ஒரு வாசகனின் பார்வையில் - கம்பன் தமிழும் கணினித் தமிழும்

நா.முத்துநிலவனின் தோளில்
மகாகவி பாரதி நெஞ்சில் மகா.சுந்தர் 

ஓவியர் - திரு ரவிக்குமார்




"கிளிக்குப் பச்சைவண்ணம்  
தீட்ட வேண்டுமா?"
எனக் கேட்பார் அறிஞர் அண்ணா.
கவிஞர் 
முத்துநிலவன் அவர்களின் பேச்சுக்கும் எழுத்துக்கும் 'மதிப்புரை 'தேவையா
அவரின் பேச்சுக்கும்,எழுத்துக்கும் மயங்காதவர்கள் உண்டோ.?
 பல்வேறு மாத,நாள் இதழ்களிலும்,இணைய இதழ்களிலும் வெளிவந்து,தமிழறிஞர்களின் மனதில் பல்வேறு விவாதங்களை ஏற்படுத்திய பதினாறு கட்டுரைகளைத் தொகுத்துத் தந்துள்ளார் கவிஞர் முத்துநிலவன். கதை,கட்டுரை படிப்பதைப் போல,கட்டுரைகளைப் படிக்க முடியுமா.? அது படிப்போரின் உள்ளத்தைக் கவருமா?..முடியும் என நிரூபித்திருக்கிறார் முத்துநிலவன்.!அவரின் பரந்த வாசிப்பும்,ஆழமான மரபுப் பயிற்சியும்,புதியன கற்கும் ஆவலும்,அவரின் எழுத்துக்கு வலுவும் சுவையும் சேர்த்திருக்கின்றன.

இதைப் பாருங்க கலங்க அடிக்கிறாங்க சகோதரி..

இதைப் பாருங்க
கலங்க அடிக்கிறாங்க
என் சகோதரி..

முதல் பதிலிலேயே நான் அம்பேல்...

ஒப்பனையில்லாத
உயர்ந்த கருத்துகள்.
நன்றி சகோதரி.

நிறையப் பேரு பாக்கணும்கிறதுக்காக
திருமதி ஜெயலட்சுமி அவர்களின் பதிவை
இங்கு மீளப் பதிவிடுகிறேன்.
அன்பு கூர்ந்து பார்க்க..
இணைப்பிற்குச் செல்ல...

http://jayalakshmiaeo.blogspot.in/2014/11/7.html#comment-form

கனவில் வந்த காந்தி (7)

KARANTHAI
JAYAKKUMAAR
நண்பர்களே இதற்கு நான் பொறுப்பல்ல...

இந்த தேவகோட்டைக் கொலைகாரர் (அதாங்க கில்லர்ஜி) 
ஒரு பந்தை உதைத்து தள்ளிவிட, 
அது நேரா கரந்தையில வந்து விழுந்துச்சா..
அய்யா கரந்தையார் அதை உட்ட ஒதையில 
பந்து நேரா புதுக்கோட்டைக்குப் பறந்து வந்திருச்சா... அத இப்ப நா உங்க கிட்ட தள்ளிவிடுறனுங்கோ...

KILLERGEE
இது ரெண்டையும் பார்த்திட்டு 
அப்பறம் என்னுத படிக்க வாங்க.

(அய்யோ அய்யோ.. பாவம்ங்க நீங்க)



வேதாளம் விக்கிரமாதித்தன் கிட்ட கேட்ட கேள்விகள் பழசுதான்.
அதையே மாத்தி , “விஞ்ஞான விக்கிரமாதித்தன் கேள்வி-பதில்கள்“ எழுதின நம்ம ஆயிஷா நடராஜன் பாலசாகித்ய அகாதமி விருது வாங்குனார்.
நா என்னா வாங்கப் போறனோ... 
அந்த வேதாளத்துக்குத்தான் தெரியும்‘!
------------------------------------ 
கனவில் வந்த காந்தி (7)

அன்பும் பாசமும் நிறைந்தவர்கள் யார்?

“வீட்டைவிட்டு
வெளிய வந்தா
நாலும் நடக்கலாம்.
அந்த 
நாலும் தெரிஞ்சு
நடந்துகிட்டா
நல்லா 
இருக்கலாம்“ 

அது சரி...
அதுவரை 
நம்மை 
நல்லா வச்சிக்கிறது யாருங்க?
ஒரு சுவையான விவாதம்..

கலைஞர் தொலைக்காட்சிக்காக நடந்த
பொங்கல்தினச்
சிறப்புப்பட்டிமன்றம் காண
அன்புடன் அழைக்கிறேன்.

