tag:blogger.com,1999:blog-3817666928335657661.post4471716100539024137..comments2024-03-28T14:36:28.784+05:30Comments on வளரும் கவிதை: ஆன்ம விளக்கங்களும் ஆபாசக் கதைகளும்நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttp://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comBlogger39125tag:blogger.com,1999:blog-3817666928335657661.post-22719505065872707702014-07-31T21:35:23.356+05:302014-07-31T21:35:23.356+05:30ஆன்ம விளக்கங்களும் ஆபாசக் கதைகளும் = திரு நா.முத்த...ஆன்ம விளக்கங்களும் ஆபாசக் கதைகளும் = திரு நா.முத்துநிலவன் அவர்கள் பதிவு. <br />பதிவும் அற்புதம், பின்னூட்டங்களும் அருமையான விவாதத்தை தருகின்றது. எனது பதிவில் பகிர்கிறேன். மேலோட்டமாக படிக்கும் பதிவில்லை. நண்பர்கள் ஆழ்ந்து படித்து கருத்தை பகிர வேண்டுகிறேன். மின்னஞ்சல் முகவரி போதும். நன்றி சார் திரு நா.முத்துநிலவன்Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-60068578018541054312014-06-16T17:57:09.259+05:302014-06-16T17:57:09.259+05:30சரிதான் சார்.. கண்டிப்பாக நானும் சிந்திக்கிறேன் சா...சரிதான் சார்.. கண்டிப்பாக நானும் சிந்திக்கிறேன் சார்.. உங்களைத் தொடர்ந்து கொண்டே இருப்பேன்...Anonymoushttps://www.blogger.com/profile/13566337795376258566noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-87388724345315814682014-06-16T10:35:06.770+05:302014-06-16T10:35:06.770+05:30தோழர் பதில் அளித்தமைக்கு நன்றி... தற்சமயம் நான் எழ...தோழர் பதில் அளித்தமைக்கு நன்றி... தற்சமயம் நான் எழுதுவதை நிறுத்தி வைத்துள்ளேன்.. பலரின் பதிவுகளை படிப்பேன்.. உங்கள் பதிவை படித்ததும் முதல் வாக்கியம் இடறியது ஆகையால் என் மனதுக்கு தோன்றியதை எழுதினேன்... இன்னும் நான் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள் அதிகம் இருப்பதால், எதுவும் எழுதுவதில்லை... காலம் ஒரு நாள் மாறும் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறேன்.. அந்த மாற்றம் வரும் நேரம் நாம் நம் கருத்துக்களை பரிமாறிக் கொள்வோம்... அது வரை உங்கள் பதிவுகளை தொடர்வேன் SURYAJEEVAhttps://www.blogger.com/profile/11426631201026402874noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-79410081078549854872014-06-16T08:35:52.881+05:302014-06-16T08:35:52.881+05:30அன்புள்ள ஐயா..
வணக்கம். அந்த சமநிலையில் எல...அன்புள்ள ஐயா..<br /><br /> வணக்கம். அந்த சமநிலையில் எல்லாமும் சரியாகும் என்பதுதான் என்னுடைய நம்பிக்கை. அதை முழுமையாக ஒப்புக்கொள்கிறேன். இருப்பினும் சிறு தவறுகளால் பாதிக்கப்படும் உள்ளங்களின் காயங்களுக்கு சரியான மருந்தில்லை என்பதை என்னுடைய அனுபவத்தில் தேடிக்கொண்டிருக்கிறேன் என்பதையும் தங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். அன்பு வேண்டுகோள் இதுபோன்ற கட்டுரைகளைத் தாஙக்ள் தொடர்ந்து எழுதவேண்டும. விவாதிப்போம். அப்போதுதான் ஒரு சரியான முடிவை இலக்கை அடைய உதவும்.