செல்போன் இல்லாத இந்தியத் தலைவர்

அவர் ரொம்ப நல்லவர் !
அவர் ரொம்ப அமைதியானவர் !!
அவர் ரொம்ப ரொம்ப நேர்மையானவர் !!!
அதிர்ந்து கூடப் பேசமாட்டார்னா பாருங்களேன்.?1?
அம்மா சொல்வதைத் தட்டவே மாட்டார் !?1?1?!
இப்படியெல்லாம் சொல்வது 
ஒருவரின் நல்ல பண்பைக் குறிக்குமா...
இல்லை சொல்பவரை, “அட உலகம் தெரியாதவனே“ என்று ஏகடியம் பேசுமா? கொஞ்சம் யோசியுங்க...

அதெல்லாம் கூடப் பரவாயில்லைங்க... நம்புவோம்!
அவரிடம் செல்போன் கூடக் கிடையாதுன்னா பாருங்களேன்“ –என்று யாரையாவது சொன்னால் இனியும் அவரைச் சந்தேகப் படாமல் இருக்க முடியுமா?

தமிழ் விக்கிப்பீடியா வகுப்பு!

“விக்கிப்பீடியா”வில் எழுதப் பயிற்சி வகுப்பு
தமிழ்க் கணினிக் கருத்தரங்கம்
செந்தூரான் பொறியியல் கல்லூரியில் நடந்தது


 ச.பிரின்சு என்னாரெசு பெரியார் தமிழ்விக்கிப்பீடியாவகுப்பில்
 
    புதுக்கோட்டை-லெனா விலக்கில் உள்ள செந்தூரான் பொறியியல் கல்லூரிக் கணினி ஆய்வக அரங்கில், “நண்பா அறக்கட்டளைவழங்கிய விக்கிப்பீடியாவில் தமிழில் எழுதுவது பற்றிய கணினிக் கருத்தரங்கம் காலை முதல் மாலைவரை ஒருநாள் முழுவதும் நடந்த்து.
      பொறியியல் கல்வி பயிலும் மாணவ-மாணவியர் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
  சென்னைத் திரைப்படத்துறையைச் சேர்ந்த இணை இயக்குநரும், அண்ணா பல்கலைக்கழகக் கணினிப் பேராசிரியருமான பிரின்ஸ் என்னாரெசுப்பெரியார் வகுப்பைக் கலகலப்பாக நடத்திச் சென்றார். முற்பகலில் ஆங்கிலம் அறிந்திருந்தால் மட்டுமே கணினி கற்கமுடியும் என்பது தவறு...

வாலிபப் பசங்க யாரு? வயசானவுங்க யாரு?



1)  வாலிபப் பசங்க யாரு? வயசானவுங்க யாரு?-ன்னு எப்படித் தெரிஞ்சிக்கிறது?






வம்சம்“ பாத்துட்டுத் தூங்கப் போயிட்டா அவங்க வயசானவுங்க. 
“ஆஃபீஸ்“ முடியிற வரைக்கும்     
முழிச்சிருந்து பாத்தா 
வாலிபப் புள்ளைங்க..



(2)  முற்போக்குன்னா என்ன? பிற்போக்குன்னா என்ன?  
      நம்ம பிள்ளைங்க டென்னிஸ் விளையாடுறாங்கல்ல? அதுல,
      ஆட்டத்தைப் பாத்தா முற்போக்கு, ஆடையைப் பாத்தா அது பிற்போக்கு.

(3)  ஆனந்த விகடன்-அமுதசுரபி ஒப்பிடுக
     ஆனந்த விகடன் படிச்சா யூத்து! அமுத சுரபி படிச்சா...மூப்பு..! (நினைப்புல?)

(4)  கடவுள் இல்லன்னு சிலபேர் சொல்றாங்களே இல்லங்கிறத நிருபிக்க முடியுமா?
      நல்லா இருக்கே கத! இந்த குடத்துல தண்ணி இருக்குன்னு சொல்றவங்கதான         நிருபிக்கணும். இல்லங்கிறவங்க குடத்தக் கவுத்துக்காட்டினா போதாதா?