“அன்பும் பாசமும் நிறைந்தவர்கள்“
“உறவினர்களே“ –
புதுகை நா.முத்துநிலவன்,
கோவை தனபால்
“நண்பர்களே!“ –
மதுக்கூர் இராமலிங்கம்,
சென்னை இனியவன்
நடுவர் –
“நகைச்சுவைத் தென்றல்“
திண்டுக்கல் ஐ.லியோனி

ஒளிபரப்புக்கு நன்றி – 
கலைஞர் தொலைக்காட்சி
இணைப்புக்கு நன்றி -
யூ-ட்யூப், ஐங்கரன் பதிவகம்,    CineForce.com 

-------------------------------------
கடந்த 14-01-2014 “பொங்கல் விழா“அன்று 
கலைஞர் தொலைக்காட்சியில் 
ஏறத்தாழ இரண்டுமணி நேரம் 
ஓடிய பட்டிமன்றத்தில்,
எனது பேச்சு -
சரியாக 11நிமிடம் 30நொடியில்
தொடங்கி, 21நிமிடம் 10நொடியில்
நிறைவடைகிறது
-------------------------------------
இணைப்பிற்குச் செல்ல - 

---------------------------------------------------------------------- 

எனது தொலைக்காட்சி உரை கேட்க / பார்க்க அன்புடன் அழைக்கிறேன்

எனது தொலைக்காட்சி உரை கேட்க / பார்க்க

அன்புடன் அழைக்கிறேன்!!

உங்கள் நா.முத்துநிலவன்

----------------------

திரைப்படங்கள் சமூகத்தை

மாற்றியிருக்கிறதா ?

ஏமாற்றியிருக்கிறதா ?

திண்டுக்கல் ஐ.லியோனி பட்டிமன்றம்

(கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது)

-------------------------------------
நான் பேசியிருக்கும் தலைப்பு –
“திரைப்படங்கள் 
சமூகத்தை ஏமாற்றியிருக்கின்றன“
-------------------------------------
ஒருமணி நேரம் பத்துநிமிடம் ஓடக்கூடிய பட்டிமன்றக் காட்சியில்,
எனது பேச்சு -
சரியாக 17நிமிடம் 50நொடியில் தொடங்குகிறது
-------------------------------------
நன்றி - கலைஞர் தொலைக்காட்சி
நன்றி யூ-ட்யூப் இணைப்பிற்கு-
-------------------------------------
விளம்பரத்தை (ஸ்கிப் செய்து) தாண்டி விடலாம் –
நிகழ்ச்சியைப் பார்த்தவர்கள் தங்கள் கருத்தைப் பின்னூட்டத்தில் இட்டால எனக்குப் பயன்படும்.

நன்றியுடன், 
–நா.முத்துநிலவன், 
புதுக்கோட்டை-622 004.

'புதிய மரபுகள்' நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி

'புதிய மரபுகள்' 
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
Tamil Poet R.Ravi, Madurai.
நூலாசிரியர் கவிஞர் நா. முத்துநிலவன், நாடு அறிந்த நல்ல பேச்சாளர் மட்டுமல்ல.  உரத்த சிந்தனையுடன் உன்னதமான கவிதைகள் படைக்கும் படைப்பாளி என்பதை உணர்த்திடும் நூல்.  
             இந்த நூலின் முகப்பு ஓவியத்தை மதுரைக்காரர் உலகப்புகழ் ஓவியர் ட்ராட்ஸ்கி மருது அவர்கள் வரைந்து உள்ளார்கள். நூலின் அட்டையைப் பார்த்தவுடனேயே நூலினை வாங்க வேண்டும் என்ற எண்ணத்தை தூண்டும் விதமாக உள்ளது.  
          பன்முக ஆற்றலாளர் கவிஞர் மீரா அவர்கள் குடும்ப‘அகரம்பதிப்பக வெளியீடாக வந்துள்ளது,   பாராட்டுக்கள்.  
        'புதிய மரபுகள்' -
       நூலின் தலைப்பே வித்தியாசமாக உள்ளது.

“கமல்-60“ வாழ்த்தும், சில கேள்விகளும்






அற்புதக் கலைஞன் கமலஹாசனின் 60ஆவது பிறந்தநாளுக்கு நானும் வாழ்த்துச் சொல்ல விரும்புகிறேன். எனினும் எனக்குள் உருளும் சில கேள்விகளை என்னால் மறைக்க முடியவில்லை.
வேலூர் தோழர் 
திரு எஸ்.ராமன் அவர்கள் தொகுத்துத் தந்திருக்கும் மிகஅரிய கமல் படங்களின் காட்சிகளை முதலில் ரசியுங்கள்.
பின்னர் கேள்விகளைப் பார்ப்போம்- 
--------------------------------------------------------------
நன்றி 
(படைப்புத் தொகுப்பு மற்றும்  கமலின் அழகான படத்திற்கும் )
நன்றி நன்றி - http://ramaniecuvellore.blogspot.in/2014/11/60-10.html 
------------------------------------------------------------- 
ஒரு ஆக்ரோஷமான விவாதம் உணர்ச்சிமிக்க 

இங்கே ஆடிக் காண்பிக்கிறார்.

