பதிவர் விழாப் படங்கள் (1)


விழாச் செலவுக்காக, ரூ.5000 மற்றும் அதற்குமேல்
 நன்கொடையாக மட்டுமே தந்த நன்மனத்தார் பட்டியல்.
விழாஅரங்கில் நூல்விற்பனை அருகில் ஒட்டிவைத்தோம்.
இந்தப் பட்டியலில், இடம்பெறாமலே (விழாவின் போது)
திரு பரிவை சே.குமார், திரு ஜோசப் விஜூ ஆகியோர் 
தலா ரூ.5,000 தந்துள்ளனர் அவர்களுக்கும் நன்றி. 
------------------------------------------------- 

உலகப் பதிவர்களின் உள்ளம் கவர்ந்த
தமிழிசைப்பாடல்களைப் பாடிய மாணவி சுபாஷினி
(நமது விழாக்குழு உறுப்பினரும் பதிவருமான
மகா.சுந்தர் அவர்களின் மகள் மட்டுமல்ல, அவரது 
வலைத்தொழில் நுட்ப ஆலோசகரும்கூட! 
http://mahaasundar.blogspot.in/-)
-----------------------------------

-இனி, போட்டிகளின் நடுவர் பெருமக்கள்-
கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்கள்
(கவிஞர், சாகித்திய அகாதெமி உறுப்பினர், கல்வியாளர், பதிவர்)
      
முனைவர் பா.மதிவாணன் அவர்கள்
(தமிழ்த்துறைத் தலைவர், பா.தா.பல்கலை,பதிவர்)
http://inithuinithu.blogspot.in/

 எழுத்தாளர் ஹரணி அவர்கள்
(விருதுகள் பெற்ற நூலாசிரியர், பேராசிரியர், பதிவர்)
http://thanjavur-harani.blogspot.in/

திருமிகு தி.ந.முரளிதரன் அவர்கள்
(உ.தொ.கல்வி அலுவலர், எழுத்தாளர், பதிவர்)
http://www.tnmurali.com/

 முனைவர் இரா.குணசீலன் அவர்கள்
(தமிழ் விரிவுரையாளர், பதிவர்)
http://www.gunathamizh.com/



திருமிகு ராசி.பன்னீர்செல்வன் அவர்கள் 
விமர்சகர், விருது பெற்ற எழுத்தாளர், பதிவர்
http://rasipanneerselvan.blogspot.in/


முனைவர் மு.பழனியப்பன் அவர்கள் 
(தமிழ்த்துறைத் தலைவர், தொழில்நுட்பப் பதிவர்)
http://manidal.blogspot.in/ 

திருமிகு துளசிதரன் அவர்கள்
(மூத்த பதிவர், விருதுபெற்ற எழுத்தாளர், பதிவர்)
http://thillaiakathuchronicles.blogspot.com/

பாவலர் பொன்.கருப்பையா அவர்கள்
(நூற்றுக்குமேற்பட்ட நாடகங்களின் இயக்குநர், 
கவிஞர், பாடகர், விருதுபெற்ற ஆசிரியர், பதிவர்)
http://pudugaimanimandram.blogspot.in/

புலவர் கு.ம.திருப்பதி அவர்கள்
(தமிழாசிரியர் கழகத் தலைவர், தமிழாய்வர், பதிவர்)

திருமிகு செல்லப்பா யாகசாமி அவர்கள்
(மூத்த பதிவர், விருதுபெற்ற எழுத்தாளர்)
http://chellappatamildiary.blogspot.com/


 திருமிகு ரமணி அவர்கள்
(மூத்த பதிவர், கவிஞர், எழுத்தாளர்)
http://yaathoramani.blogspot.in/ 
-----------------------------------
போட்டி நடுவர்களில் மூவர் விழாவுக்கு வரவில்லை, எனவே
அவர்களின் படங்களை இங்கு இட முடியவில்லை. 
----------------------------------- 
அடுத்தடுத்த பதிவுகளில் 
பரிசுபெற்றோர், 
பதிவர்கள் அறிமுகம், 
...தொடரும்...

