சாகித்திய அகாதெமியின் “புதிய தமிழ் இலக்கிய வரலாறு” -


சாகித்திய அகாதெமியால் மூன்று தொகுதிகளாக வெளியிடப்படும் புதிய தமிழ் இலக்கிய வரலாறு இதுவரை தமிழில் வெளிவந்துள்ள அனைத்து இலக்கிய வரலாற்று நூல்களினின்றும் வேறுபட்டது. பண்டைக்காலம், இடைக்காலம், இக்காலம் என மூன்று காலங்களுக்கும் தனித்தனித் தொகுதிகள் கொண்டது.

கற்றுத்தருவதில் வீடுபாதி,சமூகம் மீதி -தினமணிச் செய்தி

இளையோர் விழாவில் நா.முத்துநிலவன் பேச்சு!
மேடையில் விழாத்தலைவர் ராஜ்குமார், நேருயுவக்கேந்திரா சதாசிவம், 
பாவலர் பொன்.கருப்பையா உள்ளிட்டோர் உள்ளனர். 
கவிஞர்நா.முத்துநிலவன் சிறப்புரையாற்றுகிறார்.
புதுக்கோட்டை-பிப்23.
   தாய்தந்தை ஆசிரியர் ஆகியோர் கற்றுத்தருவது பாதியென்றால், மீதியைக் கற்றுத்தருவது இந்தச்சமூகம்தான் என்றார் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கக் கவிஞர் நா.முத்துநிலவன்.
      புதுக்கோட்டையில் நடந்த இந்திய அரசின் இளைஞர்நலம் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் இயங்கிவரும் நேரு யுவக்கேந்திராவின் மாவட்ட இளையோர் ஆண்டுவிழாக் கருத்தரங்கில் சிறப்புரையாற்றிய அவர் மேலும் பேசியதாவது

சின்னக்குத்தூசி நினைவு - கட்டுரைப் போட்டி



மூத்த பத்திரிகையாளர் சின்னக்குத்தூசி நினைவு அறக்கட்டளை சார்பில் ஆண்டுதோறும் சிறந்த கட்டுரைகளுக்கு விருது வழங்கப்பட்டு வருகின்றது.
2013-ஜனவரி-1முதல் டிசம்பர்-31வரை நாளிதழ்கள், பருவ இதழ்கள், இணைய தளங்களில் வெளியான அரசியல், பொருளாதாரம், சமூகம், பண்பாடு தொடர்பான கட்டுரைகளுக்குப் பரிசுகள் வழங்கப்படும்.
கட்டுரையை எழுதியவர் மட்டுமின்றி, கட்டுரைகளைப் படித்தவர்களும் அவற்றைப் பரிந்துரைத்து அனுப்பி வைக்கலாம்.
தேர்வு செய்யப்படும் மூன்று கட்டுரைகளின் ஆசிரியர்களுக்குத் தலா பத்தாயிரம் ரூபாய் பரிசளிக்கப்படும்.
2014 ஜூன்-15அன்று சென்னையில் நடைபெறும் சின்னக்குத்தூசி பிறந்தநாள்விழாவில் கட்டுரைகளை எழுதிய ஆசிரியர்களுக்குப் பரிசுகள் வழங்கப்படும்.
2014-மார்ச்-07ஆம் தேதிக்குள்...   
கட்டுரைகளை அனுப்பவேண்டிய முகவரி –
சின்னக்குத்தூசி நினைவு அறக்கட்டளை,
13, வல்லப அக்ரகாரம் தெரு,
அறைஎண்-06, திருவல்லிக்கேணி,
சென்னை-600 005
மின்னஞ்சல் – chinnakuthoositrust@gmail.com
 ------------------------------------------------------------------  

புதுக்கோட்டைக்குப் புகழ்சேர்த்த வானம்பாடிக் கவிஞர் பாலா

                           

  பாடிப்பறந்த ‘வானம்பாடி’ கவிஞர் பாலா
                                 நா.முத்து நிலவன்


பிரபல தமிழ்க்கவிஞரும், இலக்கியவிமர்சகரும், சாகித்ய அகாதெமியின் தமிழ்மொழிக்குழு ஒருங்கிணைப்பாளராக ஐந்தாண்டுகள் பணியாற்றியவருமான ஆங்கிலப்பேராசிரியர், தமிழ்க்கவிஞர் டாக்டர் பாலா தமது 63ஆம் வயதில் சென்னையில் 22-09-2009அன்று காலமானார்.
தமிழகஅரசின் சிறந்த கவிதைநூலுக்கான விருது, சிற்பியின் கவிதைவிருது, உட்பட பலப்பல விருதுகளைப் பெற்றவர் கவிஞர் பாலா. ‘சர்ரியலிசம்’(1977), ‘புதுக்கவிதை ஒரு புதுப்பார்வை’(1981), ‘பாரதியும்-கீட்சும’;(1982), ‘கவிதைப்பக்கம்’(1986), ‘தமிழ்இலக்கியவிமர்சகர்கள’;(1992), ‘முன்னுரையும் பின்னுரையும்(1995), ‘திண்ணையும் வரவேற்பறைகளும்’(1999), ‘இன்னொரு மனிதர்கள்’(2002), ‘நினைவில் தப்பிய முகம்’(2007), முதலான கவிதை மற்றும் விமர்சன நூல்களுடன், மீரா, மேத்தா, சிற்பி ஆகியோரின் தமிழ்க்கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தும் வெளியிட்டிருக்கிறார்.

