நா.முத்துநிலவன் நூலுக்கு முனைவர் பா.மதிவாணன் அவர்களின் அணிந்துரை

முனைவர் பா.மதிவாணன் அவர்கள்
தமிழ்த்துறைத் தலைவர்,
பாரதிதாசன் பல்கலைக்கழகம்,
திருச்சிராப்பள்ளி.
நா.முத்துநிலவன் எழுதி வெளியிடக் காத்திருக்கும்  கம்பன் தமிழும் கணினித் தமிழும்’ இலக்கியச் சிந்தனைகள் கட்டுரைத் தொகுப்பு நூலுக்கு, திருச்சிராப்பள்ளி பாரதிதாசன்  பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் பா.மதிவாணன் அவர்கள் வழங்கியுள்ள அணிந்துரை     
------------------------------ 
       நாற்பது ஆண்டுகள் பின்னோக்கிச் சென்று என் மனம் அசை போடுவதைச் சற்றேனும் பதிவு செய்யாமல் இந்த அணிந்துரையை எழுத இயலாது.
                ஒன்றன் அருமையை நெருக்கடியில் தான் உணர முடியும்.  இந்திய வரலாற்றில் சனநாயகத்தின் அருமையை நெருக்கடி நிலைக் காலத்தில் (நுஅநசபநnஉல 1975-1976) உணர முடிந்தது.  அப்போது எனக்கு வயது பதினெட்டு. அரசியல் செய்திகளில் அடங்கா ஆர்வம் பிடர்பிடித்து உந்தியது.  மறுபுறம் என் இலக்கியக் கல்விவழித் தேடலில் நா. வானமாமாலை, க. கைலாசபதி, கோ. கேசவன் முதலியோரின் ஆய்வுப் போக்கிற்கு ஆட்பட்டேன்.  இவற்றால் அன்றைய இடதுசாரி இயக்கம் சார்ந்தேன்.
                1980களின் தொடக்கத்தில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் சேர்ந்து செயல்பட்டபோது அதில் இளைஞர்களின் ஈடுபாட்டையும் விறுவிறுப்பான செயலாற்றலையும் உளந்திறந்த தோழமையையும் ஏக்கத்தோடு எண்ணிப் பார்க்கிறேன்.
                புறத்தும் அகத்தும் நேர்ந்த பெருத்த மாறுதல்களால் தோழர்பலரும் வௌ;வேறு கிளை வழிகளில் பிரிந்தனர்.  சிலர் வேறு அமைப்புகளில் இணைந்தனர்.  சிலர் புதிய அமைப்புகளை உருவாக்கினர்.  சிலர் புதிய கருத்து நிலை சார்ந்தனர்.  சிலர் ஒதுங்கிப் போயினர்.  என்றாலும் அன்றைய கட்சி வறட்டுத்தனமுடையோர் சிலர் தவிர்ந்த தோழர் பலரிடம் இன்றும் தொடரும் நட்பின் அடையாளம் இந்த அணிந்துரை.
                ஆசிரியப் பணியைத் தொண்டாக மேற்கொள்ளுதல், சமூக அக்கறையோடு அழகியல் நயங்குன்றாக் கவிதையாக்கம், நுட்பமானவற்றையும் சுவைபட எளிமையாய் இயம்பும் பேச்சாற்றல், பாடுதற்கமைந்த குரல்வளம், எழில்மிகு ஓவியத் திறன், இயக்கப் பணிகளில் இடையறாது உழைத்தல், அரவணைப்போடு அமைப்புகளை உருவாக்கி நடத்துதல், கணினியின் புதிய தொடர்புச்சாத்தியங்களை உள்வாங்கி உலகளாவிய நிலையில் உலவுதல் இத்தனைக்கும் இடையே இன்முகம் மாறாதிருத்தல் - இவையனைத்தும் இயைந்த அரிய ஆளுமையாளர் கவிஞர் நா. முத்து நிலவன் அவர்கள்.
                அகவையால் மட்டுமன்றி வேறுபல வகைகளிலும் மூத்தவராகிய முத்துநிலவன் தம் நூலுக்கு அணிந்துரை தரும் வாய்ப்பை எனக்கு நல்கியிருப்பது அவரது அன்பின் பொருட்டேயாகும்.  நானும் மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டேன்.
                தமிழறிந்தோரின் வசதிகளுள் ஒன்று, செவ்வியல் இலக்கியம் முதல் இடையறாமல் தொடரும் இலக்கிய வகைகள் பலவற்றைத் தமிழ் வழியாகவே துய்க்க முடிவது.  இதுவே தமிழின் தலையாய சிறப்பென்பேன் நான்.
                மரபுவழித் தமிழ்க் கல்வி ஒரு காலத்தில் - நவீன இலக்கியங்களை அலட்சியமாகப் பார்த்தது.  நவீன இலக்கியப் படைப்பு ஃதிறனாய்வுகளில் ஈடுபட்டவர்கள் மரபிலக்கியங்களைப் பண்டிதச் சரக்கென்று ஒதுக்கினார்கள்.  மிகச் சிலர் விதி விலக்காயிருந்தனர்.  இவ்விதி விலக்குகளின் விரிவுக்குத் தமிழக மார்க்சியரே அடித்தளம் அமைத்தனர் என்பது வரலாற்றுண்மை.  இவ்வழியில் இயங்கும் முத்துநிலவன் மோனை கருதி, ‘கம்பன் தமிழும் கணினித் தமிழும்எனத் தலைப்பிட்டிருந்தாலும் கபிலர் தமிழ் முதல் கணினித் தமிழ் வரை தோய்ந்த தம் சிந்தனைகளைக் கட்டுரையாக்கியிருக்கிறார்.
                ‘காலத்தை மீறிய கவிதைகள்எனும் கட்டுரை தமிழ்க் கவிதை உள்ளடக்க உருவ மாற்றங்களைச் சமூக மாற்றப் பின்னணியில் வைத்துச் சுருக்கமாக அறிமுகப்படுத்துகிறது.
                ‘சங்க இலக்கியமும் தமிழ்ச் சமூக வரலாறும்எனும் கட்டுரை, சங்க இலக்கியங்கள் கொண்டு மார்க்சிய நோக்கில் வரலாற்றை எழுதும் வாய்ப்பைச் சான்றுகளால் புலப்படுத்துகிறது.