நம்மை  திடுக்கிட வைத்திடும். 

படத்தின் உணர்ச்சி மிக்க காட்சி.

நம்மையும் கலங்க வைக்கும்.

இந்த தந்தையின் நிம்மதி தொலைந்து போனதே!

வெளியே வரும் முன்பாக.

சோகம் இங்கே.

வெளிப்படும் தருணம் இது. 

அடித்துச் சொல்லும் காட்சி.

எல்லாமே ரொம்ப சீரியசா இருக்கிறது  அல்லவா? 


இன்னும் ஒரு போனஸ்.

நான் கல்லூரியில் படித்த போது வந்த பாடல். 
பணிக்காலமே 28 ஆண்டுகள் முடிந்து விட்டது. ஆனாலும் 

ரசியுங்கள் நண்பர்களே,

பிறந்த நாள் வாழ்த்துக்கள் கமல்
நன்றி - திரு எஸ.ராமன், வேலூர்(ஒரு ஊழியனின் குரல்)
----------------------------------------------------------------------------------- 
இப்போது என் கேள்விகள் -
கேள்விகளுக்கு அப்பாற்பட்ட உயர்ந்த நடிகர் - திரைக்கலையின் பல்துறை நிபுணர் கமல் -இதை ஒப்புக்கொண்டுதான் கேள்விகளை முன்வைக்கிறேன்-
(1) கமல் யார்? நாத்திகரா ஆத்திகரா? 
       அவ்வளவு பெரிய இடத்தில் இருந்துகொண்டு வெளிப்படையாகச்     சொல்வதில் ஏராளமான வணிகச் சிக்கல் உண்டு என்பதால் வெளிப்படச்         சொல்லாமல் மழுப்புவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறாரா? அல்லது இதுவும் ஒரு வியாபாரத் தந்திரமா?
         ஏனெனில், வசூல்ராஜாவில் “கடவுள் இல்லங்கிறவன நம்பு, கடவுள் இ்ல்லங்கிறான் பாரு அவனைக் கூட நம்பு, ஆனா, நான்தான் கடவுள்ங்கிறாம் பாரு அவனை மட்டும் நம்பாதே” தசாவதாரத்தில், “நா எங்க கடவுள இல்ல னு சொன்னேன்.. இருந்தா நல்லதுதானே னு சொன்னேன்” முதலானவை.
“கல்லைமட்டும் கண்டால் கடவுள் கிடையாது“ கடவுள்பாதி மிருகம் பாதி?
             
(2) முற்போக்காளரா? இல்லை திரைக்கு வெளியிலும் நடிகரா?
          பெரும்பாலான படங்களில் சாதாரண ஏழை மக்களுக்காகக் குரல் கொடுத்த கமல், அவ்வப்போது தன்னை முற்போக்காளராகக் காட்டிக் கொண்டே வருகிறார். பெரியாரை அவ்வப்போது பாராட்டுவார். இப்போது பா.ஜ.க.வின் (பிரதமர் மோடியின்?) “இந்தியாவைச் சுத்தப்படுத்துவோம்“ இயக்கத்தின் தூதுவராகி, ஏரியைச் சுத்தப்படுத்த இறங்கும்போது காவி பா.ஜ.க.வுக்கு ஆகாத கருப்புச் சட்டையுடன்... நவம்பர்-7 உலகைமாற்றிய ருஷ்யப் புரட்சிதினத்தன்று பிறந்திருக்கிறீர்கள்... ஆனால் உங்களின் எந்தப் பிறந்தநாளிலாவது அதுபற்றி வாய்திறந்திருந்தால் மகிழ்ந்திருப்போம்... ஆனால் ஏனோ நீங்கள் அந்த மகிழ்ச்சியை எங்களுக்குத் தரவே இல்லல்ல?
நேற்றைய -உலகமகா எழுத்தாளர் ஜெயமோகனின் உலகமகா இலக்கியமாம் மகாபாரத மொழிபெயர்ப்பு “வெண்முரசு“ பற்றி, இளைய ராஜா புகழ்ந்தது சரி, நீங்களும் இப்படி வாாாாாானளாாாாாாவ..? என்ன கமல் இது?

ஒன்னுமே புரியலே உலகத்துல... 
என்னமோ நடக்குது! மர்மமா இருக்குது! 

எனினும் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் கமல்!
இன்னும் பல்லாண்டுகள் வாழ்ந்து (உங்கள் பிரச்சாரத்திற்காகவேனும்) சில நல்ல செய்திகளை மக்களுக்குச் சொல்லுங்கள்... பாவம் நம் மக்கள்!
------------------------------------------------------------------- 
கமலஹாசன் பற்றிய எனது கடந்தஆண்டுப் பதிவைப் பார்க்க -
http://valarumkavithai.blogspot.com/2013/11/blog-post_10.html
------------------------------------------------------------------ 

“தமிழ்வெளி“க்கு என்னாச்சு?

