தமிழ்நாட்டில்
அப்புறம் சொல்லித் தரலாம்!
--நா.முத்துநிலவன்--
14-6-2019-தேதியிட்ட ‘இந்து-தமிழ்’ நாளிதழில் எழுத்தாளர், ஆசிரியர் அ.வெண்ணிலா ஒரு
முக்கியமான கேள்வியை முன்வைத் திருக்கிறார். “தமிழ்நாடு முழுவதிலுமுள்ள
தனியார் பள்ளிகளும், மத்திய அரசுப் பள்ளிகளும் இந்தி மொழியைக்
கற்றுத் தரும்போது, அரசுப் பள்ளிகளில் இந்திகற்றுத்தரக் கூடாதா?” என்று கேட்டு, இங்கிருக்கும் இருமொழி ஆதரவுத் தலைவர்களைப்
பார்த்து, “இது என்ன
இரட்டை வேஷம்?” என்றும் காட்டமாகவே கேட்டிருக்கிறார்!
இதுதான் பிரச்சினையே! இருமொழியோ, மும்மொழியோ இந்தி வேண்டுமா? வேண்டாமா, எனும் கேள்விக்குச் சரியான பதிலை உணர்ந்து தெளிந்தாக வேண்டும்.

