தீபாவளிப் பட்டிமன்றம் -2016-காணொலி இணைப்புடன்



தீபாவளி அன்று (29-10-2016) 
காலை 9மணிக்கு,
கலைஞர் தொலைக்காட்சி
-----------------------------------------------------
நடுவர்
திண்டுக்கல் ஐ.லியோனி அவர்கள்
தலைப்பு
பண்டிகையும், திருவிழாக்களும்
ஆடம்பரமே!                அவசியமே!
நா.முத்துநிலவன்       சிவக்குமார்
நெல்லை புஷ்பராணி      தேனி தமிழ்ச்செல்வி
வேலூர் தணிகைவேல்    கோவை தனபால்
(இந்த வரிசையில்தான் பேசியிருக்கிறோம்)
------------------------------------ 
என் மகன் அ.மு.நெருடா, 
இதனைப் பதிவுசெய்து 
யூட்யூப் இணைப்பைத் தந்திருக்கிறார்.

இணைப்புக்குச் செல்லச் சொடுக்குக-
நா.முத்துநிலவன் பேச்சு 
(வெட்டியது போக… 5 நிமிடப் பேச்சு மட்டும் உள்ளது) 

பட்டிமன்ற நிகழ்ச்சி முழுவதும் பார்க்க  
https://www.youtube.com/watch?v=FSPzThUugqw

நடிகர் சிவகுமாருக்கு 75வயது! வாழ்க்கையே ஒரு செய்தி!

திரு சிவகுமார், குடும்பத்தினருடன்
----------
அன்றைய நிகழ்வால் எனக்குத் தேதி மறக்கவில்லை!
அந்த நாள் 18-05-2010 மாலை...                                 நானும் என் துணைவியாரும் புதுக்கோட்டை வீதியில் எனது இருசக்கர வாகனத்தில் சென்றபோது, எனது செல்பேசிக்கு ஓர் அழைப்பு வருகிறது. நான் எனது வண்டியின் மிதவேகத்தை இன்னும் குறைத்து, செல்பேசியை எடுத்து என் மனைவியிடம் தந்து, “யாரென்று கேள்பா..ஏதும் அவசரம்னா சொல்லு, இல்லன்னா பத்து நிமிடம் கழித்துப் பேசச்சொல்லு” என்று சொல்கிறேன். அவரும் பேசிவிட்டு,  “யாரோ சிவக்குமாராம். சென்னையிலிருந்து பேசினார். பிறகு கூப்பிடச் சொல்லியிருக்கிறேன்” என்று சொன்னார்.

நானும் மற்ற வேலைகளில் மறந்துவிட்டேன்.
சரியாகப் பத்து நிமிடம் கழித்து மீண்டும் அழைப்பு. இப்போது நான் எடுத்து “வணக்கம் நான் முத்து நிலவன். யாரு பேசுறதுங்க?” என, “வணக்கம் முத்துநிலவன், நான் சிவக்குமார் பேசுகிறேன்” என, எனக்குக் குரல் பரிச்சயமானதாகவும் ஆனால் யாரென்று பிடிபடாத தாகவும் இருக்க, “எங்கிருந்து பேசுறீங்கய்யா?“ என்று கேட்டவுடன், சற்றும் குரல் மாறாத இயல்பான தன்மையுடன்  “சென்னையிலிருந்து நடிகர் சிவக்குமார் பேசுறேன்..” என, நான் பரபரப்பானேன்..“அடடே அய்யா வணக்கங்க! சொல்லுங்கய்யா” என..அவர் இயல்பாக “ஜனசக்தி பத்திரிகையில “செம்மொழி மாநாடும் கம்பனும்” எனும் உங்க கட்டுரையைப் படிச்சேன். நல்லா எழுதியிருக்கிங்க... “கம்பன் என் காதலன்” னு 3மணிநேரம் கம்பன் பத்தி நா பேசின பேச்சைப் பார்த்திருக்கீங்களா?“ என்று கேட்க, “ஆமாங்க விஜய் டி.வி.யில ஒளிபரப்பாச்சுல்ல.. ஆனா முழுசாப் பாக்க முடியல… கேட்ட வரைக்கும் எந்தக் குறிப்பும் இல்லாம, கம்பராமாயணப் பாடலுடன் அழகாப் பேசியிருந்தீங்க” என்று சொல்லி முடிப்பதற்குள், “உங்க முகவரிய எனக்கு மெஸேஜ் பண்ணுங்க அனுப்பறேன் பாருங்க பிறகு பேசுகிறேன்” 

பள்ளிப் பாடங்களை மீறிய அறிவுதேவை!