                திருக்குறள் முற்றிலும் காலங் கடந்த நூலில்லை என்றாலும் இன்றளவும் ஏற்றிப் போற்றப்படுவதற்கான நியாயங்களை, ‘திருக்குறளில் தமிழும் இல்லை தமிழ் நாடும் இல்லை ஏன்?’ என்கிற கட்டுரை குறள் கூறாமல் உணர்த்தியவை எனும் நோக்கு நிலையில் நின்று - விளக்குகிறது.
                ‘திருக்குறளில் பாடபேதம்!?’ எனும் கட்டுரை கல்விப்புலம் சார்ந்த விவாதக் கட்டுரை.  சீர்களை எழுத்தளவில் காண்பதும் ஓசையளவில் உணர்வதுமாகிய வேறுபாடும் கருதப்பட வேண்டுமென்று தோன்றுகிறது.
                ;கம்பனும் கார்ல் மார்க்சும்’, ‘செம்மொழி மாநாடும் கம்பனும்;’ ஆகிய கட்டுரைகளில் கம்பனை முற்போக்காளர் காண வேண்டிய கோணம் காட்டப்பட்டுள்ளது.  ஜீவா, ரகுநாதன், எஸ்.ஆர்.கே., க.வீரையன் நூல்கள் இவ்வகையில் படிக்கத் தக்கன.
                தமிழில் இலக்கிய விருதுகள்ஃபரிசுகள் பெரிதும் விவாதத்திற்குரியனவாகவே இருந்து வந்திருக்கின்றன் வருகின்றன.  அரசாதரவு பெற்ற கவிச்சக்கரவர்த்திகள் மக்கள் மனத்தில் இடம் பெறவில்லை.  கம்பனுக்கே அந்த இடம் நிலைத்தது.  விவாதமற்ற சாகித்திய அகாதெமி விருது தமிழில் அரிது.  பாரதிக்கு முதல் பரிசு கிட்டாமை பற்றிய ஆய்வில் பொதுவாகத் தமிழ்ச் சமூக மனப்பான்மையையும் புலப்படுத்துகிறார் முத்துநிலவன்.
                திரைப் பாடல்கள் கவிதைகளல்ல என்போரையும் திகைக்க வைத்தவர் கண்ணதாசன்.  படத்தின் பகுதியாகவன்றித் தனிக் கவிதைகளாகக் கண்ணதாசன் பாடல்கள் பல, தம்மைத் தக்கவைத்துக் கொண்டன.  முத்துநிலவன் கண்ணதாசனின் வெகுசன ஈர்ப்பு எழுத்தாற்றலையும், அனுபவம் பதிந்த பாடல்;களையும் எடுத்துக் காட்டியுள்ளார்.
                ‘புதுக் கவிதை வரவும் செலவும்என்கிற கட்டுரையில் ஒருபுறம் புதுக்கவிதையைப் பழம் பண்டிதம் மறுதலித்ததையும் மறுபுறம் புதுப் பண்டிதம் அகமன இருட்டுக்குள் தள்ளியதையும் விமரிசிக்கும் முத்துநிலவன் புதுக் கவிதை வடிவத்தை முதலாளித்துவச் சனநாயகத்தின் விளைவாகவும் அதன் உச்சக் கட்டத்தில் சமூகச் சமத்துவத்தைச் சாதிக்கும் சாதனமாகவும் காண்கிறார்; வரவேற்கிறார்.  அதே வேளையில் மரபுக் கவிதை எனும் மகாநதி?’  என்கிற கட்டுரையில் மரபுக் கவிதைகளின் உயிர்ப்பையும், தொடர்ச்சியையும் அடுக்கடுக்கான சான்றுகளால் புலப்படுத்தியிருக்கிறார்.
                ‘இடக்கரடக்கல்தமிழுக்கு மட்டும் உரியதன்று. ஆங்கிலம் போன்ற மேலை மொழிகளிலும் இம்மரபு உண்டு.  இலக்கியத்தில் - குறிப்பாகக் கவிதையில் - இடக்கரடக்கற் சொற்கள் அவ்வப் படைப்பைப் பொறுத்து ஆற்றல் பெறும்.  அதே வேளையில் வலிந்து புகுத்தும் அதிர்ச்சிகளும் பொறுப்பற்ற அள்ளித் தெளிப்புகளும் தரமாகவே காலாவதியாகிவிடும்.  (இடக்கரடக்கல் அல்லாத சொற்களுக்கும் இது பொருந்தும்
                ஜெய பாஸ்கரன் கவிதையொன்றில் மயிரான்என்ற சொல் வருவதைத் தவிர்த்து மறைமுகமாகச் சொல்லியிருக்கலாம் என்கிற திருப்பூர் கிரு~;ணனின் கருத்தை மறுத்துச் சான்றுகள் பல காட்டி விவாதிக்கிறார் முத்து நிலவன்.
                இன்குலாபின் மனுசங்கடாபாட்டைக் கே.ஏ. குணசேகரன் குரலில் கேட்டபோது நாங்க எரியும்போது எவன் மசுரப் புடுங்கப் போனீங்கஎன்கிற அவலமும் ஆவேசமும் எங்களை உலுக்கின.  இங்கே வேறு எந்த சொல்லும் பொருந்தாது.  முத்து நிலவனும் இதனைச் சுட்டியுள்ளார்.  இத்தொடர்பில் மேலும் ஆர்வமுள்ளோர் பெருமான் முருகனின் கெட்ட வார்த்தை பேசுவோம்எனும் நூலைப் படிக்கலாம்.
                ‘இன்றைய தமிழில் பெண் கவிகள்என்று தலைப்பு இருந்தாலும் சங்ககால ஒளவையை அறிமுகப்படுத்தி அடுத்தடுத்த காலகட்டத்துப் பெண் கவிகளின் போக்கையும் சுட்டிக் காட்டிய பின்பே தலைப்புக்கு வருகிறார் முத்து நிலவன் ; ‘பெண் கவிஞர்எனும் அடைமொழியின் நியாயத்தை முதலியேயே சொல்லி விடுகிறார்.
                பெரிதும் 1980களில் எழுச்சி பெற்று இரண்டாயிரத்தை யொட்டித் தொகுப்புகள் மிகுந்து வரும் பெண் கவிஞர் படைப்புகளில் அவர்தம் தனித்த அடையாளங்கள் மிளிர்வதைக் கவிதைச் சான்றுகளால் நிலுவியுள்ளார் முத்துநிலவன்.