ஹ ர ணிhttps://www.blogger.com/profile/14084187413714388808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-64344355002892486832014-06-15T23:06:39.244+05:302014-06-15T23:06:39.244+05:30அவசரப்பட வேண்டாம் நண்பரே! காமம் என்பது உயிரியல்பு....அவசரப்பட வேண்டாம் நண்பரே! காமம் என்பது உயிரியல்பு. அதைக் காசாக்க, திசைதிருப்ப முயல்வதுதான் தவறு. காதலில்லாத காமம் வெறியூட்டும், காமமில்லாத காதல் மலடாக்கும். பழைய குமுதம் இதழ் அரசு கேள்விபதிலில் “உடலுறவு என்பதை அசிங்கம் என்கிறார்கள் சித்தர்கள், தெய்வீகம் என்கிறார்கள் பக்தர்கள், எது சரி? ”என்பது கேள்வி. அசத்தலான பதில் என்ன தெரியுமா? “இரண்டும் தவறு, அது இயல்பானது என்பதே சரி” இதுதான் என் கருத்தும். தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி நண்பரே இணைந்திருப்போம்நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-71027162736801838462014-06-15T22:55:37.817+05:302014-06-15T22:55:37.817+05:30வணக்கம் நண்பரே. உங்களின் சகபயணியாகவே என்னை உணர வைத...வணக்கம் நண்பரே. உங்களின் சகபயணியாகவே என்னை உணர வைத்த உங்களின் பதிவுகளைப் பார்த்து மகிழ்ந்தேன். அறிவியல் ஏற்கப்படவில்லை என்பதுடன், அறிவியல் மனோபாவமற்ற கல்வியால் சிந்தனையே அற்றுப்போகிறதே என்பதே பெருங்கேடு அறிவியல் விளக்கங்கள் ஆன்மீகத்திற்கு எதிராக இருப்பதால் எண்ணற்ற அறிவியலாளர்களைக் கொன்று குவித்த உலகமல்லவா இது? உண்மை காலில் செருப்பை மாட்டி வாசலைத் தாண்டுவதற்குள், வதந்தி ஒரு சுற்றுச் சுற்றிவி்ட்டுத் திரும்பி விடுமாமே பொறுமையாக, இணைந்து, கற்று, அறிவியல் மனப்பான்மையை வளர்ப்போம். உங்கள்கவிதையும், வலைப்பக்கமும் அழகு! தொடர்வோம்.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-32402541953947656562014-06-15T22:49:29.120+05:302014-06-15T22:49:29.120+05:30அய்யா வணக்கம், 74வயதிலும் தங்களின் ஆர்வமான செயல்பா...அய்யா வணக்கம், 74வயதிலும் தங்களின் ஆர்வமான செயல்பாடு என்னை வெட்கமடையச் செய்கிறது. தங்களின் தளராத முயற்சிகளில் நான் இன்னும் கற்றுக்கொள்ள விரும்புகிறேன். தங்களின் எழுத்துகளைப் படித்து அவசியம் பதில்தருவேன். தங்களின் வருகைக்கு என் நன்றியும் வணக்கமும் அய்யா. தொடர்ந்து இணைந்திருப்போம்.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-5753930189075359182014-06-15T22:47:03.257+05:302014-06-15T22:47:03.257+05:30வாழ்த்துரைக்கும் வார்த்தைகளுக்கும் நன்றி அய்யா.வாழ்த்துரைக்கும் வார்த்தைகளுக்கும் நன்றி அய்யா.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-50950210427263828902014-06-15T22:46:11.301+05:302014-06-15T22:46:11.301+05:30மனம் எனும் கற்பிதத்தை நம்புவது எளிது, அறிவுசார் சி...மனம் எனும் கற்பிதத்தை நம்புவது எளிது, அறிவுசார் சிந்தனைகளைத் தருவது கடினம்தானே? எனப் பார்த்தால் தலைப்பி்ல்தான் தந்திருக்கிறேன் ஒருவேளை என் ஆதங்கவழிச் சொற்பிழை இருந்தால் பொறுத்தருள வேண்டுகிறென் வருகைக்கும் வார்த்தைகளுக்கும் நன்றி அய்யா. நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-7769103954024023362014-06-15T22:42:44.598+05:302014-06-15T22:42:44.598+05:30அய்யா முதலில் உங்களின் தரமான பின்னூட்டத்திற்கு என்...