கவிஞர் நா.முத்துநிலவன் பேச்சு!
(நன்றி – தினமணி திருச்சிப் பதிப்பு, & புதுகை வரலாறு நாளிதழ்-26-10-2016)
  பள்ளியில் படிக்கும் ஐந்து பாடங்களை மீறியது பொதுஅறிவு! அதுதான் நிலைத்த புகழையும் தரும் என்றார் கவிஞர் நா.முத்துநிலவன்.
 புதுக்கோட்டை வடக்குராஜ வீதியில் உள்ள நகர்மன்றத்தில் நடந்த அப்பல்லோ கணினிப் பயிற்சி மையத்தின் “மாணவர் தனித்திறன் விருதுகள் வழங்கும் விழா”வில் சிறப்புரையாற்றிய கவிஞர் நா.முத்து நிலவன், மேற்கண்டவாறு பேசினார்.
  மருத்துவர் இராமதாஸ் விழாவிற்குத் தலைமையேற்க, அப்பல்லோ கணினிப் பயிற்சி மையத்தின் நிர்வாகி செந்தில்குமார் வரவேற்றார்.

விரைவில் மாறப் போகிறது உங்கள் செல்பேசி எண்?

         இந்தியாவில் தற்போதுள்ள 10 இலக்க செல்பேசி எண்களை, விரைவில் 11 இலக்க எண்களாக மாற்ற மத்திய தொலைத் தொடர்புத் துறை முடிவு செய்துள்ளது.
        இந்தியாவில் செல்பேசி சேவை அறிமுகம் செய்யப்பட்ட போது, 10 இலக்க எண்களைக் கொண்ட எண்ணே அறிமுகம் செய்யப்பட்டது
(அப்போதிருந்த பயனாளர் எண்ணிக்கை 100 கோடியைத் தாண்டாது என்னும் முடிவின் அடிப்படையில் இருந்திருக்கலாம். ,இந்தியர்கள் இப்படி ஆளுக்கு 4செல்பெசி ஒவ்வொன்றிலும் 4சிம் என்று வாங்கிக் குவிப்பார்கள் என்று யாரும் சொல்லலியே...!)

பிளாஸ்டிக் அரிசி! சீனப் பட்டாசு! செய்திகளின் பின்னணி என்ன?


பிளாஸ்டிக் அரிசியா?
என்ன? கேட்டவுடன் பகீரென்கிறதா?
எனக்கும் 
அப்படித்தான் இருந்தது. 

பிளாஸ்டிக் அரிசியை சாப்பிடுவதால் எவ்வளவு ஆபத்துகள் நிகழும்!?

இதைப் பாருங்கள்-

இது உண்மையாக இருக்குமானால் உடனடியாக இதனைத்
தடுக்க வேண்டுமல்லவா?

சன் டி.வி., விஜய் டி.வி.யை சரித்திரம் மன்னிக்காது!

கலர் டிரஸ் போட்டுக் கலக்கும்
கவர்ச்சிப் பேய்!
     (எப்புடீ?)

 படிப்பவர்களை 
வெறும் பார்ப்பவர்களாக மாற்றியது 
தொலைக்காட்சி!
அது குழந்தைளைப் பாதிப்பதைப் பற்றி 
விளக்க வேண்டியதில்லை.

“ரெமோ” -சிவ.கார்த்தியின் அவகீர்த்தி!


வருத்தப் படாத வாலிபக் கதையின்
      வணிகம் தொடரும் அநீதி இது
திருத்தப் படாத சிவ.கார்த்தி பாணி
      தெரிந்தே படரும் வியாதி இது!

“புதிய கல்விக்கொள்கை-2016” எதிர்க்க வேண்டிய அவசியமென்ன?