நமது நன்றிக்குரிய 'தமிழ்வெளி' திரட்டி இரண்டுநாளாகக் கிடைக்கவில்லை. எனக்குமட்டும்தானா என்ற சந்தேகம் வந்தது. சில வலைநண்பர்களைக் கேட்டேன். அவர்களுக்கும் கிடைக்கவில்லை என்றே சொன்னார்கள். 

என்ன ஆச்சு தமிழ்வெளிக்கு?
தமிழ்மணம், தமிழ்வெளி இரண்டு திரட்டிகளும்தான் நமது தமிழ்வலைப் பதிவுகளை உலகமெங்கும் உள்ள தமிழார்வலர்களிடம் கொண்டுபோய்ச் சேர்க்கும் திரட்டிகள் என்பதை நான் சொல்லவேண்டியதில்லை.
இப்போது தமிழ்வெளி கிடைக்கவில்லை எனில் கவலைப்படாமல் இருக்க முடியவில்லையே?

கடந்த சில வாரங்களுக்கு முன் எனது வலைப்பக்கத்தில் –
“தமிழ்வெளித் திரட்டியில் தவறு நடக்கலாமா?என்றொரு பதிவை எழுதியிருந்தேன்.– http://valarumkavithai.blogspot.com/2014/11/blog-post.html

ஆபாசப் பதிவுகள் பலவற்றை “வாசகர் பரிந்துரைத்தவை“ என்னும் தலைப்பிலேயே வெளியிடுவதைக் கண்டித்து அப்படித் தமிழ்வெளி வெளியிடுவதை நிறுத்தவேண்டுமென்றும், “பரிந்துரைத்த பதிவர்களின் பெயர்களை வெளியிடுவதாகச் சொன்னால், தானே பரிந்துரை நின்றுவிடும்“ என்றும் எழுதியிருந்தேன். 
அதன் பின்னரும் அப்படியான தளங்கள் வருவது தொடரவே செய்தது. ஆனால் குறைந்திருந்தது

ஆனால் கடந்த இரண்டுநாளாகத் “தமிழ்வெளி“ தளமே கிடைக்கவில்லை! என்ன ஆயிற்று தெரியவில்லையே?
தெரிந்தவர்கள் – தொடர்புடையவர்கள் தெரிவித்தால் மகிழ்வேன். அல்லது மீண்டும் கிடைத்தால் சரிதான்.

ஒருவேளை பராமரிப்புக்காக (நம்ம மின்துறை அப்பப்ப செய்ற மாதிரி) இடைவெளி விட்டிருந்தால் அதை அவர்களின் தளத்திலேயே தெரிவித்திருப்பார்கள் அல்லவா? எனில், ஏதும் தொழில்நுட்பச் சிக்கலா?
எவ்வாறாயினும், தமிழ்வெளி மீண்டும் வந்து தமிழ் வலைப்பதிவர் எழுத்துகளை உலகம் முழுவதும் கொண்டுசேர்க்கும் பணியில் தன்னை இணைத்துக் கொண்டு தொடரவேண்டும் என்பதே என்போலும் –தொழில்நுட்பம் அறியாத- தமிழ் எழுத்தாளர்களின் எதிர்பார்ப்பு.

(அதுக்குள்ள “இந்த முத்துநிலவன்தான் ஏதோ “அறம்“ பாடிட்டான், அதுனாலதான் தமிழ்வெளிக்கு ஏதோ ஆயிப்போச்சு“னு இல்லாத பொல்லாததை எல்லாம் கிளப்பிவிடுற ஆளுகள நம்பாதீங்க... நா அப்படியெல்லாம் அறம்பாடுற ஆள்கிடையாதுங்க. நா ரொம்ப நல்லவனுங்கோ. அப்படியே நாம அறம் பாடினாலும் அது பலிக்கிற அளவுக்கு நாம பெரும் புலவரா என்ன? புளுகர்னுதானே சொல்றாய்ங்க?1?)              ---------------------   

கவிதையைச் செதுக்குவது எப்படி? – “மின்சாரக்கவி“யின் சில கவிதைகளை முன்வைத்து...

இனிய நண்பர் “மின்சாரக்கவி“ இன்று காலை வீட்டுக்கு வந்திருந்தார். தொலைந்து போன எனது “காதல்கடிதம்“ குறுந்தொடரை மீட்டுத் தந்தவர் என்று எனது “புதிய மரபுகள்“ கவிதைத் தொகுப்பின் பின்னுரையில் நன்றி தெரிவித்திருப்பேனே? அவர்தான். பேசிக்கொண்டே அவரைக் கவனித்தேன்.