பதிவர் திருவிழா முடிந்தது.. இனிச் செய்ய வேண்டியதென்ன?

இதுபற்றிய நுட்பமான சில குறிப்புகளைத் தருகிறார் 
நமது பதிவர் திருவிழாவை நடத்தி முடித்த 
புதுக்கோட்டை கணினித் தமிழ்ச்சங்கத்தின் 
நிறுவுநர் முனைவர் நா. அருள்முருகன் அவர்கள்.. 

படிக்க இணைப்பில் செல்க -
http://nadainamathu.blogspot.com/2015/10/blog-post.html
படித்து, அவரது தளத்திலேயே கருத்துகள் இடலாம்.
இணையத் தமிழால் இணைவோம்!
----------------------------------- 

பதிவர் விழாவில் கலந்துகொண்ட அமெரிக்கப் பதிவரின் அனுபவப் பகிர்வு


அமெரிக்காவிலிருந்து நம் விழாவில் கலந்து கொண்ட
திரு நவீன் சீதாராமன் அவர்கள்
---------------------------------------------------------------------
அவர்களின் வலைப்பக்கத்தில் பகிர்ந்திருக்கும் பதிவை
நண்பர்கள் பார்க்க வேண்டுமென
அன்புடன் அழைக்கிறேன் -

இணைப்புக்குச் செல்ல -
-------இங்கே சொடுக்குங்கள்------
http://manuneedhi.blogspot.in/2015/10/blog-post_16.html 

திவர்

அன்பிற்கினிய எம் தமிழுறவுகளே ! தோழர்களே !! வணக்கம்.
கடந்த (அக்டோபர்) 11-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை புதுக்கோட்டை நகரமே கலை கட்டியது. ஆம் ! வலைப்பதிவர்கள் சந்திப்பு 2015, நான்காம் ஆண்டு திருவிழாவில் புதுக்கோட்டை நகரமே திக்கு முக்காடியது. பல ஆண்டுகளுக்குப் பிறகு நான் கலந்துகொண்ட ஒரு சிறப்பான நிகழ்வாக அமைந்தது.

இந்த விழாவில் கலந்துகொள்வதற்காகவே, அமெரிக்காவிலிருந்து வந்த எனக்கும், வந்திருந்த தோழர்களுக்கும் மிக்சிறந்த மரியாதை செய்து, அற்புதமான முறையில் விழாவினை ஏற்பாடு செய்திருந்த விழாக்குழுவினருக்கு வெளிநாடு வாழ் தமிழர் மற்றும் வலைப்பதிவு தோழர்களின் சார்பாக என் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டு எதிர்வரும் அடுத்த பதிவர் விழாவுக்காகக் காத்திருக்கிறேன்.

காலையில் விழாவிற்கு வந்த நான் மாலையும் திரும்ப வந்துவிட்டேன்.  இடையில் சில மணி நேரங்கள் அரங்கில் இருக்க இயலாமைக்கு வருந்துகிறேன். தோழர்கள் என்னை மன்னிக்கவும். காரணம், என் நெருங்கிய தோழர் இல்லத்தில் ஓர் எதிர்பாரா சம்பவம் நிகழ்ந்தமையால் நான் அங்கு விரைந்து செல்லவேண்டிய சூழல் ஏற்பட்டுவிட்டது. எனவே, சில தோழர்களின் அற்புதமான சொற்பொழிவைக் கேட்க இயலவில்லையே என்ற வருத்தத்தை விழாக்குழுவினரின் அற்புதமான மிக நீண்ட காணொளி நிவர்த்தி செய்தது.

காலை முதல் விழா முடியும்வரை விழாக்குழுவினரின் சுறுசுறுப்பும், உபசரிப்பும் என்னைத் திக்குமுக்காடச் செய்தது.