                ‘ஒரு ஜெயகாந்தனும் சில ஜெயகாந்தன்களும்என்கிற கட்டுரை ஜெயகாந்தனின் மணிவிழாக் கால மதிப்பீடு.  அதற்குப் பின் ஜெயகாந்தன் குறிப்பிடத்தக்க எதையும் எழுதாமையினால் அது முழுமையான மதிப்பீடாகக் கொள்ளத் தக்கது.  வணிகஃவெகுசன இதழ் உலகில் எழுத்தாளனின் கம்பீரத்தை நிறுவியவர் ஜெயகாந்தன்.  வெகுசன இதழ்களால் புகழ் பெற்று, அவற்றுக்கேற்ப தமக்கெனத் தனித் தன்மையையும் தக்க வைத்துக் கொண்டு எழுதிய ஜெயகாந்தனின் சாதனைகளையும் சமரசங்களையும் சீர்தூக்கிக் காட்டுகிறார் முத்துநிலவன்.
                இக்கட்டுரையின் உள்ளடக்கச் சிறப்பு ஒருபுறமிருக்க, ஜெயகாந்தன் பாத்திரங்கள் தமக்குள் உரையாடுவது போல் தொடங்கி, இடையில் தாம்புகுந்து பேசி, நிறைவாக அப் பாத்திரங்களின் உரையாடலோடு முடிக்கும் உத்தி சுவையும் பொருத்தமும் புதுமையும் மிக்கது. 
                தமிழிலக்கிய விமர்சன வரலாற்றில் க.நா.சு.வுக்குத் தவிர்க்க முடியாத தனியிடமுண்டெனினும் அவர் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவரல்லர்.
                தம் பரந்த படிப்பால் பயமுறுத்தி, பட்டியல்களையே அவ்வப்போது மாற்றி விமர்சனமெனக் காட்டியவர் க.நா.சு. என்கிற முத்துநிலவனின் மதிப்பீடு உணர்ச்சி வயப்படாதவர்கள் கணக்கில் கொள்ள வேண்டியதாகும்.  க. நா. சு. கருத்துநிலை எதனையும் சாராத தூய இலக்கிய வாதியுமல்லர் என்பதைக் க.நா.சு.வின் எழுத்திலிருந்தே காட்டுகிறார் முத்துநிலவன்.
                இக்கட்டுரை குறித்து சுபமங்களாவில் வந்த ஏற்பு எதிர்ப்புகளையும் தொகுத்துத் தந்திருப்பது நாகரிகம் மட்டுமன்று; சனநாயக முறையுமாகும்.
                தமிழ்ச் சிறுகதைகள் வகைமைவளம் (varients) மிக்கவை.  சில கதைகள் உலகத்தரம் வாய்ந்தவை என்பது எதிரும் புதிருமான விமர்சகர்களாலும் ஏற்கப்பட்ட உண்மை.  இந்த வரலாற்றில் முற்போக்கான நடப்பியக் கதைகளால் தமக்கென ஓரிடம் பெற்றிருப்பவர் மேலாண்மை பொன்னுசாமி என்கிறார் முத்துநிலவன். என்றாலும்  குழு மனப்பான்மை கடந்து விமர்சனமாகக் குறை சுட்டவும் அவர் தயங்கவில்லை.
                ஊடக மாற்றங்களுக்கேற்பத் தமிழ் தன்னைத் தகவமைத்துக் கொள்வதற்கு அண்மைக் காலச் சான்று கணினித் தமிழ்.  இது மேலும் செம்மையும் செழுமையும் உற வேண்டுமென்பதைக் கணினியில் வளரும் தமிழ்என்கிற கட்டுரை காட்டுகிறது.
                உள்ளடக்கத்தால் மட்டுமன்றி உணர்த்து முறையாலும் இக்கட்டுரைகள் வாசகனை இன்முகம் காட்டி அழைத்துச் செல்கின்றன.
                ஜெயகாந்தன் மதிப்பீட்டுக் கட்டுரை உத்தி பற்றி முன்பே குறிப்பிட்டுள்ளேன்.
                “அறிவியலின் படி வேண்டுமானால் ஆலமரம்தான் விழுதுவிடும் என்று கூறலாம்.  ஆனால் தமிழ் இலக்கியவுலகில் அரச மரம்தான் ஏராளமான விழுதுகளோடும் விதைகளோடும் விரிவடைந்து நிற்கிறதுஎன்று ஒரு கட்டுரை தொடங்குகிறது.  எப்படி? படித்துப் பாருங்கள்.
                “கம்பனை மட்டுமல்ல ஆண்டாளையும் ஓவியர் உசேனையும் நாடு கடத்துவதும் அல்லது ஏடு கொளுத்துவதும் ஒன்றுதானேஎனும் வாக்கியத்தில் இயல்பாக நடைபோடுகிறது எதுகை.
                இன்னும் பல இடங்களைக் காட்டலாம்.
                ஆய்வாழமும் நுட்பமும் மிக்கவற்றை வெகு மக்களிடம் அநாயாசமாகக் கொண்டு செல்லும் எழுத்தாற்றல் கைவரப் பெற்றவர் கவிஞர் முத்து நிலவன் என்பதற்கு இக்கட்டுரைகள் சான்று பகர்கின்றன.  அதே வேளையில் அடுத்த கட்டத்திற்கு வாசகனை உந்தித்தள்ளவும் வேண்டும்.  இந்தத் தெளிவும் இவரிடம் இருக்கிறது என்பது சங்க இலக்கியமும் தமிழ்ச் சமூக வரலாறும்எனும் கட்டுரையின் இறுதியில் புலனாகின்றது.
                மார்க்சியம் காலாவதியாகி விட்டது என்பவர்கள் - தமிழிலக்கிய ஆராய்ச்சியாளவில், எனக்கு எட்டியவரை மார்க்சிய அணுகுமுறை தந்த தெளிவைத்தாண்டிப் பெரிய அளவில் புதிதாக எதையும் செய்துவிடவில்லை. கவிஞர் முத்துநிலவன் அவர்களிடம் தமிழ் உலகம் மேலும் எதிர்பார்க்கிறது.
நட்பார்ந்த தோழமையுடன்
பா.மதிவாணன்,                                  
தமிழ்த்துறைத் தலைவர்,
பாரதிதாசன் பல்கலைக்கழகம்,