வாழ்க்கைச் சிக்கல்களில் நலிந்து மெலிந்து ஆளே மாறிப்போயிருந்தார். முன்பே அவர் ஒன்றும் குண்டர் அல்ல எனினும், இது, வாழ்க்கைச் சோர்வுகள் தந்த மெலிவு! என்றாலும் கவிதை மீதான காதலை இப்போதும் அவர்கண்களில் கண்டேன். உயிர்வாழ உபசரிக்கும் இலக்கியக்காதல்!

மின்சாரக்கவி (எ) கிருஷ்ணமூர்த்தி, காபியை வாங்கிக் கொண்டு, ஒரு நோட்டைத் தந்தார். ஒருகுயர் பெரிய நோட்டு! அவ்வளவும் கவிதைகள்!
படித்துப் பார்த்து, “பத்திரிகைகளுக்கு அனுப்பலாமா?அனுப்பறதுன்னா எதை எதை அனுப்பலாம்“ என்று சொல்லும்படி என்னைக் கேட்பதற்காகவே வந்ததாகவும் சொன்னார். வந்ததிலிருந்து, அவரைப் படித்துக்கொண்டிருந்த நான், பிறகு கவிதைகளைப் படித்துக்கொண்டே சொன்னேன் –

கவிஞனுக்கு முதலில் தன்மீது நம்பிக்கை இருக்கணும். பத்திரிகைக்கு அனுப்பினால் பிரசுரமாகும்னு முதலில் தன்னை நம்பணும். பிறகு எந்தக் கவிதையை எங்கே அனுப்பலாம் எனும் தெளிவும் படைப்பாளிக்கு அவசியம்” 
என்று சொல்லிக்கொண்டே வந்தபோது, சில கவிதைகள் தன்னைப் படிக்க மீண்டும் என்னை அழைத்ததைக் கேட்டேன், கண்டேன்  –
“காடு வளர்க்க ஆள்போட்டது
காடு வளரவில்லை,
ஆள் மட்டுமே வளர்ந்தது
படித்துக்கொண்டே சொன்னேன் நல்லா இருக்கு, இதை இன்னும் செதுக்கலாமே? என்னென்ன கவிதைத் தொகுப்புகளை அண்மையில் படிச்சீங்க“ என்று கேட்டேன். அவர்  ஆயாசத்தோடு, சலித்துக்கொண்டே “எங்கய்யா படிக்க நேரம் இருக்கு? ஆலாப்பறக்குற வாழ்க்கை“ என்றார்.
கவிதையைச் செதுக்குவது என்றால் என்ன?
எனக்கு ஒருபக்கம் அவரிடம் சொல்லத் தயக்கமாக இருந்தாலும், “இந்த அளவுக்கு எழுத்தின்மீது காதல்கொண்டவரிடம் சொல்லாமல் இருப்பதுதான் தவறு“ என்று நினைத்துத் தொடர்ந்தேன் – “இதுதான் தப்பு. உங்களுக்குக் கவிதை வருது, பிறகு அதை இன்னும் நேர்த்தியா எழுதணும்கிற பொறுப்பு வேண்டாமா?  “நமக்குத் தொழில் கவிதை“ன்னான் பாரதி. எந்தத் தொழிலில் நமக்கு ஈடுபாடு இருக்கோ அந்தத் தொழிலில் பயிற்சி அவசியமில்லையா?
தெருவோரத்தில் நின்று இளநி விற்கிறவர், பளபளவென்று தீட்டப்பட்ட அரிவாளைக் கொண்டு அப்படி இப்படி என நாலே நாலு வீச்சில், ஒரு சின்ன “மட்டைக்கரண்டி“யையும் அதிலிருந்தே செதுக்கி எடுத்து நம் கையில் தருகிற லாவகத்தைப் பார்த்திருக்கிறீர்களா? அதற்கு எவ்வளவு பயிற்சி வேண்டும்? அசந்தால் அந்த வேக வீச்சுக்குக் கையே போய்விடும், இல்லையெனில் பல வீச்சு வீசியும் இளநீர் சீவி முடியாது, வியாபாரமும் கெட்டுப்போய்விடும் இல்லையா?” என்று சொல்லி,  “அதே கவிதையில் மட்டுமே என்பதை முதலில் எடுத்துவிடலாம். ஆள்வளர்ந்தது  என்பதைச் சற்றே மாற்றி –எதுகை மோனை நயத்துடன்- ஆடு என்று சேர்த்துக் கொள்வோம். எதுகை மோனையை வலிந்து போட்டால் டி.ஆர்.மாதிரி சம்பந்த மில்லாமல் துருத்திக்கொண்டு நின்று, கவிதையைக் கேலிக்குரியதாககி விடும் எனும் கவனம் கவிஞர்க்கு ரொம்ப ரொம்ப முக்கியம். இயல்பா வந்தா, அதுல அர்த்தமும் கூடுதலாக் கிடைச்சாப் போடலாம் அவ்ளோதான்)
“காடுவளர்க்கச்
செடிநட்டது அரசு
ஆடு வளர்ந்தது“  - என்றோ,
“அரசுத்திட்டம்
காடுவளர்ப்பு,
ஆடு வளர்ந்தது“  - என்றோ,
“காடுவளர்க்கத்
திட்டம் போட்டார்கள்
ஆடு வளர்ந்தது“  - என்றோ, முதலில் எழுதிய வரிகளிலேயே திருப்தியடைந்து விடாமல், வரிகளை மாற்றி மாற்றிப் போட்டு
எதுகை மோனைக்குள் ஒரு நயம் வைத்து அதன்படி என்னபொருள் வருகிறது  என்பதைச் சொல்லிச் சொல்லி மீண்டும் மீண்டும் எழுதிப் பாருங்கள் திருப்தி தரும்படி எழுதுங்கள் அதுதான் செதுக்குவது“ என்றேன். எல்லாக் கவிதைக்கும் இப்படித் தேவையிருக்கும் என்று சொல்லமுடியாது. திருப்தி அடையும் வரை கவிஞனின் தாகம் குறையக் கூடாது. எழுதும்வரைதான் கவிஞன், எழுதிமுடித்து வெளியிடும்போது கவிஞனே தன்னை ஒரு இதழின் ஆசிரியராக நினைத்துக் கொள்ள வேண்டும். பக்க அளவு, அந்தக் கவிதையின் உருவ-உள்ளடக்க அழகு சரிதானா, என்பதைச் சிந்தித்து பட்டுக்கத்திரிச்சது போல –தேவையெனில்- மீண்டும் திருத்த்த் தயங்கக் கூடாது. பயிற்சி இது“