விழாவில் கலந்து கொள்ள இயலாத தோழர்கள் தயவுசெய்து கீழ் காணும் சுட்டிகளின் மூலம் விழாவினை முழுவதுமாக கண்டு களிக்குமாறு கேட்டுக்கொள்வதோடு, தயவு செய்து கீழுள்ள  வலைப்பதிவின் வாயிலாக அங்குள்ள கோரிக்கைகளை நிவர்த்தி செய்யவேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.

மீண்டும் இன்னொரு தருணத்தில் நாமனைவரும் சந்திப்போம் என்று கூறி விழாக்குழுவினர் அனைவருக்கும் என் பாராட்டுகளை இங்கே சமர்ப்பிக்கிறேன். நன்றி, வணக்கம்.

புதுக்கோட்டையில் நடந்து முடிந்த பதிவர் விழாவில் எந்தக் குறையும் இல்லைஎன்று, வந்து சென்ற நம் பதிவர்கள் பதிவுகளைப் போட்டு வாழ்த்துகிறீர்கள். மற்றவர் பதிவுகளிலும் போய் பின்னூட்டங்களிட்டுப் பாராட்டுகிறீர்கள்! அந்த அன்பிற்கு எங்கள் இதய நன்றி!

வலைப்பதிவர்களின் சந்திப்பு நிகழ்வுளுக்கான வலைப்பதிவு முகவரிக்கு அழுத்தவும்

தொடர்ந்து வாசிக்க : 
http://manuneedhi.blogspot.in/2015/10/blog-post_16.html 

வாழ்த்துகளுடன்
நவின் சீதாராமன்
(அமெரிக்கா)  
------------------------

நன்றி - திருமிகு சீதா ராமன் அவர்கள் 

நன்கொடை போதும்! கையேடு விற்பனைக்கு கையோடு உதவுங்கள்!

 பற்றாக்குறை என்றதும் ஏதோ லட்சக்கணக்கில் நட்டக்கணக்கு என்பதாகப் பலரும் நினைத்துவிட்டார்கள் போல.. அனுதாபங்கள் குவிகின்றன! அந்த அன்புள்ளங்களுக்கு நன்றி சொல்லி மாளவில்லை!
பற்றாக்குறை இப்போதும் பணத்தில் அல்ல... பணத்தில் எந்த அளவாயினும் ஈடுகட்டக்கூடிய அளவிற்கு நம் விழாக்குழு நண்பர்களே பெரிய மனதோடும் போதுமான வசதியோடும் இருக்கிறார்கள்.. எனவே...
 
பதிவர் அறிமுகம் -நகைச்சுவை கலந்து கலக்கும் மூத்த பதிவர்
முனைவர் பழனி கந்தசாமி அவர்கள்(அடுத்தடுத்த பதிவுகளில்
பதிவர் அறிமுகப் படங்கள் மட்டும் தொடரும்)
------------------------------------------------------------------------------------- 

நண்பர்கள் யாரும் இனி
நன்கொடை அனுப்ப வேண்டாம்,
கையேடு விற்பனைக்கு
உதவினால் வரவேற்போம்!

எனவே, “பரிசுத்தொகையை முழுவதுமாகத் தருகிறோம், ஒருபாதியை ஏற்றுக்கொள்ளுங்கள் என்றெல்லாம் நீண்ட அன்புக்கரங்களை அதே அன்புடன் மறுத்துக்கொண்டிருக்கிறோம்! தங்களின் அன்பு போதும் தொகை வேண்டாம்!

வலைப்பதிவர் திருவிழா-2015” நிகழ்விற்கென, தனியே ஒரு வங்கிக் கணக்குத் தொடங்கப்பட்டுள்ளது. அந்தக் கணக்கு விவரம் வருமாறு :-


NAME - MUTHU BASKARAN N
SB A/c Number - 35154810782
CIF No. - 80731458645
BANK NAME - STATE BANK OF INDIA, 
PUDUKKOTTAI TOWN BRANCH 
BRANCH CODE - 16320
IFSC - SBIN0016320