(5)  அரசியல் சேவைக்காகவா? தேவைக்காகவா?
      தேச தேவைக்காக என்று ஆரம்பித்து தேக சேவைக்காகன்னு போயிருச்சே!           ஆனா அது அரசியல் இல்லிங்க... இன்னும் நல்ல அரசியல் வாதிங்க இருக்காங்க.. நீங்க சேவைக்காக்க் கேக்குறீங்களா  தேவைக்கு கேக்குறீங்களா?

      (கேள்வியும் நானே, பதிலும் நானே!-

       சத்தியமா ஆனந்தவிகடனுக்காக எழுதலீங்க... 
       நம்ம வலைப்பக்கத்துக்காகத்தான்...!)

தொடர்ந்து சீரியஸாவே எழுதிக்கிட்டிருந்தா 
நமக்கு வயசாயிட்டதா யாரும்  நெனச்சிறக்கூடாதில்ல.. ?

‘‘படிப்பது எதற்காக? வாழ்க்கையின் அர்த்தம் என்ன?” – ‘நீயா-நானா’ கோபிநாத்தின் மிகச்சிறந்த பேச்சு!

“நீயா நானா” கோபிநாத்தை நான் அறிமுகப்படுத்த வேண்டியதில்லை.
ஆனால், தனது நிகழ்ச்சியின் போது, பங்கேற்பாளர்களை வாயைப் பிடுங்கிப் பேசவைக்கும் கோபிநாத், அவரே ஒரு மிகச்சிறந்த பேச்சாளர் என்பது உங்களுக்குத் தெரியுமா?

“இரண்டு பக்கமும் பேசுகிறவர்கள் என்ன பேசினாலும், தனக்குத் தேவையான கருத்தை அவர்கள் பேசும்படி அவர்களைக் “கொண்டு செலுத்தும்“ திறமை அவருக்கிருக்கிறதே!“ என்று நான் பலமுறை நினைத்ததுண்டு. அதன் பின்னணியை இந்த அவரது பேச்சைக் கேட்டபிறகுதான் புரிந்து கொண்டேன்....  

மகாகவி பாரதிக்கே இரண்டாம் பரிசு என்றால், முதல் பரிசு பெற்ற கவிதை எது?

முனைவர் இரா.குணசீலன் அவர்களின் வலை பார்த்தேன்.  
அவர் நல்ல தகவல்களைத் தொடர்ந்து எழுதி வருகிறார் என்பதால் அவர்மேல் எனக்கு மிகுந்த மரியாதை உண்டு, “தன்பெண்டு தன்பிள்ளை சோறு வீடு சம்பாத்யம் இவையுண்டு தானுண்டு“என்னும் படித்த பேராசிரியர் மத்தியில், படிக்கின்ற பேராசிரியர் சிலரும் இருக்கிறார்கள்! அவர்களில் ஒருவர் நம் நண்பர்.

இன்று, தமிழின் முக்கியமான படைப்பாளியான அ.மாதவையா அவர்களின் நினைவுதினம் அவரைப்பற்றி விக்கிபீடியா விலிருந்து எடுத்த செய்திகளை அழகாகத் தொகுத்துத் தந்திருந்தார். அதைப் படித்த நான், பின்வரும் கேள்வியைப் பின்னூட்டமாக இட்டிருந்தேன்.
“அ.மாதவையா பற்றி மேலும் ஒருமுக்கியமான தகவல்-1914ஆம்ஆண்டு தூத்துக்குடித் தமிழன்பர்கள் நடத்திய கவிதைப்போட்டியில் -நண்பர்களின் வற்புறுத்தலுக்காக- கலந்துகொண்டு பாரதியார் எழுதிய கவிதைக்கு இரண்டாம் பரிசும் அ.மாதவய்யா எழுதிய கவிதைக்கு முதல்பரிசும் தரப்பட்டதாகத் தமிழ்ஆய்வறிஞர்கள் சொல்கிறார்கள். அந்தப் பாடல்எது என்று தெரியவில்லை. தெரிந்தால் அதுபற்றி எழுத வேண்டுகிறேன்
அவரும் நேர்மையாகப் பதிலிட்டிருந்தார் -

நீயா-நானா நிகழ்ச்சியில் கோபிநாத்தும் பெண்ணியவாதிகளும்!


