இதை வாங்காதீர்கள்..

நம்மை எப்படியெல்லாம் ஏமாற்றுகிறார்கள்...
அடப்பாவிகளா!! வணிகம் என்னும் பெயரில் சட்டரீதியாகவே நம்மை விற்றுவிட்ட நமது அரசுகளின் ஏமாற்று என்பதா?  மனச்சாட்சியில்லாத வணிகர்களின் லாபவெறிக்கு இந்தியர்களைப்  பலியிடுகிறார்கள் இந்தியத் தலைவர்கள் என்னும் பாவிகள் என்பதா?

பசங்க-2, பாடம் நடத்தும் படம்!

ஃபைட் இல்ல, டுயட் இல்ல... ஹீரோவுக்கு என்ட்ரி சாங் இல்ல.. பஞ்ச் டயலாக் இல்ல ஆனாலும் சில வசனங்கள் சூப்பர் நாயகர்களின் “பஞ்ச் டயலாக்கு”களை விடவும் பார்ப்போரின் கைத்தட்டலை அள்ளுகின்றன!

“பசங்க பேசுறது 
கெட்ட வார்த்தை இல்லிங்க, 
கேட்ட வார்த்தை

“பள்ளிக்கூடத்துல பாடமா நடத்துறாங்க? 
பரிட்சை மட்டும்தானே நடத்துறாங்க

“மதிப்பெண்ணைத் தாண்டிய 
குழந்தைகளுக்கான மதிப்பு ஒன்னு இருக்கு..
அதைப் பத்திக் கவலைப் படணுமே தவிர 
மதிப்பெண்ணைப் பத்தியே 
கவலைப்பட்டுப் பசங்களப் 
பாடாப் படுத்தக் கூடாதுஎன்பவை அவற்றில் சில!

அவர்கள் கருத்தும் என் கருத்தும் வேறுபடலாம்...

திருநின்றவூரில் மழைநீர் தேங்க, தி.மு.க.வே காரணம் – ஓ.பி.எஸ்
இல்லியா பின்ன? மற்ற இடங்களில் நீர் தேங்கியதற்குத்தான் அதிமுக காரணம்!

“விஜயகாந்துடன், மக்கள் நலக் கூட்டணித் தலைவர்கள் சந்திப்பு“ திமுக கூட்டணிக்கு வருமாறு கலைஞர் மு.கருணாநிதி அழைப்பு
ஆமா! இப்படி 
ஆளுக்காளு கூப்பிட்டாத்தானே 
அவரு மத்த “பெரிய“கட்சிகள்ட்ட ரேட்ட ஏத்திக் கேக்க முடியும்...


“ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்த மாற்றுவழி ஆராயப்படும் – பொன்னார்
என்ன..முஸ்லீம் மனுசங்கள பாகிஸ்தானுக்கு விரட்டுற விளையாட்ட நடத்தப் போறீங்களா?  

பெண் கடத்தலில் தமிழ்நாடு முதலிடம் - அதிர்ச்சிச் செய்தி!

இந்தியாவில் 1 லட்சத்து 35ஆயிரம் பெண்களும் 61,000குழந்தைகளும் காணாமல் போயுள்ளதாக மக்களவையில் உள்துறை இணை அமைச்சர் எச்.பி.சௌத்ரிதெரிவித்துள்ளார்.

2015ஆம் ஆண்டு அஜால் குஜால் விருதுகள்

2015ஆம் ஆண்டு அஜால் குஜால் விருதுகள் அறிவிப்பு..
சிறந்த டிரைவர்- சல்மான்கான்
சிறந்த நீதிபதி- குமாரசாமி
சிறந்த பேச்சாளர்- நாஞ்சில் சம்பத
சிறந்த பாடகர்-சிம்பு
சிறந்த இசையமைப்பாளர்- அனிரூத
சிறந்த நடிகர்- மு.க.ஸ்டாலின் (நமக்கு நாமே)
சிறந்த வாட்ஸப் செய்தி- செல்வி.ஜெ.ஜெ (எனக்கென யாரும்                                   இல்லையே)
சிறந்த துணை நடிகர்- ஒ.பன்னீர் செல்வம
சிறந்த ஸ்டண்ட் மாஸ்டர்- கேப்டன் (தூக்கி அடிச்சுருவேன்                                     பாத்துக்கோ)

நடிகர் சங்கத் தலைவர் நாசர் அவர்களுக்கு ஒரு கடிதம்

நடிகர் சங்கத் தலைவர் 
நாசர் அவர்களின் கவனத்திற்கு,

தோழரே வணக்கம். 