திருச்சிராப்பள்ளி - 620 024
------------------------------------------------------------------------------ 

நா.முத்துநிலவன் நூலுக்கு ச.தமிழ்ச்செல்வன் அவர்களின் முகவுரை



நா.முத்துநிலவன் எழுதி வெளியிடக் காத்திருக்கும் – “கம்பன் தமிழும் கணினித் தமிழும்“ (இலக்கியச் சிந்தனைக் கட்டுரைகள்) நூலுக்கு, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் அவர்கள் எழுதியிருக்கும் முகவுரை -
(“பூ“ திரைப்படக் கதாசிரியரும் இவரே என்பது ஒரு கூடுதல் தகவல்)
--------------------------------------------------------
எங்கெங்கோ அழைத்துச்செல்லும் கட்டுரைகள்
       கவிஞர் தோழர் நா.முத்துநிலவனின் இக்கட்டுரைத்தொகுப்பை நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்தவர்களில் நானும் ஒருவன். தொகுக்கப்படும்போதுதான் எழுதியவருக்கு (தனக்கே) ஓர் அடையாளம் கிடைக்கும்.இந்தப் பதினாறு கட்டுரைகளும் தமிழ் இலக்கிய உலகில் கடந்த நாற்பது ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்ற  சில ஆழமான விவாதங்களுக்கு ஊடே நடந்து செல்வதால் 50 ஆண்டுகால இலக்கிய வரலாற்றின் ஒரு குறுக்கு வெட்டாக ஒரு முக்கியத்துவம் இத்தொகுப்பிற்குக் கிடைக்கிறது.
ஒரு பெண்ணை அவள் பெண் என்பதாலேயே இச்சமூகம் அவளை நடத்தும் விதமும்  அதில் உறைந்திருக்கும் பாலியல் வன்முறையும் ஆணாதிக்க உளவியலும் இன்றைய தமிழ்ப் பெண்கவிகளின்   கவிதை வரிகளில் எங்கனம் தெறித்து வருகின்றன என்பதை இன்றைய தமிழில் பெண் கவிகள் என்கிற கட்டுரையில் தொகுக்கிறார்.தன்னுடைய கருத்தை துறுத்தலாக முன் வைக்காமல் கவிஞர்களின் கவிதைகளை முன்வைத்து தன்னுடைய பார்வையை இடையியையே வைத்துச்செல்கிறார். ஆணாய்ப்பிறப்பது இயற்கை தரும் லாட்டரிப்பரிசு  என்கிற நிர்மலா சுரேஷ் வரிகளைச் சொல்லிவிட்டுத் தொடர்ந்து அதுவும்மேல்சாதி ஆணாய்ப் பிறப்பது பம்பர் பரிசுஎன்பதை அவர் சொல்லவில்லை ,நாமாகப் புரிந்து கொள்ள வேண்டியதுதான் என்று தன் கருத்தைப் பதிவு செய்யும் விதம் ரசமாக இருக்கிறது.
        புதுக்கவிதையின் வரவு செலவுக்கணக்கைப் பார்க்கும் அடுத்த கட்டுரை உண்மையிலேயே என்னைப் பழைய காலத்துக்கு இழுத்துச்சென்றது.புதுக்கவிதைக்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் அன்று நடந்த விவாதங்களைத் தொகுத்துத்தரும் இக்கட்டுரை வல்லிக்கண்ணன் இல்லையே என்கிற குறையைத் தீர்க்கிறது.அன்றைய சில கவிதைத் திருட்டுகளையும்கூட இக்கட்டுரை அம்பலப்படுத்துகிறது.நமது முற்போக்குக் கவிஞர்கள் குறித்து முத்துநிலவன் கொள்ளும் நம்பிக்கையும் பெருமிதமும் எனக்கு இல்லை.அவர்களின் ஊக்கமும் நோக்கமும் பாராட்டும்படி இருப்பதுபோல் கவிதைகள் இன்னும் வந்துசேரவில்லை என்பது என் கருத்தாக இருக்கிறது.
         சங்க இலக்கியமும் தமிழ்ச்சமூக வரலாறும் குறித்துப் பேசும் கட்டுரை ஓர் அரிய வகைக்கட்டுரை.சங்கப்பரிச்சயமும் ஆழ்ந்த வாசிப்பும் இல்லாத வாசகர்களுக்கு எளிமையாக ஓர் அறிமுகத்தைச் செய்கிற கட்டுரை இது.சங்க காலத்து மக்கள் நிலை என்னவாக இருந்த்து என்பதைப் பேசும் கட்டுரையின் இறுதிப்பகுதி முக்கியமானது. மேலாண்மை பொன்னுச்சாமியின் “கொலை“ சிறுகதையை முன் வைத்து அவர் நட்த்தும் கருத்துப்போர், ஒரு சக படைப்பாளிக்குக் கேடயமாக நிற்கும் ஆவேசமான வாதங்களின் தொகுப்பாக அமைகிறது. அகல ஆசையில் ஆழத்துக்கு முக்கியத்துவம் தராத அவரின் பிற்காலக் கதைகள் குறித்த விமர்சனத்தையும் முன்வைத்துச் செல்கிறது இக்கட்டுரை.
       இத்தொகுப்பின் மிக முக்கியமான கட்டுரை க.நா.சு.வை தெனாலிராமனா படிப்பாளியா என்று கேள்வி கேட்கும் கட்டுரை. க.நா.சு.  பிறநெது நூற்றாண்டு சமீபத்தில் கொண்டாடப்பட்ட பின்னணியில் இக்கட்டுரை இன்னும் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.மொழிபெயர்ப்பில் தமிழுக்கு கநாசு அளித்துள்ள  கொடைகளையும் அவரது சோதனைப் படைப்பு முயற்சிகளையும் அங்கீகரிப்பதில் துவங்கி ஆர்.எஸ்.எஸ்.க்கு ஆதரவான அவரது கருத்துவரை எல்லாவற்றையும் பதிவு செய்ததோடு இக்கட்டுரை சுபமங்களாவில் வந்தபோது எழுந்த எதிரும்புதிருமான எதிர்வினைகளையும் நேர்மையுடன் பிற்சேர்க்கையாக இணைத்திருப்பது பாராட்ட்த்தக்கது.
        இதே தரத்துடன் வந்துள்ள இன்னொரு கட்டுரை ஜெயகாந்தன் பற்றியது.தமிழ் இலக்கிய உலகின் ஆகப்பெரிய ஆளுமைகளில் ஒருவரான ஜெயகாந்தனை அவருக்கு உரிய மரியாதை அளித்து பிந்திய ஜெயகாந்தனின் சறுக்கல்களைப் பட்டியலிடுகிறார்.முனியம்மாவும் ராசாத்தியும் அம்மாசியுமாக இருந்த அவரது நாயக நாயகிகள் கங்காவும் சாரதா மாமியும் கௌதம சித்தார்த்தனுமாக மாறிப்போன கதையை ஆவணப்படுத்தியுள்ளார்.விமர்சன்ங்கள் எல்லாவற்றுக்கும் மேலாக  ஜெயகாந்தன் நம்மை ஆகர்ஷிக்கிறார் இன்றும் என்று எனக்குச் சொல்லத்தோன்றுகிறது.
         கம்பனையும் கார்ல் மார்க்சையும் எதிர்ப்பில் விளைந்த கனிகள் என்கிர புள்ளியில் வைத்து ஒப்பிட்டுப்பேசும் கட்டுரை புதிய அணுகுமுறையோடு இருப்பதோடு அன்றைய நாட்களில் கம்பனை உயர்த்திப்பிடித்த ஜீவாவின் குரலை நினைவுபடுத்துவதாகவும் எதிரொலிப்பதாகவும் அமைந்துள்ளது.
         இன்னும் தொடர்கின்ற வலைத்தளக்கட்டுரைகள் ஒவ்வொன்றும் ஒரு விவாதப்புள்ளியை ஆழமாகத் தொட்டுச்செல்வது மகிழ்ச்சியளிக்கிறது.சிறு சிறு செய்யுள்களாகத்துவங்கிய தமிழ்க்கவிதை பெருமன்னர்கள் எழுந்தபோது விரிந்து சென்றதையும் காலத்தை மீறி எழுந்த சித்தர்களையும் தேராமன்னா என்று வெகுண்டெழுந்த பெண் குரலாக்க் கண்ணகியைக் குறிப்பிடுவதும் நான்கு குறட்பாக்களில்  ஆய்த எழுத்தை வள்ளுவன் ஏன் பயன்படுத்தினான் என விரிவாகப் பேசுவதும் இலக்கியத்தில் கெட்ட வார்த்தைகளின் பயன்பாடு குறித்து மனம் திறந்து பேசுவதும் பாரதியின் பரிசு பெற்ற கவிதை குறித்து தேடி எடுத்து முன்வைக்கும் கருத்துக்களும் எனப்பயணிக்கும்  ஒன்பது சின்னச் சின்னக் கட்டுரைகளும் காரமான கட்டுரைகள்தாம். 
         இறுதியில் இணையத்தில் புழங்க வசதியாக சில தகவல்களையும் தந்திருப்பது இத்தொகுப்பின் இன்னொரு சிறப்பாகும்.
பல்வேறு தளங்களுக்கு நம்மை அழைத்துச்செல்லும் இக்கட்டுரைகள் பரவலாக வாசிக்கவும் விவாதிக்கவும்படவேண்டிய மிக முக்கியமான கட்டுரைகள்.
வாழ்த்துக்கள் தோழரே...
அன்புடன்
ச.தமிழ்ச்செல்வன்
15.08.2014
சிவகாசி
------------------------------------- 
என்ன செய்ய? வெளியீட்டு விழா தள்ளிப்போய்விட்டது. அடுத்தடுத்து முகவுரை, அணிந்துரைகளை எடுத்துப் போட்டு ஒரு மாசத்தை ஓட்டணும்ல..? படிக்கிறவங்க அப்படியப்படியே கருத்தைப் பதியலாம். ஏற்கெனவே சில வலைப்பக்கக் கட்டுரைகளுக்கான பின்னூட்டக் கருத்துகளை நூலில் சேர்த்திருக்கிறேன்.. அதெல்லாம் யார்யாருன்னு இப்பச் சொல்லக்கூடாதில்ல...? புத்தகம் வரட்டும். தெரிஞ்சிக்கலாம்
----------------------------------நா.மு.-- 04-09-2014---- 

