tag:blogger.com,1999:blog-3817666928335657661.post3321515419443051940..comments2024-03-28T14:36:28.784+05:30Comments on வளரும் கவிதை: பட்டுக்கோட்டை பாரதிவிழாவுக்கு வருக! நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttp://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-3817666928335657661.post-37882204726768708372013-09-26T16:46:15.408+05:302013-09-26T16:46:15.408+05:30குருநாதசுந்தர அய்யாவுக்கு வணக்கம். அதனால் தான் கவி...குருநாதசுந்தர அய்யாவுக்கு வணக்கம். அதனால் தான் கவிஞர் தங்கம்மூர்த்தி உங்கள் நெஞ்சங்களில் வாழ்வதைப்போலவே எங்கள் நெஞ்சங்களிலும் வாழ்கிறார். முத்துநிலவன் அய்யாவிம் ஆணைப்படியும்..அன்புபிடியும்..எங்களை உற்சாகப்படுத்தி... விழா சிறக்க வைத்தது. திருக்கோகர்ணம் கிளை சார்பாக என் நன்றி அனைத்தும் முத்துநிலவன் அய்யாவுக்கே.....செ.சுவாதிnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-31232680613073041512013-09-25T18:00:02.155+05:302013-09-25T18:00:02.155+05:30
பணப்பற்றுதலில்லாத சமூக விழாவிற்கு வந்திருந்ததோடு,...<br />பணப்பற்றுதலில்லாத சமூக விழாவிற்கு வந்திருந்ததோடு, முகநூலில் நீண்டதொரு பதிவையும் இட்டிருந்த என் நண்பரும் தமிழாசிரியர்க் கழகத்தின் மாவட்டச் செயலருமான குருநாதசுந்தரம் அவர்களின் கடிதம் வித்தியாசமாக இருந்ததால் இங்கு எடுத்து இட்டேன். அவருக்கு நன்றி. கடிதத்தின் “அக்கறையுள்ள தனியார் பள்ளித் தாளாளர் ஒருவரை நான் அன்று தான் முதன்முறையாகக் கண்டேன்” என்ற அவரது வரிகள் உண்மையானவை. அவரது சில சொல்லாட்சிகள்...!<br />செல்நிலை, முத்துரை, ஒலிக் கோடுகளில் ஒரு நிசப்தத்தை நிறுவியது,எண்ணக்கிளர்ந்தாளர், கவிஞக்கல்வியாளர், அவரின் ஆசிரியத்தை வணங்குகிறது - முதலிய சொற்கள் வியப்பளித்தன! நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-18104880732358087572013-09-24T23:47:33.412+05:302013-09-24T23:47:33.412+05:30முகநூல் வரிகள் -
எனக்கு முன்பிருந்த எங்கள் தமிழாச...முகநூல் வரிகள் -<br /><br />எனக்கு முன்பிருந்த எங்கள் தமிழாசிரியர் கழகத் தலைவரின் மகள், பாரதி விழாவில் பாரதியைக் காணவில்லையென்று தன் தந்தையைக் கேட்டுக் கொண்டிருந்த செல்நிலை மனோபாவச் சூழலை மூத்த கவிஞர் முத்துநிலவனின் முத்துரை நீக்கியது. <br />இறுதியாக ஒரு கவிஞரின் மறுமுகத்தைக் கேட்க நேர்ந்த தருணம் ஒலிக் கோடுகளில் ஒரு நிசப்தத்தை நிறுவியது. அத்தருணம் கவிஞர் தங்கம் மூர்த்தியின் அருகமை, நெருக்கத்தின் உணர்வாய் அமைந்தது. செல்நிலை மனோபாவம் மறைந்து என் கேட்புச் சூழலை ஆழப்படுத்தியது. ஒரு நல்ல ஆசிரியனின் வெற்றி அனுபவங்களை கேட்ட நான் முதல் முறையாக தோற்றுப்போனேன். என் வகுப்பறை வெற்றிகளின் மீது கர்வம் கொண்டிருந்த என் தலைகனம் நொறுங்கிப்போவதை உணர்ந்தேன். பூக்களாய்ப் பாவிக்கும் மென்மை மாணவச் சந்திப்புகளின் பரந்த பாதையில் அவர் பயணித்துக்கொண்டிருப்பதைப் பார்த்து வியந்தேன். சொல் வடிவங்களை மாற்றித் தான் படிப்பது மட்டுமே நல்ல கவிதையென்று உலகு அங்கீகரிக்க வேண்டுமென்ற குறைநிலை நிழல்கவிஞர்கள் மத்தியில் தங்கம் மூர்த்தி விலகி இருப்பதை நான் கண்டேன். <br />உயர்கல்வியாளனின் சமூகப் பார்வையை நான் இரசித்தேன். எளிய கவிஞனின் அமைதியான மலர்ப்பாதை என்னை வெகுவாய்க் கவர்ந்தது.. பணப்பற்றுதலில்லாத சமூக அக்கறையுள்ள தனியார் பள்ளித் தாளாளர் ஒருவரை நான் அன்று தான் முதன்முறையாகக் கண்டேன். சட்டை கிழிந்த என் ஏழை மாணவனுக்கு வாழ்வுக் கல்வியைத் தரஇயலாத புள்ளியில் நின்று கொண்டிருக்கும் எனக்கு போராடிக்கொண்டிருக்கும் எனக்கு கவிஞக்கல்வியாளர் தங்கம் மூர்த்தியின் அருகாமை ஆறுதலைத் தந்தது. <br />என் இலக்கிய வாசிப்பிலும் ஆய்வு அனுபவங்களிலும் என்னை மறுசுழற்சிக்கு உள்ளாக்கிய என் எண்ணக்கிளர்ந்தாளர் பேராசிரியர் தொ.