தங்களை 
தோழரே என விளித்தமைக்குதங்களின் சமூகம் சார்ந்த கடந்தகால வெளிப்பாடுகளே காரணம்.

தாங்கள் பொறுப்பேற்றவுடன் பொதுப்பிரச்சனைகளில் சங்கம் தலையிடாது.இது நடிகர்களின் பிரச்சனைகளை பேசுவதற்கான இடம் மட்டுமே..என்று நீங்கள் பேட்டியளித்தபோது,எல்லாரும் உங்களை திட்டித்தீர்த்தபோதும் இதை ஒரு முதிர்ச்சியான நிர்வாகியின் சரியான பதிலாகத்தான் நான் உணர்ந்தேன்.

ஆபாசப் பாடலை எதிர்த்து, புதுமையான போராட்டம்!

அனைத்துக் கலை-இலக்கிய-சமூக 
அமைப்புகளின் சார்பாக,
புதுக்கோட்டையில் நடந்தது!
தங்கம்.மூர்த்தி தலைமையில் நா.முத்துநிலவன் கண்டனப் பாடல்

      ஆபாசப் பாடலை வெளியிட்ட சிம்பு-அனிருத்தைக் கைது செய்யக் கோரியும், அவர்களிருவரும் நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்க வேண்டும், தவறினால், திரைப்பட-தொலைக்காட்சி - பத்திரிகை - இணைய ஊடகங்கள் வாழ்நாள் முழுவதும் இருவருக்கும் தடைவிதிக்கக் கோரியும் புதுமையான முறையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

அனிருத் கனடாவிலேயே கைதாக ஒரு வாய்ப்புள்ளது.

தற்போது கனடாவின் டொரண்டோ நகரில் பதுங்கி(?)யிருக்கும் “பீப்பாடல் புகழ்“ அனிருத் கனடாவிலேயே கைதாக வாய்ப்புள்ளது.

தமிழ்நாட்டுக் காவல் துறை கொஞ்சம் முயற்சி எடுத்தால் போதும்.  இன்று வந்த செய்திதான் எனக்கு இந்தக் கருத்தைத் தந்தது - காவல் துறை செய்யுமா?

கனடாவில் முதன்முறையாக நேற்றுத்தான் ஒரு தமிழ்ப்பெண் நீதிபதியாகியுள்ளாராம். அவர் பெயர் வள்ளியம்மை. (நமது உச்சநீதி மன்றத்தின் முன்னாள் நிதிபதி ஏ.ஆர்.லட்சுமணன் அவர்களின் உறவினராம்)

தொடர்புடைய செய்தி படிக்க –

'தமிழருக்கு பெருமை: கனடா நாட்டில் ஐகோர்ட்டு நீதிபதியாக தமிழ் பெண் நியமனம்'

எனவே, “பீப் புகழ்“ அனிருத், தமிழ்நாட்டுக்கு வந்தால் எங்கே கைதாகி விடுவோமோ என்று கனடாவிலேயே பதுங்கி இருப்பதைக் கைவிட்டு, உடன்  தமிழ்நாடு திரும்புவது நல்லது. நல்லதோ கெட்டதோ இங்கேயே நடக்கட்டும்! நாஞ்சொல்றது? சரிதானுங்களே?
------------------------------------------- 

உச்சநீதிமன்றத் தீர்ப்பு என்ன சொல்கிறது?!

“அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராக முடியாது என்று இன்றைய உச்சநீதி மன்றம் தீர்ப்புச் சொல்லிவிட்டதாகச் செய்திகள் வருகின்றன. ஆகம விதிகளின்படியே அர்ச்சகர் நியமனம் இருக்க முடியுமாம்! ஆகமவிதிகள் என்றைக்கு சாதியில் சமத்துவம் பேசின?
சாதி-வேறுபாடுகளை, உயர்சாதி ஆதிக்கத்தை உறுதிப் படுத்தத்தானே ஆகம விதிகளே எழுதப்பட்டன?

இது எதிர்பார்த்தது தான்.
மனுவின் ஆழ-அகலம் அப்படி!