“அப்பாடா கற்கண்டுப் போலப் புரியும்படிச் சொல்லிவிட்டோம்“ என்று நினைத்துக்கொண்டிருந்த என்னைப் பார்த்து சொற்குண்டை வீசிச்   சுக்குநூறாக்கிய மின்சாரக்கவி கேட்டார் -
“எல்லாம் சரிங்கய்யா.. நேரம் கிடைக்கிறப்ப தோணுறத எழுதி வச்சு பின்னாடி எடுத்துப் படிச்சுக்குவேன்... நீங்கதான் நம்ம கூட்டத்துல அத நா வாசிக்கக் கேட்டு கவிதை நல்லாருக்கு தொடர்ந்து எழுதுங்கனு சொன்னீங்க.. இப்ப இன்னும் செதுக்கணும்ங்கிறீங்க”   

இப்போது என் முறை! 
உரையாடலின்போது தன்னை விட்டுக் கொடுக்க யார்தான் முன்வருவார்கள்? அவர் தன்னை விட்டுக் கொடுக்கத் தயாரில்லை என்பது புரிந்தது. நானும் இப்படி இருந்தவன்தானே? இப்போது நிறைய அனுபவங்களால் கொஞ்சம் மாறியிருக்கிறேன்.
இந்த உரையாடலில் தோற்பது, எதிர்கால நட்புக்கும், இவரைத் தொடர்ந்து எழுதத் தூண்டுவதற்கும் பயன்படுமென்றால் நான் தோற்றுப்போகத் தயார்“ என்னும் புதிய மனநிலையோடு தொடர்ந்தேன்.

“ஆங்.... சொல்லியிருக்கலாம்.. ஆனா அது எந்தக் கவிதைனு நினைவில்ல, ஒன்னுமே இல்லாதத நல்லாருக்குனு சொல்லி உசுப்பேத்தி உடுறது தப்புத்தான். ஏதோ ஒரு ஆர்வத்தோட எழுதுறவங்கள அப்படி நா சொல்றதில்ல... நீங்க வாசிச்ச கவிதைகளில் ஏதோ ஒரு பொறி இருந்திச்சு. நல்லாருக்குனு சொல்லி உங்களை இன்னும் எழுத வைக்கணும்கிறதுக்காக சொன்னது அது...“ என்று மென்று விழுங்கி, மேலும் தொடர்ந்தேன். அவரது குண்டுவீச்சில் நொறுங்கி விழுந்துகிடந்த நான் மெதுவாக எழுந்து நிமிர்ந்தேன்.