இந்தக் கணக்கின் வழி தொகை செலுத்துவோர், அவர்தம் பெயர், ஊர் மற்றும் பணம் செலுத்திய நாள், தொகை 
கையேடு அனுப்பவேண்டிய முகவரிகள் 
முதலான விவரங்களை
 +91 94431 93293 எனும் செல்பேசி எண்ணுக்கு (குறுஞ்செய்தி) எத்தனை நூல்கள் தேவை எனத் தகவல் தெரிவித்திடவும் 
அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

விழா நன்றாக நடத்தினோம் என்று வந்தவர்கள் உணர்ந்தால் அவர்கள் இதுவரை நன்கொடைப் பட்டியலில் சேராதவர்கள் என்றால் தரட்டும். உரிமை கலந்த அன்புடன் பெற்றுக்கொள்கிறோம்.


          கவிதை ஓவியங்களைப் பார்வையிடும் கவிதை ஓவியங்கள்

ஏற்கெனவே தந்தவர்கள், விழாவுக்கே வராதவர்கள் அன்புகூர்ந்து இனி நன்கொடை அனுப்ப வேண்டாம் என்று மிகுந்த அன்போடு வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம். நன்றி.
விழாவுக்கு வந்திருந்த அனைவரையும்
வாய்குளிர-மனம்குளிர-வயிறு நிறையச் செய்த
உணவுக்குழுத் தலைவர்
சகோதரி இரா.ஜெயலட்சுமி இவர்தான்
-------------------------------------------------------------------------

வலைப்பதிவர் கையேட்டிற்கு விவரங்கள் தந்தோர் அவர்களுக்கோ அவர்களின் நண்பர்களுக்கோ... 

கையேடு அனுப்பச் சொல்லி பணம் அனுப்பும்போது, கையோடு முகவரிகளையும் சேர்த்து மின்னஞ்சல் செய்யவேண்டாமா நண்பர்களே?! (பணம் அனுப்பும் போதே பெயரைக் குறிப்பிடாமல், அனாமத்தாக வைத்துக் கணக்கிடும்போது எவ்வளவு சிக்கல்...!)

நன்றி சொல்லியும் கலையாத
வலைநட்பால் வந்த உறவுகள்

----------------------------------------------------- 
மீண்டும் 
ஒரு வாரத்திற்குள்,
இதே தளத்தில் 
யார்யார் எவ்வளவு தந்தார்கள் 
என்னும் விவரத்தோடும்
எந்தெந்த வகையில் என்னென்ன செலவாயிற்று என்னும் கணக்கோடும் 
உங்களைச் சந்திப்போம் 


           உழைத்த களைப்பின் நிறைவில்
            வாடிய முகத்தோடும் வாடாத மனத்தோடும்
        எங்கள் நிதிப்பொறுப்பாளர் சகோதரி மு.கீதாவின் நன்றியுரை.
------------------------------------------------------

நன்றி. வணக்கம்.


பதிவர் விழாவில் ஒரு குறையும், மேலும் சில விழாப் படங்களும்!

புகழ்பெற்ற “ஞானாலயா“ நூலக நிறுவுநர்
 திருமிகு பா.கிருஷ்ணமூர்த்தி,
விழாவில் கௌரவிக்கப்படுகிறார்
---------------------------------------------------------------------------- 


விக்கி மீடியாவின் இந்தியத் திட்ட இயக்குநர் திரு அ.இரவிசங்கர் உரை
-------------------------------------------------------------------------------------------------------------- 


புதுக்கோட்டையில் நடந்து முடிந்த பதிவர் விழாவில் எந்தக் குறையும் இல்லைஎன்று, வந்து சென்ற நம் பதிவர்கள் பதிவுகளைப் போட்டு வாழ்த்துகிறீர்கள். மற்றவர் பதிவுகளிலும் போய் பின்னூட்டங்களிட்டுப் பாராட்டுகிறீர்கள்! அந்த அன்பிற்கு எங்கள் இதய நன்றி!

ஆனால் நமது விழாவிலும் ஒரு பெரும் குறை நேர்ந்துவிட்டது....