அய்யா முதலில் உங்களின் தரமான பின்னூட்டத்திற்கு என் தலைதாழ்ந்த வணக்கங்கள். பெரும்பாலான உட்கருத்தில் நான் உங்களுடன் ஒத்துப்போவதறிந்து மகிழ்கிறேன். கூடுதலாக - “எந்த சாதிப்பிரிவாக இருந்தாலும் அது ஒதுக்கீடு எனும் நிலையில் பெரும்பான்மை தவறான தரமற்ற விளைவுகளை உருவாக்கிக்கெர்ண்டிருக்கிறது என்பதால் சாதிகளற்ற ஒரு சிந்தனைப் போக்கு என்பதும் அறிவுசார்ந்த போட்டியும் தேடலும் அதுகுறித்த சிந்தனையும் நல்ல பயன்களை விளைவிக்கும்,“ என்னும் இடத்தில் சிறிய விளக்கம் தரு விரும்புகிறென். 3000ஆண்டுக்கும் மேலாக அடிமைப்படுத்தி வைக்கப்பட்டிருந்த இனம், இடஒதுக்கீடு காரணமாகக் கிடைத்த சலுகைகளைத் தவறாகப் பயன்படுத்துவதை நான் ஒட்டுமொத்தத் தவறாக நினைக்கவில்லை. புதுவெள்ளத்தில் நுங்கும் நுரையும் வரத்தான் செய்யும். இன்னும் ஒருசில தலைமுறை கடந்தபின்தான் அது சமநிலைப்படும் என்றே நான் கருதுகிறேன் அய்யா. மற்றபடி குழந்தைகளுக்குச் சொல்ல நம்மிடம் அறிவுசார் குழந்தைக் கதைகள் இல்லை. அதை நாம்தான் உருவாக்க, ஊக்குவிக்க வேண்டும். எனக்கு நம்பிக்கை இருக்கிறது, உங்களைப் போலும் அனுபவமும், பின்வரும் பின்னூட்டமிட்டுள்ள சூர்யஜீவா போலும் இளையவர்களின் முயற்சியும் இதைச் சாதிக்கலாம். தங்களின் விரிவான கருத்துகளுக்கு மீண்டும் என் நன்றி அய்யா. தொடர்ந்து விவாதிப்போம், அன்பில் தொடர்வோம்.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-38490401742983284562014-06-15T21:34:00.409+05:302014-06-15T21:34:00.409+05:30உங்களுக்கு உடன்பாடு இல்லை என்று சொன்ன உண்மையான நாக...உங்களுக்கு உடன்பாடு இல்லை என்று சொன்ன உண்மையான நாகரிகத்திற்கு என் வணக்கம் நண்பரே. ஆண்டாள் நாயன்மார் பாடல்கள் எல்லாம், வடிவமைக்கப்பட்ட மரபுசார் மனநிலை. கடவுளிடம் உரிமையோடு காதல்கொண்டு, காமம் சொட்டச் சொடடக் கவிதை பாடியவர் ஆண்டாள் “கருப்பூரம் நாறுமோ? கமலப்பூ நாறுமோ, திருப்பவளச் செவ்வாய்தான் தித்தித் திருக்குமோ?” எனும் பாடல் நாகரிகமானது.நாயன்மார்களில் சிறுத்தொண்டர் தன் கடவுள் கேட்டார் என்று தன் பிள்ளையைத் தானும் தன் மனைவியுமாய் அரிந்து, சமைத்துத் தந்தவர், இயற்பகை நாயனார் தன் மனைவியையே விட்டுத்தந்தவர். இதற்குமேல் நான் என்ன சொல்ல மனநிலைத் தயாரிப்பு வேலையை மதங்கள் பலஆயிரம் ஆண்டுகளாகச் செய்து வருகின்றன, அதன் “ஐடெக்“ பிரச்சாரம்தான் தன்னம்பிக்கை நூல்களும், ரிலாக்ஸ்ப்ளீஸ் கட்டுரைகளும் என்பதே என் கருத்து இவை எதிலும் சூழலை மாற்றும் சிந்தனை இல்லை என்பதே எனது குற்றச் சாட்டும் ஆகும் நண்பரே.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-64544251742131595772014-06-15T21:25:59.155+05:302014-06-15T21:25:59.155+05:30“நா சொல்றேன் நீ கேட்டுக்க“ - எனும் பாணியிலான அறிவு...