தினமணி -சென்னைப் பதிப்பில் வெளிவந்த எனது கட்டுரை

           கோடை விடுமுறை தேவையில்லையா?!
-நா.முத்து நிலவன்-

ங்கிலேயர் ஆரம்பித்ததுதான், ஆனாலும் நமது பள்ளிகளுக்கான கோடை விடுமுறைஎன்பது நமது மண்சார்ந்த வகையில் -பள்ளிமாணவர் உளவியலும் உடல்நிலையும் சார்ந்த வகையில்- சரியானது தானே? அப்புறம் ஏன் தமிழகத்தின் ஆயிரக்கணக்கான தனியார் பள்ளிகளில்    -அடுத்த ஆண்டு அரசுத்தேர்வை எழுத விருக்கும்- இந்த ஆண்டு 9, 11-ஆம் வகுப்பில் படிக்கும் நம் பிள்ளைகளுக்கு  கோடை விடுமுறை மறுக்கப்படுகிறது

வலைப்பக்க வயது நான்கு தொடக்கம் – வலைப்பதிவு வரிசை பத்து

 வலைப்பதிவு தொடங்கி மூன்றாண்டு முடிந்து,
நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்த பிப்ரவரி-18  தரும் சிந்தனை

மூன்றாண்டுகளில் தரமான(?) எனது முதல்10 பதிவுகள் என நான் நினைப்பவை இவை  
(ஆனால் வாசகர் வரிசை வேறாக இருக்கிறதே! ஏன்?)
இதோ என் வரிசை-

பாடமாய் மாறிய படங்கள் – பாலுமகேந்திராவுக்கு அஞ்சலி


பாலுமகேந்திரா (20-05-1939 -- 13-02-2014)
பாலநாதன் பெஞ்சமின் மகேந்திரன் என்ற பாலுமகேந்திரா காலமானது அறிந்து ஒரு பெரும் ஒளிஓவியரை இழந்த வலியின் எச்சங்கள் -
பல தேசிய விருதுகளையும் தாண்டிய அவரது ஒளிப்பதிவும் இயக்கிய திரைப்படங்களும் அவரது பெயரைத் திரைத்துறையின் பாடத்திட்டத்தில் இன்னும் பல்லாண்டுக்காலம் இருக்க வைக்கும் என்பது  உறுதி.

வறுமையும் வளமையும் பரம்பரைச் சொத்து - இசைப்பாடல்


பண்டைப் புகழும் பாரம்பரியப்
     பண்புகள் மிக்கதும் இந்நாடே அற்பச்
சண்டையில் எங்கள் அண்டை வீட்டவர்
    மண்டை உடைவதும் இந்நாடே!           (1

எல்லா வகையிலும் வல்லோர் எங்களை
    ஏளனம் செய்வதும் இந்நாடே! வெறும்
செல்லாக் காசென மனிதப் பண்புகள்
    சிரிப்பாய்ச் சிரிப்பதும் இந்நாடே!            (2

வற்றா நதிகளும் வண்டல் பூமியும்
   வளம் கொழிப்பதும் இந்நாடே! தினம்
பற்றாக் குறைகளும் பட்டினிச் சாவும்
   பரம்பரை யாவதும் இந்நாடே!                (3

எழுதுகோல் தெய்வம்! எழுத்தும் தெய்வம்!

தினமணி தலையங்கப்பக்கத்தில் வெளிவந்த எனது கட்டுரை
--நா.முத்துநிலவன்--
   எழுதுபவர்கள் மூன்று வகையினர் முதல் வகையினர் மிகப் பெரும்பான்மையோர்-கணக்கெழுதுபவர் அல்லது கடிதம் எழுதுபவர். இவர்களது எழுத்தால் சமுதாயம் எந்தவிதத்திலும் பாதிக்கப்படுவதி;லை.

கவிதைகளில் “கெட்டவார்த்தை“ வரலாமா?

கவிஞர் ஜெயபாஸ்கரன், சென்னை

சென்னையில் நடந்த கவிஞர் ஜெயபாஸ்கரன் கவிதைகள் முதல் தொகுப்பு நூல் வெளியீட்டு விழாவில் சுவையான விவாதம் ஒன்று நடந்தது.