ஆம் நண்பர்களே! அது...

பற்றாக்குறை!

எங்களுக்கு மனமிருந்த அளவிற்குப் பணமில்லை!

நண்பர்களே! பலரும் தெரிவித்திருப்பது போல, இது
பதிவர் திருவிழா மட்டுமல்லாமல்,
உணவுத்திருவிழா,
பண்பாட்டுத் திருவிழா,
புத்தகத் திருவிழா,
ஓவியத் திருவிழா,
இசைத் திருவிழா,
மரக்கன்று நடும்விழா,
சிந்தனை உரைவிழா  என எமது விழாக்குழுவினரின் அன்பை, விருந்தோம்பலை, உழைப்பைப் பாராட்டி வந்தாலும், வெளியூரிலிருந்து வந்த பதிவர்களின் எண்ணிக்கைக் குறைவு காரணமாக, அவர்களுக்காக செய்த ஏற்பாடுகளில் விழாக்குழு ஏமாந்துபோனது உண்மைதான்!

வருவதாகப் பதிவு செய்தவர்களில் 
பாதிப்பேர் கூட வரவில்லை!
-----------------------------------------
த.இ.க. உதவி இயக்குநர் முனைவர்  மா.தமிழ்ப்பரிதி  உரை
--------------------------------------------------------------------------------------------------------------
 சரி, “விழாக்குழு நம் வருகையை நம்பி உணவு மற்ற ஏற்பாடுகளைச் செய்திருப்பார்களே, வரமுடியவில்லை என்று ஒரு தகவலாவது சொல்வோம்என்று சொல்லியிருக்கலாம். அப்படி ஒருவர் கூடச் சொல்லவுமில்லை என்பதுதான் ஏமாற்றத்தின் காரணம்!

“செய்யாத குற்றத்திற்குத் தண்டனை உண்டா?என்று பையன் ஆசிரியரிடம் கேட்டானாம். அதற்கு அவர், “அது எப்படிப்பா? செய்யாத குற்றத்திற்கு தண்டனை தரமுடியும்?என்று சொல்ல, “அப்படின்னாச் சரி, நா இன்னிக்கு வீட்டுப்பாடம் செய்யலஎன்று போய்விட்டானாம்!

அதுமாதிரி, வராத குற்றத்திறகு யார் என்ன சொல்ல முடியும்?

வந்தவர்கள் எழுதுவதையும் சொல்வதையும் கேட்டு, “அடடா.. போய் வந்திருக்கலாம் போல“ என்று மனம் வருந்துவோரே! இந்த பதிவுலக ராஜ்யம் உங்களுடையது! உங்களை நம்பி ஏற்பாடுகள் செய்த எங்களை ரட்சிப்பீராக!

புரவலர் பட்டியல்படி சுமார் ஒரு லட்சம் ரூபாய் வந்திருப்பது உண்மை!
நன்கொடைப் பட்டியலோ ரூ.100 முதல் தொடங்குகிறது! அந்த வகையில் புரவலர் தொகையும் சேர்த்து மொத்த வரவு 1.5ஐத் தாண்டவில்லை! ஆனால், செலவோ அதைத் தாண்டிவிட்டது! 

எனவே, நன்கொடைப் பெயர்ப் பட்டியலுடன் தொகையை வெளியிடுவதோடு, வரவு-செலவு மொத்தத்தையும் வெளியிடும் முன்பாக பற்றாக்குறையாக வெளியிட விழாக்குழு விரும்பவில்லை. இன்னும் ஒருவாரத்தில் மொத்த வரவு-செலவையும் உறுதியாக வெளியிடுவோம். அதில் மாற்றில்லை.