“நா சொல்றேன் நீ கேட்டுக்க“ - எனும் பாணியிலான அறிவுரையை யார், யாருக்குக் கூறினாலும் அது தவறு என்றே நான் கருதுகிறேன் “நான் சொல்வதை சிந்தித்துப் பார்த்து, சரியெனில் ஏற்றுக்கொள்ள தவறெனில் மறுக்க உங்களுக்கு முழு உரிமை உண்டு” என்பதே சரியாக இருக்க முடியும். “உங்கள் கருத்தோடு நான் மாறுபடுகிறேன், ஆனால், அதைச் சொல்லும் உங்கள் உரிமைக்காக என் உயிரையும் கொடுப்பேன்“ என்றொரு புகழ்பெற்ற வாசகம் உண்டு. “பெரியார் என்றொரு பிற்போக்குவாதி இருந்தான்“ என்று என்கருத்துகளைத் தாண்டி முன்னேறி, அடுத்த நூற்றாண்டின் மனிதர்கள் வாழ்ந்தால் அதுதான் என் மகிழ்ச்சி“ எனும் பொருளில்தான் தந்தை பெரியார் சொன்னார். எனவே, அறிவுரை என்பதை நான் ஏற்கவில்லை. நீயும் இதை ஏற்கவேண்டும் என்று நான் வற்புறுத்தவில்லை என் இளைய தங்கையே! உன் அறிவால் சிந்தித்து, என் கருத்து தவறெனில் தாராளமாகச் சொல்லலாம். சரிதானாப் பா? நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-90616539400513328312014-06-15T20:24:06.329+05:302014-06-15T20:24:06.329+05:30கவிஞரே,
காமமும் ஆன்மீகமும் ஒரே தளத்தில் இயங்கு...கவிஞரே,<br /> காமமும் ஆன்மீகமும் ஒரே தளத்தில் இயங்குவதை சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள். இவை இரண்டும்தான் மனிதனை மயக்கும் மாயங்கள் என்பது என் எண்ணம். காரிகன்https://www.blogger.com/profile/09686777906279690116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-14702557797051251502014-06-15T19:31:23.576+05:302014-06-15T19:31:23.576+05:30""எல்லா மொழியிலும் உயிர் என்னும் சொல் இர...""எல்லா மொழியிலும் உயிர் என்னும் சொல் இருக்கிறது. ஆனால் எந்த மொழியிலும், அறிவியல், உயிரின் தோற்றம்-அழிவுபற்றி ஏதும் சொல்லவில்லை! ""<br /><br />முதல் வாக்கியமே கொஞ்சம் என் மனதுக்கு இடறியது... ஆதலால் ஒரு சிறு விளக்கத்தை தர என் மனம் விரும்புகிறது... அணுவை ஆக்கவும் முடியாது அழிக்கவும் முடியாது... ஆக அந்த அணு ஆக்கப் படவுமில்லை அழிக்கப் படவுமில்லை... நம் உடல் மட்டும் அல்ல ஒவ்வொரு உயிரின் உடலும் எண்ணற்ற அணுக்களால் நிறைந்தவையே... இந்த உடல் அழியும் பொழுது ஒவ்வொரு அணுக்களும் வெவ்வேறு இடங்களில் வேறொரு பொருளாய் இயங்கி கொண்டே தான் இருக்கின்றது,, எந்த பொருளில் உயிர் இருக்கிறது என்று கேக்காதீர்கள்... ஏனெனில் உங்கள் உடல் இயங்கவே உயிரற்ற என்று கருதப் படும் கேல்சியம் மிகவும் அத்தியாவசியமாகிறது... (இருதயம் துடிக்க கேல்சியம் தேவை ).. அறிவியல் விளக்கம் கொடுக்கவில்லை என்று கூறாதீர்கள்... அறிவியல் கொடுத்த விளக்கங்களை பலர் ஏற்றுக் கொள்ளுவதில்லை என்று வேண்டுமானால் கூறுங்கள்...SURYAJEEVAhttps://www.blogger.com/profile/11426631201026402874noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-61290476118918745552014-06-15T16:59:56.806+05:302014-06-15T16:59:56.806+05:30சிந்திக்கத் தூண்டும் பதிவு எழுதியதற்கு கை கொடுங்கள...