புதுக்கோட்டை புத்தகத் திருவிழா-2016


புத்தகக் காதலர்கள் வருக!
வாராது போல் வந்த மாமணி
புதுக்கோட்டை மக்களின்
நெடுநாள் கனவு!
இப்போது அவசரமாக நிறைவேறுகிறது!
இதுவும்
கவிஞர் தங்கம் மூர்த்தி
விழாக்குழுத் தலைவர்
என்பதால் மேலும்  சிறப்படைகிறது
----------------------------------
- முக்கியமான கூடுதல்செய்தி -
புதுக்கோட்டை மாவட்டப் படைப்பாளிகள்
என்றொரு அரங்கை (ஸ்டால்) வாங்கியிருக்கிறோம்

வலைப்பதிவர் திருவிழா - வேண்டுகோள்!

20-11-2016 காலை,  கணினித்தமிழ்ச்சங்க நிறுவுநர்
முனைவர் நா.அருள்முருகன் அவர்கள் தலைமையில்
 “வலைப்பதிவர் திருவிழா” நடத்துவது பற்றி நடந்த
ஆலோசனைக் கூட்டம்

---------------------------------------------------------------------------












புதுக்கோட்டையில் வலைப்பதிவர் திருவிழா நடந்து முடிந்து ஓராண்டு கடந்துவிட்டது. 2016ஆம் ஆண்டு, மாநிலம் தழுவிய விழாவை நடத்த வேறெந்த மாவட்டத்தினரும் --இன்றுவரை-- முன்வரவில்லை.
  

மை வச்சதுக்குப் பதிலா மருதாணி வச்சிருக்கலாம்! (வாசகர் மீம்ஸ்)

மை வைக்கிறதுக்கு பதிலா 
மருதாணி வெச்சாலாவது 
வரிசைல நின்னு காய வைச்சிடலாம்... 
மோடி ஜி 
உங்களுக்கு Creativity பத்தல....
-ஆர்த்தி ரவிசங்கர்


ஏடிஎம்களில் எத்தனை முறை வேண்டுமானாலும் பணம் எடுக்கலாம் -
ரிசர்வ் வங்கி # அது ஏடிஎம்- பணத்தை வச்சுட்டு சொல்லணும்....
எப்ப பாரு எதாது பேசிட்டு
- கமல் காம்



இருபது லட்சம்பேர் பார்த்த குறும்படம்!

காதல்கதைதான்
என்றாலும் இன்றைய இளைய இணையரின் ஈகோ வை மையப்படுத்தி அற்புதமாகப் படமாக்கியிருக்கிறார்கள் குழுவினர் (20நிமிடம்) 

திரைமொழியும் இசையும், தொகுப்பும் பட்டுக் கத்தரித்த மாதிரி...நடிப்பும் மிக இயல்பு! 
வாழ்த்துகள் சொல்லி என் வலைப்பக்கத்தில் 
பகிர்கிறேன் நன்றி

இளமையான இனிய கதையை, படமாக்கிய குழுவினர் அனைவர்க்கும் – வாழ்த்துகள் 
முக்கியமாக இயக்குநர் –சீனிவாசஸ் அவர்களுக்கு.
நாம் எதிர்பார்க்கும் காட்சிகளைப் புரிந்து கொண்டு, அதைத்தாண்டித்தாண்டி யோசித்து வைத்த புத்திசாலித்தனம் ரசிக்க வைக்கிறது!

நீங்களே பாருங்களேன் – 

இணைப்பிற்குச் செல்ல -

(கீழே பார்வையாளர் எண்ணிக்கையைப் பாருங்கள்,
 21லட்சத்தைத் தாண்டி விட்டது...)

(முதல்காட்சி மட்டும்தான். . .
 பிறந்தநாளை இரண்டுபேர் மட்டுமே கொண்டாடுகிறார்கள்?

நண்பர்கள் எல்லாம் லீவா நண்பா?)

தீபாவளியன்று ஒரு வைரத்தைத் தீயில் இட்டோம்!

------------------------------------------------------- 
எஸ்.ரா.விடம் நினைவுப் பரிசு பெறும்
விழாக்குழு ஆசிரியர்
சி.குருநாதசுந்தரம்

ஆசிரியர்தான், ஆனால் சாதாரண ஆசிரியரல்ல! தமிழாசிரியர்கள் மட்டுமின்றி அனைத்துப் பாட ஆசிரியர்களும் விரும்பும்  வண்ணம் “பவர் பாயிண்ட்”வழி நடத்தும் ஆசிரியர்களின் ஆசிரியர்!