விழாக்குழுவிலும் ரூ.5000தந்தோர் சிலருண்டு! ஒன்றும் தராதோரும் உண்டு! இவர்களை மட்டுமின்றி, பதிவு செய்த அனைவரையும், முன்பு சிறிது தந்தோரையும் இதுவரை தராதோரையும் இப்போது மீண்டும் உரிமையுடன் கேட்கிறோம். நன்கொடைப் பட்டியலில் உங்கள் பெயர் நல்ல தொகையுடன் இடம்பெற நீங்கள்தான் உதவவேண்டும்.
------------------------------------------------
விக்கிபீடியாவில் தொடர்ந்து எழுதிவரும்  தஞ்சைப் பதிவர் முனைவர் பா.ஜம்புலிங்கம் விழாவில் கௌரவிக்கப்படுகிறார்
-------------------------------------------------------------------------------------------------------------- 
எனவே,
என்ன செய்யலாம் என்று யோசித்த போது...
நடந்த விழா பற்றிய கருத்துக் கேட்பதற்காக நேற்று (13-10-2015) மாலை வழக்கம்போல நம் நண்பர்களின் UK -INFOTECH இல் கூடிய விழாக்குழு பின்வரும் ஆலோசனைகளை முன்வைக்கிறது -

இந்தப் பற்றாக்குறையை ஈடுகட்ட
(1)  கையேட்டுக்காகப் பதிவுசெய்த அனைவரும் பணம்அனுப்பி, புத்தகம் வாங்கிக்கொண்டால் சரியாகிவிடும் என்பது முதல் யோசனை

ஒரு பிரதி ரூ.150 எனினும் ரூ.250 அனுப்பினால் எங்கள் செலவில் இரண்டுபிரதிகளை அனுப்பி வைக்கிறோம்.ரூ.500எனில் 4பிரதிகள்.

(2)   ரூ.1,000 அனுப்புவோர், விரும்பினால், அவர்களது நண்பர்கள் 4பேருக்கு இரண்டிரண்டாகவோ, 8 பேருக்குத் தனித்தனியாகவோ முகவரி தந்தால் எங்கள் செலவில் நாங்களே அந்த முகவரிகளுக்கு அனுப்பிவைப்போம். கவனிக்க - ரூ.1000 அனுப்புவோர்க்கு மட்டுமெ இப்படிப் பிரித்தனுப்பும் பணியைச் செய்ய முடியும். அதற்குக் குறைவாக அனுப்பினால் ஒரே முகவரிக்குத்தான் அனுப்ப முடியும். எப்படியும் தமிழ்நாடு தாண்டும் முகவரிகளுக்கு அஞ்சல்செலவை ஏற்கவேண்டும்.

(3)   வெளிநாடுகளில் வசிப்போர் விரும்பினால், விமானம் (அ) கப்பலில் அனுப்பும் செலவையும் ஏற்போர்க்கு, கேட்கும் பிரதிகளை அனுப்பலாம். அல்லது அவர்தம் நண்பர்களின் தமிழக முகவரிக்கு அனுப்ப மேற்காணும் தொகையை மட்டும் அனுப்பினால் போதுமானது (வெளிநாட்டுக்கு நூல்களை அனுப்பும் நண்பர்கள் எளிய வழி என்னவென்று தெரிவித்தால் அதன்படி செய்வோம்)
நான்குபக்க வண்ண அட்டைகளுடன்
உயர்ந்த தாளில் அச்சிடப்பட்ட கையேடு
331 தமிழ்-வலைப்பதிவர் விவரம் - 144 பக்கம்
(க்யூ ஆர் கோடுடன்)

----------------------------------------------------------------- 
நண்பர்கள் உதவ வேண்டுகிறேன்...
 இப்படியான நூல் விற்பனையில் ஒரு 30,000 ரூபாய் வந்தால் இந்தக் குறையும் –அதாவது பற்றாக்குறையும் – இல்லாமல் போகும்.

குமுதம் வார இதழ் ஒருபிரதி கூட விற்காமல் போனாலும் வாராவாரம் ஓர் இதழுக்கு 5ரூபாய் லாபம் என எங்கோ படித்தேன். அவ்வளவு விளம்பர வருமானமாம்! (அப்படியெனில் விற்கும் 6லட்சம் பிரதிகளுக்கு எவ்வளவு லாபம்? கணக்குப் பார்த்துக்கோங்க..) ஆனால், நமக்கோ கையேட்டுக்கு அவ்வளவாக விளம்பரமும் கிடைக்கவில்லை.