சிந்திக்கத் தூண்டும் பதிவு எழுதியதற்கு கை கொடுங்கள். பதிவுலகில் காலடி எடுத்து வைத்தது முதல் எழுத்துக்கள் எண்ணங்களைக் கடத்தவே என்ற நினைவில் எழுதி வந்தேன் . பிறப்பொக்கும் என்று வாய் கிழியக் கூறுவோர் அதனை வாழ்வில் கடைப்பிடிக்காதது கண்டு மனம் வருந்தும். . என் சிந்தனை ஓட்டங்களை பல பதிவுகளில் பரிமாறி கொண்டிருக்கிறேன். ஒத்த கருத்துடைய உங்கள் பதிவினை என் மின் அஞ்சலில் கண்டு வந்தேன் சமுதாயத்தில் நிறையவே மாற்றங்கள் வர வேண்டும் பதிவுலகில் எழுதி மாற்றங்களைக் கொண்டு வருதல் அரிது. இருந்தாலும் ஓரிருவராவதுசிந்திக்கத் தொடங்கினால் நலம் விளையலாமே என்னும் ஆதங்கமே இதுவரை என்னை எழுத வைத்திருக்கிறது தங்களுக்கு மின் அஞ்சலில் சில சுட்டிகளை அனுப்புகிறேன் நேரம்கிடைத்தால் படித்துக் கருத்து தெரிவிக்கவும் வாழ்த்துக்கள். G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-54815861728956370022014-06-15T16:25:57.570+05:302014-06-15T16:25:57.570+05:30சிந்தனையை தூண்டும் பகிர்வு! வாழ்த்துக்கள்!சிந்தனையை தூண்டும் பகிர்வு! வாழ்த்துக்கள்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-84739345247258179632014-06-15T16:10:47.603+05:302014-06-15T16:10:47.603+05:30//நம்புவது எளிது, சிந்திப்பது கடினம்தானே எளியது மல...//நம்புவது எளிது, சிந்திப்பது கடினம்தானே எளியது மலிவாக விரைவாகப் பரவுகிறது.//<br /><br />தலைப்புக்கு வெளியே உள்ளடக்கம் பல திசைகளில் செல்கிறது, ஆயினும் உங்கள் ஆதங்கம் விளங்குகிறது.குலவுசனப்பிரியன்https://www.blogger.com/profile/12614136307748685586noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-73112541069312567452014-06-15T15:23:23.965+05:302014-06-15T15:23:23.965+05:30அன்புள்ள ஐயா.
வணக்கம். ஓர் ஆழமான கட்டுர...அன்புள்ள ஐயா.<br /><br /> வணக்கம். ஓர் ஆழமான கட்டுரை சிந்தனையைக் கிளறித் தொடங்கி வைத்திருக்கிறீர்கள். இக்கட்டுரை தொடர்பாக மட்டுமின்றி<br />என் மனத்துள் எழுந்திருக்கிற அல்லது ஏற்கெனவே அவற்றுடன் விவாதம் மேற்கொண்டிருக்கிற சிந்தனைகள் சிலவற்றைப் பகிர்ந்துகொள்வது எனக்காக விடை தேடலாகவும் இருக்கும் என நம்புகிறேன்.<br /><br /> கடவுள் சார்ந்த கற்பிதங்கள் என்பவை எல்லாம் மனித முயற்சியால் சிலவற்றைக் கட்டுக்குள் ஒழுங்கமைப்புக்குள்ளும் கொண்டு வரமுடியாத சூழலில் சொல்லி உருவாக்கியவற்றை வழக்கம்போலவே மனித இன்ம சரியான புரித்ல் இல்லாமல் ஏற்றுக்கொண்ட இடத்தில் பிரச்சினையும் சிக்கலும் தொடங்குகின்றன.<br /><br /> 2. அன்றைக்குப் பராசக்தியில் கலைஞர் அவர்கள் வசனம் எழுதியதைப்போல பக்தி என்பது பகல் வேஷமாகிவிட்டது என்பது இன்றுவரை தொடர்ந்திருக்கிறது.<br /><br /> ஒலிபெருக்கிகளும் அந்தணர்கள் மைக் இல்லாமல் மந்திரம் ஓத இணங்காமையும் அவரவர சாதி.இன.பண பலத்திற்கேற்ப பக்தியின் அளவுகோளை அளப்பதும் எங்கேனும் கோயில் திருவிழா எனில் அதுவும் ஒரு பிக்னிக் ஸ்பாட் என்பதுபோனற பாவனையில் செல்வதும் இருக்கிறது. பெரும்பான்மை கோயில் திருவிழாக்களின் உச்ச நிகழ்வே நகைகள் களவாடப்படுதல் கழுத்து செயின் அறுத்தல். நோக்கம் திசைமாறிவிடுகிறது.