பெரியார் சிலை உடைப்பு - கண்டனக் கவிதை

             (அறந்தாங்கி -07-4-2019 பெரியார் சிலை உடைக்கப்பட்டதை எதிர்த்து                              நடந்த கண்டனக் கூட்டத்தில் தலைவர்கள)

எச்சிலையே!  எச் சிலையை   
நீ உடைத்தாய் தெரியுமா?

 ----நா.முத்துநிலவன்----

தலையை எடுத்த தறுதலையே!
          தாழ்ந்து கிடந்த தலைமுறை
தலையெ டுக்கச் செய்தவரின்  
          தலையை எடுப்ப தாரடா?!
சிலையைஉடைத்து போட்டுவிட்டால்
          சிந்தை உடைந்து போகுமோ?!
அலையை உடைக்கப் பார்க்கிறாய்
          அறிவில் லாத மூடனே!


எச்சிலையேஎச் சிலையை
          நீஉடைத்தாய் தெரியுமா?
இச்சகத்துள் ளோரெலாம்
          எதிர்த்து நின்ற போதிலும் 
அச்ச மில்லை என்றெதிர்த்த
          அவரை உடைக்க முடியுமா?
எச்சில் துப்பும் நாய்களால்
          இமயச் சிகரம் சரியுமா?

எந்தத் தலையை நீஉடைத்தாய்
          எண்ணிப் பார்க்கத் தெரியுமா?
அந்தத் தலையின் சிந்தனையின்
          ஆழம் உனக்குப் புரியுமா?
நொந்து கிடந்த மக்களுக்கு
          சொந்த வரலாற்றினை
முந்தித் தந்து மான உணர்வை
          மூட்டிச் சென்ற நெருப்படா!

உரிமை உடமை பொதுமையாக
          உழைத்த பெரியார் அவர்!
வறுமை யாக அடிமையாக
          வருணமாகி வீழ்ந்தவரை
உரிமைப் போரில் வந்து சேர
          உணர வைத்த பெருமைக்கு
உரியார்,அவர் தான்பெரியார்!
          உணர் வறியா மூடனே!

மாறி மாறி வேட மிட்டும்
          மறத்தமிழர் நாட்டினை
வாரிச் சுருட்ட வழிகளின்றி
வத்தி வைக்கத் திரிகிறாய்!
சீறிப் பாயும் சிங்கத்தையே
          சீண்டிப் பார்க்கும் நரிகளே!
காறி உமிழ்ந்து விரட்டி யடிக்கும்
          காலம் வெகு தூரமில்லை!

தோழர்லெனின் சிலையைஉடைத்து
          தூங்கிக் கிடந்த சிங்கத்தின்
வாலைப் பிடித்து முறுக்கிவிட்டு
          வழிமொழிந்த நரிகளின்
வேலைத் திட்டம் தொடங்கியதா?
          வேடம் கலைந்து போனதே!
வாலில் நெருப்பு, ஊரை எரித்த
          வானரக் கதை ஆனதே!

ராம ரதம் என்னும்பேரில்
          ரத்த ரத ஊர்வலம்!
சாமி பேதம் இன்றி வாழும்
          சனத்தைப் பிரிக்கும் இழிவழி!
சாம பேத தான தருமச்
          சாத்திரக் கதை ஆகாது!
ஊமைச் சனங்கள் அல்ல நாங்கள்
          உன்பருப்பு இங்கு வேகாது!

பம்மிப் பதுங்கி ஓடிட யாம்
          பாச்சைப் பூச்சி அல்லடா!
மும்பை மக்கள் ஆதரவோடு
           முழக்க மிட்டது பாரடா!
அம்பை விட்டது யாரதென்று
          அறிந்தவர்தான் நாங்கடா!!
இங்கே உங்கள் திட்டமெதுவும்
          எடுபடாது போங்கடா!
          -----------------------------
(ஏற்கெனவே நடந்த பெரியார் சிலை உடைப்பின்போது                                                                   நான் எழுதிய வலைப்பக்கக் கவிதையின் மறுபதிவு)
          ------------------------------

9 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. பழனியப்பன் ஸ்ரீ குமார்செவ்வாய், ஏப்ரல் 09, 2019

      போடா நாயே

      நீக்கு
    2. இந்த பழனியப்பன் ஸ்ரீகுமாரனார், இன்னொரு “ஒரு வார்த்தை” வாழ்த்தையும் அனுப்பியிருந்தார். அவருக்கு உண்டோ இல்லையோ நமது வலைப்பக்கத்திற்கு ஒரு வரைமுறை உண்டென்பதால் அதை இங்கு நான் ஏற்றவில்லை! உண்மையில் எதிர்க்கருத்தை அது சரியானதென்றால் ஏற்கும் “கருத்துரிமை ஜனநாயகத்தை” நமக்குக் கற்றுத் தந்தவர் அய்யா பெரியார். இவர்கள் எங்கே படித்தனரோ?

      நீக்கு
  2. உண்மை
    அவர்கள் திட்டமெல்லாம்
    இங்கு எடுபடாது

    பதிலளிநீக்கு
  3. பழனியப்பன் ஸ்ரீ குமார்செவ்வாய், ஏப்ரல் 09, 2019

    இந்த நாயின் தலையை உடைத்தவர்களில் நானும் ஒருத்தன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்தக் கவிதைதான் இதற்கும் பதில் நண்பா!

      நீக்கு
    2. உடைக்கச் சொல்லித் தந்தவர்கள் முகத்தை மறைத்துச் செய்யச் சொன்னார்களோ? வெளிப்படையாக வந்து ஒப்புக்கொள்ளும் துணிச்சல் இல்லாதவர்கள் இருட்டிலேயே திரிய வேண்டியதுதான்!

      நீக்கு
  4. சிலையை உடைத்துப் போட்டுவிட்டால்
    சிந்தனை உடைந்து போகுமோ? இவர்களால் சிலையை மட்டும் தான் உடைக்க முடியும். அவர் ஏற்றி வைத்த தீபத்தை எந்நாளும் அணைக்க முடியாது.
    கோபமும் வேதனையும் பொங்கும் உணர்ச்சிமிகு கவிதை.

    பதிலளிநீக்கு