வலைப்பதிவர் இணையப்பயிற்சிமுகாமை இருமுறை நடத்திய அமைப்பாளர்களில் முக்கியமானவர்!
பார்க்க, படங்கள் மற்றும் செய்திகள் -
இடமிருந்து.. மது கஸ்தூரி, சி.குருநாதசுந்தரம், நான்,
முனைவர் நா.அருள்முருகன், ராசி.பன்னீர்செல்வன்,மகா.சுந்தர்,அ.பாண்டியன்,
சகோதரிகள் இரா.ஜெயா, மு.கீதா
பார்க்க -
   
RMSA (அனைவருக்கும் இடைநிலைக் கல்வித்திட்ட) ஆசிரியப் பயிற்றுநர்! மாநிலக் கருத்தாளர்களில் முக்கியமான தமிழ்ப்பாடப் பயிற்சியாளர்!

ஆசிரியர்கள் கணினிவழி கற்பிக்கும் பயிற்சி பெறத் தூண்டி, முன்னோடிப் பயிற்றுநர்!

இதுதான் “மோடி வித்தை”யா மிஸ்டர் மோடி? (ரூ.500, 1000 செல்லாதாமே?)

வர வர இந்தியாவின் பிரதமர் மோடிஜி, ”துக்ளக் ஆட்சி“யை நினைவு படுத்திக் கொண்டே இருக்கிறார்.. அவர்தான் திடீரென்று “நாணயங்கள் எல்லாம் இனி தோலில் வெளியிடப்படும்.. முந்திய அரசாணைகள் செல்லாது” என்பதுபோல திடீர் அறிவிப்புகளை வெளியிடுவாராம்!
நமது இன்றைய பாரதப் பிரதமரும் இரவு 08-11-2016அன்று இரவு 9மணிக்கு தொலைக்காட்சியில் தோன்றி, “இன்றிரவு 12மணிமுதல் ரூ.500, 1000 நோட்டுகள் செல்லாது” என்று அறிவித்து, நாடு முழுவதும் பரபரப்பை நிகழ்த்தியிருக்கிறார்! ஏழை பாழைகள் நாயாய், பேயாய் அலைகிறார்கள்!
இதனால், “கள்ள நோட்டுப் புழக்கம் அறவே ஒழியும். கணக்கில் வராத ரூபாய்கள் மதிப்பிழக்கும், ஊழல் ஒழியும்” என்று விளக்கம் தருகிறார்கள்!
இந்த வாதத்தை ஏற்றுக்கொண்டு, சில கேள்விகளை முன்வைக்கிறேன்-

TNPSC குரூப் 4 தேர்வு கற்றுத் தந்த பாடம் என்ன?

எனது மாணவரின் வற்புறுத்தலின் காரணமாக, இந்தத் தேர்வுக்குத் தமிழ்ப் பாட ஆசிரியனாக, நானும் ஒருவாரம் வகுப்பெடுத்த அனுபவத்தோடு, மிகவும் ஒத்துப் போவதால் பாடசாலை இணைய இதழில் வெளிவந்த இந்தக் கட்டுரையை அப்படியே இங்குத் தருகிறேன்- 
--நா.முத்துநிலவன்
இனி அந்தக் கட்டுரை -

தீபாவளிப் பட்டிமன்றம் -2016-காணொலி இணைப்புடன்



தீபாவளி அன்று (29-10-2016) 
காலை 9மணிக்கு,
கலைஞர் தொலைக்காட்சி
-----------------------------------------------------
நடுவர்
திண்டுக்கல் ஐ.லியோனி அவர்கள்
தலைப்பு
பண்டிகையும், திருவிழாக்களும்
ஆடம்பரமே!                அவசியமே!
நா.முத்துநிலவன்       சிவக்குமார்
நெல்லை புஷ்பராணி      தேனி தமிழ்ச்செல்வி
வேலூர் தணிகைவேல்    கோவை தனபால்
(இந்த வரிசையில்தான் பேசியிருக்கிறோம்)
------------------------------------ 
என் மகன் அ.மு.நெருடா, 
இதனைப் பதிவுசெய்து 
யூட்யூப் இணைப்பைத் தந்திருக்கிறார்.

இணைப்புக்குச் செல்லச் சொடுக்குக-
நா.முத்துநிலவன் பேச்சு 
(வெட்டியது போக… 5 நிமிடப் பேச்சு மட்டும் உள்ளது) 

பட்டிமன்ற நிகழ்ச்சி முழுவதும் பார்க்க  
https://www.youtube.com/watch?v=FSPzThUugqw

நடிகர் சிவகுமாருக்கு 75வயது! வாழ்க்கையே ஒரு செய்தி!