<br /><br /> அப்புறம் தமிழர்களின் வேதமாகப் போற்றப்படும் சைவ சித்தாந்தம் தெளிவாக இதைப் படம்பிடிக்கிறது. கடவுள் வேறு உயிர்கள் வேறு என்று. கடவுள் உயிர்களைக் காக்கவோ துன்புறுததவோ தண்டனை வழங்கவோ இல்லை. உயிர்கள் செய்கின்ற செயல்களுக்கேற் வினைப்பயனைக் கொண்டு சேர்க்கும் அஞ்சல்காரர்கள்தான் கடவுளர்கள். அதனை ஒரு மாய இலக்காகக் கொண்டுவிட்டால் மனித இனம முன்னேறிவிடும்.<br /><br /> அப்புறம் சாதி குறித்தது. பல்வேறு பாகுபாடுகள், சமீபத்தில் திருநங்கைகள் குறித்த ஒரு டிவி நிகழ்வில் ஒரு திருநங்கைப் பேசினார் எங்களால் எந்தவிதமாக சாதிப்பிரச்சினையும் இல்லையென்று. பலவித வேதனைகளுக்கிடையில் கிடைத்த முத்தான கருதது இது, அதற்காக எல்லோரும் திருந்ங்கைகளாக உருவாகவேணடும என்பது அல்ல. தவிரவும் எந்த சாதிப்பிரிவாக இருந்தாலும் அது ஒதுக்கீடு எனும் நிலையில் பெரும்பான்மை தவறான தரமற்ற விளைவுகளை உருவாக்கிக்கெர்ண்டிருக்கிறது என்பதால் சாதிகளற்ற ஒரு சிந்தனைப் போக்கு என்பதும் அறிவுசார்ந்த போட்டியும் தேடலும் அதுகுறித்த சிந்தனையும் நல்ல பயன்களை விளைவிக்கும்,<br /><br /> குறிப்பாக நாம் பிள்ளைகளை இப்போது திறந்தவெளி விலங்குகளாகவே நீண்ட கயிற்றால் இயக்கிக்கொண்டிருக்கிறோம். இதற்கான உபகரணங்களை தொலைக்காட்சிகள் வழங்கிக்கொண்டிருக்கின்றன. எனவே நீங்கள் குறிப்பிட்ட தன்னம்பிக்கை. அறிவுசார்ந்த சிந்தனைகள் இவற்றை உள்ளடக்கிய கதைகள் என்பன பிறந்து விவரமறியும் வயதிலிருந்து குழந்தைகளிடம் தொடங்கிவிடவேண்டும் என் தாழ்மையான கருத்து. அவர்களைச் சரிசெய்தால் போதும். தற்போது பாழ் பட்டிருக்கிற அசுத்தமாகிக்<br />கொண்டிருக்கிற சமுக நிகழ்வுகளில் வாழ்க்கை விளக்கங்களைக் கூட<br />கதைகளாகவே சொல்லவேண்டும் என்றே எனக்குத் தோணுகிறது.<br /><br /> தரமான இதுபோன்ற கட்டுரை பதிவுகளும் குறிப்பிடத்தக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்பதான நம்பிக்கையில் உங்களின்<br />கட்டுரையை நான் உள்வாங்கிக்கொள்கிறேன். நன்றிகள். இவை முழுக்க உங்கள் கட்டுரை சார்ந்த என்னுடைய கருத்துக்கள்.<br /><br /> ஹ ர ணிhttps://www.blogger.com/profile/14084187413714388808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-22160261734774360672014-06-15T15:12:50.424+05:302014-06-15T15:12:50.424+05:30வழக்கம் போல சிந்தனையை நன்றாகவே தூண்டும் கட்டுரை. ஆ...வழக்கம் போல சிந்தனையை நன்றாகவே தூண்டும் கட்டுரை. ஆனால் எனக்கு உடன்பாடு இல்லை.ஆண்டாள் நாயன்மார் பாடல்கள் எல்லாம் என்ன?Anonymoushttps://www.blogger.com/profile/17376535447906615601noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-27818390934484200302014-06-15T13:31:05.497+05:302014-06-15T13:31:05.497+05:30ஐயா வணக்கம் தங்களின ஆழ்ந்த கருத்துகளை எனது சிறிய ம...ஐயா வணக்கம் தங்களின ஆழ்ந்த கருத்துகளை எனது சிறிய மூளையால் புரிந்துகொள்ள சிறிது போராடினேன். ஒரு முறைக்கு மூன்று முறை படித்து புரிந்துகொண்டேன். காதல் எனும் பெயரில் பெரும்பாலும் காமத்தையே பாடும் கற்பனை வறண்ட சொல்வரிசைகளைக் காதல்கவிதை என்பதும், கடவுள் பெயரில் கதைவிடுவதும் ஒன்றெனவே தோன்றுகிறது, இதை நானும் உணர்கிறேன் ஐயா. ஆனால் தாங்கள் கூறியிருக்கும் அறிவுரை மட்டும் கூறி மனசைத் தூய்மைப்படுத்துவது வியாபாரமே.