ப. என்னுள் முதலில் கவிஞர் தங்கம் மூர்த்தியைப் போலவே இடைவெளிகளுக்குப் பின் நுழைந்த நிகழ்வு எனக்கு நினைவிற்கு வந்தது.<br />சிலிர்ப்பான மறுமுகத்தைப் பார்த்த மகிழ்வில் என் மாலைநொடிகளுக்குச் சிறகுகள் முளைத்தன.. விருதின் எதிர்மறை எண்ணங்கள் விலகிய பின் தருணங்களில் கவிஞர் தங்கம் மூர்த்தியின் கவிதையை புத்தக அலமாரியில் என் விரல்கள் தேடின. <br />கவிஞர் தங்கம் மூர்த்தியின் மனத்துள் நற்கல்விச்சமூக மாற்றத்திற்கான வல்லமை வேர்கள் விழுதூன்றிட புதுக்கோட்டை மாவட்டத் தமிழாசிரியர் கழகம் வாழ்த்துகிறது. அவரின் ஆசிரியத்தை வணங்குகிறது.<br />சி.குருநாதசுந்தரம்,<br />மாவட்டச்செயலர்,<br />தமிழகத் தமிழாசிரியர் கழகம்.<br />புதுக்கோட்டை.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-52463208538826463992013-09-23T08:16:28.585+05:302013-09-23T08:16:28.585+05:30வணக்கம் அய்யா,விழா சிறப்பாக நடைபெற்றதில் மகிழ்ச்சி...வணக்கம் அய்யா,விழா சிறப்பாக நடைபெற்றதில் மகிழ்ச்சி. நிகழ்ச்சியின் வீடியோ பதிவை நம் வலையில் ஏற்றுங்கள். காணவும், கேட்கவும் காத்திருக்கிறோம். பகிர்வுக்கு நன்றிங்க அய்யா.அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-15440131800575998222013-09-23T01:47:42.672+05:302013-09-23T01:47:42.672+05:30வாழ்த்துக் கூறிய திருவாளர்கள் கரந்தை ஜெயக்குமார், ...வாழ்த்துக் கூறிய திருவாளர்கள் கரந்தை ஜெயக்குமார், திண்டுக்கல் தனபாலன், டி.என்.முரளிதரன், எஸ்.சுரேஷ் ஆகிய நண்பர்களுக்கு நன்றி. பட்டுக்கோட்டையில் நடந்த 22-09-2013 பாரதி நினைவுநாள் நிகழ்ச்சியை -அங்குள்ள உள்ளுர் தொ.கா.நிகழ்ச்சிக்காக விடியோ பதிவு செய்திருக்கிறாரகள். நண்பர் சிவ.தங்கையன் அதை நம் வலைப்பகுதியில் வெளியிடத் தருவதாகச் சொல்லியிருக்கிறார். வந்தவுடன் நம் வலையில் ஏற்றி நண்பர்கள் காணவும், கேட்கவும் தருவேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். (“பேசினதும் இல்லாம அதை நம்மைப் பார்க்கவும் சொல்கிறானே, அவ்வ்..” என்று “வவ்வால்” அய்யா குரல் கொடுப்பது எனக்குக் கேட்கிறது... என்ன செய்வது? விதி...வலியது..! எனக்கு நம்பிக்கை இல்லாவிட்டாலும் அய்யாவுக்கு இருக்குமே? இருக்கட்டும் பார்க்கலாம்.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-29518033737930896962013-09-22T16:26:29.940+05:302013-09-22T16:26:29.940+05:30 பகிர்வுக்கு நன்றி! விழா இனிது நடைபெற வாழ்த்துக்கள... பகிர்வுக்கு நன்றி! விழா இனிது நடைபெற வாழ்த்துக்கள்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-42715104183920969702013-09-22T08:50:14.943+05:302013-09-22T08:50:14.943+05:30இன்றைய கருத்தரங்கம் சிறப்புற நடைபெற வாழ்த்துக்கள் ...இன்றைய கருத்தரங்கம் சிறப்புற நடைபெற வாழ்த்துக்கள் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-7292911249440491862013-09-22T08:19:27.776+05:302013-09-22T08:19:27.776+05:30மேலும் சுவையான தகவல்களை அறிய காத்திருக்கிறேன்...மேலும் சுவையான தகவல்களை அறிய காத்திருக்கிறேன்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-119368513134973452013-09-22T06:05:26.197+05:302013-09-22T06:05:26.197+05:30பாரதி விழா சிறக்க வாழ்த்துக்கள்பாரதி விழா சிறக்க வாழ்த்துக்கள்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.com