விருந்து தயாரா இருக்கு.. கொஞ்சம் பொறுங்க..



அழைப்பிதழ் வந்தாச்சு..
புத்தகங்களும் வந்தாச்சு..
அனுப்பத் தயாரான போது 
வந்தது ஒரு தகவல்!
இவற்றோடு எங்கள் ஊரில் 
நகராட்சித் தேர்தலும் வந்ததாக...





ஆக, செப்டம்பர்-7ஆம் தேதி நமது 
புத்தக வெளியீட்டு விழா இல்லை!

சிறிதுநாள் காததிருக்க வேண்டி உள்ளது

அதே அழைப்பிதழின்படி, (நாள்மட்டும் மாற்றி) 
நமது விழா உறுதியாக சிறப்பாக நடக்கும்.

தேர்தல் திருவிழா முடிய ஒருமாதம் எடுக்கும்.
எனவே நமது விழாத் தேதியை விரைவில் தெரிவிப்பேன்.
நண்பர்கள் மன்னிக்க வேண்டுகிறேன்.
------------------------------------------------------------


எனது 3 நூல்கள் வெளியீட்டுவிழா - அழைப்பிதழ் சமூக-கல்வி-இலக்கிய ஆர்வலர்கள் வருக!

எனது 3 நூல்கள் வெளியீட்டுவிழா 
அழைப்பிதழ் அனுப்பியுள்ளேன் 

சமூக-கல்வி-இலக்கிய-ஆர்வலர்கள் 
நண்பர்களோடு வருக! 

பின்வரும் அழைப்பிதழில் கண்டுள்ளவாறு, 
எனது நூல்களின் வெளியீட்டுவிழா 
புதுக்கோட்டையில் நிகழவுள்ளது.