எனவே, நண்பர்கள் தமது நண்பர்களுக்குப் பிரதிகளை அனுப்புவதற்கும் விழாக்குழுவுக்குச் செய்யும் உதவியாகவும் கையேட்டை வாங்கி உதவ வேண்டுமென்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி, வணக்கம்.

வழக்கம் போல வங்கிக் கணக்கு விவரம் –

“வலைப்பதிவர் திருவிழா-2015” நிகழ்விற்கென, தனியே ஒரு வங்கிக் கணக்குத் தொடங்கப்பட்டுள்ளது. அந்த விவரம் வருமாறு :-

NAME - MUTHU BASKARAN N 
SB A/c Number - 35154810782
CIF No. - 80731458645
BANK NAME - STATE BANK OF INDIA, 
PUDUKKOTTAI TOWN BRANCH 
BRANCH CODE - 16320
IFSC - SBIN0016320
---------------------------------------------------------------- 

இதில் STATE   BANK   OF   INDIA வங்கி தவிர மற்ற வங்கிகளில் பணம் போட்டால், இந்த வங்கியில் ரூ.50, 100 என்று பிடித்தம் வேறு செய்து எடுத்துவிடும் வங்கி நடைமுறை நண்பர்களுக்குப் புரிய வேண்டும்

பணத்தை வங்கியில் செலுத்திவிட்டால் எனது செல்பேசிக்கு குறுஞ்செய்தி வந்துவிடும். ஆனால் யார் பணம் அனுப்பியது எனும் விவரத்தையும், கையேட்டுப் பிரதிகளை அனுப்ப வேண்டிய நண்பர்கள் முகவரிகளையும் மின்னஞ்சலில் உடன் தெரிவிக்க வேண்டுகிறேன்.

ஆக.. நம்ம கணக்கு வழக்கும் நட்பும் உறவும் இன்னமும் தொடருது!

ஆமா..எதிலயும் கொஞ்சமாச்சும் பாக்கி வைச்சாத்தான் நட்போ உறவோ தொடரும்னு சொல்றாங்களே... அது இதுதானோ?
------------------------------------
பி.கு. இதுதான் குறையா அய்யா..என்போர் ஆறுதலுக்காக விழாவில் என்னால் நேர்நத இரண்டு தவறுகளைச் சொல்லிவிடுகிறேன் -

(1) நடுவர்களுக்காகத் தயாரிக்கப்பட்ட கேடயத்தில் அய்யா திரு செல்லப்பா யாகசாமி அவர்களின் கேடயமும், திரு முனைவர் மு.பழனியப்பன் அவர்களின் கேடயமும் விட்டுப்போனது. கடைசி நேரத்தில் தடுமாறி, அவர்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டேன். அவர்களின் பெருந்தன்மையான பண்பால் நெகிழ்ந்தும் போனோம்.
(பின்னர் தயாரித்து விட்டோம், விரைவில் தந்தனுப்புவோம்)

(2)அவ்வளவு வேலைகளை இழுத்துப்போட்டுச் செய்த சகோதரி மு.கீதா நன்றியுரையைப் பெரிதாகத் தயாரித்து வைத்திருந்தும் 5மணியைத் தாண்டிவிட்டதால் சுருக்கமாகச் சொல்லும்படி நான் சொன்னதால் அவர்கள் மட்டுமின்றி வேறுசில பதிவர்களும் வருந்தியது உண்மை. (சகோதரி சரியாகவே புரிந்துகொண்டாலும் எனக்கு உறுத்துகிறது)
--------------------------------------------------------
அப்புறம்... முன்னர் நானிட்ட இப்படத்தைச் சிலர் ரசித்தார்கள்.
இப்போதைய எங்கள் நிலைமைக்கும் ஏற்றதாக இருப்பதால் மீண்டும்...