எனும் வரிகள் என்னை சிந்திக்க வைக்கிறது. அப்படியானால் அறிவுரை என்பது தேவையில்லை என்று பொருள் கொள்வதா ஐயா? தவறாகக் கேட்டிருந்தால் மன்னியுங்கள்.<br /><br /><br /><br />Anonymoushttps://www.blogger.com/profile/13566337795376258566noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-1803652909144602222014-06-15T11:54:02.196+05:302014-06-15T11:54:02.196+05:30மக்கள் நல்லது எதையும் கடவுள் பெயரால் பயமுறுத்திச் ...மக்கள் நல்லது எதையும் கடவுள் பெயரால் பயமுறுத்திச் சொன்னபொழுது ஏற்றுக் கொண்டுள்ளனர்..அங்கு ஆரம்பித்ததோ பிரச்சினை? சொல்லப் பட்ட விசயம் மறந்து கடவுள் சார்ந்ததை மட்டும் பிடித்துக்கொண்டு விட்டனரோ? எது? எதற்கு?ஏன்? என்ற சிந்தனைத் தெளிவுதான் தேவை'' - மிகச் சரியாகப் புரிந்து கொண்டு எழுதிவிட்டீரகள் சகோதரி. கதைகளை வரலாறாகப் புரிந்துகொண்டு நடக்கும் வேறுபாட்டுக் குழப்பங்களில் சிந்தனை தூங்கிவிடுகிறது. “ஒரு மகிழ்ச்சியான விசயம் என்னவென்றால் சாதி என்பது பற்றி என் பிள்ளைகளுக்குத் தெரியாது, எங்கும் அப்படியே ஆகவேண்டும்” உங்களின் உயர்ந்த சிந்தனையும் செயலூக்கமும்தான் பெரிது. நன்றி நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-10107544669230813032014-06-15T11:51:15.979+05:302014-06-15T11:51:15.979+05:30திடம்பட மெய்ஞானம் காட்டியமைக்கு நன்றி அய்யா!திடம்பட மெய்ஞானம் காட்டியமைக்கு நன்றி அய்யா!ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-37461703961377928202014-06-15T11:05:30.496+05:302014-06-15T11:05:30.496+05:30உண்மையில் உங்களின் சொர்க்கம்-நரகம் பதிவுதான் இதன்வ...உண்மையில் உங்களின் சொர்க்கம்-நரகம் பதிவுதான் இதன்விதை. ஆனால் உங்களுக்கான அறிவுரை அல்ல, அப்படிச் சொல்வது இந்தக் கட்டுரைக்கே எதிரானது. கண்ணதாசனின் “அர்த்தமுள்ள இந்துமதம்“ படிததிருக்கிறீர்களா பாண்டியன்? அதன் வெற்றி மதம் சார்ந்ததல்ல, எளிய வாழ்வியல் விளக்கம் சார்ந்தது என்று எனது தினமணிக் கட்டுரையிலேயே குறிப்பி்ட்டிருப்பேன். விரைவில் அதைப் பதிவிடுவேன். நன்றி.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-62931459830181210262014-06-15T11:01:59.905+05:302014-06-15T11:01:59.905+05:30ஆம் வலைச்சித்தரே! “மெய்ப்பொருள் காண்பது அறிவு“ என்...ஆம் வலைச்சித்தரே! “மெய்ப்பொருள் காண்பது அறிவு“ என்பதை வேறுவேறு விளக்கங்களால் குழப்பியது தமிழறிஞர் குழாம். ஆம்! உண்மைக்குத்தான் எத்தனை எத்தனை பொய் விளக்கங்கள்! தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி அ்யயா.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-11007666351246538882014-06-15T10:59:34.592+05:302014-06-15T10:59:34.592+05:30நன்றி அய்யா.நன்றி அய்யா.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.com