நாள்-05-10-2014 ஞாயிறு - மாலை6-00மணி 
நகர்மன்றம் வடக்கு ராஜவீதி
புதுக்கோட்டை  

உண்மையான மக்கள் கலைஞன் 
நெல்லை கரிசல் குயில் கிருஷ்ணசாமி யின் 
அற்புதஇசை நிகழ்ச்சி பார்க்க 
முன்னதாகவே வரவேண்டும்.
என
அன்புடன் அழைக்கிறேன்
அன்புடன்,
தோழமையுள்ள - 
நா.முத்துநிலவன், புதுக்கோட்டை
அலைபேசி எண்-94431 93293
------------------- இதோ உங்களுக்கான அழைப்பிதழ் --------------- 


அழைப்பிதழில் உள்ள தேதி மட்டும் 
எங்கள் ஊர் நகராட்சித் தேர்தல் காரணமாக 
அக்டோபர்-05ஆம் தேதி 
என  மாற்றப்பட்டுள்ளது.
வேறு எந்த மாற்றமும் இல்லை.

நூல்களுக்கான அட்டை ஓவியங்கள் 
1,3-ஓவியர் மருது அவர்கள், சென்னை
“கம்பன் தமிழும் கணினித் தமிழும்“ -
 அட்டை ஓவியம் திரு குமார், சிவகாசி
அழைப்பிதழ் வடிவமைப்பு-
எம்எஸ்ஆர் டிஜிடல்ஸ், புதுக்கோட்டை.






அழைப்பிதழை அஞ்சலில் பெற விழையும் நண்பரகள் 
எனது மின்னஞ்சலுக்கு 
உங்கள் முகவரியைத் தெரிவிக்குமாறு 
அன்புடன் வேண்டுகிறேன் - 
-எனது மின்னஞ்சல்-
muthunilavanpdk@gmail.com
--- மற்றவை நேரில்... நன்றி வணக்கம் ---
---------------------------------------------------------- 

தீரர் சத்தியமூர்த்தி பிறந்தநாள் - கல்லூரிவிழா சிறப்புரை

நாட்டுக்காக மட்டுமல்ல, பாரதி பாட்டுக்காகவும் 
போராடியவர் தீரர் சத்தியமூர்த்தி!
புதுக்கோட்டை-ஆகஸ்ட்.19. நாட்டுக்காக மட்டுமல்லாமல், மகாகவி பாரதியின் பாட்டுக்காகவும் போராடியவர் திருமயம் தந்த தீரர் சத்தியமூர்த்தி என்று அவரது பிறந்தநாள் விழாவில் புகழாரம் சூட்டினார் கவிஞர் நா.முத்துநிலவன்.
மாட்சிமை தங்கிய மன்னர்கல்லூரியின் முதுகலை வரலாற்றுத்துறை நடத்திய தீரர் சத்தியமூர்த்தியின் பிறந்தநாள் விழாவுக்குக் கல்லூரி முதல்வர் முனைவர் மீ.வீரப்பன் தலைமை தாங்கினார்.
விழாவில் சிறப்புரையாற்றிய கவிஞர் நா.முத்துநிலவன் மேலும் பேசியதாவது-
நூற்றி இருபத்தேழு ஆண்டுகளுக்கு முன், இன்றைய நமது திருமயத்தில் பிறந்த சத்தியமூர்த்தி, சென்னைக் கிறித்துவக்கல்லூரியில் வரலாறும், சட்டக் கல்லூரியில் சட்டமும் படித்துவிட்டு, தமிழக வரலாற்றை மாற்றப் பாடுபட்டவர்.
தான் கைபிடித்து அழைத்துக் கட்சியில் சேர்த்த காமராசரைத் தலைவராக்கி அழகுபார்த்தது மட்டுமலல், அவரது தலைமையின்கீழ்  செயலாளராகப் பணியாற்றிய பெருந்தன்மை இன்றைய அரசியல்வாதிகளுக்கு மட்டுமல்ல இளைஞர்களுக்கும் முன்னுதாரணமாகும்! அவர் சென்னை நகர மேயராக இருந்தபோதுதான் இன்றைய பூண்டி நீர்த்தேக்கத்தை, ஆங்கில அரசுடன் வாதாடி அமைத்தார். ஆனால், அந்தப் பணிகள் நிறைவடைவதற்குள் அவர் காலமானதால், பின்னர் காமராசர் அந்த நீர்த்தேக்கத்திற்கு சத்தியமூர்த்தி நீர்த் தேக்கம்என்றே பெயரிட்டார்.
நாட்டுக்காகப் பாடுபட்டதோடு, பாரதி பாட்டுக்காகவும் அவர் போராடினார். பர்மா அரசு, நமது பாரதி பாடல்களைத் தடைசெய்ததோடு, பாடல் நூல்களைப பறிமுதல் செய்யவும் ஆணையிட்டதைக் காரணம் காட்டி அன்றைய நம் சென்னை ராஜதானிபாரதி பாடல்களைத் தடைசெய்து, பறிமுதலும் செய்ய சட்டமன்றத்தில் மசோதா கொண்டுவந்தது. அதை எதிர்த்து முழங்கிய தீரர் சத்தியமூர்த்தி, “நீங்கள் தாராளமாக எங்கள் பாரதியின் பாடல்களைத் தடைசெய்து கொள்ளலாம், பாரதியின் பாடல் நூல்களையும் பறிமுதல் செய்து எரிக்கவும் செய்யலாம்... எங்களுக்கு ஒன்றும் ஆட்சேபணை இல்லைஎன்று தன் பேச்சைத் தொடங்கினார்.
எல்லாரும் அதிர்ந்து போனார்கள்... தொடர்ந்து பேசிய அவர், “ஆனால் அது வெட்டி வேலை. ஏனெனில், பாரதி பாடல்கள் அனைத்தும் எங்கள் தேசபக்தி மிக்க தமிழர்களுக்கு மனப்பாடம்! நாங்கள் ஊர்ஊராகப் பாரதியைப் பாடிக்கொண்டு ஊர்வலம் போவோம்.. மனப்பாட சக்தியைப் பறிமுதல் செய்யும் புதிய எந்திரம் எதையும் நீங்கள் இன்னும் கண்டுபிடிக்கவில்லை என்பதால், உங்களால் தடுக்கவோ நிறுத்தவோ முடியாது. அதனால் நீங்கள் பாடல்களைத் தாராளமாகத் தடைசெய்து கொள்ளவோ எரிக்கவோ கூட ஆணையிடலாம்...ஆனால் அது வீணான வேலை என்பதை கனம் சர்க்கார் புரிந்து கொண்டால் நல்லது”  என்று முழங்கினார். பின்னர் பாரதி பாடல்களைத் தடைசெய்யும் முயற்சியை அன்றைய சென்னை மாநில அரசு கைவிட்டது என்பதைச் சொல்லவும் வேண்டியதில்லை.
பதவிகளைத் துறந்து தனிநபர் போராட்டங்களில் ஈடுபட்டு, “வெள்ளையனே வெளியேறுஎன்னும் போரை இந்திய விடுதலை இயக்கத்தினர் நடத்திய போது, சிறைப்பிடிக்கப் பட்ட தீரர் சத்தியமூர்த்தி, தனது ஐம்பத்தைந்தாம் வயதிலேயே உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டு சிறைக் காவலர்களால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மருத்துவம் பார்த்துக்கொண்டிருக்கும்போதே காலமானார். அந்த வகையில் சிறைவாசத்தின்போது காலமான சத்தியமூர்த்தியின் தியாகம் மிகப்பெரிது.
அவரது பேச்சு வன்மையினாலேயே ரவுலட் சட்டம் மற்றும் மண்டேகு செம்ஸ் போர்டு சட்டங்களைப் பற்றி விவாதிக்க இங்கிலாந்துக்கு அனுப்பப் பட்டார். அவரிடம் அரசியல் பாடம் படித்த காமராசர், இந்தியா விடுதலை பெற்றபோது முதல் தேசியக் கொடியைத் தனது குருவின் வீட்டிலேயே ஏற்றிவைத்தார். முதலமைச்சரானதும் அந்த மாவீரரின்  துணைவியாரிடமே முதல் வாழ்த்தையும் பெற்றுக்கொண்டார்
அவரோடு, தேவதாசி ஒழிப்பு மசோதாவின்போது சட்டமன்றத்தில் வாதிட்டு வென்ற அன்னை முத்துலட்சுமியும் இதே மாமன்னர் கல்லூரியின் அந்நாள் மாணவி என்பதைக் கருத்தில் கொண்டு, இன்றைய வரலாற்றுத் துறை மாணவ-மாணவியர் நாளைய வரலாற்றில் இடம்பெறுவோராகவும், எழுதுவோராகவும் இருக்க வேண்டும்
மேற்கண்டவாறு கவிஞர் நா.முத்துநிலவன் பேசினார். அடுத்து உரையாற்றிய பாரதி இலக்கியக் கழகத்தின் அமைப்பாளர் ஜெயச்சந்திரன், சத்திய மூர்த்தியின் தேச பக்தியையும் தியாக வாழ்க்கையையும் மாணவ-மாணவியர்க்கு எடுத்துரைத்தார்.
விழாவிற்கு வந்திருந்தோரை வரலாற்றுத் துறைத்தலைவர் முனைவர் இரா.குமரன் வரவேற்றார். இணைப்பேராசிரியர்கள் முனைவர்ச.நந்தீஸ்வரன் அறிமுகவுரையும், துணைப்பேராசிரியர் முனைவர் செ.பனிதாசன் நன்றியுரையும் வழங்கினர்.
மன்னர் கல்லூரிக் கலையரங்கில் நடந்த நிகழ்ச்சியில் வரலாற்றுத் துறையின் முன்னாள் துறைத்தலைவர் முனைவர் விஸ்வநாதன், தமிழ்த்துறைப் பேராசிரியர் முனைவர் சு.மாதவன் உள்ளிட்ட பேராசிரியர் பலருடன், இருநூற்றுக்கும் மேற்பட்ட மாணவ-மாணவியரும் கலந்துகொண்டது குறிப்பிடத் தக்கது.  
-----------------------------------------------
(செய்திக்குநன்றி-திரு.இரா.மோகன்ராம், தினமணி செய்தியாளர்            வெளியீட்டுக்கு நன்றி- தினமணி-திருச்சிப்பதிப்பு-21-08-2014)

