகள் 

பொதுவாக அனைவரும் அரங்கில் வந்து 

பார்க்குமாறும் உள்ளன 

தினமும் மாலை நிகழ்ச்சிகள் 

வெளி அரங்கில்தான்!

மேலே உள்ள அழைப்பிதழில் 

அந்த விவரம் காண்க.

விழாவில் - மாநாட்டு சிறப்பு மலர் வெளியீடும் உண்டு!

 முக்கியமாக 6-12-2025 அன்று என் தலைமையில் நீதியரசர் சந்துரு அவர்கள் பேசும் நிகழ்வும், அன்றிரவு பிரளயன் இயக்கத்தில் திரைக் கலைஞர் ரோகிணி அவர்கள் நடித்து அண்மையில் வந்த வனப்பேச்சி பேரண்டச்சிஎனும் “புதுமையான மிகச்சிறப்பான நாடகம்” என்று       ஊடகங்களால் பாராட்டுப் பெற்ற நாடகம் பார்க்க -                        

வருக வருக என அன்போடு அழைக்கிறேன். வணக்கம்

 (தேவைப்படுவோர் தெரிவித்தால் புலன -வாட்சாப்- வழி

அழைப்பிதழை அனுப்புவேன். நன்றி) 

மற்றவை நேரில்

-----------------------------------------

“உண்மை” இதழில் எனது தொடர் ' வாழ்வியல் தமிழ்'

     

        உலகளவில் சமத்துவ (Socialist) கருத்துகளைப் பரப்புவதற்கென நிறைய இதழ்கள் பொதுவுடைமைக் கட்சிகளால் நடத்தப் படுகின்றன. அதில் நாத்திக (Athiest) கருத்துகளும் அவ்வப்போது வரும்.

ஆனால், உலகிலேயே நாத்திகக் கருத்துகளுக்கு முதலிடம் தந்து சமத்துவக் கருத்துகளையும் பரப்புவதற்கென ஒருசில நாளிதழ்களே வருவதாக நினைக்கிறேன். அய்யா கி.வீரமணி அவர்களை ஆசிரியராகக் கொண்டு, பல்லாண்டுகளாக வரும் நாளிதழ் விடுதலை நாளிதழாகும்.

உலகில் சமத்துவ அரசியல் கொண்ட நாடுகள் பல உள்ளன. சீனா, வடகொரியா, லாவோஸ், கியூபா, வியட்நாம் உள்ளிட்ட நாடுகள் அப்படி சமத்துவ அரசியல் கொண்ட நாடுகளாகும்.

இவை தவிர நாத்திகக் கருத்துக் கொண்ட மக்கள் உலகெங்கும் – முதலாளித்துவ ஆட்சியிலும் கூட – வாழ்கிறார்கள். அப்படியான சில நாடுகளின் பட்டியலைப் பார்க்கலாம்-                                    

நாடுகளின் பெயர், அங்கு வாழும் நாத்திகர் விழுக்காடு

சீனா

91%

ஜப்பான்

86%

ஸ்வீடன்

78%

செக் குடியரசு

75%

இங்கிலாந்து (UK)

72%

பெல்ஜியம்

72%

எஸ்டோனியா

72%

ஆஸ்திரேலியா

70%

நார்வே

70%

கூடுதலாக, வட கொரியா மற்றும் வியட்நாம் போன்ற நாடுகள் அதிகாரப்பூர்வமான நாத்திக அரசுகளாகும்.

“இந்த நாடுகளில் வாழும் பெரும்பான்மையான மக்கள் மத நம்பிக்கைகளை கொண்டிருக்கவில்லை அல்லது மதம் தங்கள் வாழ்க்கையில் முக்கியமானது என்று கருதவில்லை என்று கூகுளார் கூறுகிறார். உண்மையில் இவற்றைவிடவும் பொதுவுடமைக் கருத்துக் கொண்டோரும் நாத்திகக் கருத்துக் கொண்டோரும் வாழும் முதலாளித்துவ நாடுகள் இன்னும் அதிகமாகவே இருக்கும் என்பது என் கருத்து, நாம் வாழும் இந்தியாவைப் போல!

திராவிடர் கழகத் தலைவர்களில் ஒருவரான நமது மதிப்பிற்குரிய வழக்குரைஞர் அருள்மொழி அவர்கள் ஒரு விவாதத்தில் சொன்னது எனக்கு வியப்பும் மகிழ்ச்சியும் தந்தது –

அவர் சொன்னார், ‘நாத்திகர்களை நீங்கள் சிறுபான்மையினர் தானே என்று சொன்னீர்கள்! உண்மையில் நாம் வாழும் உலகில் நாத்திகர்கள்தான் அதிகம்” என்றார்! கேள்வி கேட்டவரும், நிகழ்ச்சியின் பார்வையாளரும் உண்மையில் வியந்துபோய்ப் பார்த்தோம். 

அவரே தொடர்ந்து சொன்னார் – அல்லாவை நம்புகிறவர்கள் மற்ற கடவுளை நம்புவதில்லை, கிறிஸ்துவை வணங்குகிறவர்கள் மற்ற கடவுள்களை வணங்குவதில்லை. இந்து மதத்தைத் தீவிரமாக நம்புவோரும் மற்ற மதத் தெய்வங்களை ஏற்பதில்லை. இப்படி ஒரு மதநம்பிக்கை உள்ளவரும் மற்ற மதக் கடவுளை வணங்காத நாத்திகர்தானே?” என்று கேட்டார்! உண்மைதானே? அப்படிப் பார்த்தால் அனைவரும் நாத்திகர்தானே? எனவே நாத்திகர்களை அதிகம்  கொண்ட உலகில், அதைப் பரப்ப நாம் அனைவருமே கடமைப்பட்டவர் தானே

அடடா! என்ன அருமையான மறுக்க முடியாத விளக்கம்?!

இது நிற்க.

தந்தை பெரியாரால் தொடங்கப்பட்டு, திராவிடர் கழகத்தால் தொடர்ந்து நடத்தப்படுவது விடுதலை நாளிதழ். மற்றும் உண்மை இதழ். இது நாத்திகர்களால் நாத்திகத்தைப் பரப்புவதற்காகவே நடத்தப் படும் மாதம் இருமுறை இதழ்.

நானும் ஒரு நாத்திகன் மற்றும் சமத்துவன் என்பதால், உண்மை இதழில் எழுதச்சொல்லி, திருச்சி தோழர் வி.சி.வில்வம் அவர்கள் கேட்டதும் ஒப்புக் கொண்டு, வாழ்வியல் தமிழ் எனும் தொடரை, கடந்த நவம்பர்-1-15 முதல் உண்மை இதழில் எழுதி வருகிறேன்.

இப்போது வாருங்கள் வாழ்வியல் தமிழ்படிப்போம் –





நண்பர்கள் தொடர்ந்து இதழை வாங்கிப் படித்து, எனது தொடர் பற்றிய கருத்துகளைப் பகிர்ந்து கொள்வதோடு தொடரில் என்னென்ன எழுதலாம் என்றும் எனக்கு யோசனை சொல்ல வேண்டுகிறேன். நல்ல யோசனைகளை அவரவர் பெயரிட்டே எழுதுவேன் என்பது இந்து தமிழ் நாளிதழில் நானெழுதிய “தமிழ் இனிது”தொடர் படித்தவர்க்குத் தெரியும்.

நன்றி

-----------------------------------------