திரு சிவகுமார், குடும்பத்தினருடன்
----------
அன்றைய நிகழ்வால் எனக்குத் தேதி மறக்கவில்லை!
அந்த நாள் 18-05-2010 மாலை...                                 நானும் என் துணைவியாரும் புதுக்கோட்டை வீதியில் எனது இருசக்கர வாகனத்தில் சென்றபோது, எனது செல்பேசிக்கு ஓர் அழைப்பு வருகிறது. நான் எனது வண்டியின் மிதவேகத்தை இன்னும் குறைத்து, செல்பேசியை எடுத்து என் மனைவியிடம் தந்து, “யாரென்று கேள்பா..ஏதும் அவசரம்னா சொல்லு, இல்லன்னா பத்து நிமிடம் கழித்துப் பேசச்சொல்லு” என்று சொல்கிறேன். அவரும் பேசிவிட்டு,  “யாரோ சிவக்குமாராம். சென்னையிலிருந்து பேசினார். பிறகு கூப்பிடச் சொல்லியிருக்கிறேன்” என்று சொன்னார்.

நானும் மற்ற வேலைகளில் மறந்துவிட்டேன்.
சரியாகப் பத்து நிமிடம் கழித்து மீண்டும் அழைப்பு. இப்போது நான் எடுத்து “வணக்கம் நான் முத்து நிலவன். யாரு பேசுறதுங்க?” என, “வணக்கம் முத்துநிலவன், நான் சிவக்குமார் பேசுகிறேன்” என, எனக்குக் குரல் பரிச்சயமானதாகவும் ஆனால் யாரென்று பிடிபடாத தாகவும் இருக்க, “எங்கிருந்து பேசுறீங்கய்யா?“ என்று கேட்டவுடன், சற்றும் குரல் மாறாத இயல்பான தன்மையுடன்  “சென்னையிலிருந்து நடிகர் சிவக்குமார் பேசுறேன்..” என, நான் பரபரப்பானேன்..“அடடே அய்யா வணக்கங்க! சொல்லுங்கய்யா” என..அவர் இயல்பாக “ஜனசக்தி பத்திரிகையில “செம்மொழி மாநாடும் கம்பனும்” எனும் உங்க கட்டுரையைப் படிச்சேன். நல்லா எழுதியிருக்கிங்க... “கம்பன் என் காதலன்” னு 3மணிநேரம் கம்பன் பத்தி நா பேசின பேச்சைப் பார்த்திருக்கீங்களா?“ என்று கேட்க, “ஆமாங்க விஜய் டி.வி.யில ஒளிபரப்பாச்சுல்ல.. ஆனா முழுசாப் பாக்க முடியல… கேட்ட வரைக்கும் எந்தக் குறிப்பும் இல்லாம, கம்பராமாயணப் பாடலுடன் அழகாப் பேசியிருந்தீங்க” என்று சொல்லி முடிப்பதற்குள், “உங்க முகவரிய எனக்கு மெஸேஜ் பண்ணுங்க அனுப்பறேன் பாருங்க பிறகு பேசுகிறேன்” 

பள்ளிப் பாடங்களை மீறிய அறிவுதேவை!


கவிஞர் நா.முத்துநிலவன் பேச்சு!
(நன்றி – தினமணி திருச்சிப் பதிப்பு, & புதுகை வரலாறு நாளிதழ்-26-10-2016)
  பள்ளியில் படிக்கும் ஐந்து பாடங்களை மீறியது பொதுஅறிவு! அதுதான் நிலைத்த புகழையும் தரும் என்றார் கவிஞர் நா.முத்துநிலவன்.
 புதுக்கோட்டை வடக்குராஜ வீதியில் உள்ள நகர்மன்றத்தில் நடந்த அப்பல்லோ கணினிப் பயிற்சி மையத்தின் “மாணவர் தனித்திறன் விருதுகள் வழங்கும் விழா”வில் சிறப்புரையாற்றிய கவிஞர் நா.முத்து நிலவன், மேற்கண்டவாறு பேசினார்.
  மருத்துவர் இராமதாஸ் விழாவிற்குத் தலைமையேற்க, அப்பல்லோ கணினிப் பயிற்சி மையத்தின் நிர்வாகி செந்தில்குமார் வரவேற்றார்.