15-08-2014-எனது தொலைக்காட்சி உரை - விடியோ இணைப்பு



சுதந்திர தினப் பட்டிமன்றம்- 



கலைஞர் தொலைக்காட்சியில்

15-08-2014  அன்று  ஒளிபரப்பானது

சுதந்திரக் காற்றைப் 
பெரிதும் சுவாசிப்பவர்கள்
முதியவர்களாஇளையவர்களா?

- நடுவர் -
நகைச்சுவைத் தென்றல்
திண்டுக்கல் ஐ.லியோனி
 - வழக்காடும் பேச்சாளர்கள் -
 முதியவர்களே                        இளையவர்களே
(1) புதுகை நா.முத்துநிலவன்        (1) மதுக்கூர் இராமலிங்கம் 
 (2) வேலூர் அன்பு             (2) கோவை தனபால்,
 (3) சென்னை விஜயகுமார்       (3) விழுப்புரம் வல்லபராசு
                      ----------------------------------------------------------------------------- 
யூ-ட்யூப் இணைப்புக்குச் செல்ல--

(12நிமிடம் 45ஆவது மணித்துளியிலிருந்து எனது குரல..)

பார்த்து, கேட்டுவிட்டுத் திட்டலாம்....
(சும்மா பார்க்காம,..கேக்காம... “சூப்பர் மா“ என்றோ
“அடப்போயா..“னோ சொன்னா ஏத்துக்க மாட்மோம்ல..)
பார்த்து, கேட்டு கருத்துச் சொல்வோருக்கு
எனது முன்கூட்டிய நன்றி.நன்றி நன்றி
---------------------------------------------------------------------------------

ராஜ் டிவியில் எங்கள் பட்டிமன்ற ஒளிப்பதிவு

தாய்மொழிவழிக் கல்வியே 
இன்றைய தேவை -


ராஜ் தொலைக்காட்சியில் வந்த 
திண்டுக்கல் ஐ.லியோனி பட்டிமன்றத்தில் 
நா.முத்துநிலவன் வழக்குரை
காணச் சொடுக்குக - யூ-ட்யூப் இணைப்பிற்கு..

https://www.youtube.com/watch?v=EArnp0Sp_Z0&list=PLJQVa3kQtZSyGUph9YOOGuJ_iZFNy-scL
--------------------------------------------
நேற்றைய -15-08-2014 கலைஞர் தொலைக்காட்சியின் எமது பட்டிமன்றத்தை நானும் பார்க்க இயலாத சூழலில், யூ-ட்யூபில் இருக்குமா என்று தேடியதில் கிடைத்த பழைய பட்டிமன்றமிது.. அதைக் கண்டவர்கள் சொன்னால் அதையும் வலையில் ஏற்றலாம்... அதைக் காணமுடியவிில்லையேஏஏஏஏஏ!
------------------------------------------------------------------------------------------------------

கவிஞர் சுவாதியின் -24ஆம்- நூல்வெளியீட்டு விழா..