“வரைவு தேசியக் கல்விக்கொள்கை–2016 சிலஉள்ளீடுகள்” எனும் அறிக்கை http://mhrd.gov.in/sites/upload_files/mhrd/files/nep/tamil.pdf  மத்தியஅரசால் வெளியிடப் பட்டுள்ளது. இந்தப் புதிய தேசியக் கல்விக் கொள்கையின் முடிவாக 21 தலைப்புகளில் 143 கொள்கை முன்மொழிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. (தமிழில் 99பக்கம்) இதில் உள்ள பல அம்சங்கள், இன்றைய கல்வியின் மோசமான தன்மைகளை உரத்த குரலில் முழங்கினாலும், இதில் மாற்றம் செய்வதற்கான செயல்திட்டம் எதையும் முன்வைக்கவில்லை! மாறாக, வரலாற்றைப் பின்னுக்கு இழுக்கும் பிற்போக்கு அம்சங்களே இந்த வரைவுத் திட்டத்தின் பிற்பகுதியில் விரிவாக உள்ளன! அவை ஆபத்தானவை மட்டுமல்ல! இந்திய முன்னேற்றத்திற்கு எதிரானவை! இதனை எதிர்க்கவும் இவ்வரைவை மாற்றவும்  அவசியமுள்ளது. அவை என்னென்ன என்று பார்ப்போம்

எனது ”முதல்மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே!” நூலின் இரண்டாம் பதிப்பு



முதல்பதிப்புப் படிக்காதவர்களுக்காக, நூலில் இடம்பெற்ற கட்டுரைகளின் தலைப்புகள் – (வெளிவந்த விவரம்)


(1)  ஆசிரியர் உமாவைக் கொலை செய்தது யார்? (கீற்று)

(2)  கல்வி புகட்டுவது சரியா? ( எனது வலைப் பக்கக் கட்டுரை)

(3)  சமச்சீர்க் கல்வி அரசும் ஆசிரியர்களும் (ஜனசக்தி நாளிதழ்)

(4)  சமச்சீர்க் கல்வி -வாராது போல்வந்த மாமணி (ஜனசக்தி)

(5)  விண்ணப்பித்து வாங்குவதா விருது? (தினமணி நாளிதழ்)

(6)  முதல்மதிப்பெண் எடுக்கவேண்டாம் மகளே! (தினமணி இணையம்)

(7)  தனியார் பள்ளிகள் சாதனை! பின்னணி என்ன?(வலைப் பக்கம்)

(8)  தமிழ்ப்பாட நூல்களில் தமிழ் (தீக்கதிர் செம்மொழி மாநாட்டு மலர்)

(9)  கல்வியில் ஜனநாயகம், மறுமதிப்பீடு தேவை (தினமணி)

(10)     தமிழாசிரியர் செய்யும் தமிழ்நடைப் பிழைகள்(வலை)

(11)     9,11ஆம் வகுப்புகள் தேவையில்லையா? (சிந்தனையாளன் மலர்)

(12)     தமிழில் அதிகத் தோல்விக்குக் காரணம் என்ன? (வலை)

(13)     பழங்கதைகள் மறுவாசிப்பு அவசியம் (வலை)

(14)     எனது ஆசிரியப் பணியில் சில நல்ல நாள்கள் (வலை)

(15)     எனக்கு என் மாணவன் தந்த நல்ல ஆசிரியர் விருது (வலை)

(16)     பாடத்திட்டத்தில் ஊடகம் (தினமணி)

(17)     தமிழ்வழிக் கல்வியில் இருமுனைத் தவறுகள் (என் மகள் திருமணத்திற்கு வந்தோர்க்குத் தரப்பட்ட சிறுநூல்)

(18)     தமிழ்வழிக் கல்விக்குத் தடையென்ன? (என் மகன் திருமணத்திற்கு வந்தோர்க்குத் தரப்பட்ட சிறுநூல்)
-------------------------------------------------------------------------------- 

இரண்டாம் பதிப்பின் பின்னுரையாக என்னுரை -
எனது நூல் தந்த மகிழ்ச்சியும், கவலையும்!