கவிதைக்குப் பயிற்சி அவசியமா? அல்லது
சிலையைச் செதுக்கப் பயிற்சி வேண்டுமா?
“இப்ப நீங்க ஒரு மின்துறை ஊழியர். எங்க வீட்டுல ஒரு பல்பு மாத்தணும்னா கடையில வாங்கி நானே மாத்திடுவேன். பல்பு போட்டும் எரியலன்னா, பாசிடிவ் நெகடிவ் தெரிஞ்சு எந்த இணைப்புல என்ன சிக்கல்னு சரிபண்ண எனக்குத் தெரியுமா?“ நான் விரித்த வலையில் தானாக வந்து விழுந்தார்.
“அது எப்படி உங்களுக்குத் தெரியும்? அதுக்குத்தானே நாங்க படிச்சு, மேலும் அனுபவத்துல கத்துக்கிட்டு பாக்கெட்டுல “டெஸ்ட்டர்“ குத்தி வச்சிக்கிட்டு திரியிறோம். இல்லனா எங்க பொழப்பு என்னாகுறது?
இப்போது என் நிலை உறுதியாகிவிட அம்புகளை வீசினேன்.
“உங்கள மாதிரி அததுல அனுபவம் உள்ளவங்கதான் அதுதெரிஞ்சு சரிபண்ணுவீங்க இல்லையா? சரிதான். பல்பு மாத்துற மாதரியும் ஃபியூஸ் போடுற மாதிரியும் சில வேலைகளை எல்லாரும் செய்ற மாதிரி, எல்லாரும் நல்ல அல்லது கெட்ட விஷயம் மனசுக்குப் படுறத சுருக்னு சின்னச்சின்ன சொற்களில் சொல்வது கவனிக்க வைக்கும், அது கவிதை மாதிரி இருக்கும். அதுவே தொடர் பயிற்சி மற்றும் படிப்பின் வழியாகவே கூர்மையான திறமையை வளர்த்துக்க முடியும். தான் உணர்ந்ததையே படிப்பவரும் உணரும்படிச் செய்ய கொஞ்சம் பயிற்சி தேவை.
மிதிவண்டி ஓட்டத் தெரிஞ்சவுங்களுக்கு இருசக்கர வாகனம் ஓட்டப் பழகுவது எளிது. கியர் வண்டி ஓட்டத் தெரிஞ்சவுங்களுக்கு மகிழ்வுந்து (கார்) ஓட்டக் கற்றுக்கொள்வது எளிது அல்லவா அதுபோலத்தான் முந்திய நம் தமிழ்க் கவிதையின் வகை மற்றும் அழகியல் நுணுக்கங்களைத் தெரிந்து வைத்திருப்பவர்கள் நுணுக்கங்களைத் தன்கவிதையில் ஆள்வது எளிதாகக் கைவரும் அதோடு, கவிதையில் ஆழமும் அழகும் கூடும். எதை எப்படிச் சொல்லலாம் என்பதும் அத்துப்படியாகும்.
அதுக்காக, விமானம் ஓட்டத் தெரிஞ்சவுங்களுக்கு மிதிவண்டி ஓட்டத் தெரிஞ்சிருக்கணும்னு நான் வறட்டுவாதமும் செய்யலை. ஆர்வமும், பயிற்சியுமே அடிப்படை.  எந்தப் பயிற்சியுமில்லாமல் எந்த நுணுக்கமும் கைவராது. இல்லியா?
தீட்டத் தீட்டத்தானே கத்தி கூர்மையாகும். மொன்னைக் கத்தி எப்படி வெட்டும்? 
என் ஆயுதம் சரியாக அவரைத் தாக்கிவிட, அமைதி காத்தார்.

பலவீனமானவரை மேலும் தாக்க நான் விருமபவில்லை. (ஆமா இவுரு பெரிய அர்ச்சுன மகாராசரு..னு யாருப்பா அங்க மைண்ட் வாய்சுல மொணகுறது? மைதிலியா? இருடா கொஞ்சம் நானும் ஒன்னமாதிரி நடைமுறைத் தமிழ்ல சொல்லிப் பாக்குறனே? சரி ஒரு இளநி குடிச்சுக்கிறேன்.. நோ கோலா! சரியா?)

இப்போது அவரது அடுத்த கவிதையைக் கையிலெடுத்தேன் –
“நெடுநெல் வயல்களில்
செந்நெல் செழித்தோங்கியது
வீடுவந்து சேரும்முன்னே
கடன்வந்து அறுவடை செய்தது
இந்தக் கவிதையில், மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டையார் எழுதிய வரிகளின் சாயல் இருந்தாலும், “கடன்காரன் வயலுக்கே வந்து அறுவடை செய்வான்“ என்கிற புதிய அர்த்தம் கிடைப்பது கூடுதல் ஆழமுடையது என்பதால் நல்லதுதான். ஆனால் வரிகள் அதிகமாய், இன்னும் சுருக்கலாம் பாலை சுண்டச் சுண்டக் காய்ச்சக் காய்ச்ச ருசி தானே? அதுக்காக சட்டி புடுச்சிக் கருகிடாமயும் பாத்துக்கணும். ஏதோ ஒரு படத்துல வர்ர “இங்கு நல்ல மீன்கள் விற்கப்படும்“  வடிவேலு மாதிரியும் ஆகிடக்கூடாது.
சரி.. அப்ப, எப்படிச் சுருக்கலாம்? இப்ப பாருங்களேன் –
           வயல் விளைந்தது
           வீட்டுக்கு வருமுன்னே
           கடன் அறுவடை செய்தது. சரியாக இருக்குமா? அல்லது,

           நல்ல விளைச்சல்
           விவசாயியை முந்திக்கொண்டு
           கடன் அறுவடை செய்தது. சரியாக இருக்குமா? அல்லது,

           வயல் விளைந்தது.
           கடன் அறுத்தது. – என்பதே போதும்போல இருக்கிறதே! யோசிக்கலாம். திருக்குறளில் அசைச்சொல் கூட ஏதோ ஒரு தொனிப்பொருளை உணர்த்தும் என்று சொல்வாருண்டு. 