இன்று நடைபெறவுள்ள இன்னொரு நிகழ்ச்சி -
புதுக்கோட்டை கவிஞர் சுவாதியின் -24ஆம்- நூல்வெளியீட்டு விழா..
இதோ.. அருகில் இருப்பவர்கள் வாருங்களேன்..

இன்றைய குமுதம் சிநேகிதியில் சுவாதி பேட்டி...


நமது வலைப்பக்கக் கவிஞர்கள் கவனிக்க...
சுவாதியின் 24ஆவது நூல் இது...
அப்ப நீங்க...?

கலைஞர் தொலைக்காட்சியில் நமது சுதந்திர தினப் பட்டிமன்றம்

நண்பர்கள் அனைவர்க்கும்
 சுதந்திரத் திருநாள் வாழ்த்துகளைச் சொல்ல
உங்கள் வீட்டுக்கே வருகிறேன்!
-------------------------- 

சுதந்திர தினப் பட்டிமன்றம்- 

கலைஞர் தொலைக்காட்சியில்

15-08-2014 (காலை9மணி) ஒளிபரப்பாகிறது


சுதந்திரக் காற்றைப் 
பெரிதும் சுவாசிப்பவர்கள்
முதியவர்களா? இளையவர்களா?

- நடுவர் -
நகைச்சுவைத் தென்றல் 
திண்டுக்கல் ஐ.லியோனி

              முதியவர்களே                        இளையவர்களே
 (1) புதுகை நா.முத்துநிலவன்        (1) மதுக்கூர் இராமலிங்கம் 
 (2) வேலூர் அன்பு             (2) கோவை தனபால்,
 (3) சென்னை விஜயகுமார்       (3) விழுப்புரம் வல்லபராசு
                      ----------------------------------------------------------------------------- 

யூ-ட்யூபில் ஏற்றும் தொழில்நுட்பம் தெரிந்தவர்கள் 
பட்டிமன்ற ஒளிபரப்பு முழுவதையும் ஏற்றிய பின்,
 என் பேச்சைத் தனியாகவும் ஏற்றி, 
அதைப் பார்க்கும் வழியையும் தெரிவிக்கும்படி 
அன்புடன் வேண்டுகிறேன்-15-08-2014 
--------------------------------------------------------------------- 
இணைப்பு 17-08-2014அன்று கிடைத்துவிட்டது
யூ-ட்யூப் இணைப்புக்குச் செல்ல--
-----------------------------------------------------------------------

உலகம் ரொம்ப வேகமாத்தான் போவுது! -விடியோ பாருங்க..

அறிவியல் எவ்வளவோ வளர்ந்துவிட்டது!
ஆனால்... எவ்வளவு வளர்ந்திருக்கிறது என்பது
நமக்குத் தெரிவதிலலை அல்லவா?

1969இல் ஆர்ம்ஸட்ராங்கும், ஆல்ட்ரினும் நிலவில் இறங்கியபோது, கூடப்போயிருந்த காலின்ஸ் என்பவரைத் தரையில் இருந்த அமெரிக்கப் பத்திரிகையாளர்கள்  “இந்த அனுபவம் எப்படி?” என்று கேட்டபோது அவர் சொன்ன பதில்-
“ஒரு நாளில் 4முறை சூரியன் உதித்து மறைவதைப் பார்த்தேன்“
(அதாவது பூமி சுற்றும் வேகத்தைப்போல 4மடங்கு வேகத்தில் அந்த விண்கலம்  “அப்பல்லோ-13(?)“ சுற்றியதைத்தான் அப்படிச் சொன்னாராம்!

இப்ப சூப்பர் ஃபாஸ்ட் பஸ், புல்லட் ட்ரெயின் எல்லாம் வந்தாச்சு..
(இன்னும் கொஞ்சநாளில் அரைமணிநேரத்தில் 500கிமீ. போய் சென்னை அமிஞ்சிக்கரை பாவா கடையில டீ குடிச்சிட்டு அடுத்த அரைமணி நேரத்துல வீட்டுக்கு சாப்பிட வந்திடலாம்..
என்ன ஒரே பிரச்சினை... துட்டு-டப்பு-காசு-பணம் வேணும்..)

ஜப்பானியத் திரைப்படம் “புல்லட் ட்ரெயின்” பார்த்தவங்களுக்கு நான் சொல்றது ஆச்சரியமாப் படாது  (இ்ல்லையா கஸ்தூரி..?)

சரி அதெல்லாம் இருக்கட்டும்.. நம்ம வீட்டுப் பரணியில கிடக்குற 40வருடம் முந்தி பள்ளிக்கூடத்துல படிச்சப்ப வாங்குன(?) ஆட்டோகிராஃப் புத்தகத்தை எடுத்துப் பார்த்த அனுபவம் உங்களுக்கு உண்டா?
எனக்கு உண்டு-1970ல அதிராம்பட்டினம் காதர்மொகிதீன் உயர்நிலைப் பள்ளியில் 9ஆம் வகுப்புப் படித்தபோது வாங்கினது இன்னும் இருக்கு...)

அந்த அனுபவம் வேணும்னா... இதப் பாருங்க..
என்ன ஒரு காமெடியா இருக்கு.. ???!!!

உலகம் ரொம்ப வேகமாத்தான் போவுது! இதப்பாத்தா தெரியுது!

தனது முகநூலில் எடுத்துப் போடடு எனக்கும் அனுப்பிய என் மகள் அ.மு.வால்கா(துபை), மற்றும் நெல்லை ராஜன் ஆகியோர்க்கு நன்றி..

சரி... விடியோப் படத்தைப் பார்க்கலாமா..
https://www.facebook.com/anbuvolga/posts/930731426942814
அல்லது -  
https://www.facebook.com/photo.php?v=808419199192347&set=vb.100000728228619&type=2&theater