20-10-2013 ஞாயிறு இரவு விஜய் தொலைக்காட்சியில் “பெண்ணியவாதிகளும், பெண்ணியவாதம் வேண்டாம் என்னும் –இளம்-பெண்களும்பங்குபெற்ற விவாதம் வழக்கம்போலவே சூடுபறக்கவும் சுவையாகவும்தான் இருந்தது.

இந்த ஆண்டின் எனது நூறாவது பதிவு - சமர்ப்பணம்


                                இன்று புதிதாய்ப் பிறந்தோம்!

இந்த 2013ஆம் ஆண்டின் எனது நூறாவது பதிவில் ஒரு மகிழ்ச்சியான செய்தியை நம் நண்பர்களுக்குத் தெரிவிப்பதில் பெருமையடைகிறேன்.

“அறிவிலே தெளிவும் நெஞ்சிலே உறுதியும்
  அகத்திலே அன்பினோர் வெள்ளமும்”, இவற்றோடு சமூகப் பார்வையும் மிக்க நமது மதிப்பிற்குரிய நண்பர் ஒருவர் இன்று தனது வலைப்பக்கத்தைத் தொடங்கியிருக்கிறார் என்பதே அந்த எனது மகிழ்வான செய்தி!

சிந்தனை செய் மனமே...

நண்பர் சுலைமானுக்கு நன்றி -



அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா  கைகுலுக்கிக் கொண்டு இருக்கும் இந்தச் சிறுமி யார்?

அப்படி என்ன செய்துவிட்டாள் இந்த இந்தியச் சிறுமி?

அப்படித்தானே கேட்க்கத் தோன்றுகிறது??

இந்திய மூளையைக் கொண்டிருக்கும் இந்தச் சிறுமியை அமெரிக்காவின் தலைசிறந்த இளம் ஆராச்சியாளர் என்று சொந்தம் கொண்டாடுகிறது அமெரிக்கா.

ஆச்சர்யமா இருக்கா??

பட்டிமன்றப் பேச்சாளர் ராஜாவுக்கு ஒரு செய்திச் சமர்ப்பணம்







இக்கட்டான நிலையிலும் தெளிவாக சிந்தித்துச்
சரியாகச் செயல்படக் கூடியவர்கள் குறைந்து வருகிறார்கள்
கேட்டால்
டென்ஷன் டென்ஷன்... டென்ஷன்... உலகமேடென்ஷனாம்!

மகிழ்ச்சியாகச் சுற்றுலா வந்த இடத்தில் தன் கணவர் மாரடைப்பால் இறந்த -உண்மையிலேயே டென்ஷனாக இருக்கக் கூடிய - சூழலிலும், உரிய நேரத்தில், வந்த இடமான திண்டுக்கல்லில் உள்ள மருத்துவமனைக்குக் கண்களயும், தன் சொந்த ஊரான பெங்களுருக்குக் கொண்டு போய் அங்குள்ள மருத்துவ மனைக்கு உடலையும் தானம் செய்த மனைவியின் திடமான சிந்தனைக்கும் சரியான செயல்பாட்டுக்கும் தலைவணங்குவோம்.

கணினித் தமிழப்பயிலரங்கம் பற்றி கரந்தை ஜெயக்குமார்.


நமது கணினித் தமிழ்ப் பயிலரங்கிற்கு வந்திருந்த
வலைப்பதிவர் கரந்தை திரு ஜெயக்குமார் அய்யா
தனது வலைப்பக்கத்தில் அதுபற்றி அருமையாகவும், (என்னைப் பற்றி அன்பின் மிகையாகவும்) எழுதியிருக்கிறார்கள்.