ஒருசொல் அல்ல, ஓர் எழுத்துக்கூடக் கவிதையில் வீணாக இருக்கக்கூடாது.ஒரு சொல்லை எடுத்தால் ஒன்று அர்த்தம் போகும் அல்லது இலக்கணம் போகும் அல்லது அழகு போகும் என்று ஆகப் பொருத்தமான (APT WORD) சொல்லாக இருக்க வேண்டும் என்பதும் முக்கியம். 

வரிகளை மடக்குவதற்கும் அர்த்தம் உண்டு. கூடுதல் அர்த்தம் கொடுக்கவே வரிகளை மடக்கிப் போடவேண்டுமே அன்றி பெரியவரி சின்னவரி என்பதால் அல்ல. இந்தப் பயிற்சியைத்தான் மரபுக்கவிதைப் பயிற்சி நமக்கு மிக எளிதாக்கும்.

ஆக, ஓவியம் வேண்டுமானால் வண்ணங்களை எடுத்துப் பூசிப்பூசி சேர்ப்பது எனும் அரிய கலையாக இருக்கலாம். கவிதை, சிற்பம் போல. வேண்டாத கல்லு சில்லு களையெல்லாம் தன் உளியால் செதுக்கிச்செதுக்கி எடுத்துத் தூர எறிந்து உள்ளே ஒளிந்திருக்கும் அழகுச் சிலையை வெளிக்கொண்டு வரும் சிற்பியைப் போலத்தான் கவிஞன். சிரமம் பாராமல் கவனம் மாறாமல் உழைக்க வேண்டும். சிலை உடைந்துவிடக்கூடாதல்லவா? சிற்பி கடைசியில்தான் சிற்பத்தின் கண்ணைத் திறப்பானாம். அதுமாதிரி கவிஞனும் கடைசியில் தன் கவிதைச் சிற்பத்திற்குக் கண் திறப்பது போல கவிதைக்கான தலைப்பை வைக்க வேண்டும்.  தலைப்பு இல்லாமலும் கவிதை தனியே புரியவேண்டும். தலைப்பே கவிதையின் பொருள் என்ன என்பதைச் சுருக்காய்ச் சொல்லிவிட வேண்டும். ஜெயகாந்தன் சொல்வார் கதை முகம் என்றால் தலைப்பு திலகம் மாதிரி இருக்கவேண்டும் என்று. இப்போதைய பெண்கள் –மதம் பற்றிய கவலை இல்லாமல் பொட்டுவைத்துக் கொள்ளாமலே இருப்பது போல- தலைப்பு இல்லாத கவிதைகள் பெருகி வருகின்றன. அது அவரவர் விருப்பம். பொட்டு இருந்தாலும் இல்லாவிட்டாலும் முகமும் அகமும் நல்லா இருந்தாச்  சரிதானே?

நிறைவாக ஒன்று –
எதையும் நேரிடையாகச் சொல்வதைவிட, படிமமாக, புரியக்கூடிய குறியீடாகத் தருவது கூடுதல் ஆழம்காட்டும். (பழந்தமிழில் இதனை இறைச்சி, தொனி என்று இலக்கணமாக்கி வைத்திருக்கிறார்கள்) கற்பனைதானே கவிஞனின் அடையாளம்?
எ.கா. கவிக்கோ அப்துல் ரகுமானின்
புறத்திணைச் சுயம்வர                
மண்டபத்தில்
போலி நளன்களின் கூட்டம்.
கையில் மாலையோடு
குருட்டுத் தமயந்தி
இது நம்நாட்டுத் தேர்தல் பற்றி அவர் எழுதிப் புகழ்பெற்ற கவிதை.
ஒவ்வொரு வரியும் எப்படி ஈட்டிபோலக் கூர்மையாக குத்துகிறது பாருங்கள்.
ஈட்டி எறிதல் (ஜாவ்லிங் த்ரோ) மாதிரி... வெகுதூரம் போகவேண்டும். குறியை விட்டு விலகி ஃபவுல் ஆகிவிடாமல் குத்தி நிற்கவும் வேண்டும். 
அதுதான் நல்ல கவிதை.

சரியா கவிஞரே? நம் நாட்டு வயலுக்கு ரசாயன உரங்களைவிடவும், இலை-தழை மக்கிய குப்பைபோல இயற்கை உரம்தான் நல்லது. புரியுதா? வாழ்த்துகள்.
---------------------------------